>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 2 ஆகஸ்ட், 2017

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK.....




S.NO.
SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 
3
Pay Comission arrears in respect of Government servants who died on or after 01.01.2006
4
Clarifications on The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
5
–do–
6
–do–
7
Recommendations of One Man Commission 2010 – Department wise — Government Orders – Issued.
G.O.Ms.Nos.254 to 340
Dt : August 26, 2010
 
8
9
10
11
11A
11B
12
13
14
15
16
17
Government Order on Allowances
 G.O Ms No 236
Dt : June 1, 2009
18
Government Order on Travelling Allowances
19
Clarifications on Travelling Allowances – Eligibility of Grade II employees for travel by rail
20
Recommendations of the Official Committee on Travelling Allowance – Amendment
21
Tamil Nadu Travelling Allowance Rules – cancellation charges –instructions
22
Classification of Government Servants
23
Clarification on House Rent Allowance [ up gradation of Municipalities]
24
Grant of Bonus Increment for stagnating in a post beyond 30 years
25
Grant of Conveyance Allowance- Conditions
26
General Provident Fund-Nomination-definition of family
27
28
29
29A
30
31
32
33
34
35
36
37
37A
37B
38
38A
39
40
41
41A
42
Calculation of periods in terms of months and days
43
General Terms and Conditions of Foreign Service/ Deputation
44
No need to condone break in service if discharged from service for want of vacancy
45
Permission to retire from service without prejudice to the disciplinary proceedings pending against a Government Servant –intimation to be given to Accountant General (A&E) telegraphically

46
CID Report not necessary for granting permission to retire voluntarily
47
Refixation of pay under Rule 4(3) of Tamil Nadu Revised Scales of Pay
48
Guidelines for rectifying junior-senior anomaly due to fixation of pay in Revised Scale of Pay
49
Rectification of junior-senior pay anomaly due to absorption of 5% Personal Pay- Delegation of powers to Heads of Departments
50
51
52
Particulars to be furnished in Additional Pay proposals
53
Check slip for advancement to selection /special grade
54
55
56
57
Revised Scales of Pay with Grade Pay-Schedules I & II
58
Revised House Rent Allowance
59
Revised City Compensatory Allowance
60
Statement of Pay Fixation
61
Format of application for ‘Request Transfer'
62

63

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS


வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! தமிழக அரசால் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் 💻SMART CLASS திட்டம் துவங்கப்பட உள்ளது.திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.எனவே கீழ்க்கண்ட விவரங்களை 9597063944 என்ற WHATS APP எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO FILL UR DETAILS..
---------------------------------
தேவைப்படும் விவரம்:-
1.பெயர்:-
2.பணி:-
3.பணிபுரியும் பள்ளி:-
4.ஒன்றியம்:-
5.செல்:-
6.இ- மெயில்:-
‼Urgent

ONE MONTH COURSE MODULE FOR READING AND WRITING ENGLISH FOR BEGINNERS OF TAMIL AS MOTHER TONGUE


CLICK HERE | Beginners Reading and writing for English as a second Language Stage 1


Thanks To,
R.ANBUSELVI,
TAMBARAM MUNICIPAL HIGHER SECONDARY SCHOOL,
SELAIYUR,
CHENNAI-73,
CHENGALPATTU EDN DT.,
KANCHEEPURAM DT.

SIMPLE ENGLISH SENTENCES FOR STUDENTS

Finance Dept. - G.O Ms No 71 dated 2nd July 2015 on additional format to apply/renewal of Passport...

ஆசிரியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு தேவையான முக்கிய 20 ஆவணங்கள்

TNPSC GROUP-2A HALL-TICKET PUBLISHED (EXAM DATE : 06/08/2017)...

AUGUST - 2017 SCHOOL CALENDER...

TNPSC - குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா?

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது.
இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான 'ஹால்டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆக., 5 ல் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது.
 இதில் 70 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.அவர்கள் ஆக., 6 காலையில் தான் ஊர்களுக்கு திரும்புவர். இதனால் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சிரமம். போராட்டத்தை காரணம் காட்டி சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என, தெரிவித்துள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வு நடத்துவது குறித்து டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசித்து வருகிறது. ஓரிரு நாட்களில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல்....

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணையை உயர்நீதிமன்றத்தில்
சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்டு 31 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுக்கும் விதமாக, தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'தனி நீதிபதி என்.கிருபாகரன் விதித்துள்ள நிபந்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த விதிமுறைகளை முதலில் அமல்படுத்த வேண்டும். பின்னர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் இருந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பது வரையிலான பணிகளை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவைப்படும்' என வாதிட்டார்.
இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை தமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் அமல்படுத்த முடியும். ஆனால், இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்' எனக் கூறினார்.
இந்த வழக்கில், மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், '2001 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும், 1991 -ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி வரையறையின் அடிப்படையிலும் தற்போது தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. இதை ஏற்க முடியாது. 2011 - ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள், பதவிகளை வரையறை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார். இதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 'இந்த வழக்கை வரும் ஆகஸ்டு 1 - ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம், உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணையை உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது

தொடக்கக்கல்வி - மாதம்தோறும் துவக்க/நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்/மாணவர் விவரங்களை [MR] இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.

'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற டில்லியில் அமைச்சர் முகாம்....

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக, டில்லியில் முகாமிட்டுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார்.
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றுத்தரும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சில தினங்களுக்கு முன், டில்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம் டில்லி சென்ற, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை, மூன்று முறை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார். பின், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசினார். நேற்று, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சேர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கை சந்தித்து, அதே கோரிக்கையை வலியுறுத்தினார். தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார்

தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் போன்று தேர்வு எழுதி கணினி அறிவியல் ஆசிரியர்கள் நியமிப்பது இல்லை... ( RTI பதில் ) !!


செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

முதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்.....

*முதல் வகுப்பில் 30.9.2012.ல் பிறந்த மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்*

*31.7.2012வரை பிறந்த5+ குழந்தைகள் களுக்கு தவிர்ப்பு வேண்டியதில்லை*

*1.8.2012 முதல் 31.8.2012 வரை பிறந்த குழந்தைகளை சேர்த்தால் உதவி தொடக்கக்கல்வி அலவலரிடம் தவிர்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.*

*1.9.2012 முதல் 30.9.2012 வரை பிறந்த குழந்தைகளுக்கு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் தவிர்ப்பு பெறப்பட வேண்டும்*

*தவிர்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது கீழ்கண்டவற்றை சேர்த்து இணைத்து அனுப்பவும்*

 1.சேர்க்கை விண்ணப்பம்


 .2.பிறப்புச்சான்று

 3.இத்தனைநாளுக்குத்தவிர்ப்பு வேண்டி தலைமையாசிரியரின் விண்ணப்பம்

இனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாணுவின் கண்டுபிடிப்பு...

கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் உமாதாணு.


இனிமையாகவும், ஆர்வத்தோடும் கணிதப் பாடங்களை படிப்பதற்கு ஒரு எளிய வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் என்.உமாதாணு.


கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கல்லூரியில் அவருக்குப் பிடித்த கணிதப் பாடத்தை படித்தார். அதுவே, அவரது வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

1962-ல் கணித ஆசிரியராக கோவையில் பணியைத் தொடங்கினார் உமாதாணு. இரண்டு தனியார் பள்ளிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வுபெற்றார். அதன்பிறகு ஏழை மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டார்.

வசதிபடைத்த மாணவர்கள் அபாகஸ் போன்ற பயிற்சிகள் மூலம் கணிதத்திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரியான வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் எளிய முறையையும்,அதற்கான உபகரணங்களையும் உருவாக்கினார். இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருந்தார்.

உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்தின் முக்கோணயியல், வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்று விளக்குகிறார். மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்க அதிகாரிக்கு, கடலுக்குள் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அந்த அதிகாரி, அந்த கப்பல் கடலில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கண்டறிவதற்காக, எவ்வளவு இறக்கக் கோணத்தில் கப்பல் தெரிகிறது என்று கிளினாமீட்டர் உதவியுடன் பார்த்து கணக்கீடு செய்வார். கரையில் இருந்து எவ்வளவு வேகமாக பாதுகாப்பு கப்பல் சென்றால், மூழ்கும் கப்பலில் உள்ள சிப்பந்திகளை காப்பாற்ற முடியும் என்று சில நொடிகளிலே கணக்கிட்டு வழிகாட்டுவார். இப்படி, ஏற்றகோணம்,இறக்ககோணம் வாழ்க்கையில் எவ்வளவு பயன்படுகிறது என்று விளக்கிவிட்டால், மாணவர்கள் உற்சாகமாக இந்தப் பகுதியைப் படிப்பார்கள். இதேமாதிரி ஒவ்வொரு பாடப்பகுதியையும் வாழ்வியலோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்து நினைவில் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் உமாதாணு, அதனை உதாரணத்துடன் விளக்குகிறார்.

இரு எண்களின் பெருக்குத் தொகை -480, கூட்டுத் தொகை -1 என்று எடுத்துக் கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும். அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும். அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும். இந்த எளியமுறைக்கு யூனூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதுபோல, 6-ம் வகுப்பில் இருந்தே ஜியோமெட்ரிக் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மூலை மட்டங்களின் முழு பயன்பாடு சொல்லித் தரப்படுவதில்லை. மூலை மட்டங்களைக் கொண்டு இணைகோடு, செங்குத்துக் கோடு வரையலாம் என்று மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், மூலை மட்டங்களைக் கொண்டு எந்த அளவில் வேண்டுமானாலும் கோணங்களை வரைய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இப்படி மூலைமட்டங்களின் பயன்பாட்டை பள்ளியிலே முழுமையாக படித்துவிட்டால் பி.இ. படிக்கும்போது எளிதாக இருக்கும் என்கிறார்.

கணிதப் பாடத்தை இனிமையாகக் கற்றுக்கொடுக்க இவர் கண்டுபிடித்துள்ள எளியமுறை, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்கள், அயல்நாடுகளையும் எட்டியிருக்கிறது.

சென்னை மாநகராட்சி மாணவர்களையும் இப்போது தொட்டிருக்கிறது. இனி வரும்காலத்தில் சென்னைப் பள்ளி மாணவர்களும் கணிதப்பாடத்தில் சக்கை போடு போடுவார்கள் என்று நம்பலாம்

+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்....

கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது.
இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும்.
ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு..

''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த, கொளப்பலுாரில் நேற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழக மாணவர்கள், பல்வேறு பொதுத் தேர்வை சந்திக்கும் வகையில், 450 மையங்களில், வாரந்தோறும், சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்படும். எந்த தேர்வாக இருந்தாலும், அதை, மாணவர்கள் எளிதாக சந்திக்கும் வகையில், 54 ஆயிரம் வினாக்கள் அடங்கிய தொகுப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வரைபடங்களுடன் வெளியிடப்படும்.
பிளஸ் 1 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு, இன்னும் ஓரிரு நாட்களுக்குள், மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். எப்படி தேர்வை எழுத வேண்டும் என்பதை, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்

MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக்கீடு அரசாணையை கடந்த 14ம் தேதி நீதிபதி ரவிசந்திர பாபு ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கும், மேலும் காலம்தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துமாறு தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் பின்னணி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து... இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்... இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இயற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
95 சதவீத மாணவர்களின் நலன் காக்க... தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தயாரித்துள்ளது.
பாரபட்ச முறையில் நீட் தேர்வு: தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. இது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட மத்திய இடை நிலை கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
வேறு வழியில்லாததால்... எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தைச் சீர்செய்ய, ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களைச் சமமாகக் கருத முடியாது. ஆகவே, அனைத்துத் தரப்பு வாரிய மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைச் சட்டத்தை இது வரை அரசு பின்பற்றி வருகிறது.
எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

விரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச்சர் அறிவிப்பு!

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் , "தற்போது தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 11-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், வரும் திங்கள் கிழமையன்று மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இன்னும் மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்படும். அதற்கான ஆசிரியர் குழு விரைவில் அமைக்கப்படும்" என்றார்.

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

DEE -தொடக்கக்கல்வி -02.08.2017 செயலர் அவர்களுடன் DEEO/AEEO களுக்கு காணொலி காட்சி நடைபெற உள்ளது...

முதுகலைஆசிரியர் பதவியுயர்வு-2ம் பட்டியல்- சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.08.2017க்குள் முறையீடு செய்ய பள்ளிகல்வி இணை இயக்குனர் (மே.நி.க.). உத்தரவு !!

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது.



சுகாதாரம் முதல் இணையவழிக் கற்றல் வரை அரசுப் பள்ளி சாதனை!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு..

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது....

August diary

*3 RL Aadi18*
*4 RL varalakshmi viratham*
*5 Grievance day*

*AUG 5 Jactto-Jeo chennai protest*
*07 RL Rig upakarma*
*08 RL Gayathri jebam*
*12 primary CRC*
*14 Krishna jayanthi*
*15 Independence day*
*22 Jactto geo one day strike*
*25 Vinayagar chathurthi*

Gramiya Kalai Vizha conducted for school students


To highlight the importance of our rich tradition and culture, Gramiya Kalai Vizha, where students performed puppet show, villupattu, parayattom and silambattam, was held at Railway Colony Municipal Higher Secondary School in Kollampalayam here. School headmistress N. Thenmozhi said that 150 students were given training for one week in traditional folk songs and storytelling. Another highlight of the Vizha was the villupattu by D. Thomas Antony, a secondary grade teacher at Panchayat Union Middle School at Nadagoundampalayam village, along with four children from Class 6 and 7.
The song focused on pollution in water bodies by industries and people and called for water conservation. Mr. Thomas Antony said that his songs focused on women’s role in development of society and the nation, ill-effects of plastics and topics that focused on self-development.
Teachers said that this was a chance for students not only to express their inner talents, but also help other students know our tradition.

RMSA - ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி...

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...