>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
JOP NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JOP NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 பிப்ரவரி, 2017

மின்வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறை மேற்கொள்ள அனுமதி: உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் 750 உதவிப்பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு மின்வாரியத்தில் ஏற்கெனவே -அப்ரன்டீஸ்- ஆக பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு எழுத்து தேர்வில் இருந்து விலக்களிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமணி உள்பட 51 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மற்ற தகுதிகள் சமமாக இருந்தாலும், பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த அடிப்படையில் மற்ற தகுதிகளும் மனுதாரர்களுக்கு சமமாக இருக்க வேண்டும். மாறாக எந்த சிறப்புரிமையும் கோர முடியாது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதிகள், பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

காவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 சதவிகித பணி இடங்களுக்கு தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குள்பட்ட, பணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி, உரிய சான்றுகளுடன் வரும் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தருமபுரி மாவட்ட நல அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வுக்கான முன்பயிற்சி வரும் பிப். 13ஆம் தேதி ஒட்டப்பட்டியிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.

புதன், 1 பிப்ரவரி, 2017

TNTET - மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்


     இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை  ஏப்ரல் 29-ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்முடிவுசெய்துள்ளதுஇதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படிஒன்று முதல் 8-ம் வகுப்புவரை பணிபுரியும் இடைநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர்தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்புஆசிரியர் தேர்வு வாரியத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி..) விதிமுறைஆனால்நீதிமன்ற வழக்குகள்காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில்இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல்பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல்30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர்தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர்தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர்அறிவுறுத்தியுள்ளார்இதைத்தொடர்ந்துஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை(தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை(தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமைநடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்திட்டமிட்டுள்ளதுதேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும்இவ்வாறு அந்த கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்பிசிஎம்பிசிஎஸ்சிஎஸ்டி ஆகியஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும்ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும்தமிழகத்தில் முதலாவதுடெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும்அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாகதேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தைஅதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும்அதைத்தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளனமாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்ததுபொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளனஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம்   இடைநிலைபட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

ஆண்டுகள் செல்லத்தக்கது

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லைவெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்அதன்படிடெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும்பிளஸ் 2, பட்டப் படிப்புபிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்புமதிப்பெண்கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வுதேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும்எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள்மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும்டெட் தேர்வு எழுதலாம்

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?

விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )
அரசு பணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்
TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாட திட்டம் யாது?
பாட திட்டம் :
தாள் 1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள் 2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூக அறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுய குறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட் மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது
வாழ்த்துகளுடன் -
பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்

திங்கள், 30 ஜனவரி, 2017

TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,
ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர், உதவி ஜியாலஜிஸ்ட் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி விரைவில் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். தேர்வுக்கு தயாராவோரின் வசதியைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில், கடந்த 2016-17 தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்-2, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அடுத்த வாரம் முதல் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது. அவற்றின் மூலமாக உதவி ஜியாலஜிஸ்ட் பதவியில் 55 காலியிடங்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவி யில் 25 காலியிடங்களும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 3 இடங்களும் நிரப்பப்படும். முன்பு அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்களைக் காட்டிலும் காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. உதவி ஜியாலஜிஸ்ட் தேர்வுக்கு எம்.எஸ்சி. (ஜியாலஜி) படித்தவர்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவிக்கு உடற்கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களும், உதவி ஆணையர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முதலில் உடற்கல்வி பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பும் அதைத் தொடர்ந்து, எஞ்சிய 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார். இதற்கிடையே நடப்பு ஆண்டுக்கான (2017-18) தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் குரூப்-2, குரூப்-2-ஏ காலிப் பணியிடங்கள் புதிய தேர்வு கால அட்டவணையுடன் சேர்க்கப்பட இருப்பதால் அந்த பணிகளுக்கான காலியிடங்கள் மேலும் அதிகரிக்கும்.

TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்கள் 
> TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April. 
 > Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II. 
> Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 10.02.2017. 
> CEO has to allot to each DEO and then to each school. 
> Chief Educational Officers should handover theApplication Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms. 
> This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools. 
> Application Forms should be shared between schools as and when there is necessity.

> A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices. 
> TNTET Application Forms should be sold in theselected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February'2017 to end of February'2017 tentatively 27.02.2017. 
> Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM onall working days (including Saturdays) with at least two staff members on duty. 
> It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate. 
> Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices. 
> Chief Educational Officers should take personal care on the sale and receipt of Application Forms. II. Receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 1. At least 13 Teams (6+7 Teams for Paper I and Paper II) or more as per need may be formed for the receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 
> These Teams should check the filled-in Application Forms to ensure whether all the particulars are filled-in and the Challan for the payment of examination fee is attached. 
> The Teams should issue an acknowledgement on the xerox copy of the Application Form as prescribed by the TRB (in Annexure III) and it should be duly signed by the head of the Team without fail. 
> Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

டிரம்ப் முடிவிற்கு அமெரிக்க ஐ.டி., நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு !!

7 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவிற்கு
மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியா நாட்டு அகதிகள், அமெரிக்காவில் நுழைய, அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். ஈராக், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்தவர்களை,
அடுத்த, 90 நாட்களுக்கு, அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும், டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
*இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., நாதெல்லா கூறியதாவது:*
நானும் குடியேறி வந்தவன் தான். சி.இ.ஓ., என்ற அனுபவத்தில், குடியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நான் உணர்ந்துள்ளேன். இந்த பலன்கள் நமது நிறுவனம், அமெரிக்கா மற்றும் உலகிற்கு நல்லது. இந்த முக்கியமான விஷயத்தில் நாம் தொடர்ந்து போராடுவோம் எனக்கூறினார்.
*மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிராட் ஸ்மித் கூறியதாவது:*
 புதிய உத்தரவால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியேற்ற பிரச்னை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல ஊழியர்களுக்கு முக்கியமான விஷயம். இந்த விவகாரத்தை பல முறை நாதெல்லா பேசியுள்ளார். நிறுவனம் என்ற அடிப்படையில், வலிமையான அதிக கற்றறிந்த மக்கள் குடியேறுவதில் தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியுள்ளார்.
*கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை கூறியதாவது:*
 இந்த உத்தரவு, திறமையானவர்களை அமெரிக்கா கொண்டு வருவதில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ள அவர், வெளிநாடு சென்ற தனது ஊழியர்களை திரும்பி வருமாறு இமெயில் அனுப்பியுள்ளார்.
*டிரம்ப் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதாவது,*
நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது. அதேநேரத்தில், அச்சுறுத்தல் உள்ள நபர்களை மட்டும் தடுக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கும், அகதிகளுக்கும் கதவுகளை திறுந்து வைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?
How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல். இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.


1. முதலில் வேலைபார்த்துக் கொன்டே போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், படிப்பதற்கு போதுமான நேரம் இல்லாமை. வீட்டில் இருந்து முழு நேரம் இத் தேர்வுகளுக்கு படிப்பவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலைமை. அவர்கள் ஒரு நாளில் படிக்கும் பாடத்தை படிக்க நமக்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.
எனவே, நீங்கள் எந்த எந்த வழிகளில் உங்கள் பொன்னான நேரம் செலவாகிறது என்பதனை கண்டறிந்து குறைக்க வேண்டும். டிவி பார்ப்பது, அடிக்கடி அவசியம் இன்றி வெளியே போவது, பொழுது போக்கில் அதிக நேரம் போன்ற அனாவசிய நேர செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த நேரங்களில் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களால் நாள் ஒன்றிற்கு 4 மணி வரை படிக்க முடியும்.

2. சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முழுவதுமாக பயன்படுத்தி நீண்ட நேரம் படிக்கலாம்.

3. உங்களுக்கு CL, PL போன்ற விடுமுறை வாய்ப்புகள் இருந்தால் தேவை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். தேர்வு நேரங்களில் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிக்கலாம்.

4. அலுவலகத்தில் வேலை ஏதும் இன்றி, சும்மா இருப்பதாக நீங்கள் கருதினால், கைக்கு அடக்கமான பேப்பர்களில் (பிட்டு பேப்பர் போன்று) பாடக் குறிப்புகளை உங்களுக்கு புரியுமாறு எழுதி வைத்துக் கொண்டு நினைவு படுத்தலாம். ஆனால் இதனை அலுவலகத்தில் வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

5. கூடுமான வரை அடிக்கடி நீண்ட தூர பயணங்களை தவிருங்கள், அவ்வாறு தவிர்க்க இயலாது செல்ல வேண்டி இருப்பின் அந்த பயண நேரங்களை படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உங்களது சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு படிக்கலாம்.

7. கல்யாணம் ஆகாமல் தனியாக அறையில் தங்கி இருப்பவர் என்றால், சமைக்க, துணி துவைக்க என்று நேரம் செலவிடாமல் மாற்று ஏற்படுகளை செய்து விட்டு அந்த நேரத்தில் படிக்கலாம்.

8. எக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அரசு வேலைக்கு முயன்று கொண்டு இருப்பதை அலுவலகத்தில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். நீங்கள் தற்செயலாக விடுப்பு எடுத்தாலும் படிப்பதற்கு லீவு போட்டு விட்டார் என்று கதையை கிளப்புவார்கள்.

9. உங்கள் மேலாளர், உங்கள் அணி தலைவர் என்று எவரிடமும் நீங்கள் படிப்பதனை சொல்லக் கூடாது. அவர்களுக்கு தெரிந்தால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உங்களை வேறு விதமாக நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேண்டும் என்றே விடுமுறை தர மறுப்பது, நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வைப்பது, நீங்கள் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால் நீங்கள் படிப்பதனை காரணம் காட்டி, உங்கள் கவனம் அலுவலகத்தில் இல்லை இன்று கூறுவது இப்படி உங்களை மறைமுகமாக தாக்கலாம்.

10. ஆயிரம் பொய் என்பது திருமணத்திற்க்காக மட்டும் அல்ல, அரசு வேலைக்காகவும் சொல்லலாம். தேர்வு நேரங்களில் விபத்து, டைபாய்டு காய்ச்சல் என்று எதையாவது கூறி குறைந்தது ஒரு 10 நாட்கள் விடுமுறை எடுத்து விடுங்கள். ஏனென்றால், படிப்பதற்கு - பரீட்சைக்கு என்று நீங்கள் விடுமுறை கேட்டால் எந்த அலுவலகத்திலும் தர மாட்டார்கள். சம்பளம் குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. நிம்மதியாக இறுதிக் கட்டத்தில் படிக்கலாம்.

11. ஒரு அலுவலகத்தில் இருந்து நீங்கள் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை இருப்பின், உடனடியாக புதிய அலுவலகத்தில் சேர்ந்து விடாதீர்கள். அதிகமாக ஒரு 20 முதல் 30 நாட்கள் வரை கழித்து புதிய அலுவலக பணியில் சேருங்கள். இந்த பொன்னான நாட்களை நன்கு படிக்க பயன்படுத்தலாம்.

12. அலுவலக ரீதியாக வெளி ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பின், அல்லது அங்கு தங்க வேண்டி இருப்பின் பாடப் புத்தகங்களை படிப்பதற்கு உடன் எடுத்துச் செல்லலாம்.

13. TNPSC யைப் பொறுத்த வரை, நீங்கள் வேலைபார்த்துக் கொண்டே உங்களது மொழி பாடத்தில் 90+ வாங்க முடிகிறது என்றால், உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் இல்லை என்றால், உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ய மனிதர்கள் இருப்பின் முக்கியமான தேர்வு அறிவிப்பிற்கு முன்பு குறைந்த பட்சம் ஒரு 6 மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு விட்டு தன் நம்பிக்கையுடன் படிக்கலாம். வெற்றி நிச்சயம்.

14. உங்களது சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு படிக்கும் கால கட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. வேலையை எந்த தேர்விற்க்காக விட போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் !!

தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி, உதவி பதிவாளர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சனி, 28 ஜனவரி, 2017

பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுக்கு புதிய கமிட்டி

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தலைவராக, தெரசா பல்கலை துணைவேந்தர் வள்ளி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர, முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம். மாநில அரசு நடத்தும் செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும். கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்தியது. ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 22ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலை துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் செயலராக, தெரசா பல்கலை பதிவாளர் கீதா, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். உறுப்பினர்களாக, சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் சுவாமிநாதன் மற்றும் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டுக்கான செட் தேர்வு தேதி, பிப்., முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு.

உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், உதவி பொறியாளர்களை, எழுத்து, நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்தது.
அதன்படி, எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2016 ஜன., மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. அண்ணா பல்கலை நடத்திய இந்த தேர்வை, பல ஆயிரம் பேர் எழுதினர்.
தேர்வில் விலக்கு கோரி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின், நீதிமன்ற அனுமதியில், தேர்வர்களின் மதிப்பெண் மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது, வழக்கில், மின் வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்கள்படி, தகுதியானவர்களுக்கு, நேர்காணல் தொடர்பான தகவல், விரைவில் தெரிவிக்கப்படும். அரசு விதிப்படி, நேர்காணல் நடத்தி, எழுத்து மற்றும் நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் : உதவி பொறியாளர் நேர்காணலை, மின் வாரியத்தில் பணிபுரியும், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள் நடத்த உள்ளனர். அவர்களால், அரசியல் குறுக்கீடுகளை எதிர்கொள்ள முடியாது. இதனால், தேர்வில் முறைகேடு நடக்கும். எனவே, முன்னாள் மின் வாரிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசு செயலர்கள் மூலம் நேர்காணல் நடத்த வேண்டும். நேர்காணலை, வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதன், 11 ஜனவரி, 2017

DSE - Online Promotion Counselling for SPL / SG Asst to BT Asst


DSE - தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை/ சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடம் ) பதவி உயர்வு கலந்தாய்வு 01.01.2016 அன்றைய நிலவரப்படி (Promotion panel ) கலந்தாய்வுக்கு (online councelling ) அழைக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை குறித்து இணை இயக்குனர் அறிவுரைகள்!! 

திங்கள், 9 ஜனவரி, 2017

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, திருவண்ணாமலையில் நடை பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நக ராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து அரசு ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நேற்று மாலை நடை பெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டு திடலை வந்தடைந்தது. பின்னர் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை யில் மாநாடு நடைபெற்றது.
அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தலைவர் முத்துசுந்தரம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், "20 சதவீத இடைக் கால நிவாரணம் வழங்க வேண் டும், ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும், சிறப்பு ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறுபவர் களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவது, மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நடத்துவது, ஏப்ரல் 25-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சீதரன், பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசில் 8,300 பணியிடங்கள்: 30க்குள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

மத்திய அரசில் 8,300 பணியிடங்கள்: 30க்குள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 8,300
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துவின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்விற்கான வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: புதுச்சேரி(8401), சென்னை(8201), கோயம்புத்தூர்(8202), மதுரை(8204), திருச்சிராப்பள்ளி(8206), திருநெல்வேலி(8207)
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.04.2017, 30.04.2017 மற்றும் 07.05.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!

வேலை தேடும்நண்பர்களுக்கு ஓர்தகவல் !!

வேலை தேடுவதற்குஉதவும்
இணையதளங்களைகொடுத்துள்ளோம்
.
இந்ததளங்களில் உங்கள்தகவல்களை பதிவு
செய்து உங்கள்தகுதிக்கும்திறமைக்கும் உரிய

வேலையை பெற்றுவாழ்வில்
வெற்றி பெறவாழ்த்துகள்....

www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்..🏹

சனி, 7 ஜனவரி, 2017

TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு.

TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு.

தமிழக சிறைத் துறையில், அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறைத் துறையில், மூன்று சமூக வழக்கு பணி அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது.
அதை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான எழுத்துத் தேர்வு, மே, 21ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; பிப்., 2 வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

DEO பதவி 19ல் நேர்காணல்

DEO பதவி 19ல் நேர்காணல்

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி'- சந்திரபாபு நாயுடு !!

நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி'- சந்திரபாபு நாயுடு !!

ஆந்திராவில் நோபல் பரிசு வாங்கினால் ரூ.100 கோடி பரிசு என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'பல திறமைசாலிகள் இருந்தும், நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
எனவே, ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும், விஞ்ஞானிகளுக்கு ரூ.100 கோடி வழங்கப்படும். இளைஞர்கள் இதை சவாலாக எடுத்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

முதுகலைப்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு,
அரசு கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் ஒதுக்கீடு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு, டாக்டர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமப்புற, அரசு சுகாதார மையங்களில் பணியாற்றி இருக்க வேண்டும்.
கிராமங்களில் டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில் 25,300 சுகாதார மையங்களில் 8 சதவீத மையங்களில் டாக்டர்கள் இல்லை என்று கூறப்பட்டது. 
மேலும், அந்த சுகாதார மையங்களில் 50 சதவீதம் பெண்களுக்கான பணியிடங்களும், 61 சதவீதம் ஆண்களுக்கான பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.