>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 6 மே, 2019

அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா?





மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத் தும், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்திஅச்சு எடுத்து வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் (emis.tnschools.gov.in) தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களின் கல்வி தொடர்பான விவரம், புதிய மாண வர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள் ளிக்கு மாற்றம், நீக்கம், வருகைப் பதிவேடு உள்ளிட்ட மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு தேர்வுக்கான மாணவர்கள் விவர மும் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை பள்ளி களை விட்டு வெளியேறும் மாண வர்களுக்கான மாற்றுச் சான்றிதழ், கைகளால் எழுதி பூர்த்தி செய் யப்பட்டு, தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மாற்றுச் சான்றி தழ்களை இ.எம்.ஐ.எஸ். இணைய தளம் மூலமே பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் (மே 2) தமிழகபள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அலுவலக முத்திரை

தொடக்க, இடைநிலை, மேல் நிலைக் கல்வி மாணவர்கள் இட மாறுதல் மற்றும் கல்வி நிறைவின் போது, மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலமே இந்த ஆண்டு முதல் வழங்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இணையதளத்தில் இருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்கும் வகையில் இணைய தளத்தில் வசதி செய்து தரப்பட் டுள்ளது.

மாணவர் விவரங்கள்

பள்ளியின் இணையப் பக்கத் தில் மாணவர் என்ற இணைப்பின் மூலம், குறிப்பிட்ட மாணவர் பக்கத் துக்கு செல்லலாம். அந்த பக்கத் தில் மாணவரின் நடத்தை, அங்க அடையாளம், தேர்ச்சி விவரம், மருத்துவ ஆய்வு, கல்வி பயின்ற காலம்,முதல் மொழி, பயிற்று மொழி போன்ற விவரங்களை அதற்குரிய பத்தியில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய் யப்பட்டவுடன், மாணவரது மாற்றுச் சான்றிதழ் ‘பிடிஎப்’ வடிவத்தில் மாணவரது புகைப்படத்துடன் பதி விறக்கம் செய்து வழங்க வேண் டும்.இவ்வாறு பதிவிறக்கம் செய்யப் பட்ட மென் நகலில் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க வேண்டும். அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த சுற்றறிக்கையைத் தெரி வித்து, கணினி மூலம் மட்டுமே மாணவர்களுக்கு இந்த ஆண்டு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படு கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா?

மாற்றுச் சான்றிதழ்களை இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் கணினி வசதியே இன்னும் வழங்கப்படவில்லை. கணினி, பிரின்டர் வசதி இல்லாத நிலையில், இணையத்தில் உள்ள மாற்றுச் சான்றிதழில் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றி, அதனை பதிவிறக்கம் செய்து வழங்குவது சாத்தியமானதல்ல. ஏற்கெனவே, மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை இ.எம்.ஐ.எஸ். இணையத்தில், ஆசிரியர்கள் தங்களது செல்போன்களைப் பயன்படுத்தியே பதிவு செய்து வருகின்றனர்.

மலைக்கிராமங்கள், தொலை தொடர்பு வசதி குறைவான கிராமங்களில் உள்ள பள்ளிகளில், இணையம் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியாது. மாறாக, இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் கணினி மையங்களுக்குச் சென்று, அங்கு பதிவு மேற்கொண்டு, மாற்றுச் சான்றிதழ் தரும் நிலை ஏற்படும். எனவே, முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கணினி, பிரின்டர், இணைய வசதிசெய்து கொடுத்த பின்னர், முழுமையாக அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

.......................................................................................................................................................................................

அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்





அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவுமுறையை விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மோடிதலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்ததும், மத்திய அரசு அலுவலகங்களில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு வந்தாலும் பின்னர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுஅலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த2017-ம் ஆண்டு டிசம்பரில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு பணிகள் நடந்தன.ஆனால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.அதேநேரம், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், டிஎம்எஸ் உள்ளிட்ட சில முக்கிய துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம்முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, ஊதியம் சர்வீஸ் ஃபைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து வருகின்றன. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகைப்பதிவேடு, விடுமுறை உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைக்க, பயோமெட்ரிக் முறையை அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசின் வரவு - செலவு மற்றும் அரசு ஊழியர்களின் பணி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியும் வகையில்ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் டிஜிட்டல் கையொப்பம், பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்றபாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது. இதில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர்களைப் போல் அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. துறைகள்வாரியாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் படிப்படியாக கொண்டு வரப்படும். தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருகைப்பதிவேடு முறை அமலில் உள்ளது. கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பயோமெட்ரிக் முறை காலத்தின் கட்டாயம்.இதற்கிடையே, வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்களில் பலர் களப்பணியாளர்களாக இருப்பதால், பயோமெட்ரிக் வருகைப்பதிவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றையும் கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.

வருகையில் முரண்

அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகை உள்ளது, மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மி‌ஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் ‘பெர்மி‌ஷனில்’ கழித்துக்கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை காலை 9.20 முதல் 4.10 மணிவரை பணி நேரம். ஆனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்காகவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை அரசுஅமல்படுத்த நடவடிக்கை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!





இன்று நடைபெற்ற நீட்தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் கூறிய நிலையில் வழக்கம் போல் தமிழக பாடத்திட்ட மாணவர்கள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் எம்பிபிஎஸ் லட்சியத்தில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினர். வழக்கம் போல் கடுமையான கெடுபிடிகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு தேர்வறைக்குள் முன்பு போல் கெடுபிடி காட்டப்படவில்லை என்று மாணவர்கள் கூறினர். இதனால் எந்த சஞ்சலமும் இன்றி நீட் தேர்வை எழுதியதாக தமிழக மாணவர்கள் தெரிவித்தனர்.

னால் தேர்வு தான் மிகவும் கடினமாக இருந்ததாகமாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சிரமமாக இருந்ததாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்கள்: இடமாறுதல் கலந்தாய்வில் சேர்க்க கோரிக்கை.


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், மே, 31ல், ஓய்வு பெறுவதன் மூலம், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மே மாதத்தில், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். தற்போது, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இதனால், கலந்தாய்வு நடத்தினாலும், ஆசிரியர்களுக்கு பயனாக இருப்பதில்லை. கல்வியாண்டின் இடையே, ஓய்வு வழங்கப்படுவதில்லை என்பதால், மே, 31ல், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஜூனுக்கு பின்தான், கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கலந்தாய்வில், கடந்த ஆகஸ்ட் மாத மாணவர், ஆசிரியர் விபரத்தை அடிப்படையாக கொண்டே, இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால், சில ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு பயனளிக்கவில்லை.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும், எங்களுக்கான இடமாறுதல், கோடை விடுமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, முன்கூட்டியே விபரம் சேகரிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை. இதனால், மே, 31ல், ஓய்வு பெறப்போகும் ஆசிரியர் பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக கருதி, கலந்தாய்வில் சேர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கலந்தாய்வு பயனாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEET EXAM 2019 - ORIGINAL QUESTION PAPER AND ANS KEY [ Exam Date :05.05.2019 ]


...............................................................................................................................................

சனி, 4 மே, 2019

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள்கட்டாயம் செய்ய வேண்டியவை!


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

 பிளஸ் ஒன்னில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து விட்டு, கல்லூரியில் பி.காம்., படிக்க முயற்சிப்பது நல்லதல்ல. அதேபோல, இன்ஜினியரிங், மருத்துவம், சி.ஏ., படிக்க எந்த பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்பட வேண்டும். மதிப்பெண் குறைவாக இருந்தாலோ அல்லது பிளஸ் 1 படிக்க விருப்பமில்லை என்றாலோ, டிப்ளமா படிப்பில் சேரலாம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்பவர்கள், கல்வி உதவி தொகை, சலுகை கட்டணத்தையும் பெற முடியும்.டிப்ளமா படிப்பை முடித்த பின், தொழிற்சாலை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியபடியே, பகுதி நேர, பி.இ., - பி.டெக்., படிப்பிலும் சேரலாம். பத்தாம் வகுப்பில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தங்களால் எதை படிக்க முடியும், எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை, முடிவு செய்து, அதற்கேற்ப பாட பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். மருத்துவ படிப்புக்கு விருப்பம் இருந்தால், 'நீட்' தேர்வை எழுத, பிளஸ் 1ல் இருந்தே தயாராக வேண்டியது முக்கியம். அதே போன்று ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங்படிக்க வேண்டும் என்றால், அதற்கு, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு எல்லாம் இப்போதது முதலே தயாராக வேண்டும். எனவே அதற்கு உரிய பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். தொழிற்கல்வி பாட பிரிவு எடுத்தால், பிளஸ் 2வுக்கு பின், பொறியியலில் சில பாடப்பிரிவுகள் மட்டுமே படிக்க முடியும்.
.....................................................................................................................................................................

பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் ஆன்லைனில் மட்டுமே மாற்றுச் சான்றிதழ்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. EMIS இணையத்தில் பதிவிறக்கம் செய்த மாற்றுச் சான்றிதழில் சீல் வைத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.EMIS என்ற கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் டி.சி வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

"மாலை, மரியாதை, விழா!' - நாடோடியின மாணவனின் வெற்றியைக் கொண்டாடிய ஆசிரியர்கள்.



சிவகங்கை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று 10-ம் வகுப்புத் தேர்வில் நாடோடியின மாணவர் வெற்றிபெற்றதை அந்த கிராம மக்கள் விழா போலக் கொண்டாடினர். அவரின் வீட்டுக்கே சென்ற ஆசிரியர்கள், மாணவரைப் பாராட்டி மகிழ்வித்த சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை, பழமலை நகரில் 300-க்கும் அதிகமான நாடோடியின மக்கள் குடியிருந்து வருகின்றனர். நாடோடி வாழ்க்கை வாழும் இந்த மக்கள் இரவு நேரங்களில் வேட்டைக்குச் சென்று முயல் போன்ற விலங்களைப் பிடித்து வந்து உணவகங்களில் விற்பனை செய்து வந்தனர். வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட நிலையில், போலீஸார் அவர்களின் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். இதனால் தொழில் இழந்து நிற்கதியாக இருக்கும் இவர்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாது. அரசாங்கமும் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும்  இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒருசிலர் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

பழமலை நகரில் வசித்துவரும் சிவானந்தத்தின் மகன்  சிவம், சிவகங்கை கே.ஆர் மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாசி ஊசி மணிகளை திருவிழா நடக்கும் இடங்களில் விற்பனை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தியதோடு, மகனையும் படிக்க வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 232 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் சிவம். கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவரின் வெற்றியை அந்தக் கிராம மக்கள் விழாபோல் கொண்டாடியிருக்கிறார்கள். மாணவனுக்கு மாலை அணிவித்து தோளில் சுமந்து, தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், மாணவரை நேரில் சென்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.
.......................................................................................................................................................................

TNTEU - "Time Table - B.Ed/B.Ed (Spl)/M.Ed/M.Ed (Spl) Examination,May/June 2019''



   ......................................................................................

பொறியியல் பட்டப்படிப்பு 2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..



தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மே 31-ந்தேதி.

பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவைகளை கடந்த பல ஆண்டுகளாக அண்ணா யுனிவர்சிட்டி திறம்படசெயல்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டுமுதல் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கம் நடத்துகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து, 2019-20-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர இணையதளங்கள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதுஇணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரிwww.tneaonline.in, www.tndte.gov.inவிண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்ப தாரர்கள் 'செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை' என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். விண்ணப்பத்தில் அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்புநடக்கும். விண்ணப்பிக்க மே 31-ந்தேதி கடைசி நாள்ஆகும்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குனர் விவேகானந்தன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,'தொழில்நுட்ப கல்வி துறை கலந்தாய்வு இணையதளம் தயாராக இருக்கிறது விண்ணப்ப பதிவு இணையதளத்துக்கான உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் தயாராக இல்லை என்று வந்த செய்தி தவறானது. மேலும் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள்…..

இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல்,கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்.முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும்.இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும்.மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும்.

இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும்.பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
..................................................................................................................................................................................

BE - TAMILNADU ENGINEERING ADMISSION - 2019 DIRECT LINKS And All Instructions...




TAMILNADU ENGINEERING ADMISSION - 2019 DIRECT LINKS And All Instructions All Details ( PDF )


..................................................................................................................................................................

SSA SPD - மலைப் பகுதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கருகாமையில் குடியிருப்பு -இயக்குநர் செயல்முறைகள். 



ISC & ICSE RESULT 2019

The Results for the ICSE & ISC 2019 Examinations 

will be declared on Tuesday,7th May 2019 at 3:00 PM

EMIS Online TC Download Regards DSE Director Proceedings

பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும்
மாற்றுச்சான்றிதழ்கள் அனைத்தும் 2018-2019கல்வியாண்டு முதல் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் EMIS Web Portal ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினை பயன்படுத்தி அச்செடுத்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.



EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?

EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் 

கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும்.

Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு  செய்யவும்.
வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும்.

Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும்.

மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும்.

இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள்.
இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும்.

இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும்.

TC தயார் செய்ய வேண்டிய மாணவரின் வரிசையில் வலது புறம் கடையாக  உள்ள,
Generate TC என்பதை கிளிக் செய்யவும்.

இதில் 11 விவரங்கள் கேட்கப்படும்.

இதை கவனமாக உள்ளீடு செய்து Save கொடுக்கவும்.

தற்போது ஆன்லைன் TC தயார்.

ஆன்லைன் TC யில், பிழைத்திருத்தம் செய்ய இயலாது என்பதால், மாணவரை Transfer செய்யும் முன்பே, விவரங்கள் மற்றும் புகைப்படம் சரி பார்த்த பின் Transfer செய்ய வேண்டும்.

 Transfer செய்த பின், TC தயாரிக்கும் முன், கேட்கப்படும் 11 விவரங்களை பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.

Legal Size பச்சைத் தாளில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பிரிண்ட் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், முத்திரை இட்டு வழங்க வேண்டும்.

 TC யில்,இரண்டு பிரிண்ட் எடுத்து, மாணவருக்கு ஒரு பிரதி வழங்கி விட்டு, பள்ளிக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது நல்லது.
.................................................................................................................................................................

நீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு.

முக்கிய தகவல்: நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - தேர்வர்கள் கவனிக்க.....
_நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_
_ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது._


_ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல்  பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வெழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு தெரியப்படுத்தவும்...

நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

செய்யாறு அருகே அரசு பள்ளியில் பாராட்டு விழா செய்யாறு, மே 3: நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள் என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்த 100 சதவீத தேர்ச்சியை பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி, பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தனர். விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்ட குறுகிய காலத்தில், பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள். 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களை வணங்குகின்றேன். உங்களை வேலை வாங்காமலும், வேலைக்கு அனுப்பாமலும் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு தலை வணங்குகின்றேன். நான் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த ஊரும், இந்த பள்ளியும் தான் காரணம். நல்ல கல்வியை எனக்கு கொடுக்காமல் விட்டிருந்தால் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. நல்ல கல்வியை கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்களாக திகழ்கின்றார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, நீதிபதிகளாக, ஏன் நல்ல அரசியல்வாதிகளாக கூட வரலாம். தமிழ்மொழியும், ஆங்கில அறிவும் நமது இரண்டு கண்களாகும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைவிட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று, தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றால் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்பு இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளில் பங்கேற்று, எளிதில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

EMIS TRANSFER AND TC GENERATE VIDEO LINK - I




RMSA Order PublishedKH Head - Pay 




RMSA BC Head - Pay Order



CBSE - 12th Public Exam 2019 - Result Published [ Result Direct Link ]

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள்

cbse.nic.in - Click here

cbseresults.nic.in  - Click here

results.nic.in - Click here

போன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர். ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
 ..................................................................................................................................................................