>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 6 மார்ச், 2020

SA (60 Marks) Model Question Papers For 1-5th Std (Tamil And English Medium) - New Syllabus




1St Std SA QUESTIONS T/M - Download Here

1St Std SA QUESTIONS T/M - Download Here

2nd Std SA QUESTIONS T/M - Download Here

2nd Std SA QUESTIONS E/M - Download Here

3rd Std SA QUESTIONS T/M - Download Here

3rd Std SA QUESTIONS E/M - Download Here


4th Std SA QUESTIONS E/M - Download Here

5th Std SA QUESTIONS T/M - Download Here

5th Std SA QUESTIONS E/M - Download Here




............................................

Term 3 - Ganga Publication Model SA Question Papers for Primary Classes

மூன்றாம் பருவத் தொகுத்தறி வினாத்தாள்கள் SA 60 MARKS - வகுப்பு 1 முதல் 5 வகுப்பு

Term 3 - SA Question Papers For Primary Students (2019 -20 )

Ganga Publication - Question Papers ( 1 TO 5th Std) 

1st Std 

* 1st Std - Tamil Medium - Download here

* 1st Std - English Medium - Download here

2nd Std 

* 2nd Std - Tamil Medium - Download here

* 2nd Std - English Medium - Download here

3rd Std 

* 3rd Std - Tamil Medium - Download here

* 3rd Std - English Medium - Download here

4th Std 

* 4th Std - Tamil Medium - Download here

* 4th Std - English Medium - Download here

5th Std 

* 5th Std - Tamil Medium - Download here

* 5th Std - English Medium - Download here



.....................................................................

பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் - RTI....






Census 2021 - 34 Questions Model Sheet




வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. அதற்கான மாதிரி படிவமானது A , B தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Census 2021 - 34 Questions Model Sheet - Download here ( Pdf ) 


...............................

NMMS 2019 - TENTATIVE ANSWER KEY


NMMS 2019 - TENTATIVE ANSWER KEY ( MAT )

NMMS 2019 - TENTATIVE ANSWER KEY ( SAT )



.........................................................
அனைவருக்கும் வணக்கம் இந்த லிங்கை பயன்படுத்தி பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்துக்கொள்ளுங்கள்....


CLIK HEAR...
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
06-03-2020


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 140

அதிகாரம் : ஒழுக்கமுடமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

 கல்லார் அறிவிலா தார்.


பொருள்:
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

அன்பு தான் உன் பலவீனம் என்றாலும் , இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்.

 - அன்னை தெரசா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

SOUNDS OF THINGS - பொருள்களின் ஒலிகள்

1. Fire - crackles
2. Flags - flutter
3. Guns - boom
4. Hands - clap
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.தேனி எப்போது தனி மாவட்டமானது ?

1997, ஜனவரி-1

2. தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஊர் எது ?

 கயத்தாறு

✡✡✡✡✡✡✡✡
Daily English

Di-syllabic words

1. weapon - weap-on
2. stupid - stu-pid
3. return - re-turn
4.routine - rou-tine

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

மிளகு




🌿 சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிளகின் தாயகம் இந்தியா ஆகும்.

🌿 ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

🌿 மிளகு என்பது செடி அல்ல, அது ஒரு கொடி. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறது. பழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும்.நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக மாறும்.

🌿மிளகின் விஷ முறிவு தன்மைக்காக “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் “ என கூறியுள்ளனர்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உண்மையான மதிப்பு


ஒரு நாள் அரண்மனைப் பழத்தோட்டதில் துருக்கி மன்னரும், முல்லாவும் உலாவிக் கொண்டிருந்தனர். மன்னர், முல்லா அவர்களே தாங்கள் ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனுடைய மதிப்பை கூறிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டேன். முல்லா, ஆம், எனக்கு இந்த ஆற்றல் அல்லாவின் அருளால் தான் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். துருக்கி மன்னன் என்னுடைய மதிப்பு என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம். தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள் தான் என்றார் முல்லா.

முல்லாவிடம் மன்னர், தங்களை என் மதிப்பு பற்றி சொல்லச்சொன்னால், என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பைப் பற்றி கூறுகிறீர்கள் என்று கோபமாக கேட்டார். மன்னர் பெருமானே! நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். உடலிருந்து உயிர் பிரிந்து விட்டால் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்காது. அழியக்கூடிய உடம்புக்கு மதிப்பு இருக்காது. முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரை சிந்திக்க வைத்தது.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா எதிரொலியால் குர்கான், நொய்டாவில் உள்ள பேடிஎம் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


🔮கொரோனா வைரஸ் இறைச்சி உணவுகள் மூலம் பரவாது, எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

🔮கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

🔮மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

🔮கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு ரூ.155.80 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி.

🔮கொரோனா வைரஸ் எதிரொலி: டெல்லி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு.

🔮மாா்ச் 31-க்கு  பிறகு பிஎஸ் 4 வாகனங்களைப் பதிவு செய்யத் தடை: போக்குவரத்துத் துறை ஆணையா் உத்தரவு.

🔮சங்கரன்கோவில் அருகே திறப்பு: தென்னிந்தியாவில் முதன்முறையாக உலக அமைதிக்கான புத்த கோபுரம்: புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது.


HEADLINES

🔮COVID-19 | Coronavirus cases rise to 30, man from Ghaziabad tests positive.

🔮India-EU summit to be rescheduled in wake of coronavirus: MEA.

🔮Coronavirus: Delhi govt orders closure of all primary schools till March 31.

🔮New dimension needs to be created in medical education to handle challenges of astronauts, says former ISRO chairman.

🔮Women’s T20 World Cup: India advances to final.                                                                                         🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

....................................

வியாழன், 5 மார்ச், 2020

PAN எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஈஸி!! வழிமுறை இது தான்!!




ஒருவர், பல PAN கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர்.



1. http://www.incometaxindiaefiling.gov.in/home  என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.


2. Link Aadhaar Here என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், PAN எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.


4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.


5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.


இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.

..............................

கொரோனா - பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மத்திய அரசு சுற்றறிக்கை



வியாழன், 5 மார்ச், 2020



நேற்றுவரை கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து மாநிலங்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இருமல், தும்மல் போன்றவை ஏற்படும்போது கை குட்டையை பயன்படுத்துதல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 


காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.

முழுநீள கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.................................
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
05-03-2020


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 567

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
 அடுமுரண் தேய்க்கும் அரம்.


பொருள்:
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

 எவராவது தன்னுடைய வாழ்நாளில் தவறு செய்ததில்லை என்று நினைத்தால் , அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
  கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sound of things - பொருள்களின் ஒலிகள்

1. Aeroplane - Zoom
2. Bells - peel
3. Drums - beat
4. Doors - bang

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. விழுப்புரம் மாவட்டத்தில் கல் மரங்கள் எங்கு கணப்படுகிறது ?

 திருவக்கரை

2. சாத்தனூர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

 திருவண்ணாமலை

✡✡✡✡✡✡✡✡
Daily English
 Di -syllabic words

1. science - sci-ence
2. rubbish - rubbish
3. support - sup-port
4. subscribe - sub-scribe

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

வாடாமல்லி



🍃 எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு பெயர் வாடாமல்லி. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.

🍃கோம்பிரினா குளோபோசா என்பது இதன் தாவர பெயர் ஆகும்.

🍃வாடாமல்லி பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஊருக்கென்ன லாபம்

தவம் செய்து யோகங்கள் கைவரப் பெற்ற வரத யோகிக்கு கர்வம் ஏற்பட்டது. தன் சித்து விளையாட்டுக்களை மற்றவர் முன் செய்து காட்டி புகழ் பெற்றார். ஒரு நாள் அந்த ஊருக்கு துறவி வந்தார். அவரிடம் தன் சக்தியைக் காட்டி தன்மதிப்பு பெற யோகி முடிவு செய்தார். அவர் துறவியிடம் நீண்ட நெடும் தவத்தின் பயனாக பறக்கும் சக்தியையும் தண்ணீரில் மூச்சை அடக்கும் சக்தியையும் பெற்றுள்ளேன். மற்றவர்களுக்கு எளிதில் கைவராத பயிற்சிகள் இவை. என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.

அதைக்கேட்ட துறவி யோகியே பறவைகள் வானில் பறக்கின்றன. புழுக்கள் பூமியின் அடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீரின் ஆழம் வரை நீந்துகின்றன. இது போன்ற வாழ்க்கை எப்படி சாத்தியம் என்கிறீர். அதனால் உமக்கும் உலகத்துக்கும் ஆகப் போவது என்ன? மிக உயர்ந்த மனிதப்பிறப்பு எடுத்து விட்டு புழுவாய் பறவையாய் வாழ்வதில் லாபமென்ன? தற்பெருமையை தவிர்த்து விட்டு தர்மத்தை அன்பை மக்களுக்கு ஊட்டுங்கள் அதுவே உயர்வு தரும் இறைப்பணி என்றார். தற்பெருமை பேசிய யோகி தலை கவிழ்ந்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🔮கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮எதிர்காலத்தில் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி இரு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.

🔮கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி: உலக வங்கி அறிவிப்பு.

🔮ரூ.348 கோடி செலவில் கட்டப்படவுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

🔮கச்சத்தீவில் மார்ச் 6, 7ல் அந்தோணியார் ஆலயத் திருவிழா: தமிழகத்தில் இருந்து செல்லும் படகுகள் ஆய்வு.

HEADLINES
🔮COVID-19 updates | IMF members pledge all available resources against epidemic.

🔮Govt approves amendments to Companies Act.

🔮ISRO's launch of GISAT-1 postponed due to technical reasons.

🔮Social media curbs lifted in Jammu and Kashmir after 7 months.

🔮Water can associations call off strike as Madras HC directs TN govt to issue valid licenses in 15 days.

🔮CSK has made me better player, helped tackle difficult times: MS Dhoni.                                    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
04-03-2020


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 240

அதிகாரம் : புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

 வாழ்வாரே வாழா தவர்.


பொருள்:
 பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

 உழைப்பின் சக்தியே உலகில் உன்னதமானது. அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் எந்த சக்திக்கும் கிடையாது.

- ஆபிரகாம் லிங்கன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Tools -தொழிற்கருவிகள்

1. Knife - சிறிய கத்தி
2. Balance - தராசு
3. Sprit level - ரசமட்டம்
4. Screw - திருகாணி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

திருநெல்வேலி

2.மதுரையில் மிகப்பிரபலமான திருவிழா எது ?

 சித்திரைதிருவிழா

✡✡✡✡✡✡✡✡
Daily English

Present continuous Tense
 The Present continuous Tense is used to express an action going on at the time of speaking.
ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அதை Present continuous Tense ல் குறிக்க வேண்டும்.
General form:
Subject + am/is/are/verb + ing
Example:
I am playing cricket now

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பூண்டு


பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.
பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும்.  பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஏன் புற்களை சாப்பிடுகிறீர்கள்?


ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று, நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார். உடனே அவர்களில் ஒருவன், எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார். உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை, ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார். உடனே மேனேஜர்,அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்... நீயும் இவர்களுடன் வரலாம் என்கிறார். உடனே அந்த மற்றொரு ஏழை, ஐயா... எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி அவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார். இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி, அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே என்கிறான்.

மேனேஜர் உடனே, இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்று நோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


🔮வோடபோன் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.3 ஆயிரத்து 42 கோடி நிலுவை தொகையை இன்று செலுத்தியுள்ளது.

🔮தமிழகத்தில், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

🔮கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். கூடுதலாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

🔮சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

🔮காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா: நாட்டு மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை...பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

🔮நெல்லையில் புதிய முயற்சி: அரசுப் பள்ளியை வண்ணமயமாக்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!


HEADLINES
🔮COVID-19 | Iran orders troops to fight coronavirus outbreak as death toll rises to 77.


🔮Vodafone Idea pays ₹3,042.80 crore as spectrum dues to DoT.

🔮CHENNAI; Doctors treat 10-year-old girl with pyomyositis.

🔮Milan 2020: Navy's multilateral war drill may be called off amid coronavirus fears.

🔮Women's T20 World Cup: Match between South Africa, WI abandoned; India to face England in semis.

🔮Researcher creates Rs 500 de-odouriser to address smelly toilet problems in India.                                   🌴🌴🌴

...........................

திங்கள், 2 மார்ச், 2020

G.O.NO:37 – துய்க்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை


G.O.NO:37



IMG_20200301_124942




20200301124906

...................................,....

TERM 3 - Lesson Plan Guide 1std to 5std All subject.....

















GANGA - LESSON PLAN GUIDE

1st Standard
1st Std - Term 3 - Lesson Plan - Ganga - T/M -Download Here
1st Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - E/M - Download Here
2nd Standard
2nd Std - Term 3 - Lesson Plan Guide- Ganga - T/M - Download Here 
2nd Std - Term 3 - Lesson Plan - Ganga - E/M -Download Here
3rd Standard
3rd Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - T/M - Download Here
3rd Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - E/M - Download Here 
4th Standard
4th Std- Term 3 - Lesson Plan - Ganga - T/M -Download Here

1St STD All Subjects - CLICK HERE
3rd STD All Subjects - CLICK HERE
4TH STD TAMIL AND ENGLISH MEDIUM - CLICK HERE 
5TH STD TAMIL AND ENGLISH MEDIUM - CLICK HERE
5TH STD TAMIL - CLICK HERE
5TH STD ENGLISH - CLICK HERE 
5TH STD MATHS - CLICK HERE
5TH STD SCIENCE - CLICK HERE
5TH STD SOCIAL - CLICK HERE




...............................................................

EMIS-HOW TO UPLOAD IFHRMS DETAILS IN EMIS WEBSITE




தேர்வுத்தாளில் இப்படியா எழுதுவது? ஆசிரியரை கவர்ந்த மாணவரின் கோரிக்கை.!



மாணவர் ஒருவர் அவருடைய தேர்வுத்தாளில், "உங்களால் முடிந்தால் என்னுடைய போனஸ் மதிப்பெண்களை தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்" என்று எழுதியுள்ளார்.

வின்ஸ்டன் லீ என்ற ஆசிரியர் அவருடைய மாணவர் ஒருவர் தேர்வுத்தாளில் வைத்த கோரிக்கையை புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவிவருகிறது.

வின்ஸ்டன் லீயின் நன்கு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர், அவருடைய தேர்வுத்தாளில், அவருடைய 5 போனஸ் மதிப்பெண்களை, ஏதாவது ஒரு காரணத்திற்காக படிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் எந்த மாணவருக்காவது கொடுத்து விடுங்கள் என்று எழுதியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வின்ஸ்டன் லீ, மாணவரின் நேர்மையை பார்த்து பூரிப்படைவதாக எழுதியுள்ளார். மேலும் அந்த மதிப்பெண்களை இவருக்கு தான் கொடுக்க வேண்டும் அல்லது இந்த காரணத்தால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவருக்கு கொடுக்க வேண்டும் என்று இல்லாமல், குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் யாருக்காவது கொடுத்துவிடுங்கள் என்று எழுதியுள்ளது தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சமூக வலைதள பதிவை இதுவை 95,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அதற்கு 5000 கமெண்டுகளும், 67,000 பேரால் ஷேரும் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை பலரும் பாராட்டியிருந்தாலும், ஒரு சிலர் இதனை விமர்சித்தும் உள்ளனர். மதிப்பெண்களை எல்லாம் நன்கொடை போல கொடுக்கக்கூடாது என்றும் அப்படி கொடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களில் யாராவது மருத்துவராக வந்தால், அவரிடம் எப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

...........................................