>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

Hello English Unit 1(3 videos)

கிராமப்புற மாணவர்களும் புதிய தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில் அரசுப்பள்ளியில் "ஸ்மார்ட் வகுப்பறை" தொடக்கம்


"SMART CLASS " திறப்புவிழா 13.12.2017 அன்று
கிராமப்புற மாணவர்களும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் கல்வி கற்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - கருங்குழி,குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் ஏ.சி வசதியுடன்
 கூடிய." SMART CLASS" உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சவரிமுத்து அவர்களின் தலைமையில், பள்ளி தலைமைஆசிரியர் திரு.அந்தோணி ஜோசப் அவர்களின் முன்னிலையில்தொழிலதிபர் திரு.TRM சாந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



தொழிலதிபர் திரு. TRM அவர்கள், பள்ளி தலைமைஆசிரியர்,உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு  பங்களிப்போடு இவ்வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்
நன்றி! நன்றி!

🌹18-08-14 தஞ்சை மாநகரில் கல்வி அமைச்சர் மற்றும் முதன்மை கல்வி செயலர் அவர்களால் எமது பள்ளிக்கு மாவட்டத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.


🌹01-04-17 அன்று சைகை ஒலிப்புமுறை படப்பிடிப்பானது தாயெனப்படுவது தமிழ் இயக்குனர் ஜெரோம், கலைமுருகன் மற்றும் ஷாம் அவர்களால் எமது பள்ளியில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.  




🌹தொடக்கப்பள்ளியில் 203 மாணவர்களை கொண்டு சிறப்பானக்கல்வி அளித்துவருகிறோம்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி!!!

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க,
4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

Hello English Unit 3 (3 videos)


ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு!!!

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, 
தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை.என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!!!


கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம்எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.மாணவ - மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும். 
இதற்கானசர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும்சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

EMIS - Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS - Official Android App Published Now
EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்
புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

ஜப்பானை சுற்ற தயாராகும் ஆசிரியர், மாணவர் பட்டியல்

தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின்
கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர் பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இரு நாட்டின் ஒப்பந்தம் அடிப்படையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 96 மாணவர்கள், 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழக கல்வித் துறையில் ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு நாட்டின் கலாசாரம், பண்பாடு, கல்வி முறை குறித்து தெரிந்து கொள்வதற்கு திட்டம் வகை செய்துள்ளது. மாணவர்கள் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவராகவும் அதிக மதிப்பெண் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஆங்கில புலமையும், தேசிய மற்றும் ஊரக திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்று உதவி தொகை பெறுபவராகவும், பாஸ்போர்ட்
பெற்ற மாணவராகவும் இருக்க வேண்டும். ஆசிரியரை பொறுத்தவரை அவர் முதுகலை பிரிவில்
ஆங்கிலம் நன்கு தெரிந்து, மத்திய நல்லாசிரியர் விருது பெற்றவராகவும், ஜப்பானுக்கு இதுவரை செல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு தலா 32 ஆசிரியர், மாணவர் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் தயாரித்து, அதில் இருந்து தமிழகம் சார்பில் ஐந்து மாணவர், ஒரு
ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு வரும் ஏப்., அல்லது மே மாதத்தில் ஜப்பான் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். இதுபோல் ஜப்பானில் இருந்தும் ஆசிரியர், மாணவர்கள் இந்தியா வரவுள்ளனர், என்றார்.

Hello English Unit 2 (3 videos)

சனி, 16 டிசம்பர், 2017

கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம்எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.மாணவ - மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும். 
இதற்கானசர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும்சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

EMIS - Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS - Official Android App Published Now
EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்
புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ல் துவக்கம் : கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
+1 பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதிவரை நடைபெறுகிறது. +2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 
மார்ச் - 16: தமிழ் முதல் தாள்
மார்ச் - 21: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 28: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் - 4: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் - 10: கணிதம்
ஏப்ரல் - 12: விருப்பமொழி தேர்வு
ஏப்ரல் - 17: அறிவியல்
ஏப்ரல் - 20: சமூக அறிவியல்
+1 பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் - 7: தமிழ் முதல் தாள்
மார்ச் - 8: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 13: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 14: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் - 20: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல்,
ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு
மார்ச் - 23: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் - 27: இயற்பியல், பொருளியல்
ஏப்ரல் - 3: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்
ஏப்ரல் - 9: உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் - 13: தொடர்பு ஆங்கிலம், நெறிமுறையியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல்
ஏப்ரல் - 16: அரசியல் அறிவியல், நர்சிங் பொது, புள்ளியியல்
+2 பொதுத்தேர்வு அட்டவணை 
மார்ச் - 1: தமிழ் முதல் தாள்
மார்ச் - 2: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 5: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 6: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் - 9: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் - 12: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு
மார்ச் - 15: அரசியல் அறிவியல், செவிலி, புள்ளியியல்
மார்ச் - 19: இயற்பியல், பொருளியல்
மார்ச் - 26: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்
ஏப்ரல் - 2:  உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் - 6: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி தேர்வு.

TNPSC - குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018 ஆம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018ல் எவ்வித மாற்றமுல் இல்லை'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்,தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புத்தொகை விண்ணப்புதவித் தொகை விண்ணப்ப படிவம்

மூன்றாம் பருவம்: 1.25 கோடி புத்தகங்கள் தயார்...

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கு வழங்கப்படுவதற்காக 1.25 கோடி இலவச புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் முப்பருவ கல்விமுறை அமலில் உள்ள நிலையில் மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்துவரும் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி, மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை பள்ளிகள் திறந்த அன்றே (ஜன.2) வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1.25 கோடி மூன்றாம் பருவ புத்தகங்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நிகழ் கல்வியாண்டு முதல் கடந்த இரு பருவங்களாக அந்தந்த பள்ளிகளுக்கே புத்தகங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையே மூன்றாம் பருவத்திலும் தொடரும். இலவச பாடப் புத்தகங்கள் தவிர தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காக 65 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையை நேரிலும், இணையதளத்திலும் (www.textbookcorp.in) தொடர்பு கொண்டு உரிய பணத்தைச் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு புத்தகங்கள்...: வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1,2,6,9,11 ஆகிய 5 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படவுள்ளன. புத்தகங்கள் எழுதும் பணிகள் முடிவடைந்ததும் வரும் ஏப்ரல் மாதத்தில் அச்சிடும் பணி தொடங்கும்.
இதற்கிடையே அடுத்த கல்வியாண்டின் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சுமார் 1 கோடி புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை முன்கூட்டியே தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



2018 Calender Leave schedule with RL

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ல் துவக்கம் : கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
+1 பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதிவரை நடைபெறுகிறது. +2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 
மார்ச் - 16: தமிழ் முதல் தாள்
மார்ச் - 21: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 28: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் - 4: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் - 10: கணிதம்
ஏப்ரல் - 12: விருப்பமொழி தேர்வு
ஏப்ரல் - 17: அறிவியல்
ஏப்ரல் - 20: சமூக அறிவியல்
+1 பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் - 7: தமிழ் முதல் தாள்
மார்ச் - 8: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 13: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 14: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் - 20: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல்,
ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு
மார்ச் - 23: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் - 27: இயற்பியல், பொருளியல்
ஏப்ரல் - 3: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்
ஏப்ரல் - 9: உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் - 13: தொடர்பு ஆங்கிலம், நெறிமுறையியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல்
ஏப்ரல் - 16: அரசியல் அறிவியல், நர்சிங் பொது, புள்ளியியல்
+2 பொதுத்தேர்வு அட்டவணை 
மார்ச் - 1: தமிழ் முதல் தாள்
மார்ச் - 2: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் - 5: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 6: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் - 9: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் - 12: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு
மார்ச் - 15: அரசியல் அறிவியல், செவிலி, புள்ளியியல்
மார்ச் - 19: இயற்பியல், பொருளியல்
மார்ச் - 26: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்
ஏப்ரல் - 2:  உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் - 6: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி தேர்வு.