>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 8 நவம்பர், 2019

Tamil, English, Maths - வாசிப்புத்திறன் பதிவேடு Download -Click Here



உடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.!



பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் குணமாகாது. மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் 2 பழத்தை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.


கொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு மீதியுள்ள 1 எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள். நீங்கள் உறங்கிய பின்னர் உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி முழுவதும் தானாக வெளியேறி விடும்


.................................

Election 2019 - வாக்காளர் பட்டியலில் உங்களின் பாகம் எண், வரிசை எண் அறிய (Part No & Serial No) - Direct Link



வெள்ளி, 8 நவம்பர், 2019

வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள் 



வாக்காளர் பட்டியல் என்பது இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட பெயர்களின் பட்டியலாகும். இதில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம்.

உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய



தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://www.nvsp.in/) எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் (Electoral Search). அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும். 



1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.
2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.



EPIC எண் இல்லையெனில்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.


EPIC எண் இருந்தால்,

NVSP Electoral Search  (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.



இதேபோல புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க, புதிய வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள, ஏற்கெனவே உள்ள தகவல்களில் திருத்தம் மேற்கொள்ள, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்க, இவற்றிற்கான படிவங்களை தரவிறக்க எனப் பல்வேறு வசதிகளும் இணையத்திலேயே கிடைகின்றன. இதுதவிர மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கும் கட்சிகளைத் தடுக்க CVigil என்னும் ஆப் ஒன்றை வெளியிட்டு நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். உங்களுடைய பகுதியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகளை இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம். 



கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.





   ..............................

அரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? - உண்மையை உரைத்த Thanthi Tv - Video.







............................

EMIS Time Table எவ்வாறு தயார் செய்வது?


Friday, November 8, 2019




4 Steps

*1.Subject Thought
*2.Create Master Time Table
*3.Copy Time table
*4.Create Weekly Time table

➖➖➖➖➖➖➖➖➖➖➖
Subject Thought
➖➖➖➖➖➖➖➖➖➖➖

EMIS தளத்தில் கால அட்டவணை தயார் செய்வதற்கு முன் staff list யில் Part I யில் subject thought யில் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கற்பிக்கும் அனைத்து பாடங்களையும் குறிப்பிட வேண்டும் முதலில்.

Subject thought யில் 1 முதல் 6 வரையுள்ளவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
(எ.கா. தொடக்கநிலை ஆசிரியர்கள் Tamil,English, Mathematics,Science,Social Science and Extra Curricular Activities)

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு* Extra Curricular Activities ஆகியவற்றையும் கூடுதலாக தேர்ந்தெடுந்து save செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Create Master Time Table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அதன்பின்
Dashboard
School
Time table
Create master time table
பகுதிக்கு சென்று ஒவ்வொரு வகுப்பு (I to V/VIII/XII) பிரிவிற்கும் சென்று கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட பாடவேளையில் ஆசிரியர் பெயர் மற்றும் பாடத்துடன் கூடிய பாட வேளையை தேர்வு செய்ய வேண்டும்.

8 period யில் 1&2,3&4,5&6 and 7&8 combine செய்து time table தயாரிக்க வேண்டும் தொடக்கநிலைக்கு.
ஏனைய வகுப்புகளுக்கு பாடங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்க வேண்டும்.
இவற்றில் 7&8 Extra curricular Actives ஆகும் தொடக்கநிலைக்கு.*
இவ்வாறு தயாரித்த பின் Save செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
COPY TIME TABLE
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அனைத்து வகுப்புகளுக்கும் Master time table create செய்த பின்னர்
School
Copy time table
சென்று
Option I யில்
Assign Master Time Table
 என்பதை கிளிக் செய்ய இப்போது Status பகுதியில் சிவப்பு கலரில் உள்ள not assigned என்பது பச்சை நிறத்தில் Assigned என மாறும்.
இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கும் Assign செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Create Weekly Time table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Time table

Create weekly time table
பகுதிக்கு சென்று வகுப்பு மற்றும் பிரிவை தேர்ந்தெடுக்க இங்கு master time table இங்கே ஒரு சில நொடிகளில் தெரியும்.
இதை Save செய்ய வேண்டும்.
இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கும் செய்ய வேண்டும்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு weekly time table தயார் செய்யும் போது weekly time table பகுதியில் உள்ள COPY LAST WEEK TIME TABLE OPTION யை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

.......................

பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்

Thursday, November 7, 2019




30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24 ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக் கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்

முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
 

30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
 
அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
 
பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,

இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும். (அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)

 30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
  
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 5333×120=63996 0ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
 
நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  
பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 17%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
  
40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.

நன்றி
  P.செல்வமணி்.

..............................

DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு!


Thursday, November 7, 2019




நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் மாணவர்களின் புத்தகச்சுமை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்ற கல்வியாண்டைப்போலவே இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக Soft Copy ( CD)  மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும் இதற்கான CD- யை National Stock Exchange நிறுவனம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
................................................

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.19


Thursday, November 7, 2019


திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்:

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பழமொழி

Be slow to promise but quick to perform

ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

பிறரின் வெற்றி பற்றிய விமர்சனங்கள் தன்னிடம் இல்லாத திறனின்  இயலாமையின்  பிரதிபலிப்பாகும்.. .

___கவிஞர் முக்தா

பொது அறிவு

1.சந்திரனில்  மலைகள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?

 கலிலியோ.

2. உவர்நீர் ஏரிகள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?

குஜராத்.

English words & meanings

* Apiology – study of bees. தேனியியல்.தேனீக்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஒரு துறை.

 *Abbreviation - a shortened form of words. வார்த்தைகளின் சுருக்கம்

ஆரோக்ய வாழ்வு

வயிறு உப்புசம் நீங்க ஓமத்தை லேசாக வறுத்து அத்துடன் பெருங்காயத் தூளையும் லேசாக வறுத்து அதன் பின் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்த பின் அதை வடிகட்டி அருந்தினால் வயிறு உப்புசம் நீங்கி விடும்.

Some important  abbreviations for students

 FHA - The Federal Housing Administration.

NRA - The National Recovery Administration

நீதிக்கதை

பலம் எது? பலவீனம் எது ?

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும், மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.

இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.

மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும், வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ, பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.

வெள்ளி
சமூகவியல்

விசாகப்பட்டினத் துறைமுகம் இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்கரையில் சென்னை துறைமுகத்திற்கும் கொல்கத்தா துறைமுகத்திற்கும் இடையே நரவா கெடா எனும் ஆறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது.இத்துறைமுகமானது வெளிப்புற துறைமுகம், உள் துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களை கொண்டுள்ளது. இரும்புத் தாது, மாங்கனீசுத் தாது, எஃகுப் பொருட்கள், பொதுச் சரக்கு, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவை இந்தத் துறைமுகத்தில் கையாளப்படும் முக்கிய பொருட்களாகும்.

இன்றைய செய்திகள்

08.11.19

* நயாகரா நீர்வீழ்ச்சி: 100 ஆண்டுகளுக்கு முன்பு 150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு. கனமழையால் வெளியே வந்தது.

* நியூசிலாந்து நாட்டில் கார்பன் வெளியீட்டைக் குறைக்க  ஜீரோ கார்பன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

*  2018-19ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து ரூ.204.53 கோடி மதிப்புக்குத் தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

* லிப்ட் வசதி இருக்கிறது; 1962 எண்ணுக்கு போன் பண்ணுங்கள்!' - தேனிக்கு வந்துவிட்டது கால்நடை ஆம்புலன்ஸ்.

* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

Today's Headlines

🌸 A boat that sank 150 feet deep 100 years ago in Niagara falls  came out due to heavy rain

 🌸Zero Carbon Bill has been passed to reduce carbon emissions in New Zealand.

 🌸The school Education Department  released the half-year examination schedule for 10th, 11th and 12th grades in Tamil Nadu.

 🌸In the year 2018-19 alone, coconut products valued at Rs 204.53 crore were exported from India.

 🌸 Vetenary Ambulance facility was provided in Theni. It has lift facility. Call number 1962 to get it's service.

 🌸Indian women's cricket team won the ODI series by 2-1 against the West Indies.

Prepared by
Covai women ICT_போதிமரம்

...............................

Annual Inspection New Form of BEO...

தொடக்கக் கல்வித் துறை - வட்டாரக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு அறிக்கை புதிய படிவம்!!




.......................................

வியாழன், 7 நவம்பர், 2019

5th & 8th Public Exam Student List Format


வியாழன், 7 நவம்பர், 2019








....,...........................

பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்.


Thursday, November 7, 2019


30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24 ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக் கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்

முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
 

30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
 
அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
 
பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,

இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும். (அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)

 30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
  
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 5333×120=63996 0ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
 
நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  
பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 17%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
  
40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.

நன்றி
  P.செல்வமணி்.

.........................

EMIS இணையதளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக நீக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - CEO Proceedings.

Biometric error codes & solution reg

.....












..............................................

செவ்வாய், 5 நவம்பர், 2019

Using Mobile How to Enter CCE Marks in EMIS website? - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது?





அனைத்து பள்ளிகளிலும் CCE முதல் பருவத்திற்கான மதிப்பெண் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில் EMIS - STUDENT - ACADEMIC RECORDS இதுவரை மட்டுமே Open ஆகும் அதற்கு அடுத்து பகுதி CCE மதிப்பெண் உள்ளீடும் பகுதி Open ஆகாது.

ஆனால் பின்வரும் முறையின் மூலம் நீங்கள் மொபைல் போனிலும் CCE மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

Step 1:

முதலில் உங்களது மொபைல் போனில் Chrome App Open செய்து அதில் EMIS Website ல் உங்களது பள்ளிக்கான Dise Code மற்றும் Password கொடுத்து Sing in செய்து கொள்ளவும்.

Step 2 :

பின்பு கீழ் உள்ள Link ஐ Copy செய்து அதே பகுதியில் Past செய்து Enter கொடுக்கவும்.

https://emis.tnschools.gov.in/Home/emis_school_student_mark

Step 3 :

இப்போது தெரியும் பகுதியில்

என்றவாறு தோன்றும். அதில்  அனைத்து மாணவர்களது மதிப்பெண் விவரங்களை பதிவு செய்து Save கொடுக்கவும். தவறாக பதிவிட்டால் மாற்றம் செய்து Update கொடுக்கலாம்

எல்லாம் சரியாக பதிவேற்றம் செய்த பிறகு Final Submit கொடுக்கவும்



MOBILE வழியாக EMIS இணைய தளத்தில் CCE மதிப்பெண்கள் பதிவு செய்வது எப்படி??













..............................




தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா , 


3D mirror இல்லாமல் தங்கள் மாணவர்களுக்கு படங்கள் காட்ட வேண்டுமா?

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?


NATIONAL EDUCATIONAL POLICY - 2019 (FINAL REPORT)


புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் - இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு!!


...........................

ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறியதல்..


ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய?



.......................................................

வெள்ளி, 1 நவம்பர், 2019

நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்




......................

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி GANGA GUIDE


Friday, November 1, 2019


*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்*

*👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)*

*👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் - மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*

*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H)*


Click Here To Download - தினசரி கண்ணாடி PDF

.....,..........................

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?



3D mirror இல்லாமல் தங்கள் மாணவர்களுக்கு படங்கள் காட்ட வேண்டுமா?

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?


.....................

எளிய முறையில் மொபைலில் CCE மதிப்பெண்களைப் பதிவிட உதவும் SUPER APP!






..........................................................................