>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 23 ஜூலை, 2017

வாக்காளர் சேர்ப்பு: இன்று சிறப்பு முகாம்....


தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, இளம் வயது வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும், 18 முதல், 21 வயதிற்குட்பட்டவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, ஜூலை, 1 முதல், ஜூலை, 31 வரை, வாக்காளர் சேர்ப்பு நடக்கிறது. ஜூலை, 1 முதல், 8 வரை, 4,070 பேர்; 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், 30 ஆயிரத்து, 285 பேர்; ஆன்லைன் மூலம், 4,070 பேர்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். தொடர்ந்து, வாக்காளர் சேர்ப்பு பணி நடந்து வருகிறது.

இன்று, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமிலும், 18 வயது முதல், 21 வயதிற்குட்பட்டவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 'இந்த முகாமில், யார் விண்ணப்பம் கொடுத்தாலும், வாங்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன; அதை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''இளம் வயது வாக்காளர்களுக்காக, இம்முகாம் நடத்தப்படுகிறது. மற்றவர்கள் ஆன்லைன் மூலம், எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அடுத்து, அக்டோபரில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போதும் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

சனி, 22 ஜூலை, 2017

பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் பாதுகாப்பில் ஓட்டை... 

அதிர்ச்சிகர தகவல்கள்

     உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இது பேஸ்புக் செட் அப்பில் உள்ள குறைபாடு என்று கூறப்படுகிறது.இதனால் வேறொருவர் உங்கள் அக்கவுண்ட்டில் ஊடுவ முடியும்.


இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் உள்ளன.

' உங்களது பேஸ்புக் கணக்கின் பாஸ்வோர்ட் தேவையில்லாமலேயே உங்கள் கணக்கினில் மற்றவர்கள் ஊடுருவ முடியும் என்பது உறுதியாகி உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் மார்டின்ட்லே என்பவர், இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளராக இருந்துவருகிறார்.


இவர் தன்னுடைய செல்போனில் புதிய சிம்கார்ட் போட்டுள்ளார். அந்த சிம் செயல்பட தொடங்கியதும், அந்த புதிய எண்ணானது அவரது பேஸ்புக் கணக்குடன் இணைந்துள்ளது.

அப்போது அவர், தனது பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்யவில்லை. ஆனாலும் 'அவர் தனது பேஸ்புக் கணக்கில் சிறிது நேரமாக செயல்படவில்லை' என்று அவரது அலைபேசிக்கு பேஸ்புக்கிடம் இருந்து மெசேஜும் வந்துள்ளது.

உடனே அவர் தனது புதிய எண்னை பயன்படுத்தி பேஸ்புக்கில் தேடிய பொழுது வேறொரு நபரின் பேஜ் திறந்துள்ளது. ஜேம்ஸ் அந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணை உபயோகித்து, எதோ ஒரு பாஸ்வோர்டுடன் குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் உள்நுழைய முயற்சித்துள்ளார். ஆனால் அது பயன் அளிக்கவில்லை.

எனவே அவர் பேஸ்புக்கில் உள்ள அக்கவுண்ட் ரெக்கவரி வசதியினை கிளிக் செய்துள்ளார். அதில் அவருக்கு வந்துள்ள ஆறு வழிமுறைகளில், எந்த எண்ணை உபயோகித்து அந்த குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் தவறாக நுழைய முயற்சித்தாரோ, அந்த எண்ணுக்கு மெசேஜ் மூலம் பாஸ்வோர்ட் மாற்றுவதற்கான ரகசிய கோட் -ஐ பெற்றுள்ளார்.

அதனை அவர் உடனடியாக செயல்படுத்திய பொழுது, ரகசிய கோடின் மூலம் அந்த கணக்கினுள் நுழைய முடிந்தது என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்! - ஹேர் டையை தூக்கி போடுங்க!

இன்றைய காலகட்டத்தில் சின்ன வயசுலயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது.






இதற்கு அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை உபயோகிப்பது, தண்ணீர், முடிக்கு ஏற்ற பராமரிப்பு இல்லாமல் போவது ஆகியவை காரணமாக இருக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையே சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இந்த நரைமுடி பிரச்சனை வரவே வராது, ஆனால் பெரும்பாலும் யாரும் இதை செய்வதே கிடையாது. எச்சிலை தொட்டு வைத்தால் முகப்பரு போகுமா? சரி அது இருக்கட்டும் வந்த நரைமுடியை எப்படி போக்குவது, கருமையான கார்மேக கூந்தலை எப்படி பெறுவது என்பதை இந்த பகுதியில் காணலாம்.



டிப்ஸ் #1 காலையில் அவசர அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால் தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு தீர்வு என்னவென்றால், நீங்கள் இரவு தூங்கும் முன்பு வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து, அதனை காலையில் அரைத்து, தலைமுடிக்கு தடவிக்கொள்ளுங்கள். அது காய்வதற்குள் தலைக்கு சிகைக்காய் போட்டு தலைமுடியை அலசிவிடுங்கள். இதனால் செம்மட்டை முடி மாறி கருமையான முடி வளரும்.

டிப்ஸ் #2 தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடிக்கு தடவுவது நரை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். இந்த கலவை தலைமுடியில் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி தலைமுடியை கருமை நிறத்தில் மாற்றிவிடும்.

டிப்ஸ் #3 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதனை தேவையான அளவு எடுத்து, சம அளவு மருதாணிபொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்

டிப்ஸ் #4 டீத்தூளை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறுவது உறுதி.

டிப்ஸ் #5 கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை முடியின் வேர்கால்களில் தடவி, 1 மணி நேரம் கழித்து, கெமிக்கல் குறைவான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து தலையை அலசி விட வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு தடவை செய்வதால் நீங்கள் கருமையான கூந்தலை பெற முடியும்.

டிப்ஸ் #6 வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் அல்லது அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.

டிப்ஸ் #7 ஒரு இரும்பு வாணலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாக எண்ணெய்யை 20 நிமிடங்கள் வரை சூடு செய்ய வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும். பயன்படுத்தும் முறை: காய்ச்சிய இந்த எண்ணெய்யை ஒரு நாள் முழுவதும் வாணலியிலேயே வைத்து குளிர்விக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

டிப்ஸ் #8 நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் புதினா, கருவேப்பிலை. இவை மூன்றையும் தனித்தனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள். மூன்று நாட்களில் கரகரப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். பயன்படுத்தும் முறை: இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு, காய்வதற்குள் அலசவும். மேலும் இந்த பேக்கை தண்ணீருடன், எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எந்த பொருளுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரைமுடி வராமல் தடுக்க இது தான் பெஸ்ட் டிப்ஸ் ஆகும்.

டிப்ஸ் #9 நீங்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே நரைமுடி மாயமாக மறைந்து விடும்.

டிப்ஸ் #10 தாமரைப்பூ கசாயத்தை தினமும் காலை மாலை என இருவேளைகளும் பருகி வந்தால் நரைமுடி சீக்கிரமாக மறைந்து போகும்.

டிப்ஸ் #11 கீரை தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதுவும் முளைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், நரைமுடி பிரச்சனை சில நாட்களில் இல்லாமல் போய்விடும்.

10th March 2017 Exam - Original Mark Sheet issue On 26.07.2017

மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை 26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல் அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.



11th Chemistry Study Material - Unit 1

11th Study Materials Download
  • Chemistry - Unit 1 Study Material | Mr. A.Moorthy - English Medium

A. MOORTHY. MSC, B.Ed,. PGT-CHEMISTRY, GREEN VALLEY MAT HR SCHOOL, CHENNAI-37


பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் அறிக்கை :


வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும்.
மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்

Jio - அடுத்த அதிரடி - ரூ.24-க்கு ஜியோ கேபிள் டிவி..


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

இதனால் ஏர்டெல் டிடிஎச், வீடியோகான் டிடிஎச், சன் டிடிஎச், சன் நெக்ஸ்ட் ஆகிய சேவைகள் அளித்து வரும் நிறுவனங்களுக்குப் பெறும் சவாலாக ரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் சேவை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
விலை
தொலைக்காட்சிகளில் காணக் கூடிய ஜியோ போன் கெபிள் டிவி சேவை 309 ரூபாய் மாதம் என்ற கட்டணத்தில் கிடைக்கும்.

சிறிய பேக்குகள்
ஒரு வாரத்திற்குக் கேபிள் டிவி சேவையினைப் பெற 54 ரூபாயும் இதுவே இரண்டு நாட்களுக்கு டிசி சேவைப் பெற 24 ரூபாய் எனவு கட்டணமாக அறிவித்துள்ளது.

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே மொபைல் சேவையில் பெறும் நட்டத்தைச் சந்தித்து வரும் நிலையில் ஜியோவின் இந்த அறிவிப்பு மேலும் நட்டத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் உள்ளது.

மின்னணு குடும்ப அட்டைகள் திருத்தம் எப்படி?: 

தமிழக அரசு விளக்கம்


மின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தம் செய்வது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாத அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து நுழையலாம். இதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசிக்கு கடவுச் சொல் வரும். அதனைப் பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.
குடும்பத் தலைவரின் புகைப்படம், இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிட்டால் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகே, மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும்.
அட்டைதாரர் அவரிடம் உள்ள இணையதள வசதி மூலமாக இணையதளத்திலோ அல்லது TNEPDS என்ற செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தியோ திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.
அரசு இணைய சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் மேற்கொள்ளலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அவர்களின் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.
அட்டைதாரரின் பகுதிக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.
சரியான விவரங்கள், புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிப்படாத அட்டைதாரர்கள் விவரம் நியாய விலைக் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் உரிய வகையில் திருத்தம் செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.

HOW TO ORDER "FREE RELIANCE JIO PHONE"


ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் ஜியோபோன் சரியான விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜியோபோனினை செப்டம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்ய முடியும்.புதிய ஜியோபோனினை மை ஜியோ செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஜியோபோன் வங்குவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அதன்பின் முதலில் முன்பதிவு செய்தோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விற்பனை துவங்குகிறது.
ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ஜியோபோன் விலை ரூ.0 எனஅறிவிக்கப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் திரும்ப வழங்கப்படும் தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் ஜியோபோன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
 டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருப்பதால் வாய்ஸ் கமாண்ட் மூலம் போனினை இயக்க முடியும். இத்துடன் 24 மொழிகளை இயக்கும் வசதியும், 5 எண் அழுத்திப் பிடித்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் ஜியோபோனில் என்எஃப்சி வசதியை வழங்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான மென்பொருள் அப்டேட்வழங்கப்படம் இருக்கிறது. மேலும் ஜியோபோனில் பயன்படுத்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போனின் சாதக ,பாதகங்கள்??

இந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவைகள்தான், தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள ஜியோபோன் வாங்கலாமா ? வேண்டாமா ? அறிவோம் வாருங்கள்.

ஜியோபோன்.....

ஜியோ போன் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தாலும், இந்த 4ஜி மொபைலை வாங்குவது நண்மையா ? மூன்று வருடத்துக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திருப்பி தருமா ஜியோ என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு பெறும் வகையில் ஜியோ ஃபோன் கவர் ஸ்டோரி காணலாம்.

ஜியோ போன் முற்றிலும் இலவசமா ?

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2ஜி சேவை பெற்ற ஃபீச்சர் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தேவையே மிக அதிகமாகும்.

4ஜி உயர்தர இணைய வேகத்தை பெறும் வகையில் கொண்டு வழங்கப்படுகின்ற இந்த சேவையை சாதாரன மக்களும் பயன்படுத்தும் வகையில் ஜியோ திட்டமிட்ட நோக்கமே ஃபீச்சர் போன் எனப்படுகின்ற பட்டன்களை கொண்ட மொபைல் ஆகும்.

இன்றைக்கு ஸ்மார்ட்போன் உலகம் மிக விரிந்து கிடந்தாலும், ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களை முழுமையான ஸ்மார்ட்போனுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை , என்பதனை உணர்ந்த ஜியோ எடுத்த அதிரடி முடிவுதான் 4ஜி எல்டிஇ சேவையுடன் கூடிய ஃபீச்சர் போன் திட்டம், தற்போது இதனை சாதித்து காட்டுவதற்கு தயாராகிவிட்டது.

எந்த கட்டணமும் மொபைலுக்கு வசூலிக்கப்படாது, ஆனால் ரூ.1500 மட்டுமே திரும்ப பெறதக்க பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்த வேண்டும், இதனை மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. (எதோ காரணத்தால் ஜியோ மொபைல் தவறிவிட்டாலோ அல்லது சேவையை பயன்படுத்த தவறினாலோ கட்டணத்தை திருப்பி தருமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க பெறவில்லை )

ஜியோபோன் டேட்டா பிளான்

ஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 500எம்பி ஆக இருக்கலாம்) என குறிப்பிட்டுள்ளது.


மேலும் ரூ, 24 கட்டணத்தில் இரு நாட்கள் பிளான் மற்றும் ரூ.54 கட்டணத்தில் வாரம் முழுவதும் (7 நாட்கள்) பயன்படுத்தலாம். இதுதவிர கூடுதலான டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ. 309 கட்டணம் எதற்கு என்றால் உங்கள் ஜியோ போனை எந்த டிவியிலும் இணைத்து இணையத்தை வாயிலாக தொலைக்காட்சியில் சேவைகளை பெறும் வகையிலான பிளான் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு எனில் ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல கலைஞர் டிவியிலும் இணைக்கலாம் என்றே நினைக்கிறேன்.

ஜியோபோன் வசதிகளும் சிறப்புகளும்.....

இது ஒரு மினியேச்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லும் வகையிலான பல்வேறு வசதிகளை 2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் பிரசத்தி பெற்ற வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் இணைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபயர்ஃபாக்ஸ் ஒஎஸ் அடிப்படையாக கொண்ட கெய் ஓஎஸ் (KaiOS) கொண்டு இயக்கப்படுகின்ற இந்த 4ஜி ஜியோபோனில் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பயனார்கள் விரும்பும் ஆப்கள் தரவிறக்கலாம்.

இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

செல்ஃபீ மற்றும் கேமரா பிரியர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் பெரிய அளவில் பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை. இரண்டு மெகாபிக்சல் விஜிஏ கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வை-ஃபை ஹாட்ஸ்பாட் வசதி வழங்கப்பட்டுள்ளதால் கணினி மற்றும் மொபைல்கள் போன்றவற்றுடன் இணைப்பதுடன், தானாகவே மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான மென்பொருள் அப்டேட்ட் உள்பட NFC வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேம்ஸ் பற்றி எந்த முக்கிய தகவலையும் ஜியோ வழங்கவில்லை என்பதனால் கேம் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்று.

ஜியோ போன் வாங்கலாமா ?

2ஜி சேவையை மட்டுமே விரும்பி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாங்கலாம்.

குறிப்பாக இதில் இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்தலாம் என்பதனால் ஒன்று ஜியோ 4ஜி மட்டுமே இருக்க வேண்டும் மற்றொன்று உங்களுடைய 2ஜி என்னை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் மாதம் ரூ.100 ரீசார்ஜ் செய்பவர்கள் என்றால் வரி பிடித்தம் போக ரூ. 80 டாக்டைம் கிடைக்கலாம் மற்றும் கூடுதலாக அதிகம் பேசுபவர்கள் தனியான பூஸ்டர் பேக் போட வேண்டிய நிலை இருக்கலாம். இவற்றை சமாளிக்க மாதம் ரூ.153 மட்டும் ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம், தினமும் 100 எஸ்எம்எஸ், 500எம்பி டேட்டா பெறலாம்.

ஜியோ போன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.

உங்களுடைய தற்போதைய 2ஜி சேவையை விட கூடுதலான பலன்களையே பெறலாம்.

ஸ்மார்ட்போனுடன் பீச்சர்போனை வைத்திருக்கும் பிரியர்களுக்கு ஏற்றதாகவே இது இருக்கும்.

ஜியோபோன் வேண்டாம் ? ஏன்

அதிகப்படியான இணைய வேகம், செல்ஃபீ, கேமரா, கேம் பிரியர்களுக்கு இந்த மொபைல் சரிப்பட்டு வராது. தொடுதிரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல்வேறு வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்த இயலாது.

ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மட்டுமே நோ சொல்லாம்.

ரூ. 153 மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டும் அல்லது ரூ. 24 இரு நாட்களுக்கு அல்லது 7 நாட்களுக்கு ரூபாய் 54 செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்..!

டவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என ஜியோ குறிப்படும்போது அடுத்த 12 மாதங்களுக்குள் 99 % இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை முற்றிலும் கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.



ஜியோ போன் உண்மையில் இலவசமே இல்லை..!

நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 153 ரீசார்ஜ் செய்தால் (ரூ.54 அல்லது ரூ.24 ) அதன் மொத்தம் ரூபாய் 1836 நீங்கள் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ள ரூ. 1500 என மொத்தம் ரூ. 3,336 ஆக மொத்தம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் செலுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரூபாய் 5508 மற்றும் டெபாசிட் தொகையை சேர்த்து ரூபாய் 7008 மொத்த தொகையில் சராசரியாக 6-10 % வட்டி என கணக்கிட்டாலே வருடம் 300 முதல் 500 வரை வட்டியாக கிடைக்கும் என்பதனால் ரூ.1500 பெறுவது ஜியோவுக்கு சாதாரனமே என்பதுதான் உண்மை.

வருகை

வரும் ஆகஸ்ட் 15ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஜியோ போன், இதே வாரத்தில் டெஸ்ட் செய்து பார்க்கலாம், ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு ஜியோ டிஜிட்டல் ஸ்டோர் விற்பனையாளர் மற்றும் மை ஜியோ ஆப் வழியாக தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். வாரம் 5 மில்லியன் அதாவது 50 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும்.

150 Middle to High Schools Upgraded GO with Schools List Published No GO No 174, Date: 18.7.2017

  பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு 

CLICK HERE-G.O 174-DATE-18.07.2017-MIDDLE TO HIGH SCHOOL UPGRADE SCHOOL LIST

Flash News: 100 High School to Higher Secondary Schools List Published Now - GO No. 173, Date: 18.7.2014

G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'

சென்னை: நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் உள்ளன. 


கவுன்சிலிங் : தமிழகத்தில், ஒன்பது நிகர்நிலை பல்கலைகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்தாண்டு முதல், நிகர்நிலை பல்கலையில் உள்ள இடங்களையும், மத்திய அரசு, கவுன்சிலிங் மூலம் நிரப்புகிறது.

இடம் காலி : இதற்கான, முதற்கட்ட கவுன்சிலிங், ஆன்லைன் மூலம், சமீபத்தில் நடந்தது. இதில், 8,801 பேர் சீட் பெற்றுள்ளனர். இவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த, பல்கலையில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5 முதல், 7 வரை நடக்கிறது.அதே போல், மருத்துவப் படிப்பகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும். இல்லை என்றால், அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும்.

படித்ததில் பிடித்தது...நம் முன்னோர்களின் அறிவியல் ஞானம்..

சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிறுக்காங்க....!!!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....


என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!! கண்டிபாக இல்ல...
நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழ்க்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க....

சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

படித்ததில் பிடித்தது...நம் முன்னோர்களின் அறிவியல் ஞானம்.. 

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
செம..! 

10 the Std - Probability Lesson Plan | Maths

TAMIL FLASH CARDS FOR - PRIMARY STUDENTS!!






5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, விரைவில் இதற்கான
மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

 ‘குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா’ குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்து பேசியதாவது-
5 முதல் 8-ம் வகுப்பு வரை பயில்பவர்கள் கண்டிப்பாக தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்கிற முறை முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்படி, மார்ச் மாதம் ஒரு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு மே மாதம் மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

அப்போதும் அவர் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவர் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அமர்த்தப்படுவார். இது தொடர்பான மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

 கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16-ன்கீழ் கட்டாயத் தேர்ச்சி என்ற கைவிடப்படுகிறது. மேலும், மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பள்ளியில் இருந்து நீக்குவதும் தடை செய்யப்படுகிறது.


குழந்தைகளை தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பது அவர்களை மனச்சோர்வடையச் செய்யும், சில நேரங்களில் பள்ளிப்படிப்பை கைவிட வேண்டியது இருக்கும் என்பதால் கட்டாயத் தேர்ச்சி கொண்டு வரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்டாயத் தேர்ச்சி முறையால்,மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது என்று கவலைகொண்டன. இதையடுத்து இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு முன்கூட்டியே அறிவிப்பு..

சென்னை: அண்ணா பல்கலையின் தேர்வு அட்டவணை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலையின், 627 இணைப்பு கல்லுாரிகளில், மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, 45 முதல், 50 நாட்கள் வரை நடத்தும் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், 28 முதல், 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஜூலை, 3ல் வகுப்புகள் துவங்கியுள்ளன. அக்., 21க்குள் வகுப்புகள் முடிக்கப்படும். அக்., 23 முதல், 28 வரை செய்முறை தேர்வும், அக்., 30 முதல், நவ., 30 வரை எழுத்து தேர்வும் நடக்கும்.டிச., 17 வரை, விடுமுறை அளிக்கப்பட்டு, டிச., 18ல் அடுத்த வகுப்புகள் துவங்கும். இதை, கல்லுாரிகள் சரியாக கடைபிடிக்க வேண்டும்; தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபரங்களை, aucoe.annauniv.edu இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1.66 லட்சம் இன்ஜினியரிங் : நாளை பொது கவுன்சிலிங் துவக்கம் இடங்கள்

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 553 இன்ஜி., கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது. தொழிற்கல்வி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில், 2,000 இடங்கள் நிரம்பிஉள்ளன. மீதமுள்ள, 1.66 லட்சம் இடங்களை நிரப்ப, பொது கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும், இந்த கவுன்சிலிங்குக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நாளை முதல், ஆக., 11 வரை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்காக, மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளே சென்னைக்கு வரும் மாணவியர், தாய் அல்லது பெண் உறவினருடன் வந்தால், அவர்கள் அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள விடுதியில் தங்க, இலவச இட வசதி வழங்கப்படுகிறது.மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையம், கேன்டீன், கவுன்சிலிங் கட்டணம் செலுத்த, வங்கி கவுன்டர்கள், கடன் பற்றி தெரிவிக்க, வங்கியின் விசாரணை அரங்குகள்.
அரசின் உதவித்தொகை தகவல் மையங்கள், 'அம்மா' குடிநீர் விற்பனை மையம், விசாரணை மையம் என, அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்குக்கு வருவோர், காத்திருக்க பெரிய அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில், நான்கு பெரிய, டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. காலியாக இருக்கும், கல்லுாரி இட விபரங்கள், நேரடி ஒளிபரப்பாக, இணையதளம் மூலம் திரையிடப்படும்.மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களில் ஏதாவது தகவலை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்றால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்பாக வந்து, திருத்தங்களை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.