>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 3 அக்டோபர், 2016

'எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்!' பழகப் போறாங்க மாணவர்கள்



'மாணவர் பரிமாற்ற திட்டம்' என்ற பெயரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'வாழ்க்கை கல்வி' கற்பிக்கப்பட உள்ளது. கிராமங்களில் உள்ள ஒற்றுமை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள், கோயில் விழாக்கள் உள்ளிட்ட வாழ்க்கை கல்வி குறித்து, நகர்புற மாணவர்கள் அறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதே போல், கிராமப்புற மாணவர்கள் நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.
நகரங்களை பற்றி அறியவும், பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்பிக்கும் முறை, தொழிற்கூடங்கள், நகர்புற வாழ்க்கை முறையை அறியவும், தாழ்வு மனப்பான்மையை போக்கவும் இத்திட்டம் உதவும்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நகர்புற பள்ளி, ஒரு கிராமப் பள்ளி தேர்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர் வீதம் பரிமாற்றம் செய்யப்படுவர். இவர்கள் ஆறு நாட்கள் அங்கு தங்கி இருப்பர். இத்திட்டத்திற்காக பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் எண் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், ஆதார் எண் பதிவு செய்ய, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் பதிவு சட்டத்தில் புதிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளின் நலன் கருதியும், உடல் ரீதியான ரேகைகள் வளர்ச்சி குறைந்திருக்கும் என்பதாலும், குழந்தைகளுக்கு மட்டும், 'பயோ மெட்ரிக்' அளவீடு தேவை இல்லை.
குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும். தாய், தந்தை முகவரி மற்றும் ஆதார்எண், குழந்தையின் ஆதார் எண்ணுக்கு, அடிப்படை தகவலாக சேர்க்கப்படும். குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான ரத்த உறவை உறுதி செய்ய, ரேஷன் கார்டு, மத்திய,மாநில அரசுகளின் மருத்துவ அட்டை, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சேர்க்க வேண்டும்.
மேலும், பெற்றோர், தங்களின் ஆதார் அசல் அட்டை மற்றும் நகல்களை, பதிவு செய்யும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்; இதில், தாயின் ஆதார் எண்ணுக்குமுன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த பின், ஐந்து வயது ஆனதும், உடல் ரீதியான பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து குழந்தைகளுக்கும், 15 வயது முடிந்ததும், மீண்டும் பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் அச்சடிப்பு : 6ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலில், நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்க, அந்தந்த மாவட்டங்களுக்கு, மாதிரி ஓட்டுச்சீட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 உள்ளாட்சி தேர்லில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கான ஓட்டுப்பதிவு மட்டும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்படுகிறது.
ஆணையம் அறிவிப்பு : மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., உறுப்பினர் ஆகிய, நான்கு பொறுப்புகளுக்கான தேர்தல், ஓட்டுச்சீட்டு மூலமே நடத்தப்படும் என,
தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அளவில் ஓட்டுச்சீட்டு, அதில் உள்ள வாசகம், நிறம் போன்றவை, ஒன்று போல இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, ஓட்டுச்சீட்டு மாதிரி, மாநில தேர்தல் ஆணையத்தால், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு - மஞ்சள்; யூனியன் கவுன்சிலர் பதவிக்கு - பச்சை; பஞ்., தலைவர் பதவிக்கு - இளஞ்சிவப்பு; பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு - வெள்ளை நிறத்தில் ஓட்டுச்சீட்டு அச்சிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச்சீட்டு, வழக்கம் போல வெள்ளை நிறத்தில் இருக்கும். தபால் ஓட்டுப்பதிவு செய்யும் ராணுவத்தினர், அரசு பணியுடன், தேர்தல் பணியை கவனிப்பவர்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால், ஒரு ஓட்டுச்சீட்டும்; யூனியன் மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால், மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., உறுப்பினர் என, நான்கு ஓட்டுச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்படும்.
ஓட்டுச் சாவடிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல், 6ம் தேதி மாலை வெளியிடப்படும். அன்றைய தேதியில் இருந்து, ஓட்டுச்சீட்டுகள் அச்சிடும் பணி துவங்கும். ஒரு சில
நாட்களில், பணி முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

சென்னை,பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.ஜிசாட்-18இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-சோதனைகள்தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.கவுண்ட் டவுன்தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இதற்கான ‘கவுண்ட் டவுன்’ வரும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்

உள்ளாட்சி தேர்தல் PO, PO1, PO2, PO3, PO4,PO5, PO6 வேலை என்ன?



Duties of Presiding Officer
1.Receive all the Materials from ZO
2.Separate way for Entrance &Exit of voter
3.Check the Materials
4.Check the Electoral Roll
5.Booth & Place of Voters Details
6.Check Serial no of BP with
List& put Rubber Stamp of Booth in BP
7.Compartment Arrangements &pasting Posters
8.Take Safe Custody of All Election Materials
9.Sign of Presiding officer in BP
10 Appointment of Booth Agents
11Place for Booth Agents
12.Preparing Ballot Box
13.paperseal Fixing in Ballot box
14.Show No marking in Marked copy at the time Starting Election to Booth Agents
15.Permit Agents to note First & Last no of NO
16.Declaration
17.Challenged vote
18.Tendered vote
19.Voting Secracy violation
20.வோட்டு போட மறுத்தல்
 21.Slip for Voters at Queue At 5PM
22 .Sealing of Ballot Box
23.Ballot paper Account
24.paper seal Account
Duties of PO1
1.Identification
2.Maintanance of Village Panchayat Ward
Marked copy of Electoral
3 Issueing of Village pt ward
Ballot paper
 4Note  serial no,part no of voter in the Counterfoil
 5 Get  Signature of voter in the Counterfoil
For Two Ward Booth Another polling officer Do the  Same Duties of polling officer 1
Marking in the Marked copy of Electoral
Male -Underline
Female -Underline& Tickmark
Do blo's have to issue boothslip
Plse confirm
Duties Of PO2
இடது ஆள்காட்டி விரலில்
விரலில் அழியாத மை
வைத்தல்
Duties of PO 3
1.Maintanance of Village Panchayat President Marked copy of Electoral
2 Issueing of Village Panchayat  President
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil
Duties of PO 4
1.Maintanance of Union Councillors
 Marked copy of Electoral
2 Issueing of Union councillors
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil
Duties of PO 5
1.Maintanance of District Councillors
 Marked copy of Electoral
2 Issueing of District  councillors
Ballot paper
3Note  serial no,part no of voter in the Counterfoil
 4 Get  Signature of voter in the Counterfoil
Duties of PO 6
1.Incharge of Ballot Box
2.Giving 2 sided Arrow CrossMark Rubber Stamp with ink
3வாக்கு சீட்டை செங்குத்தாக நீளவாக்கிலும்,பின்பு குறுக்கே மடித்தல்
4.Confirmation of BP posted in Box
Colours of Ballot paper
1.Dt Panchayat Ward -YELLOW
2.pt.union Council Ward  -Green
3 .Village Pt.President -pink
4.Village pt .Ward -white
(Single Ward)
White&Blue
(Double Ward

மாநில அறிவியல் கண்காட்சி உள்ளாட்சி தேர்தலால் ஒத்திவைப்பு!!

இன்ஸ்பயர் விருதுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இன்ஸ்பயர் விருதுகள் வழங்கப்படுகிறது.
இதில், பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை மூலம், அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்வி மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டும்.
இதில, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, அக்டோபர், 15, 16ம் தேதிகளில், திருச்செங்கோடு எலயம்பாளையத்திலுள்ள விவேகானந்தா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அக்டோபர், 17, 19 தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஜன., 8ல் நடக்க உள்ள, இந்த தேர்வுக்கு,
https://upsconline.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்நிலை தேர்வுக்கு பின், பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும். பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்ற, 30 வயதுக்கு குறைவானோர் பங்கேற்கலாம்; மேலும், விபரங்களை, http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
இன்று



காந்தி ஜெயந்தி



⚑ காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007இல் அறிவித்தது.

⚑ இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

⚑ 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?" எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

⚑ 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி" என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.

⚑ காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது.

⚑ அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி புதுடில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லால்பகதூர் சாஸ்திரி



🏁 இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.

🏁 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. சிறு வயதாக இருந்தபோதிலும் காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார்.

🏁 அவருடைய திருமணத்தில் சுழல் சக்கரத்தையும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக பெற்றுக் கொண்டார்.

🏁 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பகதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மறைந்தார்.

🗿 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா இறந்த தினம்.

🎌 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் காலமானார்.
நோய்களின் பெயர்கள்


Adenoid
தொண்டை சதை வளர்தல்

Adenoma
மார்புச் சிலந்தி

Amenorrhoea
மசக்கை, ரத்தகுல்ம ரோகம், சூதகக் கட்டு

Anthrax
மேகக்கட்டி, ராஜ பிளவை

Anus fistula
பவுத்திரம்

Apoplexy
ஜன்னி

Ascities
மஹோதரம்

Asthma
சுவாச காசம்

Autophonia autopsy
காது இரைச்சல்

Blenorrhagie
மேகவெட்டை

Blenorrhoea
மேககாரம்

Bronchitis
மார்ச்சளி நோய்

Cancer
புற்றுநோய்

Carbuncle
ராஜபிளவை

Cataract
கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு விதக்  கண்நோய்

Catarrh
ஜலதோஷம்

Chicken pox
விளையாட்டு அம்மை

Cholera
வந்தி பேதி

Cold
சீதளம், ஜலதோஷம்

Cold fever
குளிர் காய்ச்சல் / ஜுரம்

Colic
வயிற்று வலி, உதர சூலை

Coma
மயக்கம், சுயநினைவற்ற

Constipation
மலச்சிக்கல்

Cough
இருமல்

Cyanosis
விஷத்தினால் உடலெங்கும் நீலம் பரவுதல்

Cycosis
முகத்தில் காணும் ஒரு வகைப் படை

Cystitis
மூத்திரப் பை வீக்கம்

Diabetes
நீரிழிவு

Diarrhoea
பேதி, வயிற்றுப் போக்கு

Diptheria
குரல் வளையில் காணும் ஒருவகைத்  துத்தி ரோகம்

Diuresis
நீரிழிவு

Dracontiasis
நரம்புச் சிலந்தி

Dropsy
நீர்க்கோவை, பாண்டு

Dysentery
சீதபேதி, வயிற்றுக் கடுப்பு

Dyspepsia
குன்மம், அஜீரணம்

Ear-ache
காது நோய்

Eczema
மேகப்படை

Elephantiasis
யானைக்கால்

Epididymitis
விரைவாதம்

Epilepsy
காக்கை வலி

Erysipelas
அக்கி

Felon
நகச்சுற்று

Fever
காச்சல், ஜுரம்

Fistula
பவுத்திரம்

Giddiness
தலைச்சுற்றல்

Haematemesis
இரத்த வாந்தி

Haemorrhoids
மூல வியாதி

Head-ache
தலைவலி

Heart disease
இருதய நோய்

Hernia
அண்டவாதம், குடல் வாயு

Herpes
படர் தாமரை

Hiccough
விக்கல்

Influenza
கபவாத ஜுரம்

Itch
சொறி, சிரங்கு

Jaundice
மஞ்சள் காமாலை

Leprosy
குஷ்டநோய்

Leucoderma
வெண் குஷ்டம்

Lumbago
இடுப்பு வலி

Malaria
குளிர் ஜுரம், முறை ஜுரம்

Measles
தட்டம்மை

Migraine
ஒற்றைத் தலைவலி

Mumps
பொண்ணுக்கு வீங்கி, புட்டாலம்மை

Myopia
கண் வியாதி / திருஷ்டி

Naurasthenia
சூதக வாயு

Nausea
வாய்க் குமட்டல்

Paralysis
பாரிச வாயு

Piles
மூலம்

Plague
கொள்ளை நோய்

Pleurisy
மார்பு நோய் / வீக்கம்

Pneumonia
கபவாதம்

Pyrexia
ஜுரம்

Pyrosis
குல்மம்

Renal colic
உத்தர சூலை

Rheumatism
வாதரோகம், கீல்வாதம்

Rickets
குழந்தைகளின் எலும்பு மிருதுவாதல்

Ringworm
படை

Sciatica
இடுப்புக் கீல்வாயு

Scrofula
கண்ட மாலை

Small pox
பெரிய அம்மை

Sore-eye
கண்நோய்

Sprain
சுளுக்கு

Stranguary
நீர்ச்சுருக்கு

Sun stroke
தாபத் தாக்கு / சுடும் வெயில்

Syphilis
கிரந்திப் புண்

Thrombosis
இரத்தம் ஓட்டத்தடை

Trismus
இசிவு மாந்தம்

Vaccinia
கோமாரி

Vomiting
வாந்தி

Whitlow
நகச்சுற்று

Whoopping-cough
கக்குவான் இருமல்

சனி, 1 அக்டோபர், 2016

!! பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* - (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

பொறுமையாக
படித்தமைக்கு
நன்றி.🙏🏻

THIRUPPATHI THIRUMALAI BALAJI | THIRD SATURDAY | TODAY SPECIAL:

புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பர். 108 திவ்ய தேசங்கள் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்தமாதம் மிகவும்சிறந்தது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக அக்னிபுராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுள் திருமாலை வணங்குவது சிறப்பாகும்.மக்கள் நலன் கருது இந்த பதிவினை வெளியிடுவதில் கல்விக்குரல் வலைதளம் பெருமையடைகிறது.


முன்னோர்கள் நினைவேந்தல்:
புரட்டாசி மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்முன்னோர், பிதுர்லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் சென்றதும், எமதர்மன் முனோர்களை பூமிக்குச் செல்லும்படி அனுமதிக்கிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை முதல் (பிரதமை) நாளிலிருந்து அமாவாசை வரையிலான 15நாட்களுக்கு அவர்கள் பூமியில் தங்குவர்.  இதையே, மகாளய பட்சம் என்பர்; பட்சம் என்பது 15 நாட்களைக் கொண்டதாகும். இந்த நாட்களில் நாம் முன்னோர் வழிபாடு செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்; அன்னதானம் செய்யவேண்டும். புரட்டாசி மாதத்தில் மாமிச உணவைத் தவிர்ப்பது நலம்.    காணமுடியாவிட்டாலும் முன்னோர்கள் நம் அருகே இருப்பதை உணர்ந்து மகாளய அமாவாசையில் சிரார்த்தம் என்று செய்கிறோம். சிரத்தையாகச் செய்வதே சிரார்த்தம். “மனம் முழுவதும் இறந்துபோன தகப்பனையும் தாயையும் தாத்தாவையும் பாட்டியையும்  நினைத்து உண்ணுங்கள். “ என்று சொல்வது ஒரு சிறந்த வழிபாடு; கடவுள் வழிபாட்டை விட மேலான வழிபாடாகிறது.

நாராயணா கோபாலா:
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர்  உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் தலங்களுக்கு  நடைப்பயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும்  நடைபெறுகிறது.      

எல்லாம் பெருமாளே!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற மட்பாண்டத் தொழிலாளி வாழ்ந்து வந்தார். பிறவிலேயே அவருக்குக் கால் ஊனம்; தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இவருக்கு சாத்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது.  தொழில் மற்றும் ஏழ்மை  காரணமாக கோயிலுக்கும் போகமால் “பெருமாளே நீயே எல்லாம்”  என்று மட்டும் சொல்லுவார். வேங்கடவனும், அவரது பக்திக்கு மகிழ்ந்து , அவருக்குத் தன் திருவுருவத்தைக் கனவில் காட்டிய பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசிமாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.  பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே சிலையாக களிமண்ணில் செய்தார்.  பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணைச் சிறுபூக்களாக உருட்டி மாலையாகத் தொடுத்து அணிவித்து வணங்கினார்.

பொன்மாலையும் மண்மாலையும்:
அவ்வூர் அரசர் தொண்டைமான்  ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு,  தங்கத்தினால் பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்குச் சென்று படுத்தார். அன்று அரசரின் கனவில் தோன்றிய பெருமாள், பீமய்யாவின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் கூறினார்.

மண் சட்டியில் நைவேத்தியம்:
மன்னர் பீமய்யாவின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு வேண்டிய உதவி களையும், பொன்னையும், பொருளையும் கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத பீமய்யா இறுதிநாள் வரை பெருமாள் விரதம் இருந்து வைகுண்டப்பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழு மலையானுக்கு மண் சட்டியிலும் நைவேத்தியம் செய்கின்றனர்.                       
சனிக் கிழமை விரதம்:
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது மரபுவழி நம்பிக்கையாகும். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், நீர் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.          
வீட்டில் பூசை செய்தல்:
காலையில் நீராடி  நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.  பூஜை அறையில் வெங்கடாசலபதியின் படம் அல்லது  சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, அலர்மேலுமங்கையுடன் உடனுறையும்  வேங்கடா சலபதியை வணங்க வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.   "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூசை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புளிப்புச்சுவை திருமகளுக்கு விருப்ப மானது என்பதால் புளிச்சாதம் நைவேத்தியமும் செய்வர். இயன்றவர்கள் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வருவர். புரட்டாசி மாதத்தில் எழுமலையான்  நம் வீடுளுக்கு வருவதாகவும் நம்பிக்கையுள்ளது. மூன்றாவது சனிக்கிழமை வீடுகளில் தளியல் எனும் நைவேத்தியம் போடுவது வழக்கமாக உள்ளது.          
இவ்வாண்டில் புரட்டாசி சனிக் கிழமைகள்:
2015ஆம் ஆண்டில் புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் சிறப்பு பெறுகின்றன. செப்டம்பர் மாதத்தில் 19 மற்றும் 26 தேதிகளிலும், அக்டோபர் மாதத்தில் 03, 10 மற்றும் 17ஆம் தேதிகளிலும் புரட்டாசி சனிக்கிழமைகளாகும். ஐந்து சனிக்கிழமைகளுக்கும் ஐந்து உபயக்காரர்கள்  குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஐந்து சனிக்கிழமை களிலும் விடியற்காலை 4.00 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு விசுவரூப தரிசனம், கோபூசை  4.45 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் 5.45 மணிக்கு விசேஷ ஆராதனம், அஷ்டோத்திரம், நாமாவளி பிரசாதம்,  நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் மாலை 6.30 மணிக்கு நித்திய பூசை, இரவு 7.00 மணிக்கு விசேஷ பூசை, 7.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீநிவாசபெருமான் சிறப்பு அலங்காரம் மற்றும் புறப்பாடு, உட்பிரகாரம் வலம் வருதல், இரவு 10.00 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். நல்லருள் பெற வருக!
சத்தியலோகத்தில் இருந்து  நான்முகன் பிரம்மா, பூலோகம் வந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார். இதற்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவம் என்று பெயர். திருப்பதியை "வேங்கடம்' என்றும் அழைப்பர். "வேங்கடம்' என்றால்" பாவம்  எரித்து பொசுங்கும் இடம்' என்று பொருள். புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதில் நினைத்தாலே பாவம் தீரும் புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.  திருப்பதி வேங்கடசப் பெருமாளே நம்மலையக மலேசியத் திருநாட்டில், பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடாசலபதியாக எழுந்தருளி காட்சியளிக்கின்றார்.  
இவ்வாண்டின் ஐந்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தரிசித்து  நல்லருள் பெறுவோமாக.

THIRUPPATHI THIRUMALAI BALAJI | THIRD SATURDAY | TODAY SPECIAL:

புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பர். 108 திவ்ய தேசங்கள் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்தமாதம் மிகவும்சிறந்தது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக அக்னிபுராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுள் திருமாலை வணங்குவது சிறப்பாகும்.மக்கள் நலன் கருது இந்த பதிவினை வெளியிடுவதில் கல்விக்குரல் வலைதளம் பெருமையடைகிறது.


முன்னோர்கள் நினைவேந்தல்:
புரட்டாசி மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்முன்னோர், பிதுர்லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் சென்றதும், எமதர்மன் முனோர்களை பூமிக்குச் செல்லும்படி அனுமதிக்கிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை முதல் (பிரதமை) நாளிலிருந்து அமாவாசை வரையிலான 15நாட்களுக்கு அவர்கள் பூமியில் தங்குவர்.  இதையே, மகாளய பட்சம் என்பர்; பட்சம் என்பது 15 நாட்களைக் கொண்டதாகும். இந்த நாட்களில் நாம் முன்னோர் வழிபாடு செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்; அன்னதானம் செய்யவேண்டும். புரட்டாசி மாதத்தில் மாமிச உணவைத் தவிர்ப்பது நலம்.    காணமுடியாவிட்டாலும் முன்னோர்கள் நம் அருகே இருப்பதை உணர்ந்து மகாளய அமாவாசையில் சிரார்த்தம் என்று செய்கிறோம். சிரத்தையாகச் செய்வதே சிரார்த்தம். “மனம் முழுவதும் இறந்துபோன தகப்பனையும் தாயையும் தாத்தாவையும் பாட்டியையும்  நினைத்து உண்ணுங்கள். “ என்று சொல்வது ஒரு சிறந்த வழிபாடு; கடவுள் வழிபாட்டை விட மேலான வழிபாடாகிறது.

நாராயணா கோபாலா:
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர்  உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் தலங்களுக்கு  நடைப்பயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும்  நடைபெறுகிறது.      

எல்லாம் பெருமாளே!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற மட்பாண்டத் தொழிலாளி வாழ்ந்து வந்தார். பிறவிலேயே அவருக்குக் கால் ஊனம்; தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இவருக்கு சாத்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது.  தொழில் மற்றும் ஏழ்மை  காரணமாக கோயிலுக்கும் போகமால் “பெருமாளே நீயே எல்லாம்”  என்று மட்டும் சொல்லுவார். வேங்கடவனும், அவரது பக்திக்கு மகிழ்ந்து , அவருக்குத் தன் திருவுருவத்தைக் கனவில் காட்டிய பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசிமாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.  பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே சிலையாக களிமண்ணில் செய்தார்.  பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணைச் சிறுபூக்களாக உருட்டி மாலையாகத் தொடுத்து அணிவித்து வணங்கினார்.

பொன்மாலையும் மண்மாலையும்:
அவ்வூர் அரசர் தொண்டைமான்  ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு,  தங்கத்தினால் பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்குச் சென்று படுத்தார். அன்று அரசரின் கனவில் தோன்றிய பெருமாள், பீமய்யாவின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் கூறினார்.

மண் சட்டியில் நைவேத்தியம்:
மன்னர் பீமய்யாவின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு வேண்டிய உதவி களையும், பொன்னையும், பொருளையும் கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத பீமய்யா இறுதிநாள் வரை பெருமாள் விரதம் இருந்து வைகுண்டப்பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழு மலையானுக்கு மண் சட்டியிலும் நைவேத்தியம் செய்கின்றனர்.                       
சனிக் கிழமை விரதம்:
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது மரபுவழி நம்பிக்கையாகும். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், நீர் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.          
வீட்டில் பூசை செய்தல்:
காலையில் நீராடி  நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.  பூஜை அறையில் வெங்கடாசலபதியின் படம் அல்லது  சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, அலர்மேலுமங்கையுடன் உடனுறையும்  வேங்கடா சலபதியை வணங்க வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.   "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூசை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புளிப்புச்சுவை திருமகளுக்கு விருப்ப மானது என்பதால் புளிச்சாதம் நைவேத்தியமும் செய்வர். இயன்றவர்கள் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வருவர். புரட்டாசி மாதத்தில் எழுமலையான்  நம் வீடுளுக்கு வருவதாகவும் நம்பிக்கையுள்ளது. மூன்றாவது சனிக்கிழமை வீடுகளில் தளியல் எனும் நைவேத்தியம் போடுவது வழக்கமாக உள்ளது.          
இவ்வாண்டில் புரட்டாசி சனிக் கிழமைகள்:
2015ஆம் ஆண்டில் புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் சிறப்பு பெறுகின்றன. செப்டம்பர் மாதத்தில் 19 மற்றும் 26 தேதிகளிலும், அக்டோபர் மாதத்தில் 03, 10 மற்றும் 17ஆம் தேதிகளிலும் புரட்டாசி சனிக்கிழமைகளாகும். ஐந்து சனிக்கிழமைகளுக்கும் ஐந்து உபயக்காரர்கள்  குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஐந்து சனிக்கிழமை களிலும் விடியற்காலை 4.00 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு விசுவரூப தரிசனம், கோபூசை  4.45 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் 5.45 மணிக்கு விசேஷ ஆராதனம், அஷ்டோத்திரம், நாமாவளி பிரசாதம்,  நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் மாலை 6.30 மணிக்கு நித்திய பூசை, இரவு 7.00 மணிக்கு விசேஷ பூசை, 7.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீநிவாசபெருமான் சிறப்பு அலங்காரம் மற்றும் புறப்பாடு, உட்பிரகாரம் வலம் வருதல், இரவு 10.00 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். நல்லருள் பெற வருக!
சத்தியலோகத்தில் இருந்து  நான்முகன் பிரம்மா, பூலோகம் வந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார். இதற்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவம் என்று பெயர். திருப்பதியை "வேங்கடம்' என்றும் அழைப்பர். "வேங்கடம்' என்றால்" பாவம்  எரித்து பொசுங்கும் இடம்' என்று பொருள். புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதில் நினைத்தாலே பாவம் தீரும் புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.  திருப்பதி வேங்கடசப் பெருமாளே நம்மலையக மலேசியத் திருநாட்டில், பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடாசலபதியாக எழுந்தருளி காட்சியளிக்கின்றார்.  
இவ்வாண்டின் ஐந்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தரிசித்து  நல்லருள் பெறுவோமாக.

Heart Attack | Tips for Recovering and Staying Well - Kalvicikaram.com

இதயநோய்கள் TOP 10 தவறுகள்! 

ங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள
உணவு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும் என்று பல்வேறு விஷயங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இதயநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்… அது மிகவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவராக இருந்தாலும் சரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இதய நோய்கள் தொடர்பாக இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் உண்மை என, வாங்க பார்க்கலாம்!
1. இளம் வயதுதான் ஆகிறது. இதயநோய் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.
உண்மை: 
இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல… இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாரடைப்பு வந்தால் நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே கண்டறிந்துவிடலாம்.


உண்மை: 
வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.
3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை எடுப்பதால், எதை வேண்டுமானலும் சாப்பிடலாம்.

உண்மை: 
நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது.  ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.
4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதனால் பிரச்னை இல்லை.
உண்மை:
 நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தாலேபோதும், இதய நோய் வராது.
உண்மை: சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.
6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வராது.
உண்மை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. வானவில் நிறங்களில் உள்ள ஏழு வகை காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.
7. பல ஆண்டுளாக உள்ள சிகரெட் பழக்கத்தை திடீரென்று நிறுத்துவதால் இதயநோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியாது.

உண்மை: 
புகைபிடிப்பதை நிறுத்திய விநாடியில் இருந்தே அதன் பலன்கள் உடலுக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எத்தனை வருடங்கள், எத்தனை நாட்கள் புகைபிடித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.
8. இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் வரும்; பெண்களுக்கு ஏற்படாது.
உண்மை: 1984 வரை உலகில் பெண்களே இதய நோய்களால் அதிகமாக இறந்துகொண்டிருந்தார்கள் என்றால், நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். 55 வயதுக்கு மேல், 70 சதவிகித ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய ரத்தநாள பிரச்னைகள், இதய செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 80 வயதில் 83 சதவிகித ஆண்களுக்கும் 87 சதவிகிதப் பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸஸுக்குப் பிறகு, அந்த பாதுகாப்பு அவர்களைவிட்டு போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.
9. இதய நோய் இருந்தால் கொழுப்பையே சாப்பிடக் கூடாது.

உண்மை: 
இதய நோய் இருப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பையும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும், டிரான்ஸ் ஃபேட்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களும் எண்ணெய்களும் போதுமான அளவு சாப்பிடலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்து அல்ல.
உண்மை: அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதே முக்கியம். முதல் அட்டாக் வரும்போது சிலருக்கு மாரடைப்பு வந்ததைக்கூட உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! அடுத்த அட்டாக் உயிரைப் பறிக்கும் எமனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மைல்டு அட்டாக்தானே என்று அசட்டையாக இருப்பது, மரணத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!

பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.
பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
பழைய புத்தகத்தில் இருந்த வரிகள், அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா? அல்லது மாற்றம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல், வணிகவியல், உயிரி-வேதியியல், ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம், பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).
பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).
மாவட்டக்கல்வி அலுவலர்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்'

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித் தார்.புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை விளக்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் அவர் திருவாரூரில் அண்மையில், அளித்த பேட்டி:
புதிய கல்விக் கொள்கை முன்வடிவுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த அவகாசம் போதாது.ஆண்டுதோறும் மத்திய அரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் துறையினரிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு, ஒரு தலைமுறையையே உருவாக்குகின்ற கல்வித் திட்டத்தை உருவாக்கும் போது ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்பைக் கூட்டி கருத்துகளைப் பெற ஏன் மறுக்கிறது?தமிழக அரசு தனது கருத்தை இந்திய அரசுக்குப் பதிவு செய்யும் முன்னர் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அமைப்புகளை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை.
எனவே, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் ஆலோசிக்காமல்கொள்கை முடிவுகளை இறுதிப்படுத்துவதை ஏற்க முடியாது.மேலும், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதிதான் இந்த முன்மொழிவுகள் 11 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பிராந்திய மொழி மட்டுமே தெரிந்த மக்களால், அதைப் படித்து புரிந்துகொள்ள சாத்தியமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட மீதமுள்ள 11மொழிகளில் அதனை மொழிபெயர்த்து வெளியிடவில்லை. எனவே, கால அவகாசத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டும்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக புதிய கல்விக்கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்களை எதிர்ப்பதற்காக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை, 40 அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாகியுள்ளன. தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று மத்திய அரசிடம் வழங்கவுள்ளனர்.அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் மாற்றுக் கல்விக்கான மாநாடு நடத்தி அதில் மாற்றுக் கல்விக் கொள்கையை இக்கூட்டமைப்பினர் வெளியிட உள்ளனர். 

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்

டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
  டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன. சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளன. இந்த துறையில் டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின்ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற தேர்வுமுறைகளில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய !!!

*Enter CPS no*
*password is date of birth(dd/mm/yyyy)*
 *input your update mobile number*

தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!

இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்
அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள் தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆதார் பதிவு தொடங்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை தேசிய மக்கள் கணக்கெடுப்புத் துறையான சென்செஸ் துறை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி (அக்டோபர் 1) தமிழகத்தில் ஆதார் பதிவை தமிழக அரசே கையாளும் என்று சென்செஸ் துறை அறிவித்துள்ளது.
ஆதார் பதிவுசெய்ய மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது. இதுவரை தமிழகத்தில் சுமார் 640 மையங்களில் சென்செஸ் துறை ஆதார் பதிவுக்கான பணியை மேற்கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டத்துக்கு போதிய அளவில் மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் இந்தத் திட்டத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழக அரசிடம் வழங்கப்படவுள்ள ஆதார் பதிவுத் திட்டம் அனைத்து இ - சேவை மையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இனி தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மக்களுடைய ’பயோ மெட்ரிக்’ தகவல்களைச் சேகரித்து, அந்தத் தகவலை ஆதார் ஆணையமான UIDAI -யிடம் வழங்கியபின்னர் அத்துறை ஆதார் அட்டைகளை மக்களுக்கு வழங்கும்.
2015ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் 7 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 852 பேர் வசிக்கின்றனர். இதில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி 6 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்கு இன்னும் ஆதார் வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்
விண்ணப்பிப்பதாகக் கூறி, ஆண்டுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு அரசு தொழில்நுட்ப தேர்வு முற்றிலுமாக நடத்தாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கடந்த 2014ஆம் ஆண்டு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன் தேர்வு முடிவுகள் கால தாமதமாகவே வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள் பத்து மாதங்களாக வெளியிடப்படவில்லை. இப்போது பத்து மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி, ‘இந்தத் தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்தத் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும். மேலும், இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது’ என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல்,
விலையில் மாற்றம் செய்து நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தொழிற்சாலையில் ஆக்ட்அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டுவருகிறது ??

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும் +2 முடித்த மாணவமாணவியர் கவணத்திற்கு,சென்னையில் உள்ள இணைப்பு (ரயில் )பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட்அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டுவருகிறது .......விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் , நம் தமிழகமாணவர்களுக்கு இது
சம்பந்தமானவிழிப்புர்ணர்வை ஏற்படுத்தஉதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்தமாணவர்களுக்கு இதனை பற்றியவிழிப்புர்ணர்வு அதிகம், அதன்காரணமாகதான் கடந்த 5வருடங்களுக்கு மேலாக முழுவதும்வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்மட்டுமே நம் மாநிலத்துக்கு உரியஇடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துபலன் பெற்று வருகிறார்கள் .இதனை தங்களால் முடிந்த அளவுக்குநண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும். ரயில்வே வேலைவாய்ப்பு பற்றியவிழிப்புர்ணர்வு தமிழகமாணவர்களிடத்தில் ஏற்படுத்தஉதவுங்கள் .-               தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்1. Thiruvallur Collector 9444132000044 27661600 27662233 276622992. Chennai 9445419966 9444131000044 25381330 25383962 25228025 25234403 42112110 252280253. Kancheepuram Collector 9444134000044 27237433 27238478 272384774. Vellore Collector 94441350000416 2252345 2252501 2222000 2253034 22280295. Krishnagiri Collector 944416200004343 239500 239400 239100 2393006. Dharmapuri Collector 944416100004342 230500 232300 232800/ 2308867. Tiruvannamalai Collector 944413700004175 233333 233366 2322228. Villupuram Collector 944413800004146 222450 222480 2224709. Namakkal Collector 944416300004286 281101 280111 280222 28110610. Salem Collector 94441640000427 2452233 2452244 2400200 2400700 245296011, Erode Collector 94441670000424 2266700 2262444 226144412. .The Nilgiris Collector 94441660000423 2442344 2442233 244397113. Coimbatore Collector 94441680000422 2301320 2213230 230152314. Dindigul Collector 94441690000451 2461199 2432600 2432133/ 246708215. Karur Collector 944417300004324 257555 257112 255444 25780016. Tiruchirapalli Collector 94441740000431 2415358 2420681 2420181 241192917 Perambalur Collector 944417500004328 276300 224200 27787518. Ariyalur Collector04329 223351 22333119. Cuddalore Collector 944413900004142 230999 230651-55 230666/ 230777 23055520 Nagapattinam Collector 944417600004365 252700 247800 247400 25304821. Thiruvarur Collector 944417800004366 223344 225142 224738 22103322. Thanjavur Collector 944417900004362 230121 230201 230857 23062723. Pudukkottai Collector 944418100004322 21663/ 221624 221690 22169024. Sivaganga Collector 944418200004575 241466 241455 241581 24158125, Madurai Collector 94441710000452 2531110 2532290 253092526. Theni Collector 944417200004546 253676 253626 25362627. Virudhunagar Collector 944418400004562 252525 252345 25250028. Ramanathapuram Collector 944418300004567 231220 221349 23055829. Thoothukudi Collector 94441860000461 2340600 2320050 2326747 234060630. Kanniyakumari Collector 944418800004652 279555 260666 260999 260999.நண்பர்களே இதை ஷேர் மட்டும் செய்து விடாமல் ஒரு printout எடுத்து டைரியில் வைத்துக்கொள்வோம் ,