>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 14 ஜூலை, 2017

இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை...

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 
அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.
கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார். 
இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர். 
அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.

826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்...

தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

வியாழன், 13 ஜூலை, 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம் - தினமணி தலையங்கம்....

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்துத் தரப்பினரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் என்பது பழைய செய்தி.
கல்வியாளர்களின் சமூகச் செயற்பாட்டாளர்களின் பன்னெடுங்கால விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கி பள்ளிக் கல்வித்துறை இம்மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.
இம்மாற்றங்களை எதிர்கொள்வதிலும் அதற்குத்தக வினையாற்றுவதிலும் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது.
"தனி மரம் தோப்பாகாது' என்பார்கள். நெடுங்கால வடிவத்தில், பாடத்திட்டத்தில், செயல்முறையில் பழக்கப்பட்டுவிட்ட ஓர் அமைப்பில் புதிய மாற்றங்கள் என்பது கடுமையான முயற்சியாகவே அமையும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. கல்வித்துறை இதற்கு ரத்தமும் சதையுமான எடுத்துக்காட்டு.
"சிஸ்டம் சரியில்லை' என்ற விமர்சனமே புதிய சோதனை முயற்சிகளை எதிர்த்துத் தள்ளி விடுகிறது. எனவேதான் துடிப்போடு கல்விச்சாலைகளில் அடியெடுத்து வைக்கும் இளம் ஆசிரியர்கள், தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்படுவதும், பிறகு அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கிச் சிதைந்து, அமைப்பின் வடிவத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு விதிவிலக்குகள் இல்லாமலில்லை.
பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களிலும் துடிப்போடு, அயராது பரிசோதனை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.
இப்போது வரலாறு புரண்டு படுத்திருக்கிறது. கல்வித்துறை அமைப்பே பல புதிய மாற்றங்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகிறார்கள் என்பது ஆர்வமூட்டும் வினாவாக உள்ளது. இவ்வினாவுக்கான தேடுதலில் விடைகாணும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.
பள்ளிக் கல்வித்துறை இடைநிலை கற்றல், பயிற்சி முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடத்தியது. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கும் திட்டம் அது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி முகாம்களில் கல்வியாளர்கள், சமூக நோக்கர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு உரையாடவும் உறவாடவும் ஒரு வாய்ப்பைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தியிருந்தது.
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழாசிரியர்களுக்கான முகாமிலும் நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான முகாமிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இரண்டு வேறுபட்ட கருத்தியல் மனோபாவம் சார்ந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது, பள்ளிக்கல்வியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விசாலமாகியது.
தமிழர் கலை வரலாறு குறித்துத் தமிழாசிரியர்கள் மத்தியிலும் போலி அறிவியலும் நம்பிக்கையும் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாடியபோது அவர்கள் காட்டிய உற்சாகம் கருத்துரைக்கும் நம்மையும் தொற்றியது.
குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்கள் எழுப்பிய வினாக்கள் வழியாக வெளிப்பட்டது.
புதியனவற்றை அறியும் தேடலும் அதைத் தங்களது வகுப்பறைகளில் சோதித்துப் பார்க்கும் ஆர்வமும் மிகுந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகிழ்வளித்தது. இளம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களும் உற்சாகத்தோடு இருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்கும் மாற்றங்கள் குறித்த பெருமிதம் அவர்களில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
தனியார் பள்ளிகளுக்குச் சவால்விட தங்களால் முடியும் என்றும் இனி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு திரும்பும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடனான தனிப்பட்ட உரையாடலில் வெளிப்பட்டது.
தமிழகமெங்கும் இப்பயிற்சி முகாம்களில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்ட பல எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் உற்சாகமாக இந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டனர். "கல்வித்துறையின் உத்தரவால் கட்டாயம் உட்கார வேண்டியதாகிவிட்டது' என்ற கசப்பான உணர்வு அங்கு வெளிப்படவில்லை.
உரையாடலுக்குப் பிறகும் அரங்கினுள்ளும் அரங்கிற்கு வெளியிலும் கருத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு கலைய மனமின்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் முகங்கள், எதிர்காலக் கல்விக் கனவைத் தேக்கி வைத்திருந்தன.
அமைப்பே கெட்டிதட்டிப் போய் இருக்கிறது என்ற பன்னெடுங்காலக் கருத்து சிதைவுற்று அமைப்பே நெகிழ்வுத் தன்மையோடு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்கிறது என்பதை ஆசிரியர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளனர்.
அமைப்பின் அழுத்தத்தால் வீழ்த்தப்பட்டுச் சோர்வுற்றிருந்தாலும் மனசாட்சியின்படி சிறு சிறு ஆக்க முயற்சிகளைச் செய்துவந்த ஆசிரியர்கள் புது உற்சாகத்தோடு வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் இதுபோன்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியினைப் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும்.
கல்விசார் பரிசோதனை முயற்சிகளின் படிப்பினைகளை எடைபோட்டுப் பார்க்கும் இடமாகவும் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அம்முயற்சிகளை முன்னெடுத்துப் போகும் மேடையாகவும் இப்பயிற்சி முகாம்கள் வடிவெடுக்க வேண்டும்

தொடக்கக்கல்வி - பள்ளிக்கல்வி மூலம் நடத்தப்படும் மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் இனி உயர் தொடக்கக்கல்வி மாணவர்களும் பங்கேற்கலாம் - இயக்குனர் செயல்முறைகள்....

புதன், 12 ஜூலை, 2017

BRIDGE COURSE - SYLLABUS | ( CLASS 6 -9 )

G.O.NO :- 161 :-பள்ளிக்கல்வி நாள்:08.07.2017-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல்- சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குதல் மற்றும் பள்ளிக்கல்வி ,தொடக்கக்கல்வி செயல்முறைகள்!!








அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

மாணவர்களையும் இளைஞர்களையும் கனவு காணச் சொல்லி, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக்க நினைத்தவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரின் ஊக்கமூட்டும் வார்த்தைகளால், பொது விஷயங்களில் அக்கறையுடன் களமாடி வருகிறவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், தனபால். அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றையே ஆவணப்படமாக்கி, இரண்டரை லட்சம் மாணவர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்த எல்லோருமே மாணவர்கள் என்பது மற்றொரு சிறப்பு.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர், தனபால். தனது ஆவணப்படத்தில், அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தது, படிக்கும்போதே பேப்பர் போடும் வேலைக்குச் சென்றது, கல்லூரி படிப்பு, பைலைட் முயற்சி, விஞ்ஞானி, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தது, இறுதி உரை என எல்லா விஷயங்களையும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கி இருக்கிறார். இடையிடையே அப்துல் கலாம் உரைகள், பொன்மொழிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஆவணப்படத்தை எடுக்க ஒரு லட்சம் ஆகியிருக்கிறது. எல்லாமே இவரது சொந்தச் செலவு என்பது குறிப்பிடத்தக்கது.

 "அறிவியல் ரீதியாக, ஆற்றல் ரீதியாக, அக்கறை ரீதியாக என எப்படிப் பார்த்தாலும் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த அற்புத பொக்கிஷம், அப்துல் கலாம். அவரின் கனவுகள், லட்சியங்களைச் செயல்படுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியும். அவர் வழியே மாணவர்களிடம் ஓர் உந்துதல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது தோன்றியதுதான் ஆவணப்படம் எண்ணம். அதை எடுத்து, எல்லாப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இலவசமா கொடுக்க முடிவுசெய்தேன். அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், உரைகள், பொன்மொழிகளைச் சேகரித்தேன். என் பள்ளி மாணவர்கள் 250 பேரை நடிக்கவைத்து, இரண்டாயிரம் சி.டி-க்கள் எடுத்தேன். தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறேன். டெல்லியில் நடந்த நேஷனல் சயின்ஸ் கான்பிரன்ஸ் மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சில இடங்களுக்கும் அனுப்பினேன். இதுவரை இரண்டரை லட்சம் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அதில், இரண்டு லட்சம் பேர் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்'' என்று பூரிப்புடன் தொடர்கிறார் தனபால்.
''தங்கள் பள்ளி மாணவர்களை ஆவணப்படத்தைப் பார்க்கவைக்கும் ஆசிரியர்கள், அதுகுறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு, கடிதமாக அனுப்புகிறார்கள். மாணவர்களில் பலரும் நேரடியாக, 'இந்தப் படத்தைப் பார்த்ததும் எங்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கு. அப்துல் கலாம் அய்யா கனவை நனவாக்கும் முயற்சியில் எங்களால் முடிந்ததைச் செய்வோம்' எனச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில், ஈரோடு செங்குந்தர் கல்லூரியில் நடந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் இந்த ஆவணப்பட சி.டியைக் கொடுத்தேன். அப்போது, அங்கே வந்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் உதயச்சந்திரன், 'இது நல்ல முயற்சி. இதில் உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொடர்புகொள்ளுங்கள்' எனச் சொல்லி, படத்தின் பிரதியை வாங்கிச் சென்றார். இந்தப் படத்தை குறைந்தது ஒரு கோடி மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது என் லட்சியம்'' என்கிறார் தனபால்.
ஆசிரியர் பயிலரங்கம், தனிப்பட்ட பயணங்கள் எனச் செல்லும் இடங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இந்த ஆவணப்படத்தைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தியா முழுவதும் இந்த ஆவணப்படத்தைப் பரவலாக்க இது தமிழில் இருப்பது தடையா இருக்கிறது என நினைக்கும் தனபால், அடுத்த முயற்சியிலும் இறங்குகிறார்.
''இன்னும் ஒரு ஐயாயிரம் சி.டிக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாம்ன்னு இருக்கேன். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதற்கான அத்தனை திட்டங்களையும் அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றினாலே போதும். அதற்கு மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான சிறு தூண்டுதலாக இந்த ஆவணப்படம் இருக்கு....

JACTO-GEO குழுவில் மேற்கொண்ட முடிவுகள் - பத்திரிக்கை அறிக்கை வெளியீடு...

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம் - தினமணி தலையங்கம்...

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்துத் தரப்பினரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் என்பது பழைய செய்தி.
கல்வியாளர்களின் சமூகச் செயற்பாட்டாளர்களின் பன்னெடுங்கால விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கி பள்ளிக் கல்வித்துறை இம்மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.
இம்மாற்றங்களை எதிர்கொள்வதிலும் அதற்குத்தக வினையாற்றுவதிலும் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது.
"தனி மரம் தோப்பாகாது' என்பார்கள். நெடுங்கால வடிவத்தில், பாடத்திட்டத்தில், செயல்முறையில் பழக்கப்பட்டுவிட்ட ஓர் அமைப்பில் புதிய மாற்றங்கள் என்பது கடுமையான முயற்சியாகவே அமையும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. கல்வித்துறை இதற்கு ரத்தமும் சதையுமான எடுத்துக்காட்டு.
"சிஸ்டம் சரியில்லை' என்ற விமர்சனமே புதிய சோதனை முயற்சிகளை எதிர்த்துத் தள்ளி விடுகிறது. எனவேதான் துடிப்போடு கல்விச்சாலைகளில் அடியெடுத்து வைக்கும் இளம் ஆசிரியர்கள், தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்படுவதும், பிறகு அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கிச் சிதைந்து, அமைப்பின் வடிவத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு விதிவிலக்குகள் இல்லாமலில்லை.
பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களிலும் துடிப்போடு, அயராது பரிசோதனை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.
இப்போது வரலாறு புரண்டு படுத்திருக்கிறது. கல்வித்துறை அமைப்பே பல புதிய மாற்றங்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகிறார்கள் என்பது ஆர்வமூட்டும் வினாவாக உள்ளது. இவ்வினாவுக்கான தேடுதலில் விடைகாணும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.
பள்ளிக் கல்வித்துறை இடைநிலை கற்றல், பயிற்சி முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடத்தியது. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கும் திட்டம் அது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி முகாம்களில் கல்வியாளர்கள், சமூக நோக்கர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு உரையாடவும் உறவாடவும் ஒரு வாய்ப்பைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தியிருந்தது.
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழாசிரியர்களுக்கான முகாமிலும் நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான முகாமிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இரண்டு வேறுபட்ட கருத்தியல் மனோபாவம் சார்ந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது, பள்ளிக்கல்வியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விசாலமாகியது.
தமிழர் கலை வரலாறு குறித்துத் தமிழாசிரியர்கள் மத்தியிலும் போலி அறிவியலும் நம்பிக்கையும் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாடியபோது அவர்கள் காட்டிய உற்சாகம் கருத்துரைக்கும் நம்மையும் தொற்றியது.
குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்கள் எழுப்பிய வினாக்கள் வழியாக வெளிப்பட்டது.
புதியனவற்றை அறியும் தேடலும் அதைத் தங்களது வகுப்பறைகளில் சோதித்துப் பார்க்கும் ஆர்வமும் மிகுந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகிழ்வளித்தது. இளம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களும் உற்சாகத்தோடு இருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்கும் மாற்றங்கள் குறித்த பெருமிதம் அவர்களில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
தனியார் பள்ளிகளுக்குச் சவால்விட தங்களால் முடியும் என்றும் இனி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு திரும்பும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடனான தனிப்பட்ட உரையாடலில் வெளிப்பட்டது.
தமிழகமெங்கும் இப்பயிற்சி முகாம்களில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்ட பல எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் உற்சாகமாக இந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டனர். "கல்வித்துறையின் உத்தரவால் கட்டாயம் உட்கார வேண்டியதாகிவிட்டது' என்ற கசப்பான உணர்வு அங்கு வெளிப்படவில்லை.
உரையாடலுக்குப் பிறகும் அரங்கினுள்ளும் அரங்கிற்கு வெளியிலும் கருத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு கலைய மனமின்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் முகங்கள், எதிர்காலக் கல்விக் கனவைத் தேக்கி வைத்திருந்தன.
அமைப்பே கெட்டிதட்டிப் போய் இருக்கிறது என்ற பன்னெடுங்காலக் கருத்து சிதைவுற்று அமைப்பே நெகிழ்வுத் தன்மையோடு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்கிறது என்பதை ஆசிரியர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளனர்.
அமைப்பின் அழுத்தத்தால் வீழ்த்தப்பட்டுச் சோர்வுற்றிருந்தாலும் மனசாட்சியின்படி சிறு சிறு ஆக்க முயற்சிகளைச் செய்துவந்த ஆசிரியர்கள் புது உற்சாகத்தோடு வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் இதுபோன்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியினைப் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும்.
கல்விசார் பரிசோதனை முயற்சிகளின் படிப்பினைகளை எடைபோட்டுப் பார்க்கும் இடமாகவும் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அம்முயற்சிகளை முன்னெடுத்துப் போகும் மேடையாகவும் இப்பயிற்சி முகாம்கள் வடிவெடுக்க வேண்டும்....

பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்....

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.


உடனடி பணப்பரிமாற்ற சேவை எனப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத் துவக்கத்தில், வங்கிப் பணியில் தனது 62வது ஆண்டினை நிறைவு செய்திருக்கும் எஸ்பிஐ, ரூ.1000 வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.
அதே சமயம், ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரிக்கு அப்பாற்பட்டது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்பிஎஸ் முறையில் 24X7 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே சமயம், பணப்பரிமாற்றத்துக்கான கோரிக்கை செல்போன் அல்லது இணையதளம் மூலமாக வைக்கப்பட்டதுமே, உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

அமெரிக்கா தப்பித்தது.. இந்தியா மாட்டிக்கொண்டது..!

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு பெரிய மறுசீரமைப்பை
மேற்கொண்டுள்ளது, இதனால் தனது நிறுவனத்தில் பணிபுரிய உலகத் தொழிலாளர்களில் 3,000 நபர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பிறந்த சத்யா நதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மறுசீரமைப்பின் கீழ் பணிநீக்கம் செய்வதில் பெரும்பாலும் விற்பனை பிரிவை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், 3000 நபர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் சிஎன்பிசி தெரிவித்துள்ளது சிறந்த சேவை வழங்க முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கு மாற்றங்களை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளது.

நிலைகள் அகற்றப்படும் என்று அறிவிக்க நடவடிக்கை
சில பணியாளர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படுகின்றன அல்லது அவற்றின் நிலைகள் அகற்றப்படும் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் எல்லா நிறுவனங்களையும் போலவே, எங்கள் வணிகத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம், அதனால் சில இடங்களில் அதிக முதலீடு செய்யலாம், என்றும் ஊழியர்களை மாற்றி அமர்த்தலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் வெளியேற்றப்படும் ஊழியர்களின் விகிதம்
மைக்ரோசாப்ட் விற்பனை பிரிவில் இருந்து மொத்தமாக 10 சதவீதம் ஊழியர்களை வெளியேற்றலாம் என்றும் அதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அமெரிக்காவைத் தவிரப் பிற நாடுகளில் உள்ளவர்கள் என்றும் நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

அஸ்யூர் மென்பொருள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கிளவுட் தயாரிப்பான அஸ்யூர் மென்பொருளை விற்பனை செய்வதில் அதிகக் கவனம் செலுத்த இருப்பதாகவும், கடந்த சில காலாண்டுகளாகக் கிளவுட் பிரிவு தான் அதிக அளவில் வணிகத்தை அளித்துள்ளது என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது அமேசானுடன் போட்டி
சென்ற காலாண்டில் மட்டும் மைக்ரோசாப்டின் அஸ்யூர் விற்பனை 93 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரம் அமேசான் மிகப் பெரிய போட்டியாளர்களாக உள்ளனர், எனவே மொக்ரோசாப்ட் தனது மென்பொருள் மறுசீரமைப்பை மேற்கொண்டு வருவதினால் சேவையாக உள்ள மென்பொருள் பிரிவை சேவை மற்றும் உள்கட்டமைப்பாக மற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பிட்ட சில பிரிவுகள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களைக் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்காக அதிகப்படியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் அதனால் அதிகளவு விற்பனை நடக்கும் என்றும் கூறுகின்றது.

மொத்த ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 71,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர், பிற நாடுகளில் 121,000 ஊழியர்கள் பணி புரிவது குறிப்பிடத்தக்கது

வீட்டில் இருந்தபடியே "வருமான வரி ரிட்டன்" - வருமானவரித்துறை புதிய ஆப்ஸ் அறிமுகம்.

வருமானவரி செலுத்துபவர்கள் வீட்டில் இருந்தபடியே, யாருடைய துணையும் இன்றி ரிட்டன் தாக்கல் செய்ய வசதியாக “ஆயக்கர் சேது” என்ற செயலியை(ஆப்ஸ்) வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.



மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இந்த செயலியை நேற்று முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார். இந்த “ ஆயக்கர் சேது” செயலி முதல்கட்டமாக ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் செயல்படுமாறு  உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துபவர்கள் இதில் தங்களி்ன் பான்கார்டு எண்் ஆதார் கார்டு எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும், 7306525252  என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் செய்து ஆப்ஸை பதிவிறக்கம் செய்யலாம்

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது “ மத்திய நேரடி வரிகள் வாரியம்  எடுத்துள்ள இந்த செயலி முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வருமானவரி செலுத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வெளிநபர்களின் உதவி இல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே, வருமானவரி ரிட்டனை தாக்கல் செய்துவிட முடியும்.

வருமானவரி செலுத்துபவர்களும், அதிகாரிகளும் நேரடியாக சந்தித்து கொள்ளும் சூழலை குறைக்கும். இருவரும் சந்திக்கும் போதுதான் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்கும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் தோற்றத்தை மக்கள் மத்தியில் உயர்த்திக்காண்பிக்கும் ” எனத் தெரிவித்தார்.

வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரி செலுத்தும் காலமாக இப்போது இருப்பதால், இந்த செயலி அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரி செலுத்துதல், வரி ரீபண்ட் பெறுதல், குறைகளை தெரிவித்தல், பான்கார்டுக்கு விண்ணப்பித்தல் இந்த ஆப்ஸில் செய்ய முடியும்.

குறிப்பாக இந்த ஆப்ஸில் சாட்டிங் வசதி உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பான்கார்டு, டி.டி.எஸ், டி.ஏ.என்., ரிட்டன் பைலிங், ரீபண்ட் நிலை,வரி செலுத்திய விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வரி தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் சாட்டிங் செய்து ஆலோசனைகள் பெறலாம், மேலும், அருகில் உள்ள வரி ரிட்டன் தயாரிப்பவர்களின் முகவரியையும் பெறலாம்.

மேலும் வருமான வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தும் தேதிகள், படிவங்கள், அறிவிக்கைகள் ஆகியவை குறித்து அவர்கள் ஐ.டி.டி. படிவத்தில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும், மேலும், எஸ்.எம்.எஸ். அலர்ட்டும் கொடுக்கப்படும்.

வருமானவரி செலுத்துபவர்கள் கூறிய புகார்களுக்கு எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள, துரிதமாக செயல்பட்டுவருவது குறித்த விவரங்களும் இந்த ஆப்ஸில் இருக்கும்.

குரூப் - 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்...

குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, எழுத்துத் தேர்வு, 2016 நவம்பரில் நடந்தது; முடிவுகள், ௨௦௧௭ பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. 
இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஜூலை 17 - ஆக., 8 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. கூடுதல் விபரங் களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம்.

மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு...

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  
இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 4000 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 தேர்வு எழுதினர்.கிராமப்புறங்களில் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகள் மிகக்குறைவு. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 80 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். 
இதில் 2000 பேர்  சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி மாணவர்கள் 2000 பேர் தேர்வு எழுதியதில் 520 பேர் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும். எனவே, தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது  என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்...

சென்னை மாநகராட்சி அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 70 உயர், மேல்நிலைப்பள்ளி மற்றும் 14 நடுநிலைப்பள்ளிகளில் வள வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது. 
திரையின் மூலம் தொழில்நுட்பம் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும்போது, அது மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற நோக்கத்தில் சாம்சங் என்ற நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் செய்து தர புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வகுப்பறையில் 1 எல்எப்டி ஸ்மார்ட் ஸ்கிரீன், 40 கணினிப் பலகைகள், பிரிண்டர், சர்வர், யுபிஎஸ் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கான மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வள வகுப்பறை பாடத்திட்டத்தின் மூலம் 29,596 மாணவ,மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.  இத்திட்டத்திற்கு ரூ.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.  

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!...

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலையில் பி.இ., படிக்க தடை

'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்...

பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். 
பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார்.