>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

FLASH NEWS : இன்னும் 60 நாட்களுக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துட்ன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உத்தரவு... CLEAR COPY IN PDF




............................................................................................................................................................................................................

உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி

லக்னோ:உ.பி.,மாநில காவல்துறையில் 62 பியூன் காலி இடத்திற்கு 81 ஆயிரம் பட்டதாரிகள் போட்டியிட்டுள்ளனர்.


இது குறித்து மாநில காவல் துறை தெரிவித்திருப்பதாவது:

உ.பி., மாநில காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள் 50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும், பிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

பியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று இருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் யோகிநாத் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமஜ்வாடி கட்சியின் செய்திதொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி கூறுகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லை என்று கூறி இருப்பது இளைஞர்களை அவமானப் படுத்துவது போன்று உள்ளதாகவும்., உண்மையில் இளைஞர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால் அரசு அவர்களுக்கான வேலையை வழங்க வில்லை என கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முந்தைய ஆட்சிகளில் பண மற்றும் சாதி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.தற்போது பா.ஜ., ஆட்சியில் பணியமர்த்தலில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது என தெரிவித்துள்ளது.

செப்.8, 9ல் பெண் ஆசிரியர் மாநாடு...

திண்டுக்கல்: கன்னியாகுமரியில் செப்.8, 9 ல் அகில இந்திய பெண் ஆசிரியைகள் மாநாடு நடக்கிறது.அகில இந்திய பெண் ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இம்மாநாடு நடக்க உள்ளது.
செப்., 8ல் பெண் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியைகள் சந்திக்கும் பிரச்னைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பள்ளித்துணை ஆய்வாளர் ( DI ) பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்!!!


Teachers, it is important to take care of yourselves....

புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2018 - தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!


சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது.



1) புதுமை - ஒத்தக்கடை அரசு பள்ளி தலைமையாசிரியர் திரு. தென்னவன்.

2) கிராம சேவை - சஞ்சனூர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் - திரு.சி.வீரமணி.

3) பழங்குடி மேம்பாடு - பொக்காபுரம் - தலைமையாசிரியர் - திரு. கண்ணதாசன்.

4) பெண்கல்வி - காலச்சேரி - நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. ஆனந்த்

5) செயல் ஊக்கம் - பீமநகர் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி

6) மொழித்திறன் - பெண்ணாடம் ஆசிரியர் திருமதி. கீதா

7) அறிவியல் விழிப்புணர்வு - வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் திரு. தனபால்

8) படைப்பாற்றல் - மணப்பாறை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் - திரு. து.கேசவன்

9) சிறப்பு குழந்தைகள் - Little Hearts Home - ஆசிரியர் திருமதி. ரீட்டா ஐயப்பன்.

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை.... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 01.09.2018 சனிக்கிழமை


 • 01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள்
பேசுதல்.
• பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம்
சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும்.
• மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி
அலுவலர்கள்,பள்ளி ஆய்வாளர்கள்அனைவரும்பள்ளிமாணவர்களுக்குதூய்மைசார்ந்த விழிப்புணர்வுக்
குறிப்புகளை வழங்குதல்.
• துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை
வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும்(Swachta Shapath Day)நிகழ்ச்சியினை நடத்தி
அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல்.
•மாவட்டம்வாரியாக உறுதிமொழிஏற்றமொத்தமாணவர்களின் எண்ணிக்கையினையும்புகைப்படம்,
வீடியோமற்றும் விளம்பரவாசகங்களையும் மாநிலத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும். (காலை
12.00 மணிக்குள்ளாக)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔥 *02.09.2018 முதல் ஞாயிற்றுக்கிழமை 04.09.2018 வரை செவ்வாய்க்கிழமை வரை*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
• பள்ளி மேலாண்மைக் குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தி, ஆசிரியர் மற்றும்
பெற்றோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும்,
மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் வீட்டில் இப்பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில்
ஊக்குவித்தல்.
•பள்ளியில்உள்ளஒவ்வொருபகுதியையும் ஆசிரியர்கள் ஆய்வுசெய்து அதனைகத்தம்செய்திடத்
தேவையான முன்மொழிவுகளையும்,திட்டங்களையும் தயார் செய்தல்.
•கழிவறைகள், சமையலறை, வகுப்பறைகள், மின் விசிறி, புதர்கள் ஆகியவற்றைச்ச சுத்தம் செய்யத்
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்திட
உரிய நடவடிக்கை எடுத்தல்.
• மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்த பள்ளிகயின் எண்ணிக்கையினையும் புகைப்படம், வீடியோ மற்றும்
விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். (மாலை 4.00
மணிக்குள்ளாக) 

பூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தோல்வி 
தோல்வியில் முடிந்தது
கடந்த டிசம்பர் 7, 1995ல் நாசா கலிலியோ என்ற சோதனை சாதனத்தை விண்ணுக்கு அனுப்பியது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கி 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது. ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பது எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரிய சிகப்பு புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.



கண்டுபிடித்தனர் 
கண்டுபிடித்துள்ளனர்

இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது. இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.



சிவப்பு புள்ளி 
சிவப்பு புள்ளியில் உள்ளது

அதன்படி, வியாழனில், பெரிய அளவில் செந்நிற புள்ளி ஒன்றுள்ளது. இதன் அளவு ஆசிய கண்டத்தை விட பெரிதாக இருக்கும். இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் இதை கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.



தண்ணீர் 
எவ்வளவு தண்ணீர்

தற்போது, வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர். மேலும், மொத்தமாக அந்த கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி

சென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


     இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

சனி, 1 செப்டம்பர், 2018

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம்
பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.

இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

Tamilnadu Schools All District BEO Office Contanct Number

Tamilnadu Schools All District BEO Office Contanct Number

  1. Tamilnadu All District BEO Office List & Contact Numbers









































Tamilnadu Schools All District DEO Office Contanct Number

Tamilnadu Schools All District DEO Office Contanct Number

  1. Tamilnadu All District DEO Office List & Contact Numbers






TNPSC Exams - How to Upload Certificates via Eseva Centrefor Verification?

TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?


வணக்கம் நண்பர்களே.. TNPSC இதற்கு முன்பு சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்னையில 
அலுவலகத்திற்கு அழைப்பது வழக்கம்.. 
தற்போது அலைச்சலைக் குறைக்கும் பொருட்டு தேர்வர்களின்
வசதிக்காக அவரவர் மாவட்டத்திலேயே E-seva மையம் மூலமாக சான்றிதழ் 
சரிபார்ப்பைமேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது...
ஒரு சான்றிதழைபதிவேற்ற ரூ 5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்... (சான்றிதழ்எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்) ... 

சான்றிதழ் பதிவேற்ற முறை பற்றி பார்ப்போம்.
முதலில் கீழே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து 
அசல்சான்றிதழ்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்..
தற்போதுபடித்துக் கொண்டிருப்பவர் எனில் கல்லூரியில் 
உங்கள் Originals'ஐஇப்பொழுதே கேட்டு கையில் வாங்கி வைத்துக் 
கொள்ளுங்கள்..(TC ஐதவிர அனைத்தும் தருவார்கள்.

TC பற்றி கவலைப் பட வேண்டாம்)
கடைசியில் அலைய வேண்டாம்...

E- Seva மையத்திற்கு சென்று உங்கள் நிரந்தர பதிவின் ((One Time Registeration)) User ID மற்றும் Password'ஐ  அவரிடம் கூறினால் அவர் Login செய்வார்..(கட்டாயமாக USER ID AND PASSWORD ஐ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்)) .உங்களுடைய புகைப்படத்துடன் உங்கள் Dashboard open ஆகும்.. Dash Board நிரந்தர பதிவு உங்களுடையது தானா என அவர் உங்களிடம்
  Confirm செய்த பிறகே சான்றிதழ் பதிவேற்ற வேலையைமேற்கொள்வார்

எனவே ஐயம் வேண்டாம்..சான்றிதழ் பதிவேற்றதேர்வர் தான்  
நேரில் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.. 
அப்பா, அம்மா, அண்ணன் அல்லது யார் வேண்டுமானாலும் 
தேர்வரின் நிரந்தர பதிவு user ID ,password மற்றும் அசல் சான்றிதழ்கள்கொண்டு சென்று கொடுத்து
 சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்கலாம்.. கூடுமானவரை நீங்களே
 நேரில் சென்று முடிப்பது நலம்....

அனைத்து சான்றிதழ்களும் நீங்கள் நிரந்தர பதிவின் போது 
எந்தஎண்ணைக் கொண்ட சான்றிதழ்களை கொடுத்தீர்களோ 
அதேசான்றிதழைத் தான் பதிவேற்ற வேண்டும்.. வேறு ஒன்றை 
மாற்றிபதிவேற்றினால் சந்தேகத்திற்கிடம் என TNPSC யால் மீண்டும்
சென்னைக்கு அழைக்கப்படுவீர்கள்..
  
முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
(அனைத்தும் Originals)
1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)
2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .
3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate
5.Convocation Certificate
6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)
7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்ட
நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)
8.GROUP A அல்லது GROUP  B தரமுடைய அதிகாரியிடம்
 இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் 
((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.))

இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு

 பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...
9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று
10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்
11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்
13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் 
அதற்கானPROVISIONAL மற்றும்  CONVOCTION சான்றிதழ்..
15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர்
 எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற
 தடையின்மைச்சான்றிதழ் (No Objection  Certificate) NOC
கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் 
சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும்  ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..

இவைஅனைத்தையும் e-Seva மையத்தில் பதிவேற்றிய 
பின் சரியாகபதிவேற்றியுள்ளார்களா என உங்களிடம் காட்டி 
உறுதி செய்துகொண்ட பின்னரே அவர்கள் Upload செய்வார்கள்..
Upload செய்த பின் என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றினீர்கள் என ஒரு PRINTOUT ஐ அவர்கள் கையெழுத்திட்டு தருவார்கள்.. 

நீங்கள்சான்றிதழ் சரிபார்ப்பு CV முடித்ததற்கான சான்று அதுதான்.
எனவேஅதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்..
முடிந்த வரை 10 மணிக்கே சென்று விடுங்கள்..கூட்ட நெரிசல் 

இன்றிபொறுமையாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வாருங்கள்..
கட்டணம் 100 ரூபாய்க்குள் தான் வரும்.. எதற்கும் அதிகமாக

எடுத்துச்செல்லுங்கள்.. சான்றிதழ் பதிவேற்றம் மேற்கோள்ளும் 

அதிகாரிக்குநீங்கள் எவ்வித கட்டணமும் தனியாக தர தேவையில்லை..
e-seva மையம் திறந்திருக்கும் நேரம் 
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை.. 1-2 உணவு இடைவேளை..

நல்லபடியாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வர அனைத்து TNPSC நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்களுடன் - பாடசாலை

SCERT - "Role Play Competition" - பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலில் நடத்துதல் - நடுவர்களை நியமித்தல் - போட்டி விதிமுறைகள் - தலைப்புகள் அறிவித்து இயக்குனர் செயல்முறைகள்

SCERT - "Role Play Competition" - பள்ளி,
ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலில் நடத்துதல் - நடுவர்களை நியமித்தல் - போட்டி விதிமுறைகள் - தலைப்புகள் அறிவித்து இயக்குனர் செயல்முறைகள்




அதிரடியாக விலை குறைக்கப்பட்ட Vivo Cell Phones




இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.
எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.

குழந்தைகளை கவரும் 'ரோபோ ஆசிரியர்' :-கற்றலில் புதுமை!


குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சீனா, மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது.

சமீபத்திய சில ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங் களுக்கு அதிகளவு நிதியை சீனா செலவு செய்கிறது. இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களையும் அதிகளவில் நியமித்துள்ளது. பல்வேறு துறைகளிலும் ரோபோக்களை சீனா அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக ரோபோ மாநாடும் பீஜிங்கில் நடந்தது.


இந்த வரிசையில் தற்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்கு, ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 'கீகோ' என பெயரிடப்பட்டுள்ளது. 2008ல் வெளியான 'வால் - இ' என்ற அமெரிக்க கம்ப்யூட்டர் அனிமேஷன் திரைப்படத்தில் வரும் கரடி போன்று, இதன் உருவமைப்பு உள்ளது.


இதன் உயரம் இரண்டு அடி. கைகள் இல்லை. இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் நேவிகேஷன் சென்சார் மூலம் தானாகவே நகரும். இதற்காக சிறிய சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பதில் அளிப்பதற்கு, முகத்துக்கு பதிலாக சிறிய ஸ்கீரின் உள்ளது. இதில் கண்கள் 'இதயம்' வடிவில் உள்ளது. குழந்தைகளுடன் உரையாடும் இந்த ரோபோ, கதைகள் மற்றும் லாஜிக்கல் கணக்குகளையும் சொல்லி தருகிறது. முதற்கட்டமாக சீனாவில் சோதனை முறையில் 600 மழலையர் (எல்.கே.ஜி. யு.கே.ஜி., ) பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் விலை ரூ. 1 லட்சம்.
ஒருவழிப்பாதை

இதுகுறித்து 'கீகோ' ரோபோவை இயக்கும் பயற்சி பெற்ற ஆசிரியர் கேண்டி ஜியாங் கூறுகையில், ''இன்றைய கல்விமுறை சவாலான ஒன்றாக மாறிவிட்டது. எனவே கல்வி என்பது நீண்ட நாட்கள் ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது. எப்போதுமே ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சூழல் இருப்பது ஆரோக்கியமானதல்ல. மாணவர்கள் பல வழிகளிலும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த புதிய முறையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளை 'கீகோ' மிகவும் கவர்கிறது. இதனிடம் உரையாடுவதற்கு குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர்'' என்றார்.


இதுகுறித்து ஒரு சீன பள்ளி முதல்வர் கூறுகையில், '' கல்வி என்பது பார்வை, வெளிப்பாடு, தொடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. வெறும் வாய்மொழியாக மட்டும் இருக்கக்கூடாது. ரோபோ என்பது மனிதர்களை விட எப்பபோதும் நிலையாக இருக்கும்'' என்றார். ஒருபுறம் கல்வியாளர்கள் இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் நிலையில், எந்த வகையில் ஆசிரியருக்கு நிகராக கம்ப்யூட்டர் இருக்காது என எதிர்ப்பும் நிலவுகிறது.

3.40 லட்சம்

சர்வதேச ரோபோட்ஸ் கூட்டமைப்பின் தகவலின் படி, சீனாவில் 3.40 லட்சம் ரோபோ வடிவமைக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர்,

 தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் 

விபரங்கள்:

31/08/2018 ன் படி


1.ஆந்திரா பிரதேசம்

       மாநிலம்: ஆந்திர பிரதேசம்


      தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்

      முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு

      ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

2.அருணாச்சல் பிரதேசம்

மாநிலம்: அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்: இட்டாநகர்

முதலமைச்சர்: பெமா கந்தூ

ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

EMIS - Password Reset Option Link

Password reset option Link


           
Click here Password Change link...
...............................................................................................................................................