>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 22 ஜூலை, 2017

நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'

சென்னை: நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் உள்ளன. 


கவுன்சிலிங் : தமிழகத்தில், ஒன்பது நிகர்நிலை பல்கலைகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்தாண்டு முதல், நிகர்நிலை பல்கலையில் உள்ள இடங்களையும், மத்திய அரசு, கவுன்சிலிங் மூலம் நிரப்புகிறது.

இடம் காலி : இதற்கான, முதற்கட்ட கவுன்சிலிங், ஆன்லைன் மூலம், சமீபத்தில் நடந்தது. இதில், 8,801 பேர் சீட் பெற்றுள்ளனர். இவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த, பல்கலையில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5 முதல், 7 வரை நடக்கிறது.அதே போல், மருத்துவப் படிப்பகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும். இல்லை என்றால், அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும்.

அரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்..

சிவகங்கை : அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.

TNPSC - Group I Main Exam Result Published

வெள்ளி, 21 ஜூலை, 2017

புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!


ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.
ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் இலவசமாக கிடைக்க உள்ளது.
இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஜீரோ காஸ்ட் போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேடை கொண்டுள்ளது இந்த ஜியோ போன்.
2.4 இஞ்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே மற்றும் எஃப்எம் ரேடியோவை இந்த போன்கள் கொண்டுள்ளன. மேலும் டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும் என்றும் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்லாட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜரும் போனுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வழி நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மற்ற போன்களில் உள்ளதை போன்ற போன் காண்டாக்ட்ஸும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. கால் ஹிஸ்டரி மற்றும் ஜியோ போனின் செயலிகளும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது.
வழக்கமாக போன்களை போல் மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் தனா ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் - வகுப்பு வாரியான தலைப்புகள் | செயல்முறைகள்!



அரசு கல்லூரிகளில் சேர்க்கை துவக்கம்...

தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து, ஜூன், 16ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், இன்னும் பல மாணவர்கள், கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டி வருவதால், கூடுதலாக, 25 சதவீத இடங்களில், மாணவர்களை சேர்க்க, பல்கலைகள் அனுமதி பெற்றுள்ளன.
அதன்படி, 'வராண்டா அட்மிஷன்' எனப்படும், நேரடி மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இதில், கல்லுாரி முதல்வர்களே, மாணவர்கள் சேர்க்கையை முடிவு செய்கின்றனர். பெரும்பாலும், அமைச்சர் முதல் அதிகாரிகளின், சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

ஒரே பெயரிலான இன்ஜி., கல்லூரிகளால் 

குழப்பம்...

'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம் ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு கவுன்சிலிங் நடத்துகிறது. இந்த கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது. தொழிற்கல்வி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. அவர்களுக்கு, இன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், 23ம் தேதி முதல், ஆக., 11 வரை, நடக்கிறது. 
கவுன்சிலிங்கின் போது, தங்களுக்கு பிடித்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு களை, அதன் குறியீட்டு எண் மூலமே தேர்வு செய்ய வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏனெனில், ஒரே பெயரில், சிறிய வித்தியாசங்களுடன் பல கல்லுாரிகள் உள்ளன.அதனால், குறியீடு எண் இல்லாமல், கல்லுாரியை தேர்வு செய்தால், தவறான கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு முறை தேர்வு செய்தால், பின் கல்லுாரியை யோ, பாடப்பிரிவையோ மாற்ற முடியாது. எனவே, கல்லுாரி குறியீட்டு எண்ணை, தவறாமல் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், ஒரே பெயரிலுள்ள கல்லுாரி களின் பெயர்கள் மற்றும் அதன் குறியீட்டு எண்களை தெரிந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட உயர்வானதா மாநில பாடத்திட்டம்? அலசும் கல்வியாளர்கள்!

நீட் தேர்வுகுறித்த பிரச்னையே இன்னும் தீரவில்லை... நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அகில இந்திய தேர்வைக் கண்டு தமிழக மாணவர்கள் பயப்படுகிறார்களா அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா? அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலம் படித்தால்தான், நீட் போன்ற அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியுமா? மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாதா? என்பதுகுறித்து அறிய, கல்வியாளர்களின் கருத்தறிந்தோம்.

கல்வியாளரும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராஜன்:
"அகில இந்திய அளவில் கல்வியாளர்கள் ஒன்றுகூடி பாடத்திட்டங்களை வடிமைப்பதற்காக சில வரையறைகளை வகுத்திருக்கிறார்கள். இந்த வரையறைகளைப் பின்பற்றித்தான் சி.பி.எஸ்.இ-யும் மாநில அரசுகளும் பாடத்திட்டத்தைத் தயாரிக்கின்றன. என்.சி.ஆர்.டி-யில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்களில் 37 சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் பல விஷயங்களைச் சாதித்தவர்களாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஆனால், தமிழ்நாட்டில் நம்முடைய பாடத்திட்டங்களை உடனுக்குடன் மேம்படுத்தத் தவறிவிட்டோம்.
தமிழக பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புப் பாடங்களை மேம்படுத்தி, பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பாடத்திட்டங்களை உடனுக்குடனே மேம்படுத்தவேண்டியது அவசியம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மேம்படுத்தி ஏழு வருடங்களாகின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்கள் சிறப்பானது எனச் சொல்லி, ஏழு வருடங்களாக மேம்படுத்தாமல் இருக்கும் பாடத்திட்டத்தை நாமும் கடைப்பிடிக்கக் கூடாது.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் போட்டிபோடுவதற்கு, பாடத்திட்டத்தையும் பாடம் கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும்; அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும்வகையில் தரமாக அமைக்க வேண்டும். ஆந்திராவில், பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன; பாடப்புத்தகத்தை வழங்குவதில்லை. ரெஃபரன்ஸ் புத்தகங்களில் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களுக்குப் பதிலாகப் பாடப்புத்தகத்தை வழங்கிவிடுகிறோம்.
பாடப்புத்தகத்திலிருந்துதான் கேள்வி கேட்பார்கள் என மாணவர்களிடம் சொல்லிவைத்திருக்கிறோம். பாடப்புத்தகங்களை நகல் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றிவைத்திருக்கிறோம். இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பதிலளிக்கும் திறனை மழுங்கடிக்கிறோம். இந்த முறை மாற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தமிழகப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் நவநீதகிருஷ்ணன்:
சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், தமிழக பாடத்திட்டமும், பாடம் நடத்தும் முறையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேர்வு நடத்தும் முறையில்தான் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
பொதுத்தேர்வில் எல்லாவற்றையும் பாடப்புத்தகத்திலிருந்தே கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறோம். புத்தகத்தில் இல்லாத சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டால், பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என போனஸ் மதிப்பெண் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதற்குப் பள்ளியை நடத்துபவர்களும் ஆசிரியர்களும் துணைக்கு வருகிறார்கள். இதனால் மாணவர்கள் எதையும் சுயமாகச் சிந்திக்க முடியாதபடி செய்துவிட்டோம்.
புத்தகத்தில் இருப்பது மாதிரியான வினாக்களில் இருந்துதான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு. இந்த வினாக்களுக்கு மட்டும் பதிலைத் தெரிந்துகொண்டு தேர்வு எழுதி 200-க்கு 200 மதிப்பெண் வாங்குகிறார்கள். புரிதலே இல்லாமல் மனப்பாடம் செய்வதே சரி என்று தயார்செய்துவிட்டோம். இதை மாற்றினால் மட்டுமே அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ தேர்வின் கேள்வித்தாள்கள், தமிழக தேர்வுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். கேள்விகள், புத்தகத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பதில்களுக்கான பகுதிகள் மட்டும் புத்தகத்தில் இருந்தால் போதுமானது. 2006-ம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்திவந்தோம். அதைத் தொடர்ந்து வந்திருந்தால் இன்றைக்கு அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளில் நம் மாணவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பார்கள்" என்கிறார் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
"சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பீடும்போது தமிழக பாடத்திட்டமே சிறப்பாகத்தான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளியில், நடுத்தர மக்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னரே திட்டமிட்டு கோச்சிங் சென்டர்களுக்குச் செல்கிறார்கள். பெற்றோர் செலவுசெய்து பயிற்சி வகுப்பில் சேர்க்கிறார்கள். இரண்டு வருடங்களில் இருந்து நான்கு வருடங்கள் வரை பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள். நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை செலவுசெய்கிறார்கள். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களாலோ தமிழகப் பாடத்திட்டங்களாலோ அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதுதான் அடிப்படை காரணம். அறிவாற்றல் அடிப்படையில் பார்க்கும்போது மாணவர்களிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை. 95 சதவிகித பேரின் அறிவாற்றல், ஒரே மாதிரிதான் இருக்கும். வாய்ப்புகள் மட்டுமே வேறுபடுகின்றன. வாய்ப்புகள் இல்லாததால் அறிவை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல்போகிறது. அதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் அறிவு குறைந்தவர்கள் எனச் சொல்ல முடியாது.
வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் சமுதாயத்தில் நாம் இல்லை. ஒரே இடத்துக்குத்தான் எல்லோரும் போட்டிபோடுகிறார்கள். போட்டிமுறை கல்வியாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை பொதுப் பள்ளி கல்வி முறையில் படித்தவர்கள்தான் அனைத்து இடங்களையும் பெற்றுவந்தார்கள். இவர்கள், பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை; நீட் தேர்வையும் எழுதியதில்லை. நீட் தேர்வு, சிறந்த ம
ருத்துவர்களை உருவாக்க முடியாது. மருத்துவக் கல்லூரிகள்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
பாடத்திட்டங்கள், அவ்வப்போது மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும். முன்பு, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டிருப்போம். ஆனால், இப்போது பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக மாற்றியமைக்கவில்லை. பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும் பாடத்தை எப்படி வகுப்பறையில் நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். அதுதான் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாடப்புத்தகத்தைத் தாண்டி எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை மாற்றி அமைக்க, தேர்வு சீர்திருத்தத்தை உடனே கொண்டு வர வேண்டும். ப்ளூபிரின்ட் முறையை ஒழிக்க வேண்டும். எந்தக் கேள்வி கேட்பார்கள் என்ற அனுமானத்தை ஒழித்தாலே விரிவாகப் படிப்பார்கள். அனைத்து தேர்விலும் வெற்றி பெறுவார்கள்" என்கிறார் ராஜகோபாலன்.
நம் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கவைக்க முடியவில்லையே என நினைக்கும் பெற்றோர்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் தேர்வில் அதிகளவில் தேர்ச்சிபெறுகிறார்கள் என வாதிடுபவர்களும், கல்வியாளர்கள் சொல்லும் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

விவசாயி முதல் ஜனாதிபதி வரை...

       பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர்..  

          இவரது வாழ்க்கை குறிப்பு:பெயர்: ராம்நாத் கோவிந்த், 71. பிறந்த தேதி: 1945 அக்., 1. குடும்ப தொழில் : விவசாயம் சொந்த ஊர்: தேராபூர், கான்பூர் மாவட்டம், உத்தரபிரதேசம். கல்வித் தகுதி : பி.காம்., - எல்.எல்.பி., பட்டம், கான்பூர் பல்கலைக் கழகம். திருமணம்: 1974 மே 30 குடும்பம்: மனைவி சவீதா குழந்தைகள்: மகன் பிரஷாந்த், மகள் ஸ்வாதி. சிவில் தேர்வு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால் ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்காததால், சட்டத்துறையில் கவனம் செலுத்தினார். வழக்கறிஞர் பணி 1971: டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு. 1978: சுப்ரீம் கோர்ட்டில், 'அட்வகேட் ஆன் ரெக்கார்டு' பணி. 1979: டில்லி ஐகோர்ட்டில், மத்திய அரசு வழக்கறிஞர். 1980 - 1993: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் ஸ்டேன்டிங் கவுன்சில்.பார்லிமென்ட் பணி பார்லிமெண்ட் பணி 1994 : பா.ஜ., சார்பில் உ.பி., யில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானர். 
2000ம் ஆண்டு 2வது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். * எம்.பி.,யாக இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில் பணி. 1998 - 2002 வரை பா.ஜ., தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார். * 2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார். * லக்னோவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் கோல்கட்டா ஐ.எம்.எம்., கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார் * 2015 ஆக., 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 2017 ஜூன் 20ல் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். முதல் குடிமகன் * 2017 ஜூலை 20: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து, நாட்டின் 14வது ஜனாதிபதி ஆனார்.
கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த 2வது ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர். உ.பி.,யில் இருந்து நிறைய பிரதமர்கள் வந்துள்ளனர். முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவர் 'ராஷ்ட்ரபதி பவனில்' நுழைந்துள்ளார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு???

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்

இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.
இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

 *ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது: அமைச்சர் செங்கோட்டையன்*
*9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.
*புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 
கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களைப் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர்களையும்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வுசெய்ய முடிவு செய்தது.
இது தொடர்பாக கடந்த 17.11.2014 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம் நேர்முகத்தேர்வு போன்ற வற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 100மதிப்பெண் களில் எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப் பெண்கள் ஒதுக்கப்பட்டன. 
எஞ்சிய 5 மதிப்பெண்ணில் உயர் கல்வித் தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளி அனுபவம் இருந்தால் 1 மதிப்பெண், தனியார் பள்ளி அனுபவம் எனில் அரைமதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (ஃபைன் ஆர்ட்ஸ்) சாதனை உள்ளிட்ட கல்வி அல்லாத இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு ஒன்றரை மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1,188 காலியிடங்கள்
எழுத்துத் தேர்வு நீங்கலாக மற்ற பிரிவுகளுக்கான 5 மதிப்பெண்களில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியிருந்தால் பல் வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். எனவே, அரை மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப் போன்று வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு, பதிவுசெய்து காத்திருக்கும் ஆண்டுக்கு தகுந் தாற்போல் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கலாம் என்றும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அண் மையில் வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பும் இடம்பெற்றது. 1,188 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய ஜூலை 3-வது வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு 19-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
நேர்முகத் தேர்வு நீக்கம்
இந்த நிலையில், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிட்டது. ஏற்கெனவே வெளி யிடப்பட்ட அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, சிறப்பாசிரியர் நியமன முறை அமைந்திருக்குமா அல்லது புதிய முறை கொண்டு வரப்படுமா என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சியை முடித்த சுமார் 2 லட்சம் பேர் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.
உயர் அதிகாரி விளக்கம்
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எழுத்துத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அரை மதிப் பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றவும், ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் பாட ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அவசியமில்லை என்பதால்நேர்முகத் தேர்வை நீக்கிவிடவும் முடிவுசெய்துள்ளோம். சிறப்பாசி ரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. 
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முகமது ராஜா என்பர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணிப்பதிவேட்டில் பதிவுகள் விடுபட்டுள்ளதால் DIGITAL SR பணிகள் தாமதமாகும்...

வியாழன், 20 ஜூலை, 2017

5TH STD TERM - 1 SABL ALL TEACHING MATERIALS WITH LESSON PLAN - PART - 1

FLASH NEWS :Today AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension



International Science Festival - 2017

Slow Leaner's worksheet for Primary Students

Slow Leaner's worksheet - மெல்ல மலரும் மாணவருக்கான பயிற்சி தாள்