>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம்

பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது.
முதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.அப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.அதாவது, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.அவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடைதிருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.விடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவிஉத்தரவிட்டுள்ளார்.

சனி, 14 ஏப்ரல், 2018

Quick response code (QR CODE GENERATOR) app intro and guide tutorial


தமிழக அரசின் புதிய பாடநூலில் இடம் பெற இருக்கும் 
QR CODE ஐ SCAN செய்ய தேவையான app மற்றும் அதனை பயன்படுத்தும்
 வழிமுறைகள் அடங்கிய 
வழிகாட்டும் வீடியோ TUTORIAL தமிழில்




Thanks Shanmugasundaram

இளைய ஆசிரியர்கள் யார்? பணி நிரவல் செய்ய பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.....

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது....

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்
துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள்
 அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் 
ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், 
அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி
 இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி
 இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு
 முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி
, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை 
கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில்,
 எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக,
 தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் 
தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய
 பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், 
பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து,
 மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க
 ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஐ. எஸ்.ஓ. தரச்சான்றிதழ்- காணொளி



நோ.,பேனா நோ.,பேப்பர்! கையடக்க கணிணியில் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள்!


இராமநாதபுரம்: பேனா இல்லாமல் பேப்பர் இல்லாமல் (டேப் என அழைக்கப்படும்) கையடக்க கணிணியில் தேர்வு எழுதி பாடம் கற்று அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது பாரிவள்ளல் நகராட்சி அரசுப் பள்ளி, இந்த பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் 81 மாணவ மாணவிகள் கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.



நவின விஞ்ஞான உலகத்தின் இளையதலைமுறைகள் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை சார்பில் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இது குறித்து கையடக்க கணிணியில் பயிலும் முதலாவது வகுப்பு மாணவி எமிம்மாஜீலினாயிடம் பேசும் போது.,

நாங்க இப்ப டேப்ல படுச்சுகிட்டு இருக்கோம். அது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. டேபுக்குள் புக்கே இருக்கு. அத நாங்க ஸ்கேன் பன்னி அதுல வர கதைகள் படங்கள் பாட்டுகள் ரைம்ஸ் இது எல்லாமே வரும். இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது ரொம்ப ஈஸியா இருக்கு. எங்க பெரன்ட்ஸ்கிட்டையும் இத பத்தி சொல்லிருக்கோம் ரொம்ப ஈஸியா இருக்குன்னு.

முதலாவது வகுப்பு மாணவன் ஜான்பெனடி: நாங்க டேப்பில படிக்கிறோம் அது ரொம்ப சந்தோஸம்மா இருக்கு பென்சிலு ரப்பரு ஸ்கேலு எதும்மே இல்லாம்ம படிக்கிறோம் விடியோ ஸ்டோரி எல்லாம்மே நாங்களே ஸ்கேன் பன்னி படிக்கிறோம்.

இரண்டாவது வகுப்பு மாணவி ரபினாபேகம்: நாங்க எங்க ஸ்கூல்ல டேப் வச்சுருக்கோம் நாங்க எல்லாத்தையும் டேப்ல தான் படிக்கிறோம் மொத்தம் 25 டேப் இருக்கு / 1ம் வகுப்பில் இருந்து மூன்றாவது வர டேப் யூஸ் பன்னுறோம் நாளாவது அஞ்சாவது லேப்டாப் வச்சு படிக்கிறாங்க எங்க டீச்சர் இந்த டேப்ல ரெம்ப நல்லா சொல்லி தராங்க.

பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ-ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோர் சொர்ணகவிதா: ப்ஸ்ட்ல இருந்ததோடு வரைக்கும் பிள்ளைங்க டேப் யூஸ் பன்னுறாங்க. டேப்ல தான் பரீட்சையும் எழுதுறாங்க. சோ, இந்த மாதிரி டேப் யூஸ் பன்னுறது அரசு பள்ளியின்னு பாக்குறப்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்குது.

அதுமட்டும் இல்ல சிபிஎஸ்சி சில பஸ்லைய்யோ அல்லது மெட்ரிக்லோஷன் ஸ்கூல்லைய்யோ டேப் யூஸ் பன்னி எக்ஸாம் எழுதி நான் இன்னும் பாக்கல அரசு பள்ளியில டேப் யூஸ் பன்னுறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்கு.

நாங்க படிக்கிற காலத்துல இதெல்லலாம்இல்ல இனி ப்யூச்சர்ல பஸ்ட் ஸ்டாண்டடுல இருந்து பத்தாவது வரைக்கும் கொண்டு வந்த இன்மும் சந்தோஷம்மா இருக்கும் என கூறினார்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய கடற்படையினர் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் அருகேயுள்ள சம்பை, மாங்காடு, ஏற்காடு, வடகாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை (இன்று) கடற்கரையில் இருந்து ஒரு நாட்டிகள் தூரம் வரை சென்று கரையோரம் உள்ள நண்டு மற்றும் கணவாய் மீன்களை பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்திய கடற்படையினர், மீனவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மீனவர்கள் நாங்கள் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் என்பதால் அடையாள அட்டை வைத்துக் கொள்வதில்லை. மேலும், கடலில் இறங்கி மீன்பிடிப்பதால் அடையாள அட்டைகளை பாதுகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்கமறுத்த இந்திய கடற்படை அதிகாரிகள், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 42 மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிக்க பயண்படுத்தும் மிதவைகளையும் பறிமுதல் செய்து ராமேசுவரம் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்

அங்கு விசாரணை என்ற பெயரில் மீனவர்களை சுமார் மூன்று மணி நேரம் கடலில் கடும் வெயிலில் நிறுத்தியுள்ளனர்.

தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், வீட்டில் இருந்த அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று காட்டிய பின்னர் அதிகாரிகள் மீனவர்களை விடுவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மீனவ கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மீனவர் கர்ணாமூர்த்தி கூறுகையில்.,

கடந்த சிலமாதமாக சர்வதேச கடல் எல்லை வழியாக பல கோடி மதிப்பிலான போதை பொருள்கள் மற்றும் தங்கம் ஆகியவை கடத்தி வரப்படுகிறது.

அதனை தடுக்க தவறிய அதிகாரிகள், கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்களை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கின்றனர். மீனவர்கள் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (இன்று) நிழல் இல்லாத நாள் குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் சோதனை செய்து பார்த்து மகிழ்ந்தனர்:

சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது.

இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றியது. சரியாக நண்பகல் 12.13 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது.

இந்நிலையில், இதனை அறிந்த புதுரோடு அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேரில் காணவேண்டும் என ஆசைப்பட்டனர். இதனை அறிந்த அறிவியல் ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இதனையடுத்து காலை 10.50 மணியளவில் மூன்று பொருட்களை வெயிலில் செங்குத்தாக வைத்தனர். அப்போது அந்த பொருட்களின் நிழல் மேற்கு பக்கமாக விழுந்தது. பின்னர் பகல் 12.13 மணி அளவில் அந்த பொருள்களின் நிழல் முற்றிலுமாக மறைந்தது. இதனைக் கண்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

Wednesday, April 11, 2018

NMMS Exam Dec 2017 - All District Selection Check List Published.

Chennai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruvallur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Kanchipuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Vellore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruvannamalai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Cuddalore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Viluppuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Thanjavur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Thiruvarur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Nagapattinam NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Trichy NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Perambalur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Ariyalur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Karur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Pudukkottai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Dharmapuri NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Krishnagiri NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Namakkal NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Salem NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Erode NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Coimbatore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruppur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Nilgiris NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Dindigul NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Madurai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Theni NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Virudhunagar NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Sivagangai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Ramanathapuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

thoothukudi NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

THIRUNELVELI NMMS - DEC 2017 Selection check list - Click here And Download


Kanyakumari NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

வியாழன், 12 ஏப்ரல், 2018

பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம்

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச் 2018- மதிப்பீட்டு பணி-கணினிஅறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் சார்பு

தமிழக அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு 

2% அகவிலைப்படி உயர்வு (2018)





புத்தகம் பேசுது "கனவு ஆசிரியர்

புதன், 11 ஏப்ரல், 2018

GPF/TPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெறவழிமுறைகள்...

1. Accountant General (A&E), Tamil Nadu

என்ற வெப் ஓபன் செய்யவும்...
2.user name : GPF NUMBER
password: D.O.B
( 00/00/0000)
suffix: PTPF
3.GPF கணக்கு பக்கம் ஓபன் ஆகும் இதில் current balance & account slip (2016-17) பார்த்து கொள்ளலாம்...
4.MOBILE UPDATE - option ல் mobile number கொடுத்து save & update கொடுக்கவும்...
5.LOG OUT செய்யவும்...

திங்கள், 9 ஏப்ரல், 2018

`ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்!


கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் ஜப்பான் செல்லும் வாய்ப்பை பெற்று, அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து அரசுப்பள்ளியில் பயின்று அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே, அந்நாட்டு அறிவியல் முன்னேற்றங்களைக் காணச் செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக மே மாதம் 12-19 தேதி வரை ஜப்பான் செல்லும் 6 மாணவர்கள் கொண்ட குழுவில், கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 பயிலும் ம.ஹரிஹரன் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். ஜப்பான் செல்லும் அந்த மாணவருக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.தமிழரசன் தலைமை ஏற்றார் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கலியபெருமாள் பங்கேற்றார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாணவர் ஹரிஹரனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் பேசிய மாணவர் ஹரிஹரன், ``எனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் அவர்கள் என்னிடம் புதைந்துள்ள அறிவியல் திறன்களை கடந்த ஆறு ஆண்டு காலமாக வெளிக்கொணரும் விதத்தில், எனக்கு வழிகாட்டியதன் மூலம், நான் கண்டுபிடித்த 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றான, சூழலியல் காக்கும் கழிவறை என்ற கண்டுபிடிப்பிற்காக, இன்ஸ்பயர் விருதில் தங்கம் வென்றேன். அதன் மூலமாகத்தான் நான் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளேன். சக இளம் விஞ்ஞானி மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால், என்னைப்போல் சாதிக்கலாம்" என மனம் உருகிப் பேசி நன்றி கூறினார்.

அரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி....

சான் பிரான்சிஸ்கோ: சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.

உலகத் தரம் வாய்ந்த கல்வி

உலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.

வெற்றிவேல் அறக்கட்டளை

கான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.

இதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.

தற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் உதவுவோம்

ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம் 
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும். உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும். 
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும். 
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்....


கற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 
முழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.
கையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளித் தலைமையாசிரியை 
பூ.ஜெயந்தி.
மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.
புத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி!!!

பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.


சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.

வண்ண படங்கள்:

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.

தேடல்:

தற்போது, மாணவர்களும் தெரிவிக்கும் வகையில், புதிய பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே, 'பாக்ஸ்' ஆக, இத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை, கல்வியில் புகுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பள்ளி மாணவர்களின் தேடலை விரிவாக்கும். இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Teaching of English by Phonetic Method Video- Unit 16


இளையராஜா தன்னோட முதல் பாட்டுப் பதிவைத் தொடங்கியதுமே CURRENT போயிடுச்சாம். எல்லாரும் என்னடா இது? நேரம் சரியில்லனு..... பேசிக்கிட்டாங்களாம். ஆனால், இன்னைக்கி வரை என்ன, என்னைக்குமே இசைனா ராஜா மட்டும் தான்.

இரண்டு மாசமா அங்கயும் இங்கயும் அலஞ்சு, இடத்தப் பிடிச்சி பெயிண்ட் அடிச்சு சுவர் பூராம் PHONETICS படம் வரைஞ்சி CONTENT எல்லாத்தையும் SCREEN PLAY ஆ எழுதி, நடிக்கிற டீச்சர்ஸ் எல்லாத்து கிட்டயும் ஒரு மாசத்துல முடிச்சுருலாமுனு சும்மானாச்சிக்கும் ஒரு தைரியத்தச் சொல்லி SHOOTING START  பண்ண நாள் குறிச்சி AEEO அல்போன்ஸ் சார் தலைமையில குத்து விளக்கெல்லாம் பொருத்த தயார் பண்ணிட்டு எல்லோரும் கிளம்பிகிட்டு இருக்கிற சமயத்துல, இரு சக்கர வாகனத்துல வந்த ஒரு தர்மத்தின் தலைவன் UNIT – 16 எடுக்குற சுகுமாரி டீச்சரை விபத்துக்குள்ளாக்கிட்டு பறந்து போயிட்டான். நாங்களெல்லாம் பயந்து போயிட்டோம்.



முதல் நாளு வேற....., சரித்தான்!! இனி ஆரம்பிச்ச மாதிரிதானு சின்னதா ஒரு கலக்கம் எல்லோர் முகத்திலும்.... அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு..... சரி, பரவாயில்லை இன்னொரு நாள் ஆரம்பிச்சுக்கலாம் என்ற மனநிலையுடன் அலைபேசிய ON செய்தால், சார் நீங்க மத்த வேலைகள பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு பத்து நிமிஷத்துல டாக்டரப் பாத்துட்டு, சித்ரா மிஸ்ஸோட வந்துடுறேன் என்று தீர்க்கமான சுகுமாரி ஆசிரியரின் இந்த குரல், PROJECT – ன் முதல் தைரியத்த உள் ஊட்டியது. சுகுமாரி ஆசிரியரின் கணவரும் அந்த சூழலில் பக்க பலமாக இருந்து படப்பதிவுக்கு அழைத்து வந்தது HATS OFF செய்ய வேண்டிய நெகிழ்வு.



இக்கட்டான சூழலில் நடக்குமோ நடக்காதோ என்ற தடுமாற்றத்திலும், தன்னம்பிக்கையுடன் அன்று ஏற்றப்பட்ட குத்து விளக்கின் சுடர்தான் இன்றுவரை அணையா ஜோதியாக மாணவ நெஞ்சங்களில் வாஞ்சையுடன் விடியலேற்றிக் கொண்டிருக்கிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நான் உட்படத் தங்குவது, சாப்பிடுவது என்பது கடைசி நாள்வரை எதிர் நோக்குப் பிரச்சனையாகவே இருந்து வந்தது. தங்கும் வீட்டில், FAN, CURRENT இல்லாத பல இரவுகள் காருக்குள் உட்கார்ந்திருந்தபடியே கழித்திருக்கின்னறன. கண்ணன் சார், சுகுமாரி டீச்சர் போன்றோரது கரிசனத்தாலும், தாயுள்ளத்தாலும் தான் அடிப்படை வசதிகள் ஆசுவாசப்படுத்தப்பட்டன.

இவர் கொண்டு வரும் லெமன் ஜூஸ் தான் சுட்டெரிக்கும் வெக்கையில் சக்கரமாய் எங்களைச் சுழல வைத்தன.

எதைச் செய்தாலும் நேர்த்தியாக இருக்க வேண்டுமென முன் கூட்டியே திட்டமிடுதல் இவரது அசாத்தியப் பெருமை.
 RHYMES SHOOTING (OUT DOOR) – ல் இவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.

ஒரே மாதிரி டிரஸ் ஆறு குழந்தைகளுக்கு புதுசா எடுத்துத் தைச்சாச்சு. SHOOTING அன்று காலையில பாத்தா ஒரு கட்சியோட கொடி கலருல டிரஸ். SHOOTING எடுப்பதில் எனக்குத் தயக்கம். வேற ஏற்பாடு செய்ய முடியுமானு கேட்ட அடுத்த செகண்ட் ஒரு டெயிலர (TAILOR) வரவழைச்சி, ஒரு மணி நேரத்துல BORDER(பார்டர்) துணி வேற கலர்ல வாங்கி தைச்சு.........!!! என்னாவொரு டைமிங்க்(TIMING). சூழ் நிலையைக் கையாளும் அலட்டாத நேர்த்தி. இதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை. சிறப்பாக முடிந்தது அன்றைய நாள்.

காந்தம் என்பதன் வட துருவம்,தென் துருவம் (NORTH POLE,SOUTH POLE) COLOUR PICTURE உலகம் பூராம் ஒரே மாதிரி கலர் தான். தமிழ் நாட்டுப் பாடப்புத்தகத்துல மட்டுந்தான் வேற கலர்ல இருக்கும். . பாடப்புத்தகத்துக்கே இந்த கதினா, பாட்டு தாங்குமானுதான் கலர் சேஞ்ச் (COLOUR CHANGE) பண்ணினேன்.
அரசியல் கலக்காத கல்வியே அறிவினைத் தூண்டும். இல்லையேல் அது வெறும் உணர்வையேத் தூண்டும்.

எழுதுவதற்கு இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. ஒவ்வொருவரைப் பற்றியும்....

பிறரது உழைப்பிற்கும் திறமைக்கும் கை தட்டும் கரங்களை விட, கண்குத்தும் விரல்களே உலகில் அதிகம்.

 அறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களே இங்கு அதிகம்.
 எனவேதான் PHONETIC DVD இயக்குநர் என்ற முறையில் படைப்புகளையும், தியாகங்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஊடகங்கள், முகநூல் இவர்கள் முகங்களை முன்னிருத்தட்டும். சந்தோசமான குழந்தைகளின் கற்றல் ஆசிகளாக இவர்கள் சந்ததிக்கே புண்ணியப் பூச்சொரியட்டும்.

"ஆசிரியராகவே" வாழ்ந்து கொண்டிருக்கும் சக தோழமை சுகுமாரி அவர்களுக்கு வார்த்தைகள் வாழ்த்துகளாகட்டும்.

Video



Pls click the below link:
https://youtu.be/EfjcNZ0T65M


 வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல் பிறரும் வாழ்த்த ஒரு SHARE செய்யலாமே.........

அரசுப்பள்ளியின் செயல்பாடுகளை முழுமையாக ஒளிபரப்பு செய்த திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1 "உங்களோடு நாங்க" நிகழ்ச்சி


பட்டாம்பூச்சிச் சிறகு
பறந்தால் மட்டும் அழகு
தொட்டுப்பிடிக்க நினைத்தால்
தூள் தூளாகும் விலகு....என்ற பாடல் வரிகள்  பறக்கும் பட்டாம் பூச்சியைப் பிடிக்க நினைத்தால் ......தேர்வு,படிப்புஎன்பதையும் தாண்டி இன்று பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்



........................திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1  இன்று எங்கள் பள்ளியில் ......உங்களோடு நாங்க நிகழ்வு(6/4/2018)...மழலையர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வானொலி  நிலையம் சென்ற எங்களுக்கு ,”உங்களோடு நாங்க “.என்ற நிகழ்வுக்கு வானொலி நிலையம் எங்கள் பள்ளியை நோக்கி .....அட்டகாசமான வரவேற்பு ...தாங்கள் கூறும் கதை , பாடல் , நேரடியாக ஒலிபரப்புவதைக்கேட்டவுடன்  அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை



,ஐயாகூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்திரு மருத நாயகம்  அவர்கள் பள்ளியின் கல்விச்செயல்பாடுகளை விளக்க , நேரடி ஒலி பரப்பு ஆரம்பமானது ......... அடுத்து குழந்தைகளின் மழலைப்பேச்சு,அடுத்து அவர்களுக்கு பிடித்தமான பாடல் ......இடையிடையே பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பூ.ஜெயந்தி அவர்கள் பள்ளியின் வளர்ச்சி பற்றிய பேச்சு





அடுத்து SSAமேற்பார்வையாளர் திரு துரைப்பாண்டியன்  அவர்கள் பள்ளிகளுக்கு Ssa  செய்யும் திட்டங்கள் ,ஆசிரியர் பயிற்றுநர் திரு மணிமாறன அவர்கள்  பள்ளியின் சேர்க்கை  பற்றிய விபரங்களின்  ஒலிபரப்பு ,அடுத்து ஆசிரியர் ஹ.புஷ்பலதா அவர்கள் பள்ளியின் திட்டங்கள் பற்றி கூறிய ஒலி பரப்பு மற்றும் குழந்தைகளின் தனித்திறமைகள் நேரடி ஒலி பரப்பு என்று 1 மணி நேரம்   பள்ளிக்குள்ளே   ரெயின்போ பண்பலையின்102.1   திருவிழாவாக இருந்தது ...பள்ளியின் செயல்பாடுகள் ,பள்ளியின் வளர்ச்சி ,சத்துணவு ,மற்றும் 1,2,3 வகுப்புகளில்  மாணவச்செல்வங்கள் Pedagogy. கைக்கணினிக்கொண்டு கற்றலை எவ்வாறு வலுப்படுத்துவது,மொத்த மாணவர்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் நேரடியாக ஒலி பரப்பிய வானவில் பண்பலைக்கு நன்றி ..நன்றி ......,நன்றி

எந்தெந்த வங்கிகளில் கடன் தொகை பெறப்பட்டால் வரிச்சலுகை பெறமுடியும் என்பது குறித்து RTI தகவல்.........




............................................................................................

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.


11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, “குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.

அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்”

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.