>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

TNPSC Group 4 Exam Study Matetrials

TNPSC Group 4 Exam Study Materials



TNPSC Group 2 | Interview Posts Current Affairs | Sri Malar Academy - Click Here

Group 1& 2 - Schedule 4

Group 4 Exam Materials


VAO Exam Material
Group 4 Exam | Result & Expected Cutoff Details 

TNPSC Group 2A 2014 Answer Keys - Click Here

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! - மத்திய அரசு

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிட தேசிய ஊட்டச்சத்து மிஷன் அடிப்படையில் ஆதார் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அரசின் வளங்கள் சுரண்டப்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக அரசின் வளங்களைக் கொண்டுசேர்ப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியான பெயர்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி உணவுகள் வீணாகின்றன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்பதால், இந்தத் திட்டத்திற்காக வயது வரம்பை மூன்றாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் தினமும் ஆதார் கொண்டு செல்லத் தேவையில்லை என்றும், அதைப் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DATALLY - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அசத்தல் App

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் கூகுள், டேட்டாலி (Datally) என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓஎஸ்களைத் தயாரித்தது வெளியிட்டுப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக நம்பகத்தன்மை கொண்ட அப்ளிகேஷன்களையும் அவ்வப்போது வெளியிட்டுப் பயனர்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்க்கிறது.
இந்த முறை டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டினை கண்காணித்து அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 
அதன்படி டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் தினந்தோறும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் எந்த அளவிற்கு டேட்டாவை (இணையப் பயன்பாட்டின் அளவு) பயன்படுத்திவருகின்றனர் என்பதைக் கண்டறிய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.
அதுமட்டுமின்றி பின்புறத்தில் செயல்படும் அப்ளிகேஷன்களைக் கண்டறிந்து அதனைத் தடை செய்யவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் பயனர்கள் பயன்படுத்தும் டேட்டா தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. 
எந்த அப்ளிகேஷன் அதிக டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிய டேட்டாலியில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிகம் டேட்டா பயன்படுத்தும் அப்ளிகேஷனிடமிருந்து டேட்டா அளவினைக் குறைக்க இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பயனர்கள் எந்த அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் இதற்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டேட்டா சேவிங்ஸ் என்ற ஒன்றினை இதில் புதிதாக கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது. அதேபோல் அருகில் இருக்கும் வைஃபைகளைக் கண்டறியும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் குறித்த வீடியோ பதிவினையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
https://m.youtube.com/watch?v=UAdJvXMIlXc&feature=youtu.be

ஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்!!

கல்வி தரம் உயர வேண்டுமானால்............
🔰1.மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
📚2.பள்ளியில்
பராமரிக்கப்படுகின்ற தேவையில்லாத records நீக்கப்பட வேண்டும்
❌3.பணியிடை பயிற்சி ( crc, brc பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால்) நீக்கப்பட வேண்டும்.
👍4.வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.
✅5.கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.(தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இனைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)
📕6.ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
📗7.அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.
🔷8.எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.
🔶9.பயிர் நன்றாக வளர கலையை நீக்குவது போல,
பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
☘10 .ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.
🚘11.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.
🌏12.இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது(Aeeo,ssa)
🍁13.பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,
அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
💐14.அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய,
அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.
இன்னும்...இன்னும் ...ஆயிரம் ஏக்கங்கள் உள்ளன.
குறைந்த பட்சம் மேலே உள்ளதை அரசு செய்து பார்க்கட்டும்.
பிறகுபார்
 எமது இனத்தின் .அர்பணிப்பை.
கற்பித்தல் திறனை,
கலையார்வத்தை,
படைப்பாற்றலை.

இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண்
இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் அனைவரும் தங்கள் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் உள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவன மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
எனினும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது.
எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தவிர செல்லிடப்பேசி செயலி, இணையதளம் மூலம் ஆதாரை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆதார் எண் பெறும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மிக எளிதாக இணைக்க முடியும்.
ஏனெனில் ஆதார் எண் பெறும்போது சுமார் 50 கோடி பேர் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை அளித்துள்ளனர். அவர்கள் அந்த எண்ணை மிக எளிதாக ஆதாருடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதாரணமாக வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.
செல்போன் செயலியில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்?
எந்த செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அந்த நிறுவனத்தின் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அந்த செயலியை திறந்து, அதில்  KYC என்ற வசதியை க்ளிக் செய்து, அதில் 10 இலக்கங்கள் கொண்ட உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யுங்கள். தொடர்ந்து உங்கள் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி என்பது, நீங்கள் ஆதார் அட்டை பெறும் போது அதில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத்தான் அனுப்பி வைக்கப்படும்.
செயலியில் அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிபியை பதிவு செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஓடிபியை பதிவு செய்ததும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான குறுந்தகவலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

G.O 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது. 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்


மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க ஆசிரியர்களுக்கு "சிஇஓ" வலியுறுத்தல்!!!

சனி, 2 டிசம்பர், 2017

EMIS-விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!




DSE & DEE - கபீர் புரஸ்கார் விருது 2018- தகுதியான விண்ணப்பங்களை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்...




தொடரும் மாணவர் தற்கொலைகளை தடுக்க "கவுன்சிலிங்' தேவை! நீதிபோதனை வகுப்புகள் உத்வேகம் பெறுமா?

ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு கூட, மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வது அதிகரித்துள்ளது. கல்வி, விளையாட்டில் மட்டுமின்றி, மனோதிடம் ஏற்படுத்தி, உரிய ஆலோசனைகளை வழங்க, நீதிபோதனை வகுப்புகள், மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
இன்றைய மாணவர்களே, நாட்டின் நாளைய எதிர்காலம். நாட்டை நிர்வகிக்கும் சிற்பிகளை செதுக்கும் ஒப்பற்ற பணியை, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.ஆனால், போட்டி நிறைந்த இன்றைய உலகில், பாடங்களில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பது மட்டுமே பெற்றோர் பலரின் எண்ணமாக உள்ளது; மாணவர்களின் மன நலன், எண்ண ஓட்டங்கள் சீராக இருக்க வேண்டும் என்ற கருத்தை, தூர தள்ளி வைத்தனர். இப்பிரச்னைக்கு, கல்வித்துறை முடிவு கட்டும் வகையில், "கிரேடு' முறை அறிமுகப்படுத்தியது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாடங்களுடன் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், நீதிக்கதைகளும், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளும் கற்பிக்கப்பட்டன. இன்று, பெரும்பாலான பள்ளிகளில், நீதிபோதனை வகுப்பு பாட வேளை என்பது இல்லை; ஒருவேளை இருந்தாலும், அதில் வேறு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதனால், முறையான ஆலோசனையோ, வழிகாட்டுதலோயின்றி, மாணவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெற்ற குழந்தைகளை கண்காணிக்க முடியாத நிலையில் பெற்றோர்; கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். இதற்கு <உதாரணமாக, நாள்தோறும் ஆங்காங்கே சில சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
சரிவர படிப்பதில்லை என்று ஆசிரியர் கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொள்ள, கண்டித்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாய்கிறது. வகுப்பறையில் வரம்பு மீறிய மாணவியரிடம், பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால், பயந்து போன மாணவியர், குழுவாகச் சென்று தற்கொலை செய்ய, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது, புகை பிடிப்பது, மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது, கோஷ்டியாக பிரிந்து சண்டையிடுவது என, வெளியே தெரியாமல், பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் பிடிபடுவோரை, அவர்கள் எதிர்காலம் கருதி, பெரும்பாலான ஆசிரியர்கள், எச்சரிக்கையுடன் விடுவிக்கின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க, மாணவர்களுக்கு உரிய வகையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். கல்வி, விளையாட்டு போல், யோகா, தியானம் கற்பித்து, நல்லொழுக்கம், மனோ திடம் வளர்க்கும் ஆலோசனைகளை, பயிற்சியாளர் மூலம் வழங்க வேண்டும்.
மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாற்றாமல், நாட்டுக்கு மனஉறுதி படைத்த, நல்ல குடிமகனாக ஒப்படைக்க, ஆசிரியர்களும், பெற்றோரும் செயலாற்ற வேண்டும்.
அதிகரிக்கும் மோதல்!
உரிய ஆலோசனை, போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாதது போன்ற காரணங்களால், பல்லடத்தில், அரசு பள்ளி மாணவர்கள் இடையே, அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே மோதல் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், "பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. பள்ளி நேரங்களிலேயே மாணவர்கள் வெளியே சென்று சுதந்திரமாக திரிகின்றனர். பள்ளி வளாகத்தினுள், வெளியாட்கள் நடமாடுகின்றனர். வெளி ஆட்களின் தொடர்பால், மாணவர்களின் பழக்கவழக்கங்கள் மாறி, தங்களுக்குள் மோதி கொள்கின்றனர். இதை கண்டித்தால், தேவையற்ற பிரச்னை வருகிறது; ஓரளவுக்கு மேல் ஆசிரியர்கள் கண்டிக்க தயங்குகின்றனர்,' என்றனர்.

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும். 
இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

டிச.8ல் மதுரையில் 'ஜாக்டோ -ஜியோ' கூட்டம்

ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழுக்கூட்டம் மதுரையில் டிச., 8 ம் தேதி நடக்க உள்ளதாக உயர் மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவும், புதிய ஊதியக்குழு அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செப்.,7,8 மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு டிச. 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக இருந்தது. நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அன்றே அடுத்த கட்ட நடவடிக்கையை கூடி தீர்மானிக்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இவ் வழக்கு டிச.8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ''நீதிமன்ற வழக்கு டிச.8 ம் தேதி விசாரணைக்கு வரஉள்ளதால் அன்று மாலை 4:00 மணிக்கு மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்ட குழுக்கூட்டம் நடைபெறும்'' என்றார்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளியில் பணி புரியும் நேரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்!!!

RTI LETTER - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவில் 30 சதவீ தம் ஊதிய உயர்வு உண்டா..? என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட மனுவிற்கு நிதித்துறை  செயலரிடமிருந்து பெறப்பட்ட பதில்

Supreme court CURATIVE REVIEW CASE FILLED AGAINST TNTET CASE JUDGEMENT...


மாணவர்கள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் காரணமா?

வேலுார் பனப்பாக்கத்தில் பெற்றோரை அழைத்து வர ஆசிரியர் கூறியதால் நான்கு மாணவிகள் ஒரே நேரத்தில் தற்கொலை... கோவை சோமனுாரில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை... திருவாரூரில் மாணவருக்கு முடி வெட்டிய ஆசிரியை கைது... கோவிந்தவாடி அகரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு...என தமிழகத்தில் ஒரு வாரத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகள் கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
இதற்கு ஆசிரியர்கள் கண்டிப்பு தான் காரணம் என்று பொதுவான காரணம் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமுதாயத்தையும் அதிர வைத்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், 'மாணவர்களை கண்டிக்காமல் விட்டால் அவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல், நற்பண்புகள் வளருமா. தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் குறித்து அவர்களின் பெற்றோரை அழைத்து கூற முயற்சித்தது ஆசிரியர் தவறா.
இது அவர்களின் கடமைகளில் ஒன்று அல்லவா. ஆசிரியர்கள் கைகள் எல்லா நிலையிலும் இவ்வாறு கட்டப் பட்டால் நுாறு சதவீதம் தேர்ச்சியை கல்வித்துறை எதிர்பார்ப்பது சரியா,' என பொங்கி எழுந்து நியாயம் கேட்டு வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்...
பிரேமலதா, ஆசிரியை, மதுரை: 'பெற்றோர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு காரணமாக மாணவர்களின் மனம் புண்படும்படி அவர்களை திட்டவோ அடிக்கவோ கூடாது,' என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
இதனால் மாணவர்களை பெயர் அளவுக்கு கூட கண்டிக்க பயமாக உள்ளது. பெற்றோர் சிலர் உரிமையோடு பிள்ளையை கண்டிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் கண்டித்த பின் அந்த மாணவரின் தவறை மறைக்கும் வகையில் பெற்றோரிடம் சம்பவத்தை திரித்து கூறி விடுகின்றனர். 
அப்போது உண்மை நிலவரம் தெரியாமல் பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்டு ஆசிரியர் மீது புகார் செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர். அதேநேரம் ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சிலரின் தவறான செயல்பாடுகள் மாணவர்களை தற்கொலை செய்துகொள்ள துாண்டுகின்றன.
முருகன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்: ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் மெதுவாக கற்கும் மாணவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். 
தமிழகத்தில் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கற்பிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பாடங்களை புரிந்து படிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போது தான்கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாரம் ஒரு முறை மருத்துவம், சமூகம், சுகாதாரம், மனநலம், உடற்பயிற்சி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் சந்திப்பு மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் உரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிச் சூழல் மகிழ்ச்சியானால் தற்கொலைகள் நடக்காது.
ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஒரு குழந்தை உள்ள பெற்றோரிடையே பிள்ளை மீது அதிக பாசம் ஏற்படுவது இயற்கை. நாம் சம்பாதிப்பது பிள்ளைக்கு தானே; அவர்கள் ஆசைப்படுவதை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். இதனால் எதிர்ப்பு, கடும் சொல் தாங்காத நிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள் இதுபோன்ற முடிவை உடன் எடுக்கின்றனர்.
தற்கொலைக்கு பள்ளிச் சூழல் மட்டும் காரணம் அல்ல. வீட்டு சூழல் ஆரோக்கியமாக இருந்தால் அவர்கள் தற்கொலைக்கு செல்லும் எண்ணம் ஏற்படாது. நான் படிக்கும் போது ஆசிரியர்கள் கண்டிப்பதை என் பெற்றோர் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஆசிரியர் கண்டிக்கும் போது, பெற்றோர் கறாராக இருக்க கூடாது. அதேநேரம் ஆசிரியர்களும் எல்லை தாண்டி கண்டிக்க கூடாது.
எஸ்.பி.டி.கனகசபை, தாளாளர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அதனால்தான் ஆசிரியரை இரண்டாவது பெற்றோர் என்றும், பெற்றோரை முதல் ஆசிரியர் என்றும் கூறுவர். 
கல்வியறிவை போதிப்பது மட்டும் ஆசிரியர் பணி இல்லை. ஒழுக்கம்தான் 
முக்கியமானதாகும். எதை இழந்தாலும் திரும்ப பெறலாம். ஒழுக்கத்தை இழந்தால் திரும்ப பெற முடியாது.மாணவர்கள் ஒழுக்கம் திசைமாறும் போதுதான் ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். 
தவறு செய்யும் மாணவ பருவத்தில் கண்டிக்கா விட்டால் பிற்காலத்தில் சமுதாயத்திற்கு எதிரான சக்தியாக உருவெடுப்பர். வளரும் பருவத்தில், உடலியல் மாற்றங்கள் சேட்டைகளை மாணவர்கள் செய்வார்கள். அலைபேசி, இன்டர் நெட் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலம் அவர்கள் மனம் திசைமாறுவதற்கும், ஒழுக்க நெறிகளில் இருந்து பிறழ்வதற்கும் இன்று அதிகளவில் வாய்ப்புள்ளது.பருவம் மாறும் போது தவறான செய்திகள், படங்கள், மாணவர்கள் மனதில் அச்சாணி போல பதிந்துவிடும். 
இதை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறில்லை. மேலும் முதல் ஆசிரியராக விளங்கும் பெற்றோரும் இதை கண்டிக்க வேண்டும். குழந்தைகளை கண்டித்துதான் வளர்க்க வேண்டும். 'துாண்டல், துலங்கல்' குறித்து ஆய்வு செய்த பெரிய உளவியல் அறிஞர்களே தண்டனையை வலியுறுத்தியுள்ளனர். 
மாணவர்களின் நல்லொ ழுக்கத்திற்காக ஆசிரியர்கள் கண்டிப்பது தவறில்லையே. இதை தவறு என்றால் தங்கள் கண்ணை, தாங்களே குத்துவதாகத்தான் அர்த்தம். யாரோ பெற்ற குழந்தை நன்றாக வளர்வதற்காக கண்டிக்கும் ஆசிரியர்களை சபிப்பது தவறு. இதில் நஷ்டம் ஆசிரியருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்குத்தான் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்.
ஆசிரியரின் அடி; எங்களுக்கு உரம் : மணி, கல்வித்துறை முன்னாள் இயக்குனர்: தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்- பிள்ளைகள் உறவிலும் நல்ல சூழல் இல்லை. முன்பு ஆசிரியர்கள் தெய்வமாக பார்க்கப்பட்டனர். ஒரு தலைப்புக்கு அடிக்கோடிடாததால் ஆசிரியரிடம் அடி வாங்கியவன் நான். ஆனால் அடுத்த நாளே அந்த ஆசிரியரும் என்னை அன்புடன் நலம் விசாரித்தார். 
மாணவர்- ஆசிரியரிடையே இது போன்ற நல்லுறவு அன்று இருந்தது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்கள் வளர்ச்சிக்கான உரங்களாக பயன்பட்டன. ஆசிரியர்- பெற்றோர்- மாணவர்- சமுதாயம் இணக்கமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களுடன் நற்பண்புகளை அதிகம் போதிக்க வேண்டும். 
அதே நேரம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி முறை வேண்டும். 'ஒரு தட்டில் மெயின் சாப்பாடாக ஆசிரியர் கற்பித்தல் இருந்தது. ஆனால் தற்போது கற்பித்தல் என்பது ஊறுகாயாக மாறிவிட்டது'. ஆசிரியர்கள் பணிப்பளு அதிகரித்து விட்டது. இதையும் கல்வித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதவிர 'டிவி', சினிமா உட்பட பல்வேறு புறக்காரணங்களாலும் ஆசிரியர்- மாணவர் உறவுகள் பாதிக்கின்றன.
பிரச்னைகளை சமாளிக்கும் வாழ்க்கை கல்வி அவசியம் : மதுரை மனநல டாக்டர் ராமானுஜம் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் நடக்கும் நிகழ்வின் மூலம் ஏற்படும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்கின்றனர். மனதளவில் பக்குவமான மாணவர்கள் இச்செயலில் ஈடுபடுவதில்லை. இதற்கு பெற்றோர், ஆசிரியர் இருவரும் தான் காரணம்.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தையின் தவறான நடவடிக்கைக்கு துணை போகின்றனர். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வியை சமமாக எண்ணும் பக்குவத்தை கற்றுத் தருவதில்லை. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் மாணவர் நடத்தையை கண்காணிப்பது இல்லை. இதற்கு தான் கூட்டு குடும்பமுறை வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பை விட சமுதாயத்தில் நல்ல மனிதராகவும், பிரச்னையை சமாளிக்கும் வாழ்க்கை கல்வியை கற்றுத் தருவோராக ஆசிரியர் செயல்பட வேண்டும். அதை விடுத்து, சில ஆசிரியர்கள் தேவையற்ற விஷயத்தை கையில் எடுத்து மாணவரை தண்டிக்க கூடாது.
மாணவர்களை பக்குவமாக கையாளும் திறன் உள்ளதா என அறிந்த பின்னரே ஆசிரியர் பணியில் சேர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியரும் பக்குவமாக கையாண்டு வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், என்றார்.

1 to 5th Std - Term 2 -SA 60 Marks

உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில தரவரிசை பட்டியல் : முதன்மை செயலர் சுனில் பாலிவால் தகவல்!!!

'தேசிய தரவரிசை பட்டியலை போல, உயர் கல்வி நிறுவனங்களுக்கு 
அங்கீகாரம் வழங்க, மாநில அளவிலும், தரவரிசை பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
கருத்தரங்கு : கோவையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய உயர் கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, நேற்று துவங்கியது; இன்றுடன் நிறைவடைகிறது.
மாநாட்டை துவக்கி வைத்து, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் பேசியதாவது:தமிழகத்தில், உயர் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை, 44.3 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச விகிதத்துக்கு இணையானது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்ட, தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த, 100 பல்கலைக் கழகங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 10 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், அண்ணா பல்கலை, ஆறாவது இடத்தை பிடித்திருப்பது, பெருமைக்குரிய விஷயம். முதல், 10 இடங்களில் உள்ள பல்கலைக் கழங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதோடு, 100 சிறந்த கல்லுாரிகளின் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 37 கலை, அறிவியல் கல்லுாரி கள் இடம் பெற்றுள்ளன. கோவை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலைக் கழகம், வரும் கல்வியாண்டுகளில், தரவரிசை பட்டியலில், முதல், 10 இடங்களுக்கு முன்னேறி செல்ல, திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், பல்கலை நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடக்கும் வகையில், தகுதியான துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான பணிகள், துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கப்படும். குறிப்பாக, அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், ஜூன் மாதத்துடனும், அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், மே மாதத்துடனும் முடிவதால், புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வெளியிட திட்டம் : தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கென, பிரத்யேகமாக மாநில தரவரிசை பட்டியல், அடுத்த எட்டு மாதங்களில், வெளியிட திட்டமிட்டு உள்ளோம். கற்பித்தல், ஆய்வு, வேலை வாய்ப்பு என, ஐந்து பிரிவுகளில், இப்பட்டியல் வெளியாகும். ஒவ்வொரு பிரிவிலும், 20 உட்பிரிவுகள் வகுக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். 'நாக்' எனப்படும், தேசிய தர நிர்ணயக் குழு, அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும்
சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதாவது, 25300336, 25300337, 25300338, 25300339 மற்றும் 25300340 
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைப்புகள் தவிர, 25332833, 25338855 மற்றும்
 கட்டணமில்லா தொலைபேசி இணைப்பான 
1800 425 1002
 ஆகிய எண்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 ஒருங்கிணைந்தசார்நிலைப்பணியாளர் தேர்வு 4 (தொகுதி 4 மற்றும் கிராம நிர்வாகஅலுவலர்)
 தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஐயப்பாடுகளுக்கு
 விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி
எண்களை
 பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு 
அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

SSA - STATE TEAM VISIT - DHARMAPURI DIST REVIEW REPORT & INSTRUCTIONS...

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.
மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி நியமனம் சார்பான வழக்கு- மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்த வைக்க.மதுரை நீதிமன்றம் ஆணை!


Tamilnadu Open University-B.Ed & B.Ed (SE) Examination December 2017 Hall Tickets Published


கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர தமிழக அரசு SCERT மற்றும் பாடத்திட்டக் குழுக்கு பரிந்துரை!

கனமழை - 8 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வெள்ளி, 1 டிசம்பர், 2017

திறன் வளர்க்கும் கல்வியே வேண்டும்!!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் சிறப்பு தற்செயல் விடுப்புக்கான அரசாணை.

டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - அரசாணை


TET - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் பல ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழகத்தில் சற்றே தாமதமாக வெளிவந்தது.
 RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.
ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பாக தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் செயல்முறைகள் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாகவும், அரசு உத்தரவு  வாயிலாகவும் பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.
 அவர்களில்
1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்
2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்
3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள் 
4) 15/11/2011 க்கு முன்பு CV முடித்து பிறகு பணி நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்
-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன. 
தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு வேலைவாய்ப்பக பரிந்துரை, நாளிதழ் விளம்பரம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்கள், பள்ளி நிர்வாக தகுதித் தேர்வுகள், இன சுழற்சி,  அரசின் அனுமதி போன்ற பலதரப்பட்ட நிலைகளைக் கடந்து வென்று பள்ளி நிர்வாகம் வாயிலாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆவர்.
இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.
பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.
இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.
இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளும் இந்த TET நிபந்தனைகளைக் காரணம் காட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தம் செய்துள்ளார்கள்.
தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஊதியக் குழுவில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த இந்த வகை ஆசிரியர்களின் பணிபுரிந்த காலத்தை கருத்தில் எடுக்காமல் இந்த மாதம் பணியில் புதிதாக சேருபவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே கொடுக்க தன்னிச்சையாக கல்வி அதிகாரிகள் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி உள்ளனர்.  இது இவர்களை மேலும் காயப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுத்தது போல்  பாரபட்சமற்று அரசு உதவிபெறும் பள்ளி TET  நிபந்தனை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு TET லிருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் (சுமார் 300 ஆசிரியர்கள் ) இவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பது உண்மை.

பள்ளிக்கல்வி - பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - இயக்குனர் செயல்முறைகள்

கனமழை - 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்..

DECEMBER 2017 | DIARY....

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.
3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
5.12.17- உலக மண் தினம்,
9.12.17- குறை தீர்க்கும் நாள்,
11.12.17- உலக மலைகள் தினம்,
18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு .
24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை.
2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.

சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வகுப்பில் 25% இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பம்