>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 12 ஜூலை, 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். 
பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில், அமைச்சு பணியாளர்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு நிலைகளில் தரப்படும் பதவி உயர்வு, சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களின் சம்பளம், நியமனம், அதற்கான விதிகளை பின்பற்றுதல், கோப்பு தயாரித்தல், நீதிமன்ற வழக்குகளுக்கு பதில் தயாரித்தல், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளை கவனித்தல், நலத்திட்ட உதவிகள் வினியோக கணக்கு பராமரித்தல் என, பல பணிகளை பார்க்கிறோம். ஆனால், பல மாவட்டங் களில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எங்களை மிரட்டி, அவர்களுக்கு சாதகமாக பணியாற்ற அழுத்தம் தருகின்றனர். இது தொடர்பாக, சில இடங்களில் போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பதவி உயர்வு கோப்புகளை, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுஉள்ளதால், காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து, நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ல், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். 
பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில், அமைச்சு பணியாளர்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு நிலைகளில் தரப்படும் பதவி உயர்வு, சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களின் சம்பளம், நியமனம், அதற்கான விதிகளை பின்பற்றுதல், கோப்பு தயாரித்தல், நீதிமன்ற வழக்குகளுக்கு பதில் தயாரித்தல், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளை கவனித்தல், நலத்திட்ட உதவிகள் வினியோக கணக்கு பராமரித்தல் என, பல பணிகளை பார்க்கிறோம். ஆனால், பல மாவட்டங் களில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எங்களை மிரட்டி, அவர்களுக்கு சாதகமாக பணியாற்ற அழுத்தம் தருகின்றனர். இது தொடர்பாக, சில இடங்களில் போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பதவி உயர்வு கோப்புகளை, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுஉள்ளதால், காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து, நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ல், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும் வரலாற்றை நாங்கள் மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் மிக நம்பிக்கையாக உணர்கிறோம். அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ- வை நோக்கி திரும்பி இருக்கிறது.
அரசு இதையும் அலட்சியம் காட்டினால் தமிழ்நாட்டின் அரசு அலுவல்கள் ஒட்டுமொத்தமாய் முடங்கிப்போய் தமிழ்நாடே அல்லோலகல்லோலப் படவிருக்கிறது இதுவெல்லாம் ஜாக்டோ ஜியோ- வின் கடந்த கால சாதனைகளை வைத்து நிச்சயம் நடக்கும் என நம்பலாம். இம்மாபெரும் அமைப்பான ஜாக்டோ ஜியோ முத்தாய்ப்பான மூன்று கோரிக்கைகளை முன் வைக்கிறது
1) பழைய பென்ஷனை அமல்படுத்த வேண்டும்
2) உடனடியாக ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது
( தமிழ்கத்தில் எட்டாவது)
3) 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளாக கருதி இம்மூன்று கோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து முன் வைத்திருக்கிறது.
இந்த முத்தாய்ப்பு கோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை  ஜாக்டோ ஜியோவிற்கு ஆசிரியர்கள் சார்பாக வைக்கிறோம்.
இன்னுமொரு கோரிக்கையை மிக  சங்கடத்தோடு  மன்றாடி கெஞ்சி ஜாக்டோ ஜியோவிடம் கேட்கிறோம்.
இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால் தயவுசெய்து
*இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்கும் ஒரே கோரிக்கையான ஊதிய முரண்பாடு கலைதல்* ( 2009 பிறகான இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு) என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..
 ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..
*நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் இடைநிலை ஆசிரியர்கள்*

10 ஆயிரம் கழிப்பறைகள் பள்ளிகளில் கட்ட திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்....

''பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, தில்லை விடங்கன் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படுமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டடங்கள் கட்டப்படும்.
பாண்டியன்: இப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தான் உள்ளன. அவற்றை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். சிதம்பரத்தில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில், கிளை நுாலகம் உள்ளது. அதற்கும், புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நுாலகத்திற்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நிதி ஒதுக்குங்கள். பள்ளிக்கு கட்டடம் கட்டப்படும்.
அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: குன்னம் தொகுதி, முள்ளிகுறிச்சியில், உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதி மாணவ, மாணவியர், மேல்நிலை கல்வி படிக்க, 20 கி.மீ., செல்ல வேண்டி உள்ளது. எனவே, அப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: முள்ளிகுறிச்சி முல்லை மலராகும்.
தி.மு.க., - கிரி: செங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இட நெருக்கடி அதிகமாக உள்ளது. இறை வணக்க கூட்டம் நடத்த இடமில்லை; கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை இல்லாத பள்ளிகள் சில உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நடப்பாண்டு, பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்...

தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்களாக, 2,500 பேர் பணிபுரிகின்றனர். மேலும், 5,166 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,188 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 19ல், போட்டித் தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நிபந்தனைகளால், சிறப்பாசிரியர் தேர்வை, இளம் பட்டதாரிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலசங்கத்தின் மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 5,000 கலை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும். சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது.
ஆனால், போட்டி தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதியான, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பு, 2007 முதல் நடத்தப்படவில்லை.எனவே, இளம் தலைமுறை மாணவர்கள், தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை முடிக்காததால், போட்டி தேர்வில் பங்கேற்று, அரசு பணியில் சேர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இளம் தலைமுறை பட்டதாரிகள், சிறப்பாசிரியர்களாக அதிகம் இடம் பெற்றால், கற்பித்தலிலும், தரத்திலும் மாற்றம் வரும். எனவே, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, தாமதமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் 
கூறினார்.

ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவிப்பு...

ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளின் முதல் கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை, மாநில கல்லுாரி வளாகத்தில், நேற்று பிற்பகலில் நடந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 63 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முடிவுகள் குறித்து, கூட்டமைப்பு செயலர் கணேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக வரும், 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தாவிட்டால், ஆக., 5ல், சென்னையில் கோட்டையை நோக்கி, மிகப்பெரிய பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு, எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும். காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்..

NGC / ECO CLUBS ANNUAL PLAN 2017 - 18
தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்..

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பு

செயல்பாடுகள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

செவ்வாய், 11 ஜூலை, 2017

Science Festival - 2017

Scientific awareness program for students...


*மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க. சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்;
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

SSA - 5 DAYS PRIMARY TEACHERS TRAINING - MODULES - ALL SUBJECTS..

TAMIL


MATHS


SCIENCE


SOCIAL

திருவள்ளுவர் சிலைக்காக பள்ளிகளில் வசூல் கூடாது...


''பள்ளிகளில், திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பாக, மாணவர்களிடம், எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது,'' என, பள்ளி நிர்வாகிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.


அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகங்களில், வெண்கல திருவள்ளுவர் சிலை வைக்கலாம் என்றும், ஜாதி, மதங்களை கடந்து, திருக்குறள் பயன்படுத்தப்படுவதால், திருக்குறள் குறித்த விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்தலாம் என்றும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, சில தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் வசூல் நடப்பதாக, புகார் எழுந்தது. அதற்கு எச்சரிக்கை விடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், புதிய சுற்றறிக்கையை, நேற்று பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில், 'அந்தந்த பள்ளிகளின் விருப்பப்படி, திருவள்ளுவர் சிலையை வளாகங்களில் நிறுவி கொள்ளலாம். இதற்காக, மாணவர்களிடம் எந்த நிதியும் வசூலிக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!


புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. 6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு, பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

"தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால்,அவர்களே கூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அது பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி,முன்மாதிரி திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை வண்டியை முன்னேற்ற பாதையில் உருள வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம்,அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனும்,அந்த துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.

உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல்,ஒ.கே சொல்ல, அந்த துறையில் பல அதிரடி மாற்றங்கள் கடைப்பரப்பப்படுகிறது.
இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸ்கர்கள் மூலமாக நிதி திரட்டி அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்த ப,உதயச்சந்திரனை வைத்து தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளை ரெஃபர் பண்ண சொல்லி அறிவுறுத்தி, அனுப்பி இருக்கிறார்.
'ப.உதயசந்திரன், தலைமை ஆசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நமக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை சிறப்பாக செய்து வரும் 25 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8 ம் தேதி சென்னைக்கு வர சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்க ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து,பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்,'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு,உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்பு திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன் உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை இப்போது அரசே செய்யப் போகிறது. தமிழகம் முழுக்க மூவாயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமா அமைக்க போறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்கு காரணம், உங்க மூலமாகதான் அந்த மூவாயிரம் பள்ளிகளை செலக்ட் செய்ய போறோம்.
அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்து கொடுத்தாலும், அதை பயன்படுத்தாமல் பல பள்ளிகளில் வீணடித்துவிட கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கும் அளவிற்கு அடிப்படை கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய் மூவாயிரம் பள்ளிகளை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படகூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு,எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளிகள் தேர்வு செய்யும் விசயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விசயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அற்ற மூவாயிரம் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள்களுக்குள் எனக்கு தெரிவியுங்கள். அரசு பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவோம்'ன்னு சொல்ல,எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்து சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனால், எங்களை போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க கைகளை பிசைஞ்சுகிட்டு நிற்கிறாங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைச்சு கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளை தேர்ந்தெடுத்து சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.
இதுசம்மந்தமான, பிராசஸ் நடந்த திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளின் கல்வி கற்விக்கும் வழிமுறைகள் அடுத்த லெவலுக்கு போகும் என்பது உறுதி.

*JACTTO GEO போராட்டம் அறிவிப்பு

*இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTTO GEO newகூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.*

*1) 13 /7 /17 மாவட்ட அளவில் JACTTO GEO அமைப்பு கூட்டம்.*

*2) 18 /7 /17 மாவட்ட அளவில் பேரணி நடைபெறும்.*


*3) 5/8/17 சனிக் கிழமை சென்னையில் கோட்டை நோக்கி பேரணி.*

*4)அடுத்த கட்ட போராட்டம் JACTTO GEO கூட்டம் கூடி அறிவிக்கும்.*


*அரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,  மூன்று கோரிக்கை மட்டுமே,அரசு செவிமடுக்கவில்லையென்றால் அடுத்து காலவரையற்ற போராட்டம்*!!

*ஜாக்டோ-ஜியோ* *கோரிக்கைகள்

*1)-தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் இரத்து.*

*2) 8வது  ஊதியக்குழு பரிந்துரைகள்  உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.  ஊதிய உயர்வு நடைமுறைப் படுத்த வேண்டும்..*


*3) இதற்கிடையில்  இடைநிலை  ஊதிய நிலுவைத் தொகையை  உடனடியாக வழங்கிடவேண்டும்.*
*வழங்காவிடில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்படும்.*

*மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க. சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்;
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல!

ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல!ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது எனும்பொழுது அப்படிப்பட்ட வகுப்பறை எப்படி இருக்கவேண்டும்? என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது. வருங்கால தேசத்தை கட்டமைக்கும் வகுப்பறை
, அறிவால் பலம் பொருந்தியதாகவும், ஆற்றலால் வளம் நிறைந்ததாகவும், நல்ல மனப்பான்மையின் இருப்பிடமாகவும் அல்லவா இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே கலாம் தேடிய மாணவர்களாக, விவேகானந்தர் காண விரும்பிய இளைஞர்களாக ஒவ்வொரு மாணவர்களையும் வெளிக்கொணர
முடியும். மதிபெண்களை துரத்துவதை விட்டுவிட்டு நல்ல மனப்பான்மை கொண்டு முதலில் நாம் வகுப்பறைகளை மாற்றம் பெறச்செய்ய வேண்டும்.
மாற்றம் என்பது வெறும் வண்ணங்களாலும், தொழில்நுட்பங்களாலும் நிகழ்வதாய் மட்டும் அமைதல் கூடாது. அவை புறத்தை அழகாக்கும்... ஆனால் அகம் அழகு பெற/ மாற்றம் பெற வேண்டுமே!
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நல்ல எண்ணங்களால் (positive attitudes) வகுப்பறையை நிரப்ப வேண்டும். மாணவர்களிடம் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் முதலில் மாற்றங்கள் ஆசிரியர்களிடத்தில் ஏற்படவேண்டும்.
நல்ல ஆசிரியர் எப்பொழுது உருவாகிறார்?- என்று பார்த்தால் அவர் கற்றலில் ஆர்வம் கொண்டு ஒவ்வொரு நாளும் தன்னை அப்டேட் செய்து கொண்டும், செய்து கொள்ளத் தயாராகவும் இருந்து கற்றலில் ஆர்வம் உள்ள மாணவராய் தன்னைக் கருதும் ஆசிரியரே எப்போதும் நல்ல ஆசிரியராகத் திகழ முடியும்... இன்றைய மாணவரிடத்தில் வகுப்பறையில் தன்னம்பிக்கையோடு நிற்கமுடியும். அவரிடத்தில் சாதி, மத, இன, பொருளாதார என எந்த ரீதியிலான பாகுபாடும் இருத்தல் கூடாது. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு காண்பது வெகு அரிதாகவே இருக்கிறது. அவர்களது வட்டம் மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாகவேண்டுமே தவிர,
தகுதியின் அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ அமையக் கூடாது.
ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல!மனிதனது மூளை வளர்ச்சியில் 80% அவர்களுடைய 12 வயது வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சியுற்று விடுகிறது. அத்தகைய காலகட்டத்தில் அவர்களது பெரும்பான்மையான காலம் பள்ளிகளிலேயே அமைகிறது. அதிலும் குறிப்பாக 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வி பருவமாக அது அமைகிறது. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் என்னதான் கற்பித்தலில் திறன் பெற்றவர்களாக இருந்தாலும், தொழில்நுட்பத்தில் பேரறிவு கொண்டவர்களாக திகழ்ந்தாலும் கூட மாணவர்களது மனப்பான்மையின் மீது அக்கறையும் ஈடுபாடும் இல்லாதபொழுது அது மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துமே தவிர அவர்களது சுய மதிப்பையோ, மதிப்பான எண்ணங்களையோ உயர்த்துவதாக அமையாது. ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல... மதிப்பான எண்ணங்களைக் கொண்ட மாணவர்களை! என்பதை மறந்து மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழல் இன்றைய சூழல்.
அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் ஆசிரிய மாணவ உறவு என்பது மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளானதாக மாற்றம் பெற்று உள்ளது. சிறந்த சமூகத்தினனாக திகழவேண்டிய மாணவன் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், கற்பிப்பது மட்டுமே எனது பணியே தவிர... இந்த சமூகத்தை கட்டமைப்பது தன்னுடைய பணி இல்லை! என பெரும்பான்மையான ஆசிரியர்கள் சமூகத்தை விட்டு தள்ளி நிற்கும் மனப்பாங்கும் ஏற்பட்டுவிட்டது. அந்த பருவத்தில் பக்குவபடுத்தப்படாத மாணவ சமுதாயம் வளர வளர, சுயகட்டுப்பாடற்ற ஒழுங்குடன் வளர்ந்து பெரும்பாலும் சமூகத்திற்கானவனாக தன்னை மாற்றாமல், தனக்கான சமூகமாக இது இல்லை என சமூகத்தின் மீது பற்று இல்லாதவனாக மாறிப்போய் விடுகிறான்.
தற்போதைய உடனடித்தேவை மனப்பான்மை மாற்றம்(Attitude change)"மாற்றங்களை உருவாக்குவோம்" இதை எங்கிருந்து முதலில் தொடங்குவது என்று பார்த்தோமேயானால்; "தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி" எனச் சொல்வதற்கு ஏற்ப முதற்கட்டமாக 1
முதல் 8 வரையிலான வகுப்பு கொண்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். அதில்;
1) தன்னை அறிதல்( self analysis)*உனக்கு நீயே விளக்கு* என புத்தர் குறிப்பிடுகிறார். நடக்கப் பாதையில்லையே என்று ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. அடுத்தவர் எப்பொழுது பாதை ஏற்படுத்துவார் எனக் காத்திருக்கவும் கூடாது. ஓர் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தால் அதுவே பாதைக்கான முதற்படி. எதையும் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும். தொடக்கம் நம்மிடமிருந்து ஆரம்பித்தால்தான் முடிவும் நம்முடையதாக இருக்கும்.
ஆசிரியர்கள் தாம் யார் என்பதையும், தனக்குள்ள சமூகப் பொறுப்பு என்னவென்பதையும், மாணவர்களின் எதிர்காலம் நம்மிடம்தான் உள்ளது என்பதையும் உணர்ந்திருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்கிற கருத்தையும் உணர்தல் அவசியம். தன்னிடம் உள்ள திறமைகள் என்னென்ன? எவை எவற்றை எல்லாம் தான் சரி செய்துகொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுக்க வைப்பதற்கு இது உதவும்...
2) SWOTதன்பலம் அறியாத யானைதான் சின்ன சங்கிலியின் பிணைப்புக்குள் யானைப்பாகனின் அங்குசத்திற்கு கட்டுப்பட்டு அடிமைபோல பணியாற்றுகிறது.. பணிதல் என்பது வேறு.. அடிமைப்படுதல் என்பது வேறு.. ஒவ்வொருவரும் மிகமுக்கியமாக அறிய வேண்டியது SWOT கோட்பாடு ஆகும்.StrengthWeakOpportunityThreat- என்கிற கோட்பாட்டை பயிற்றுவித்துவிட்டால் தமது பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் போன்றவற்றை தாமே அறிந்து அதன்மூலம் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இது மாணவர்களை அணுகுவதற்கும், சமூகத்தோடு இணைந்து செயலாற்றவும் மிக முக்கியமான ஊக்கியாக இருக்கும்...
3) பேச்சுக்கலை (effective public speaking)"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை"- என்பதற்கு இணங்க அப்படிப்பட்ட செல்வத்தை வழங்க சொல்லாற்றல் மிகவும் முக்கியமானதாகும்.
பேச்சுக்கலை என்பது உரிய பயிற்சி பெற்றால் எல்லோருக்கும் சாத்தியமே. அதிலும் ஆசிரியர்களாக திகழ்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று பேச்சுக்கலை.. எப்படிப்பட்ட இடத்திலும், எந்த சூழலிலும் பேச்சுக்கலையானது பேசுபவரின் தனித்துவத்தை வெளிக்காட்டும். பேச்சுக்கலையில் உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு, பார்க்கும் விதம், மேடைப்பயன்பாடு, பேச்சை தயாரித்தல், பார்வையாளர்கள் மனநிலை, பேசப்படும் இடம் இதுசார்ந்த விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். இது மிகுந்த தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருக்கும். எனவே ஆசிரியர்கள் அனைவருக்கும் பேச்சுக்கலை என்பது அவசியமானதாகும்.
4) தலைமைப்பண்பு (leadership qualities)"தலைவர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள்" இன்றைய சூழலில் நல்ல வழிகாட்டல் அளிக்கக் கூடிய தலைவர்களே தேசத்திற்கு அதிகம் தேவை. தலைவர்கள் என்றாலே அரசியலில் இருப்பவர்கள் மட்டுமே தலைவர்களாக சித்தரிக்கப்படும் தவறான சூழல் வந்துவிட்டது. இந்தப் படிப்பு படித்தால் தலைவராகிவிடலாம் என்னும் கல்வித்தகுதி எதுவும் கிடையாது. ஆனால் தலைமைக்கு என சில பண்புகள் நிச்சயமாக இருக்கவேண்டும். வருங்கால தேசத்தை கட்டமைக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று தலைமைப்பண்பு. ஏனெனில்
இவர்கள்தான் சமூகத்தின் இணைப்புச் சங்கிலியாகத் திகழக்கூடியவர்கள்.
தலைமைப் பண்புகள் என்பதில்;பணியாள் மேலாண்மைகுழுச்செயல்பாடுமுடிவெடுக்கும் திறன்தகவல்தொடர்பாற்றால்ஊக்கப்படுத்தல்நடுநிலையோடு செயல்படல்நம்பிக்கைக்குரியவராய் இருத்தல்ஒற்றுமை பேணல்வேலைவாங்கும் திறன்முன்மாதிரியாக இருத்தல்திட்டமிடல்ஒழுங்குபடுத்தல்நேரமேலாண்மைஇலக்குகளை நிர்ணயித்தல்- என மிகப்பெரும் திறன்களை கொண்ட ஒரு முக்கியமான தகுதி நிலையே தலைமைப்பண்பு ஆகும். எனவே அது சார்ந்த பயிற்சிகளை அளிக்கும்பொழுது ஆசிரியர்கள் ஒற்றுமையாய் பணிபுரிந்து மாணவர்களையும் பள்ளிசார் சமூகத்தையும் முன்னேற்றிச் செல்ல இது முக்கியமான பயிற்சியாகத் திகழும்.
5) பல்திறன்அறிவு ( Multiple intelligence)இதில் மிக முக்கியமானது;அறிவுசார் நுண்ணறிவுமனவெழுச்சிசார் நுண்ணறிவு- என்பதாகும்..
ஒவ்வொருவரிடமும் பல்வகைத் திறன்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு அடிப்படையாக அமைவது மேற்கண்ட நுண்ணறிவில் அறிவுசார் நுண்ணறிவு காரணமாக இருந்தாலும் கூட சில சூழல்களில் மனவெழுச்சியின் காரணமாக உந்தப்படும்பொழுது நம் செயல்பாடுகள் மாற்றம் பெறுகிறது.. அவை நல்லவிதமாகவும் அமையலாம்..தவறான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.ஆனால் அவைகளை கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது..ஆனால் சரியான தடத்தில் அவைகளை கொண்டு செல்லமுடியும்... சின்ன சின்ன பயிற்சிகள் மூலம் செயல்பாடுகளை ஒழுங்கமைக்க முடியும். வலதுமூளை, இடதுமூளை செயல்பாடுகளையும், தன்னிடம் உள்ள திறன்களுக்கு காரணம், அவற்றை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவாக அமையும். இது மாணாக்கர்களை மிகச்சரியான வழிகளில் கொண்டு செல்ல பேருதவியாக அமையும்.
6) தியானப்பயிற்சி(Meditation)இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்களாகவும், சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் உடையவர்களாகவும் உள்ளனர். இதற்கு தியானப்பயிற்சி அளிப்பதன் மூலம் இவர்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமான முறையில் வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக வகுப்பறையில் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் மகிழ்ச்சியாக மாணவர்களுடன் கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவர்.
மேற்கண்ட இப்பயிற்சிகளை உண்டு உறைவிடப் பயிற்சியாக வழங்கிட வேண்டும். அதன்மூலம் ஆசிரியர்களின் மனப்பான்மையை மாற்றம்பெறச் செய்தால் அவர்களால் மிகப்பெரும் வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும். இல்லையேல் மனிதவளம் நிறைந்த நம் தேசம்... உருவத்தால் மட்டும் மனிதர்கள் கொண்ட தேசமாக உருமாறிப்போய்விடும். உதாரணம்... சர்வ சாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், குடும்ப உறவுமுறை சீர்குலைவுகள்... இவை எல்லாம் தொடர்கதையாக மாற்றம் பெற்றுவிடும்.
கல்விமுறை மாற்றம் என்பது தொழில்நுட்பமும், பாடப்புத்தகமும் சார்ந்ததாக இருப்பதில் பயனில்லை.. சுவர்களுக்கு வண்ணம் அடிப்பதால் மாற்றம் வந்துவிடாது. நம் எண்ணங்களை மாற்றம் செய்ய வேண்டும். நம்மால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் வேண்டும். முதலில் மாணவர்களது மனநிலையை பக்குவப்படுத்த வேண்டும்... அதற்கு ஆசிரியர்கள் முதலில் பக்குவமடைய வேண்டும்.. இந்தப் பயிற்சிகளை மட்டும் நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றத்தை நம் அரசுப்பள்ளிகளில் நம்மால் உருவாக்க முடியும்
தொடர்புக்கு - 9994119002