>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 24 மார்ச், 2021

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது 

இதற்க்கான  அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை 'சி-விஜில்' செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது


கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.

லிங்க்

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil


இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,

பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,

திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,

வாக்காளர்களை மிரட்டுவது,

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,

வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,

பொய்யான செய்திகளைப் பரப்புவது,


போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.

புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்

உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்


.......................................

திங்கள், 22 மார்ச், 2021

தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்

 தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்!


தமிழகத்தில் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது. 





ஒரு பள்ளி அல்லது ஒரு கல்லூரியை வாக்குப்பதிவு மையம் என்று அழைக்கிறார்கள். இதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் பதவி நிலை ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் நான்கு பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது சின்னங்கள் உள்ளிட்ட விவரங்கள் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்பட்டிருக்கும்.



வாக்குச் சாவடி மையங்களுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, அதற்கான பூத் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பெண் ஊழியர் ஒருவரை பணியில் ஈடுபடுத்தும்.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அச்சுப் பதிவு இயத்திரம் ஆகியன வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.


நிலை ஒன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களுடைய அடையாள அட்டையை சரி பார்த்தப் பின்னர் வாக்களிக்க அனுமதிப்பார். நிலை இரண்டில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டை குறித்த விவரங்களை பதிவு செய்துகொண்டு, அதற்கான படிவத்தில் வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பார்.




நிலை மூன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் கைவிரலில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதிப்பார். இவை அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரங்களை தெரிந்துவைத்துள்ள நபராக வாக்குப்பதிவு தலைமை அலுவலர் இருப்பார்.






இத்தகைய தேர்தல் பணிகளில் காலமுறை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களை தேர்தல் ஆணையம் முழுமையாக பயன்படுத்துகிறது. இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். அதிலும், குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என இருந்தது. அது, பின்னர் 59 என்றும், 60 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்து வரும் அரசு ஓய்வு பெறும் வயதை 61 உயத்திவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டாலும் அரசு அதனை தர மறுக்கிறது என வேதனைப்படுகின்றனர். 50 வயதை கடந்த பெரும்பாலான அரசு ஊழியர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.



ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்ந்து 35 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்காக, 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தாங்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிக்கு வெளியே, வேறு ஒரு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப் பெட்டிகளை முறையாக ஒப்படைத்துவிட்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்.



தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு உணவு, மருத்துவம், தூங்கும் வசதியுடன் கூடிய தங்குமிடம், சுத்தமான கழிப்பிடம், குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. இவற்றுக்காக சில இடங்களில் அங்குள்ள அரசியல் கட்சியினரை சார்ந்து தேர்தல் பணிசெய்யவேண்டிய நிலை அரசு ஊழியர்களுக்கு எழுகிறது.


அதேபோல உடனடியாக வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்வதற்கும், நள்ளிரவு பணி முடித்து வீடு திரும்புவதற்கும், போதுமான போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை. இதில் பெண்களும், கர்ப்பிணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



'இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களையும், கர்பிணிகளையும் ஈடுபடுத்தக்கூடாது. வாக்குச் சாவடிக்கு வெளியே பெண் ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது. பூத் சீட்டு கொடுப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க காவல்துறையினரை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


......................................................................

பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்ல முடியும் தெரியுமா? உங்க பாதம் இதுல எந்த மாதிரி?

 பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்ல முடியும் தெரியுமா? உங்க பாதம் இதுல எந்த மாதிரி?


CLIK HEARE

http://dhunt.in/dDLtj?s=a&uu=0xb33871b2259c29bf&ss=pd


அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும் வழி முறைகள்

 *அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

முறை*

CLIK HEARE

https://drive.google.com/file/d/1SWds0S7E1WtvfV7vaOBLAfqvO-SWRafD/view?usp=drivesdk

அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

*முடிந்தவரை பகிருங்கள்*

ELECTION TRAINING VIDEOS

ELECTION TRAINING VIDEOS

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள் - 

ELECTION CLASS TRAINING VIDEOS 

1.) DUTY OF PRESIDING OFFICERS TAMIL 


2.) EVM PART 1 

3.) EVM PART 2


4.) CONDUCTING MOCK POLL 


5.) EVM/VVPAT 

6.) POLLING DAY PREPARATION

7.) CLOSE OF POLL 

Video courtesy : 
Election commission of India / YouTube
CEO tamilnadu / YouTube
Tme/ YouTube
VT WHAT I LEARN / YOUTUBE
                

CONTENT DISCLOSURE : மேற்காணும் காணொளிகள் EDUCATION PURPOSE க்காக பகிரப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து நடைமுறைபடுத்தவும், உங்கள் பயிற்சியில் மற்றும் கட்டகத்தில் உள்ளதை பின்பற்றவும்.


...............................

பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

 Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link



உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஆணையில் உள்ள சரியாக உள்ளதா? - சரிபார்த்துக் கொள்ளவும் - தவறாக இருந்தால் உங்கள் வாக்கு பதிவாகாத நிலை ஏற்படும்

* ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே  விண்ணப்பம் கொடுக்கவும்


*தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை  எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.



*அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்




*Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை



*1.Voter ID xerox

*2.election order xerox

*3.Part No and Serial No

*எடுத்து செல்க





*இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.



Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :


Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப  "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link









.................................................

உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை பற்றி தெரிந்துகொள்ள CLIK HEARE

 போர் அடிச்சா... 

CLIK HEARE

affidavit.eci.gov.in 

இந்த வெப்சைட் போங்க... உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவங்க வேட்புமனுவை டவுன்லோட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க... உங்க தொகுதி வேட்பாளரோட ஜாதகமே கிடைக்கும்.


.........................................

புதன், 17 மார்ச், 2021

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

 
நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்
  • நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில் CLICK HEER

செவ்வாய், 16 மார்ச், 2021

20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?

 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?






தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அளித்து வருகிறது. மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அத்தியாவசியமானதாக இருக்கிறது. பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலும், பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணைக் கொண்டு தொகுப்பு பரிசைப் பெறலாம் என்று அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள் புது ரேஷன் கார்டு பெறுவது பெரிய சிக்கல் என்றே இது நாள் வரையில் நினைத்திருந்தார்கள்.

இப்படி புது ரேஷன் கார்டு பெறுவதற்கு தரகர்களிடம் சென்று பொதுமக்கள் அதிகளவில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.



இருபது ரூபாய் செலவில் நீங்கள் தொலைத்த ரேஷன் கார்டுக்கு பதிலாக டூப்ளிகேட் ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.



இந்த ரேஷன் அட்டைக்கான விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள், பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் அனைவருமே www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.



ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, இந்த இணையதளத்திற்குச் சென்று, ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு தயாரானது, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, உங்கள் புது ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

........................................

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?


கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது


மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.


ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை


ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்



 முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,


அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.


உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், 


அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.

.........................................

ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?

ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?








ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி





வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link..

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link....




உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்தியா. அந்த ஜனநாயகத்தை உறுதி செய்பவை தேர்தல்களும், அவற்றில் மக்களின் பங்களிப்புமே. இதோ, இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டைத் தீர்மானிக்கும் அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த மக்களவைத் தேர்தலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் பங்கேற்று வாக்களிக்கவுள்ளனர். வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்ல வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். 

எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். சிலசமயம் வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் விடுபட வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் உங்கள் பெயர், தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. இதைத் தேர்தல் ஆணையம் வழங்கும் பல்வேறு வசதிகளின் மூலமாக மிக எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய

தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://www.nvsp.in/) எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் (Electoral Search). அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும். 



1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.
2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

EPIC எண் இல்லையெனில்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.


EPIC எண் இருந்தால்,

NVSP Electoral Search  (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

இதேபோல புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க, புதிய வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள, ஏற்கெனவே உள்ள தகவல்களில் திருத்தம் மேற்கொள்ள, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்க, இவற்றிற்கான படிவங்களை தரவிறக்க எனப் பல்வேறு வசதிகளும் இணையத்திலேயே கிடைகின்றன. இதுதவிர மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கும் கட்சிகளைத் தடுக்க CVigil என்னும் ஆப் ஒன்றை வெளியிட்டு நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். உங்களுடைய பகுதியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகளை இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம். 




கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.




......................................

புதன், 10 மார்ச், 2021

தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே? - உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்!!!

 தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே? - உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்!!!

 


தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய அரசூழியர் ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.






நாம் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் மற்றும் பல நல் உள்ளங்களால் அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்.




அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். மாறாக செல்லோடேப் கொண்டோ அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள்



ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம். ஏனெனில் அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்




கடந்த முறை எங்கள் பள்ளியில் 1 லட்சம் மதிப்பில் பள்ளியின் அனைத்து உட்புற வெளிப்புற சுவற்றிலும் மிக உயர்ந்த வண்ணங்களை தீட்டி வைத்திருந்தோம், அவை அனைத்திலும் பசை ஒட்டிய காகிதத்தால் நம்மவர்கள் அலங்கரித்திருந்தனர், மறுநாள் பள்ளி சென்று பார்த்ததும் எங்களுக்கு மனமே உடைந்துவிட்டது, இதற்கா இத்தனை சிரமப்பட்டோம் என்று, இத்தனைக்கும் அந்த சின்னங்களை ஒட்டுவதற்கு பலகைகளும் வைத்து சென்றிருந்தோம்.





இதுபோல் இன்று எத்தனையோ பள்ளிகள் வண்ணமயமாக அந்த பள்ளி ஆசிரியர் ஊர்மக்களால் ஜொலித்துக்கொண்டு இருக்கிறது, அதை சிதைத்துவிடாதீர்கள் இது அனைவரின் அன்பு வேண்டுகோள்.


..............................................................

அகவிலைப்படி D.A - அரசு ஊழியர்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

 அகவிலைப்படி D.A - அரசு ஊழியர்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு


the Finance Ministry on Tuesday assured that three pending instalment of Dearness Allowances (DA) of central government employees and pensioners will be restored prospectively as and when the decision is taken.


The Finance Ministry added that the pending instalments of dearness allowance for the said employees will be "subsumed in the cumulative revised rates effective from 1 July, 2021."


🅱️மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


.................................

Increment முடிவு அடைந்தவர்களுக்கு கூடுதலாக increment cell உருவாக்கி வெளியிட்டுள்ளது

Increment முடிவு அடைந்தவர்களுக்கு கூடுதலாக increment cell உருவாக்கி வெளியிட்டுள்ளது



அரசுு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷன்் அடிப்படையில் வருடாந்திர ஊதிய உயர்விற்கான தளம்்்்் முடிவடைந்த நிலையில் தற்போது கூடுதலாக தளம் ஒதுக்கீடுுு செய்யப்பட்டுள்ளது

 

More gos.

 

Click to download

Click to download

Click to download

Click to download

மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!

*🌍🌎மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!*



*📗📗அரசுப்பள்ளி மாணவனை பாராட்டி வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐயா அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும்!*


*📗📕அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைத்ததற்காக தந்தையையும் பாராட்டினார்!*



*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அப்துரஷீத் என்பவரது மகன் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனான A.ரியாஸ் முகமது எனும் மாணவன் இந்த  ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகின்றார்.அந்த நிகழ்வு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களும் கண்டுவந்துள்ளார். பின்னர் ஆட்சியர் அவர்களே தொலைபேசி வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அம் மாணவன் A.ரியாஸ் முகமதுவை வரவழைத்து மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வைத்தும் தயாரித்த விதம் மற்றும் இப்பொருள்களால் சமுதாயத்திற்கு  ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை கேட்டு..... மாணவன் வழங்கிய பதிலைக் கண்டு வியந்து பின் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தார்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களும் கலந்து கொண்டது மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.*


(அப்போது தானும் மாணவனின் Channel ஐ Subscribe செய்துள்ளதை ஆட்சியர் கூறும்போது மாணவனுக்கு கண்கள் குளமானது)


https://youtube.com/channel/UCGAhowDFyrtgjQGrRWaVqnA


*தற்போதைய தேர்தல் பணிப்பளு நேரத்தில் மாணவனுக்காக நேரம் ஒதுக்கி மாணவனின் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் போற்றும் விதமாக வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தமைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி IAS ஐயா அவர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் மாணவன் சார்பாக நன்றிகள் பல கோடி!*


எனது மகன் ஆட்சியரிடம் பாராட்டுதலையும் வெகுமதியுடன் வாழ்த்துக்களையும்  பெற்றதைக்கண்டு எனக்கும் மகிழ்ச்சியே!


இப்படிக்கு.

*_அப்துல் ரஷீத்._*

*இடைநிலை ஆசிரியர்.*

மேல்மலையனூர் ஒன்றியம்.

*_விழுப்புரம் மாவட்டம்_*

மேலும் கல்விச்சிகரம் மாணவனை அன்புடன் வாழ்த்துகிறது....

.........................................