>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு.

7வது ஊதிய குழுபரிந்துரைகள் பற்றிஅமைச்சரவை கூடி முடிவுஎடுக்க போவதாகதகவல்கள் வந்த வண்ணம்இருக்கின்றன. அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு கோரிக்கையைஏற்க கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம்தமிழக முதலமைச்சர்மற்றும் துணைமுதலமைச்சருக்கு அவசரகடிதம் எழுதி உள்ளோம்.
நேரில் சந்தித்து விளக்கம்தர தயாராக உள்ளோம்என்பதையும்
தெரிவித்து உள்ளோம் எனசட்ட பஞ்சாயத்துஇயக்கத்தின் தலைவர்சிவ.இளங்கோகூறியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) 3 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த 3 மாதகாலமாக பல்வேறுபோராட்டங்களை நடத்திஅரசிற்கு நெருக்கடிஅளித்து வருகின்றனர். 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளத்தைஉயர்த்தவேண்டும் மற்றும்புது ஓய்வூதிய திட்டத்தைநிறுத்திவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்தவேண்டும்என்பது அவர்களுடையமுக்கியமானகோரிக்கைகள். அதுசம்மந்தமாக தமிழகஅமைச்சரவை நாளை கூடிமுடிவெடுக்க போவதாகசெய்திகள் வந்த வண்ணம்இருக்கின்றன. சட்டபஞ்சாயத்து இயக்கம்தன்னுடையகருத்துக்களையும்ஆலோசனைகளையும்இந்த கடிதம் மூலம்தெரிவிக்க விரும்புகிறது. (இது சம்மந்தமாகஏற்கனவே 18 செப்டம்பர்அன்று ஒரு கடிதம் எழுதிஇருந்தோம்.)
கட்டாயம் இல்லை:
மத்திய அரசின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டுபரிந்துரைக்கப்பட்டுள்ள7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம் தமிழகஅரசிற்கு இல்லை. 1988இல்மத்திய அரசுஊழியர்களுக்குஇணையாக ஊதியம் தரவாய்மொழி உத்திரவாதம்மட்டும் தான் தமிழக அரசுதந்துள்ளது என்பதைகுறிப்பிட விரும்புகிறோம்.
வரி வருவாய் சரிவு:
தமிழக அரசின் சொந்தநிதி வருவாய் - 99590  கோடி
ஊழியர்களின் சம்பளம்  - 47000 கோடி
ஓய்வூதியம் - 21000 கோடி
அதாவது தமிழக அரசின்சொந்த வரி வருவாயில் 67%ஊழியர்களின் சம்பளம்மற்றும் ஓய்வூதியத்திற்குபோய் விடுவதால் வளர்ச்சிதிட்டங்களுக்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகிறது. இது தவிரமாநில அரசின் கடன் 4லட்சம் கோடியாகஇருக்கிறது. கடந்த நான்குவருடங்களாக தமிழகஅரசின் சொந்த நிதிவருவாயும் (மொத்தவருவாயில் 61%) குறைந்துகொண்டே வருகிறதுஎன்பதையும் சுட்டிக் காட்டவிரும்புகிறோம்
GST தாக்கம்:
தமிழக அரசின் ஜூலைமாத வரி வருவாய் - 5000கோடி
GST மூலம் கிடைத்தவருவாய்  - 2750 கோடி
Non GST வரி வருவாய் - 2250கோடி (மது மற்றும்பெட்ரோல்-டீசல் மூலம்கிடைத்த வருவாய்)
மறைந்த முதல்வர்ஜெயலலிதா அளித்தவாக்குறுதி படி தமிழக அரசுபடிப்படியாகமதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயத்தில்உள்ளது. மத்திய அரசுபெட்ரோல்-டீசலை GSTக்குள்கொண்டுவர மும்முரமாகஇருக்கிறது. இதனால் Non GST வரி வருவாய்எதிர்காலத்தில் பாதியாக குறையும் பட்சத்தில் கடும்நிதி பற்றாக்குறை ஏற்படும்.
GSTயினால் கடும்நெருக்கடியில் இருக்கும்பஞ்சாப் அரசு, அரசுஊழியர்களுக்கு சம்பளம்தர முடியாமல் திணறிவருகிறது. ஜனவரி மாதம்முதல் தமிழக அரசிற்கும்இதே நிலை ஏற்பட வாய்ப்புஇருப்பதாக பொருளாதாரவல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.
FRBMA சட்டத்திற்கு எதிராகஅமையும்:
7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்றால்தமிழக அரசிற்கு 20000கோடி வரை கூடுதலாகசுமை ஏற்படும். இதனால்தமிழக அரசின்  Fiscal deficit-GSDP Ratio மீண்டும் 3% மேற்(3.34%) செல்லும்.  (Fiscal deficit-GSDP Ratio should not be above 3% as per the Fiscal responsibility and budget management act). 7வது ஊதியகுழுவை ஏற்றால் FRBMAசட்டத்திற்கு எதிராகஅமையும் என்பதைகோடிட்டு காட்ட இயக்கம்விரும்புகிறது.
வேலைநிறுத்தம் சட்டப்படிகுற்றம்:
Tamilnadu Government employees act 1973 (Clause 22) மற்றும்  ESMA சட்டப்படியும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது சட்டப்படிகுற்றம். TK ரங்கராஜன் vsதமிழக அரசு (2003) சுப்ரீம்கோர்ட் வழக்கிலும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபடஎந்தவித தார்மீகஉரிமையும் இல்லை என்றுஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டுருக்கிறது.சட்டத்தை மதிக்காமல் மீண்டும்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டால் சட்டப்படிஅவர்களை வேலையில்இருந்து நீக்க முடியும்என்றாலும் அவர்களின்வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இரண்டு பணிஉயர்வையும் சம்பளஉயர்வையும் (Promotion and Increment) ரத்து செய்யலாம்.
நீதிமன்றம் தலையிடமுடியாது:
சம்பள உயர்வு என்பதுஅரசின் நிதி நிலைமையைகருத்தில் கொண்டுஎடுக்கப்படும் கொள்கைமுடிவு என்பதால்நீதிமன்றம் இதில் தலையிடமுடியாது. நீதிமன்றம்தலையிட முற்பட்டால், அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு பற்றி முடிவுஎடுப்பது அரசினுடையஅதிகார எல்லைக்குள்உட்பட்டது, நீதிமன்றங்கள்எந்த உத்தரவையும்பிறப்பிக்க முடியாது என்றுநீதிமன்றத்தில்தெரிவித்துவிடலாம்.
செயற்திறனுக்கேற்பசம்பளம்:
மத்திய அரசின் ஊதியகுழுவின்பரிந்துரைகளையும் நிராகரித்துவிட்டுசெயற்திறனுக்கேற்பசம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்றகொள்கையை தமிழக அரசுஅமல்படுத்திஇந்தியாவுக்கேமுன்னுதாரணமாகதிகழவேண்டும். சிறப்பாகசெயற்படும்ஊழியர்களுக்கு மத்தியஅரசின் ஊழியர்களை விட10% அதிகமாக ஊதியம்தரலாம்.
தற்பொழுதே,போக்குவரத்துஊழியர்களுக்கு தமிழகஅரசு சரியாக சம்பளம்தரமுடியாமல் இருப்பதாகசெய்திகள் வருகின்றது.ஆதலால் தற்போதுள்ளசூழ்நிலையில், அரசுஊழியர்களுக்கு சம்பளஉயர்வு சாத்தியமில்லை. 2% (தமிழக மக்கள்தொகையில்) அரசுஊழியர்களுக்கு (12 லட்சம்), 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளஉயர்வு கொடுத்தால்அனைத்து தமிழகமக்களும் (8 கோடி மக்கள்)பாதிக்கப்படுவார்கள். இதுஅரசு ஊழியர்களுக்குஎதிரான செயல் இல்லை,மக்களுக்கு ஆதரவானசெயல் என்பதை அரசுஊழியர்களுக்கு புரியவைத்து, அவர்கள்ஒப்புதலோடு இதைசெயல்படுத்த வேண்டும்.
அரசு சரியான முடிவுஎடுத்தால் சட்ட பஞ்சாயத்துஇயக்கம் அரசிற்குதுணையாக நின்று, மக்கள்இடையே விழிப்புணர்வைஏற்படுத்த அனைத்துமுயற்சிகளையும் எடுக்கும்.
இது சம்மந்தமாகவும்பென்ஷன் திட்டம் பற்றியும்நேரில் சந்தித்து விளக்கம்அளிக்க தயாராகஉள்ளோம். நேரில் சந்திக்கநேரம் ஒதுக்கி தருமாறுதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

EMIS : NEW UPDATED EMIS FORM

ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிக்கை முழு விவரம்...




சனி, 14 அக்டோபர், 2017

ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.
பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு
சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.
இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
இந்த முடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

TN 7 th PAY - List Of Levels Of Pay ( Regular Government Employees)


TN 7th PAY - New Pay Fixation Table Published

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் முறையாக திருநங்கை பிரித்திகா யாசினி எஸ்.ஐ.யாக பதவி ஏற்றார்!!


நாட்டிலேயே முதல் முறையாக தமிழக காவல் துறையில் எஸ்.ஐ.யாக
தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1078 ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கையான பிரித்திகா யாசினியும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் சென்னை மாநகர காவல் துறைக்கு ஆண், பெண் மற்றும் திருநங்கை பிரித்திகா யாசினி என 244 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 244 உதவி ஆய்வாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில், புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழக்கின் தன்மைகள் குறித்தும், அதற்கேற்ப குற்றவாளிகளை பிடிக்கும் முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இதையடுத்து 244 உதவி ஆய்வாளர்களுக்கும் சென்னை முழுவதும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டிலேயே முதல் முறையாக உதவி ஆய்வாளருக்கு தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கில் உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார்.

நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!!!

தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு எதிரான 
வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'நீட் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், 'நீட்' போராட்டம் தொடர்பாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 'நீட்' போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதி மீண்டும் நடைபெறும்' என்றும் தெரிவித்திருந்தது.
விசாரணை: இந்நிலையில், அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஓய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'இந்த விவகாரத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை, சட்டம், ஒழுங்கு ஆகியவை பாதிக்கப்படாத வகையிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பெண்கள், மாணவிகள் அதிகளவில் ஈடுபடுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை அதிகளவில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நீட் தேர்வு போராட்டங்களுக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு!!

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை 
தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன.
இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் ரூ.100 அபராதத்துடனும்,நவ.,6க்குள் ரூ.300 அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., வங்கி ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டண ரசீதை விண்ணப்பத்துடன்
இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்

தேசிய அடைவுத் தேர்வு - 3, 5, 8ம் வகுப்பு மாதிரி வினாக்கள்

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!

வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

SSA -SPD PROCEEDINGS- SWACHH BHARAT VIDYALAYA PURASKAR AWARD 2017 சார்பாக காணொலிக் காட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் 11.10.2017 அன்று மாலை 3 மணிக்குள் நடைபெறுதல் சார்பு.

TNPSC : குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி

கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசியதாவது:
கோபியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் 32 மாவட்ட தலைநகரங்களிலும், அரசின் சார்பில் ₹2 கோடியே 17 லட்சம் செலவில் உயர் கல்வி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும்.    பாடத்திட்ட மாற்றத்தினால், பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். ₹437 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
இந்த பயிற்சி மையத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் பயிற்சி பெறுபவர்கள் தேவையான பயிற்சியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தமிழகத்திற்கு கல்வி கற்க வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, கற்கும் பாரத திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பது எனது பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு

நேற்று (13.10.17) சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழுவின் அவசரக் கூட்டத்தில் 'தமிழக அரசின் ஊதிய மாற்ற அறிவிப்பு 2017' பற்றி விவாதிக்கப்பட்டது. 

☀JACTTO-GEO-வின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, 
☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய கோரிக்கையை அரசு பொருட்படுத்தாது,
☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காமல் ஊழியர்களின் ஊதியத்தைப் பறித்துக் கொண்ட ஏமாற்று வேலையைக் கண்டித்து, 
*☀அக்டோபர் 20 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஊதியக்குழு முரண்பாடுகள் & அரசின் ஏமாற்றுக் குணத்தை விளக்கிக் கண்டனக் கூட்டம்* நடத்துதல் என்றும், 
☀அடுத்தகட்ட நீதி மன்ற விசாரணை நாளுக்குள் ( *23.10.2017-ற்குள்* ), 
*☀இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் உட்பட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி* 
*☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காவிட்டால்,*
*☀24.10.2017-ல்* நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் *அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கை*யை இறுதி செய்வது என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது. 

SCERT-தமிழகபள்ளிக்கலைத்திருவிழா (கலையருவி திட்டம் ) - 2017 - 18 ஆம் கல்வி ஆண்டு முதலாக போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் - அரசாணை மற்றும் நெறிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!!



வெள்ளி, 13 அக்டோபர், 2017

கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை சேகரிக்கும் கல்வித்துறை : விரைவில் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்பு...

G.O No. 302 Dt: October 11, 2017-Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2017 - Orders - Issued


TNTET - 2013 இல் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பணி - Video

புதன், 11 அக்டோபர், 2017

ஒரு நாள் பள்ளிக்கு வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை!!!

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத 
மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பள்ளிக் கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பள்ளி செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பள்ளிக்கூடம் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது" என கூறுகின்றது.
"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.
இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 45 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட அதிபரான சிதம்பரபிள்ளை நவரெத்தினம்.
"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அனுப்புவார்கள். மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பள்ளிக்கூடங்களில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார்.
"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

முழு உடல் பரிசோதனை செய்தால் Income tax ல் 80D ல் 5000 க்கு மிகாமல் கழித்து கொள்ளலாம்.Source தினமணி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 25-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.இவ்வாண்டு கந்த சஷ்டி விழா அக்.20-ம் தேதி தொடங்குகிறது. 
அன்று காலை 6 மணிக்கு யாகசாலைக்குஅருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.இக்கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
அக்டோபர் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.
கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நுாலக, ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, கல்லுாரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப்பின் அனுமதி பெற்ற கல்லுாரிகள் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கலாம். இந்நிலையில், வரும் கல்வியாண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான விதிகள், நவ., இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டுக்கான விதிகளில், பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார் பயிற்சிகளை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம். புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.
இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறினார்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம் மற்றும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கற்றலில் குறைபாடு வார விழாவை திங்கள்கிழமை தொடங்கின. அக். 7-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வுகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஓவியம், நெருப்பில்லாத சமையல், கோலம், கழிவுப் பொருள்களில் இருந்து கலை, நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன. 
இது தொடர்பாக மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 கோடி மாணவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு கற்றலில் குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளது. அதாவது 40 பள்ளி மாணவர்கள் உள்ள வகுப்பில் 4 அல்லது 5 பேருக்கு இந்தக் குறைபாடு காணப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாவதற்கு கற்றலில் குறைபாடும் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறியது: கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாகக் காணப்படும். ஆனால் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் சிரமப்பட்டாலும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் படிப்பில் மதிப்பெண் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிற துறைகளில் அவர்களுக்கு உள்ள திறமை ஊக்குவிக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அந்தக் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி, ஆகஸ்ட், ௩௧, நிலவரப்படி, அரசு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, உபரியாகஉள்ள இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33; தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 383 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

மாண்புமிகு அமைச்சர்  திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,
பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை அமைச்சர்
தமிழ்நாடு.
தமிழக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சர்வதேச கல்வித் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முழு முயற்சியாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது. 
இதனைக் கொண்டுவந்தமைக்காக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் , உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களுக்கும், 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும், தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும்,  அரசு பள்ளிகளில் பயிலும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்வாதார கோரிக்கைகள்...
1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

 3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.
 அரசு பள்ளிகளில் கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளும் முதல் பருவ திருத்திய விடைத்தாளை அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள்

1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல்
2. பாஸ்போர்ட் போட்டோ   4  copies
(CPS நம்பர்   Online la apply செய்வதற்கு,
பணிப்பதிவேட்டிற்கு,
Health Fund apply செய்வதற்கு)
3. ஆதார் கார்டு மற்றும் நகல்
4. குடும்பத்தினர் பாஸ்போர்ட் போட்டோ
5.  பான் கார்டு மற்றும் நகல்
6. பணிப் பதிவேடு  (Binding செய்தால் மிக நல்லது )
7.அனைத்து ஒரிஜினல் படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்
Offline னில்   செப்டம்பர் மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்தை அக்டோபர் 15 ம் தேதிக்குள் பெறலாம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.
இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.
இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார். 
இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு 
உள்ளது

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு

ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல்மூலம் 39,000 தெலுங்கு மீடியப் பள்ளிகள் ஆங்கில மீடியத்துக்கு மாறவிருக்கின்றன.
ஆந்திர அரசு
ஆந்திர அரசு, ஏற்கெனவே மாநகராட்சிப் பள்ளிகளை ஆங்கில மீடியத்துக்கு மாற்றியமைத்திருக்கிறது. ஆரம்ப வகுப்புப் பள்ளிகளையும் ஆங்கில மீடியத்துக்கு மாற்றுவதன்மூலம், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது ஆந்திர அரசு.
'இந்த மாற்றத்தைக் கொண்டுவர கடந்த ஓராண்டாகத் திட்டமிட்டோம். மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால், மாநகராட்சிப் பள்ளிகளை மாற்றியபோது எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்பதால், தற்போது ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றியமைக்க முடிவுசெய்திருக்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள், தனியார் ஆங்கிலப் பள்ளியை நாடிச் செல்கிறார்கள். இனி, அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலப் பள்ளிகளாக மாற்றுவதன்மூலம், அரசுப் பள்ளியை நாடி வருவார்கள். தற்போது, தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதியையும் வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம்.
முதல்கட்டமாக, மாவட்டத் தலைநகரிலும் நகராட்சிகளிலும் உள்ள பள்ளிகளை மாற்றியமைக்க இருக்கிறோம். ஏற்கெனவே, தெலுங்கு மொழியில் பாடம் நடத்திவரும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்துவருகிறோம்' என்கிறார்கள், ஆந்திர பள்ளிக் கல்வித்துறையினர்

விஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, ௯ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆண்டு தோறும், 1,௦௦௦ ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோர் கூறுகையில், '௨௫ ஆண்டுகளில், விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும், 1,௦௦௦ ரூபாய் மட்டுமே உதவி தொகையாக தரப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க, வேண்டும்' என்றனர்.

Part Time Teachers - நிரந்தர பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

பகுதி நேர சிறப்பாசிரியர்களை  பணி நிரந்தரம்  செய்ய வேண்டி பலகட்டங்களாக போராட்டம் நடத்தியும்,   அரசு பணிநிரந்தரம்  செய்ய வாய்ப்பு இல்லை என்று  கூறி விட்டது.
ஆனால் அதன் பின்னர் போட்டித் தேர்வின்  மூலமாக மட்டுமே நிரந்தரப் பணியிடம் நிரப்பப்படும்  என்று கூறி 1370 சிறப்பாசிரியர் பணியிடம் தோற்றுவித்து இந்த மாதம் 23-09-2017 அன்று தேர்வு நடைபெற்றன.          
         
         இதில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 40/- ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்40/- மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் அதேப் பள்ளியில் நிரந்தர பணியிடமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக  கேட்டுக் கொள்கின்றோம்.
By - Mr. Gurusaran.

CM CELL : 2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

தாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி!!!

தமிழகத்தில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2016ஆம் ஆண்டுஅக்டோபரோடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாகத் தேர்தல் நடப்பது பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது. வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத் தேர்தல் ஆணையமோ இதுகுறித்து நீதிமன்றத்திடமே விளக்கம் கோரியுள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய 4,000 கோடி ரூபாய் நிதியைத் தர மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் அரசாங்கம் என அழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கிக் கிடக்கின்றன.
இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவ. இளங்கோ.
“மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12,528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 4,000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் மத்திய அரசு இத்தொகையை தர மறுக்கிறது. பலமுறை டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த நிதியை பெற எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.
இந்நிதியின் மூலம் கோவை மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய 60 கோடி ரூபாய் கிடைக்காததினால் 500 துப்பரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தர முடியாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் தேர்தலை எதிர்நோக்கி பல இடங்களில் அளவுக்கு மீறி பணம் செலவழிக்கப்பட்டதால் தற்போது ஊழியர்களின் சம்பளத்துக்கே திண்டாட வேண்டியுள்ள நிலை நிலவுகிறது. அதிகபட்சமாகச் சென்னை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, மத்தியத் தணிக்கைக் குழு சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் ரூ.2,000 கோடி (17 வருடங்களுக்கு) வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது” என்ற சிவ.இளங்கோ உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் சுகாதார நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
“சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த வேளையில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும் கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறது. தேர்தல் நடந்து உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் இருந்திருந்தால் அடுத்தத் தேர்தலுக்கு அஞ்சி ஓரளவுக்காவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களுக்கு கிராம மக்களோடு எந்தப் பிணைப்பும் இல்லாததால் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2005இல் குஜராத் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் குஜராத் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நடந்த வழக்கில், தேர்தலை எக்காரணத்துக்காகவும் (delimitation பிரச்னை உட்பட) தள்ளிவைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 73ஆவது அரசியல் சாசன திருத்தத்தின்படி கட்டாயமாக ஐந்து வருடத்துக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும், வருடத்துக்கு நான்கு முறை கட்டாயமாகக் கிராமசபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராமசபைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராமசபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்துகொள்ளவிட்டாலும் பொய் கையெழுத்துப் போட்டு கிராமசபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. எனவே உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் சிவ.இளங்கோ.
தமிழகம் ரூ.4 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், இந்த 4000 கோடி ரூபாயைத் தமிழக அரசு முறையாகப் பெற, உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா?

அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு???

மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 நாடு முழுவதும், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி
மாணவர்களுக்குகதர் சீருடைகள் வழங்க வேண்டும்;
அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணிய வேண்டும்' என, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள், அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 ரயில்வே, விமான ஊழியர்கள் கதர் ஆடைகள் வாங்க வேண்டும் என, மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.இந்தியாவில், பிரபலமான தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பள்ளி மாணவர்கள் கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நடைமுறையை, தமிழகத்திலும் கடைபிடிக்க வேண்டும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டாவது, இந்த அறிவிப்பை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.அனைத்து அரசு ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும். இதனால், மக்களிடம் தேசப்பற்று வளர்வதோடு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.