>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நெட்' தேர்வுக்கு ஆதார் வேண்டாம்

சென்னை : 'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்., 30ல் முடிகிறது.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 'ஆதார் எண்ணை பதிவிடலாம்' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் 'ஆதார் கட்டாயம் இல்லை' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது. 


பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE-Directorate of Government Examinations - NTSE Examination - DEO Address for submission of fees

ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App



ஒரே நேரத்தில் ultra Sound மூலம் இயங்கும் இந்த App ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுக்கும் videos , file , document,Audio Share செய்ய முடியும். அனைவரும் இந்த App download செய்து open செய்து அனைவருக்கும் ஒரு வரிடம் உள்ள வீடியோ , file,Audio Share செய்ய முடியும்.

இது முற்றிலும் ultra Sound மூலம் இயங்கக் கூடிய ஒரு பிரமாண்ட App.
பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.

முதல் முறையாக ஆன்லைனில் தகுதித் தேர்வு

Flash News : G.O Ms : 306 - பள்ளிக் கல்வி - ஊதிய முரண்பாடு - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர்களுக்கு மறு ஊதிய நிர்ணையம் செய்து உத்தரவு - PDF

வாட்ஸ் அப்பில் இனி ரிப்ளை செய்வது ஈஸி!


மெசெஞ்சிங் சேவையில் முக்கிய செயலிகளுள் ஒன்றான வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டு பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் தனது அடுத்த அப்டேட்டில் Dark Mode, ‘Swipe To Reply’ அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Dark Mode வசதியில் வாட்ஸ் அப் செயலியின் நிறம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இருட்டின் பின்னணியில் தெளிவான எழுத்துக்களைக் கொண்டு படிப்பவர்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும். ட்விட்டரில் இந்தச் சேவை முன்பே அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

மற்றொரு வசதியான ‘Swipe To Reply’ முன்பே iOS பயனர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் ரிப்ளை செய்யும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டு மெசெஞ்சிங் சேவையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

G.O Ms.No. 314 Dt: September 18, 2018 AD-HOC INCREASE – Employees drawing Consolidated Pay / Fixed Pay / Honorarium – Another Ad-hoc Increase from 1 7 2018 - Orders - Issued.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 19-09-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


உரை:இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

பொன்மொழி:

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்


-காந்திஜி

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே

2.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை

நீதிக்கதை

ராஜாவின் மனக்கவலை - ஜென் கதைகள்

(The Confused King - Zen Stories for Kids)



 ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.

ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.

இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’

இன்றைய செய்தி துளிகள்:

1.மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோ வெளியிடப்பட்டது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லோகோவை வெளியிட்டார்.

2.தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் தங்கமணி பேட்டி

3.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

4.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? செப்டம்பர் 22-ல் முதல் ஆய்வுக்குழு கூட்டம்

5.ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஷிகர் தவான் சதம்

திங்கள், 10 செப்டம்பர், 2018

TEACHERS   CPS  ACCOUNTS  STATEMENT  (CPS)

ஆசிரியர்கள் CPS  நிதி கணக்கு  விவரம்  அறிய  


CLIK HEAR  :http://cps.tn.gov.in/public/menu.php
TEACHERS  PROVIDENT  FUND ACCOUNTS  STATEMENT  (PF)

ஆசிரியர்கள் சேமநலநிதி கணக்கு  விவரம்  அறிய  


CLIK HEAR   http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx

புதன், 5 செப்டம்பர், 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.09.18

திருக்குறள்


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

விளக்கம்:

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிர தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

பழமொழி

Failure is a stepping stone to success.

 தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

      -  ஐன்ஸ்டைன்

பொது அறிவு

1.மின்சாரத்தின் தந்தை  என அழைக்கப்படுபவர் யார்?

 மைக்கேல் பாரடே

2. ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜோசப் பிரீஸ்ட்லி

English words and Meanings

Yard. வாசல்
Yarn.  நூல்
Yawn. கொட்டாவி
Yell.   கூச்சலிடு
Yore.  பூர்வகாலம்

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

பொன்னாங்கன்னி கீரை

1.கண்பார்வை குறைபாடு சரியாகும்.

2.முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நீதிக்கதை

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கப்போகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும், அதனிடம் கேட்டுப்பார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்த எறும்பு, “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியது, இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

இன்றைய செய்திகள்

06.09.18

*   சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் நுண்ணிய மாதிரிகள்  கொண்ட பேருந்து  அருங்காட்சியகம் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் கோயமுத்தூரில் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

* ரஷ்யாவில் இருந்து 4 பில்லியன் மதிப்பிலான ஐந்து S-400 ட்ரையூம் விமானப் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா  திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு உறுப்பு தான அமைப்பில் பதிவு செய்ய  இந்திய நோயாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* மதுரை அஞ்சலகம் சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான ஆய்வு கண்காட்சி மதுரையில் நடந்தது.

* 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஓம் பிரகாஷ் மித்தாரால் ஆண்கள் 50 மீட்டர் ஃப்ரீஸ்ட்டில் தங்கம் வென்றார்.

Today's Headlines

🌸Coimbatore:A Museum Bus with miniatures of displays from the museum in Chennai is in Coimbatore for three days from Wednesday.🌹

🌸India is planning to buy five S-400 Triumf air defence systems from Russia for an estimated $4.5 billion.🌹

🌸Chennai:Aadhaar is now mandatory for Indian patients to register in the Tamil Nadu Network for Organ Sharing.

🌸Madurai:The two-day district-level philately exhibition, organised by the
 Department of Posts, Madurai Division, concluded on Tuesday.

🌸Korea:Om Prakash Mitharval won the men’s 50m free pistol gold in the 52nd World shooting championship here on Tuesday💐

விழுப்புரம் மாவட்டம் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள்




HAPPY  TEACHERS DAY




New Professional TAX Slab 2018

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

FLASH NEWS : இன்னும் 60 நாட்களுக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துட்ன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உத்தரவு... CLEAR COPY IN PDF




............................................................................................................................................................................................................

உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி

லக்னோ:உ.பி.,மாநில காவல்துறையில் 62 பியூன் காலி இடத்திற்கு 81 ஆயிரம் பட்டதாரிகள் போட்டியிட்டுள்ளனர்.


இது குறித்து மாநில காவல் துறை தெரிவித்திருப்பதாவது:

உ.பி., மாநில காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள் 50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும், பிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

பியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று இருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் யோகிநாத் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமஜ்வாடி கட்சியின் செய்திதொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி கூறுகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லை என்று கூறி இருப்பது இளைஞர்களை அவமானப் படுத்துவது போன்று உள்ளதாகவும்., உண்மையில் இளைஞர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால் அரசு அவர்களுக்கான வேலையை வழங்க வில்லை என கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முந்தைய ஆட்சிகளில் பண மற்றும் சாதி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.தற்போது பா.ஜ., ஆட்சியில் பணியமர்த்தலில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது என தெரிவித்துள்ளது.

செப்.8, 9ல் பெண் ஆசிரியர் மாநாடு...

திண்டுக்கல்: கன்னியாகுமரியில் செப்.8, 9 ல் அகில இந்திய பெண் ஆசிரியைகள் மாநாடு நடக்கிறது.அகில இந்திய பெண் ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இம்மாநாடு நடக்க உள்ளது.
செப்., 8ல் பெண் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியைகள் சந்திக்கும் பிரச்னைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பள்ளித்துணை ஆய்வாளர் ( DI ) பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்!!!


Teachers, it is important to take care of yourselves....