>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 14 டிசம்பர், 2018

ஒரே வாரத்தில். நெஞ்சு சளியை நிரந்தரமாக குணமாக்கலாம் இதை செய்து பாருங்கள்




புகைப்பழக்கம் மற்றும் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தீராத சளியை ஏற்படுத்தும்.

இது நாளடைவில் நெஞ்சில் தங்கி பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும். உடல் பலவீனம்,ரத்த ஓட்டத்தை தடுக்கும். அதிகமாகநெஞ்சில் சளி இருந்தால் மூச்சடைப்பு ஏற்படும்.

இதற்கு எளிய முறையில் வீட்டில் உள்ள ஒரு பொருளைவைத்தே நாம் தீர்வு காணலாம்.இரண்டு மூன்று வெற்றிலையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ஒரு டம்ளர் நீர் கால் டம்ளராக சுண்டும் வரை விட்டு பிறகு எடுத்து வடித்து தேவைப்பட்டால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை தினமும் அதிகாலை நேரங்களில் காபி,டீயை தவிர்த்து விட்டு இந்த கசாயத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டியுள்ள சளி முழுவதுமாக வெளியேறி உடல் நன்றாக தேறாஆரம்பிக்கும்.

E pay slip பற்றி பார்ப்போம்!!


ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.

*E pay slip பற்றி பார்ப்போம்.*

*ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து 
பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக*

CLIK HEAR    http://treasury.tn.gov.in/Public/gpf.aspx

......................................................................................................................................................... 


TN Schools App - ஆன்லைன் வருகைப் பதிவு பற்றிய சில ஆலோசனைகள்




TN schools செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் எந்த வகுப்பிற்கு கற்பிக்கிறார் என்பது பல பள்ளிகளில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், அவர் வகுப்பிற்கு மட்டும் ஆன்லைன் வருகையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுமானவரை, ஒரே கைபேசியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.


ஆசிரியர்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணைய தளத்தில் பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்பிற்கு மட்டும், அவரின் சொந்த கைபேசி மூலம் மாணவரின் ஆன்லைன் வருகை பதிவு செய்வதால், அன்றைய தினம் அவர் பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து வகுப்பாசிரியர்களும் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆன்லைன் வருகை பதிவு செய்துள்ளனரா?

பச்சை கலர் டிக் அனைத்து வகுப்புகளுக்கும் காண்பிக்கிறதா? என்பதை தலைமை ஆசிரியர் தினமும் இரண்டு வேளைகளிலும் (மு.ப. / பி.ப) சரி பார்ப்பது நல்லது.

ஆன்லைன் பதிவு நேரம் முற்பகல் 9.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி.

ஏதேனும் ஆசிரியர் சரியாக பதிவிடா விட்டால், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விரைவில் ஆசிரியர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

காலை 9.30 க்கு மேல் மதியம் 11.55 வரை தாமதமாக வரும் மாணவர்களையும் பதிவு செய்ய இயலும். ஆனால் ஆசிரியர் மறதியாக 10 மணிக்கு பதிவு செய்தால், அனைத்து மாணவர்களும் தாமதமாக வந்ததாக கணக்கிடப்படும். மேலும் ஆசிரியர் தாமதமாக வருகை புரிந்தாரா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புள்ளதால் மிகச் சரியாக காலை 9.30 மணிக்கு பதிவு செய்வது நல்லது.


ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும்.






புதன், 12 டிசம்பர், 2018

Thursday, November 15, 2018

தொட்டாலே துணைக் கருவிகள் ONE TOUCH TLM பருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு


தொட்டாலே துணைக் கருவிகள் ONE TOUCH TLMபருவம் 2நான்காம் வகுப்பு மாணவர்களுக்குபயன்படும்1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு செயல்பாடுகள்... 4.தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள்


📖📒📘📙📖📚📚

இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்





Please Click here to download 4th standatrd materials

,..........................,..

அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Image result for senkottaiyan

இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

'பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

''பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு

மதுரை: ''பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு நிறுவனத்திலும் டிச., 10 வரை பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த வாய்ப்பு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு, இதை பயன்படுத்தி பி.எப்., பணத்தை பெறும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம், என்றார்.

பாடப் புத்தகங்களில் டிஜிட்டலை அறிமுகப்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை: சிறப்புப் பயிற்சி பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


பாடப் புத்தகங்களில் க்யூஆர் கோடு அச்சிட்டு அதன்மூலம் டிஜிட்டல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை. இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


தவறவிடாதீர்

என்சிஇஆர்டி குழந்தைகள் கல்வித் திருவிழா: விருதுகள் பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
இதுகுறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆங்கில ஆசிரியர் சங்கர்.

''அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான நான், ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர் பணிக்கு வந்தேன். 2005-ல் இருந்து பாடங்களை வீடியோ வடிவில் மாற்றிவருகிறேன். தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பாக பாடப்புத்தகங்களில் க்யூஆர் கோடை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பாடங்களை டிஜிட்டல் வடிவத்தில் படிக்கலாம்.

இதை உருவேற்றப்பட்ட (Energised) பாடப் புத்தகங்கள் என்று அழைக்கிறோம். இதில் க்யூஆர் கோடு மூலம் இயங்குரு (Animated) பாடங்களைப் பார்க்கலாம், படிக்கலாம்.

பாடப் புத்தகங்களை ஆசிரியர்களைக் கொண்டே டிஜிட்டலுக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. ஏனெனில் வகுப்பறை சூழலில் மாணவனின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள் ஆசிரியர்களே. அவர்களுக்குத்தான் அதன் தேவை தெரியும் என்பதால் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலம் பாடத் திட்டத்தில் டிஜிட்டல் வடிவத்தைச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

முதலில் காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அங்குள்ள 16 வட்டங்களில் இருந்து 160 ஆசிரியர்கள் ஆரம்ப கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டன. அதில் இருந்து ஆசிரியர்களை வடிகட்டினோம். அதில் 25 முதல் 40 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாக்குவது எப்படி? கதை, உள்ளடக்கத்தை எப்படிச் சொல்ல வேண்டும், பின்னணியில் குரல் கொடுப்பது எப்படி, எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


ஷங்கர்.


அத்துடன், கணினியில் தமிழை எழுதுவது எப்படி, மொபைலில் எடுக்கப்பட்ட ஆடியோக்களை எப்படி எம்பி3 வடிவத்துக்கு மாற்றுவது, வீடியோ உருவாக்க செயலியான கேம்டேசியா அறிமுகம், எப்படி வீடியோ எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம்.

காலை முதல் மதியம் வரை பயிற்சி, மதியத்துக்கு மேல் செய்முறை வகுப்புகள் என்று 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுத் தேர்ந்தனர். அடுத்ததாக திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வாரம் ஒரு முறை என்ற வீதத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 100 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இருந்து 85 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கும் அதே பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் தற்போது டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் சிறப்பான புலமை பெற்றுள்ளனர்.

இதே திட்டத்தை மற்ற மாவட்ட ஆசிரியர்களிடமும் விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. இதன்மூலம் நம்முடைய பாடத் திட்டம் தேசிய அளவிலான தரத்துக்கு உயர்த்தப்படும்'' என்கிறார் சங்கர்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

..........................................................................................................................................................

தனியார் பள்ளிக்கு சவாலான அரசுப்பள்ளி!!


SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 12.12.2018

Image result for SCHOOL MORNING PRAYER ACTIVITIES


திருக்குறள்


அதிகாரம்:
நடுவுநிலைமை

திருக்குறள்:117

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம்:

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

பழமொழி

Speech is silver , silence is gold

அமைதியே ஆரவாரத்தை விட சிறந்தது

இரண்டொழுக்க பண்புகள்

* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

 பொன்மொழி

எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

      - பாரதியார்

பொதுஅறிவு

1.இந்தியாவின்  வெளியுறவு துறை அமைச்சர் யார்?

திருமதி.சுஷ்மா சுவராஜ்

2. இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் யார்?

திருமதி.மேனகா காந்தி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

தர்பூசணி




1. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.

2. நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

English words and meaning

Visual.
பார்வை தொடர்பான
Volley.     சரமாரி
Vitiate.    சீர்குலைத்தல்
Vocal.
குரல் தொடர்பான
Vigour.   சுறுசுறுப்பாக

அறிவியல் விந்தைகள்

தவளை

* உலகின் மிகப் பெரிய தவளைக்கு கோலியாத் தவளை என்று பெயர்.
* அண்டார்டிகா கண்டத்தில் தவளைகள் கிடையாது.
* தவளைகள் தங்கள் முட்டையை தூய நீரில் தான் இடும்
* ஏறக்குறைய 4,700 வகை தவளைகள் உலகில் உள்ளன.
* ஒவ்வொரு வகை தவளைக்கும் வேறு வேறு சத்தம் உண்டு. இவைகளின் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும்

நீதிக்கதை

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்திகள்

12.12.2018

* ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

* ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அன்மோல்ப்ரீத் சிங், கெளல் அபாரம்: 3-0 என நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

* உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Today's Headlines

🌹Retired IAS officer Sakthikanth Das has been appointed as the new governor of the Reserve Bank.

🌹Results of the five state assembly elections have been announced.

🌹 Google's social website, in Google Plus, which was once again recovered the disorder" BAC"which came to reveal 5 crore people's information .

🌹 Anomalit Singh and Kulle played excellently in one-day cricket match.India defeated  New Zealand A-team 3-0.

🌹England and France have qualified for the quarterfinals of the World Cup hockey tournament💐

வரலாற்றில் இன்று 12.12.2018

டிசம்பர் 12  கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.
1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
1862 – யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
1901 – அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
1911 – இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940 – இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941 – அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.
1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979 – ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.
1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அஹமது டாயா புதிய அதிபரானார்.
1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 – லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1863 – எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
1927 – ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
1949 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்
1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1931 – சௌகார் ஜானகி, தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

சிறப்பு நாள்

கென்யா – விடுதலை நாள் (1963)

டில்லியில் நடைபெறும் சிறந்த ஆசிரியர்களுக்கான "IDEAL விருதுக்கு" வேலூர் மாவட்டம் ராஜாவூர் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இந்திரா அவர்கள் தேர்வு!!

      National Ideal Teacher Award

KALVICIKARAM .IN  சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!







TERM 3 - CLASS 1,6,9 ALL SUBJECTS NEW TEXTBOOKS T/M & E/M

1,6,9 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் 2018(ALL SUBJECTS TM&EM)


 TERM   III          TEXT BOOKS

புதன், 5 டிசம்பர், 2018

ONE TOUCH 22 languages IN A SIMPLE WAY

Wednesday, December 5, 2018



NCERT
MHRD

ONE TOUCH

22 languages
IN A SIMPLE WAY

EBASHASANGAM

NCERT
MHRD

தேவைப்படும் மொழியைத் தொட்டாலே எப்படி படிப்பது வார்த்தைகளின் பொருள்களையும் அறிந்து கொள்ள AUDIO இணைக்கப்பட்டுள்ளது


CLICK HERE TO DOWNLOAD...


AFTER PRINT OUT U CAN USE EPATHSALA THROUGH BY SCANNING QR CODE

இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

6-8 வகுப்புகளுக்கு ஒரே மாதிரியான பருவத்தேர்வுகள் நடத்துதல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! & தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!!!

Wednesday, December 5  2018




திங்கள், 3 டிசம்பர், 2018

போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர் & தலைமை ஆசிரியர்கள் இன்று (03.12.2018) செய்ய வேண்டியவைகள்




ஆசிரியர்கள் அனைவரும் 3.12.18ஐ தேதி காலையில் முறையாக பள்ளிக்கு சென்று பதிவேட்டில் கையொப்பம் இட்டு மாலை 4.10 pm பிறகு சம்பந்தப்பட்ட வட்டார கலவி அலுவலகம் சென்று நமது பள்ளி சாவிகளை BEO /DEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

அதேநேரத்தில்  ஆசிரியர. வருகைப் பதிவேடு மற்றும் முக்கியமான பதிவேடுகளை தலைமையாசிரியர் அறையில் வைத்து பூட்டி விட்டு மீதி உள்ள சாவிகளை மட்டும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் 


இதன் பிறகு அடுத்த நாள் காலை 10.00 am மணிக்கு அனைவரும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள  BEO வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் ஒன்று திரட்டி செவ்வாய் காலை 9 மணி ஒன்பது மணிக்கு நமது வட்டார கல்வி அலுவலகம் முன்பு கூடுமாறு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

அவர்கள் அனைவரும் வந்த பின்பு இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்வை நடத்தி விட்டு வேறு ஏதேனும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக மாவட்ட  பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ள  வேண்டும்.
,.......................................