>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்!!!

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.
நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். பதிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர், புத்தகப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெறும். இதற்கான நாள், நேரத்தை இருவரும் இணைந்து முடிவு செய்வர்.
நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமையாசிரியர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களைக் கலந்து கொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியை அவரவர்தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான தக்க இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே தலைமையாசிரியர் செய்து கொடுப்பார்.
நடமாடும் புத்தகக் கண்காட்சிக்குப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றைப் பதிப்பாளர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
சாதி, மத நூல்களுக்கு இடமில்லை: புத்தகக் கண்காட்சியில் சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத்திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளில் நடத்தப்பெறும் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு இருதரப்பினரும் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்: நடமாடும் புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளில் பள்ளிகளுக்குத் தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 13,096 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 39.93 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றார் அமைச்சர்.
இந்த விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்தியநாராயணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ஆர்.இளங்கோவன், பொதுநூலகத்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளியின் தலைமையாசிரியை இரா.தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காப்பீடு திட்டம் எப்போது?
மாணவர்களுக்கான காப்பீடு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியது: நடமாடும் நூலகங்கள் காலையில் ஒரு பள்ளியிலும், மாலையில் ஒரு பள்ளியிலும் இயக்கப்படும். இந்தத் திட்டம் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய பாடத்திட்டம், புதிய சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். மாணவர்கள் காப்பீடு திட்டப் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கஉள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ம் தேதி வரை நடக்கும்.தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதே பள்ளியில், செய்முறை தேர்விலும் பங்கேற்க வேண்டும்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, விபரம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று பிற்பகலில், ஹால் டிக்கெட்வெளியாகும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை வரை, ஹால் டிக்கெட் வெளியாகாததால், தேர்வர்கள் நீண்ட நேரம் அவதிப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும்! : துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு

''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று நடந்தது.இதில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், உயர் கல்வி அமைச்சர், அன்பழகன், உயர் கல்வி முதன்மை செயலர், சுனில் பாலிவால், பல்கலை துணை வேந்தர், தங்கசாமி, பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, குஜராத்தில் உள்ள, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணைவேந்தர், சசிரஞ்சன் யாதவ், பட்டங்களை வழங்கினார்.
அவர்பேசியதாவது:ஆசிரியர் கல்வியை பொறுத்தவரை, சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். பல்கலைகள், வெறும் பட்டதாரிகளை உருவாக்காமல், திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.இணையதளம் வந்து விட்ட பின், அனைத்து நிலைமைகளும் மாறி விட்டன. மனிதர்களை விட, இயந்திரங்களுக்கு, அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கற்பிக்கும் முறையிலும், கற்றல் முறையிலும் மாற்றம் வேண்டும்.தற்போது, 'கூகுள், வாட்ஸ் ஆப்' தலைமுறைகளாக உள்ளனர். இன்றைய இளம் பட்டதாரிகள், மிக துடிப்புள்ளவர்களாகவும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நிலையிலும் உள்ளனர்.எனவே, அவர்களுக்கு ஏற்ப, கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வகுப்பறைகளை தாண்டி, பாடம் கற்றுக் கொடுக்கும் முறை தேவை. உலக விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
வகுப்பறையில், மாணவர்களுக்கு நடனம் ஆடியும், நாடகம் நடத்தியும் பயிற்றுவிக்க வேண்டும்.எங்கள் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் பயிற்சி அளிப்போருக்கு, கணினி பயிற்சி மட்டுமின்றி, குதிரை ஓட்டவும், நீச்சல் அடிக்கவும், துப்பாக்கி சுடவும் பயிற்சி அளித்துள்ளோம். எனவே, ஆசிரியர்கள், மிகவும் படைப்பு திறன் மிக்கவர்களாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பல்கலையின் துணை வேந்தர், தங்கசாமி, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், 44 ஆயிரத்து, 994 பேருக்கு, பி.எட்., பட்டம்; 1,473 பேருக்கு, எம்.எட்., பட்டம்; 118 பேருக்கு, எம்.பில்., மற்றும், 21 பேருக்கு, பிஎச்.டி., பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 162 பேர் பதக்கம், பரிசுகளுடன் சான்றிதழ் பெற்றனர்.

பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!(பத்திரிகை செய்தி)


தமிழ் நூல்கள் மற்றும் நூல்களின் ஆசிரியர்கள்

Click here

Video Lesson-Tamil- கனவு தந்த தீர்ப்பு- கதைப்பாடல்-5th std 3rd term


பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.
1. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சாய்ஸ் கிடையாது என்பதால், எல்லாப் பாடங்களின் புக் பேக் ஒரு மதிப்பெண் கேள்விகளுடன், பாடங்களின் உள்ளே இருக்கும் ஒன் வேர்டுகளையும் படியுங்கள்.
2. இரண்டு மதிப்பெண் கேள்விகள் 32 கொடுத்து, இருபதுக்கு மட்டும்தான் பதில் கேட்பார்கள். ஸோ, தெரியாத கேள்விகளை ஸ்கிப் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
3. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, ஜோடி ஜோடியாக, அதாவது 2 மற்றும் 3-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 4 மற்றும் 7-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 10 மற்றும் 13-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 15 மற்றும் 17-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். அதனால், 2, 4, 10, 15 ஆகிய பாடங்களிலிருந்தோ அல்லது 3, 7, 13, 17 ஆகிய பாடங்களிலிருந்தோ ஏதேனும் நான்குப் பாடங்களின் புக் பேக் கேள்விகளோடு, பாடங்களுக்குள்ளே இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளையும் நன்குப் படியுங்க.
4. கணக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதும்போது, அதற்கான அலகு போட மறந்துவிடாதீர்கள். மறந்தால், மதிப்பெண் குறைந்துவிடும்.
5. சரியா, தவறா? தவறாக இருந்தால் திருத்தி எழுதுக, அல்லது காரணம் கூறு என்று கேட்கப்படுகிற வினாக்களுக்கு, விடை எழுதும்போது சரி/ தவறு என்று குறிப்பிட்டுவிட்டே, கேள்விக்கான பதிலை எழுதவும்.
6. பெரிய கேள்விகளில், உப கேள்விகளாக அ அல்லது ஆ, i அல்லது ii என்று கேட்டிருந்தால், கேள்விகளுக்கான நம்பரை போட்டுவிட்டு, பதில் எழுதுங்கள். கேள்விக்கான நம்பரை போடாமல் இருப்பதோ, அல்லது தவறாகப் போடுவதோ உங்கள் மதிப்பெண் குறைய காரணமாகிவிடும்.
7. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதுவதால், இன்னொரு தவறையும் செய்து, நேரத்தையும் மதிப்பெண்ணையும் வீணடிக்கிறார்கள். அதாவது, கேள்வி 'அ' அல்லது 'ஆ', 'இ' அல்லது 'ஈ' என எழுத வேண்டும் என்கிற பகுதியில் அவர்களுக்கு 'அ' மற்றும் 'ஆ' தெரிந்திருக்கும். 'இ' மற்றும் 'ஈ' தெரிந்திருக்காது. உடனே, மாணவர்கள் 'அ' மற்றும் 'ஆ'வை எழுதிவிடுகிறார்கள். இதில், ஒரு கேள்விக்கு மட்டும்தான் மதிப்பெண் கிடைக்கும்.
8. ஒரு படத்தை வரையச்சொல்லி, அதன் பாகங்கள் இரண்டைக் குறி என்று கேட்டால், மூன்று, நான்கு பாகங்கள்கூட குறிக்கலாம் தவறில்லை. அதேபோல, ஒரு தனிமத்தின் பயன்கள் இரண்டினைக் கூறு என்கிற கேள்விக்கும் மூன்று, நான்கு பயன்களைக் கூறலாம்.
9. ஒரு மதிப்பெண் கேள்விகளில் வரும் 'பொருத்துக' பகுதிக்கு, வெறுமனே பதிலை மட்டும் எழுதாமல், இரு பக்கத்தையும் சேர்த்தே எழுதுங்கள்.
10. பாடங்களின் உள்ளே வருகிற அறிந்துகொள்வோம், செயல், அறிஞர்களின் குறிப்புகள், சிந்திக்க படிக்க பின்னர் அறிக போன்ற பகுதிகளைக் கட்டாயம் படியுங்கள்.
11. எல்லாப் பாடங்களிலும் உள்ள கணக்குகள், அட்டவணைகள், வேறுபாடுகள், பயன்கள், சிறப்பியல்புகள். விதிகள் மற்றும் வகைகளை நன்றாகப் படித்துவிடுங்கள், சிறு வினாக்களில் ஆரம்பித்து, பெருவினாக்கள் வரை இவை உதவியாக இருக்கும்.
சி.பி.எஸ்.சி.க்கான டிப்ஸ்...
1. அறிவியல் கேள்விகளை பொறுத்தவரை மேம்போக்காக படிக்காதீர்கள் மாணவர்களே... ஒரு மார்க் கேள்விகளிலும் லேசாக டிவிஸ்ட் வைத்துதான் கேள்வித்தாளை செட் செய்திருப்பார்கள்.  ஸோ, முதல் 15 நிமிடங்கள் கேள்விகளை கவனமாகப் படியுங்கள்.
2. வேதியியல் ஈக்குவேஷன்களில் எதையும் மிஸ் பண்ணாதீர்கள்.
3. இயற்பியல் பாடத்தில் டயகிராம் வரையும்போது நீட்டாக வரையுங்கள்.
4. உயிரியல் பாடத்தின் டயகிராம்களை வீட்டில் வரைந்து பிராக்டிஸ் செய்திருப்பதே நல்லது. திடீரென்று எக்ஸாம் ஹாலில் ஒரு படம் வரைய வேண்டுமென்றால், பதட்டமாகி விடுவீர்கள்.
5. முந்தைய வருட பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களை கட்டாயம் ரிவிஷன் செய்யுங்கள். அதிலும் திரும்பத்திரும்ப கேட்கப்படுகிற கேள்விகளை படிக்கத் தவறாதீர்கள்.
6. இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்துப் பாடங்களிலும் உள்ள டெஃபனிஷன்களை மறக்காமல் படித்துவிடுங்கள்.
7. இயற்பியலில் உள்ள பிராப்ளம்களுக்கு பதில் எழுதும்போது, பதிலுக்கான யூனிட்டை எழுத மறந்துவிடாதீர்கள்.மறந்தால் அரை மார்க் போய்விடும். 

ABACUS பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கையும் ஆசிரியர்கள் பட்டியலும்!!!



PRIME MINISTER "SHRI.NARENDRA MODI's" TODAY (16/02/2018) INTERACTION WITH STUDENTS - FULL VIDEO


CPS NEWS:16.02.2018தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய(PFRDA)த்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதி உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.


RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்,



திங்கள், 5 பிப்ரவரி, 2018


pay matrix single page

No automatic alt text available.

அரசுப்பள்ளி மாணவர்களாக மாறி வரும் கேரள மாணவர்கள்...

கேரள மாநிலத்தில் 1,40,000மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முதல் வகுப்பிலிருந்தே கணினி கல்வி மற்றும்  கணினி வழிக்கல்வி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் புதிய மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.
கல்வியில் கணினி அறிவியல் பாடம்.
இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.  இதற்காக , 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி, எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, கற்றுக் கொடுக்கின்றனர்.
கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலம்....
2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014

Video Lesson-நூறு வயது தருவன- பாடல்- 5th std- 3rd term

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை


PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்



21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO

பங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடம்

தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு*


வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!!!


வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.