>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 26 ஜூலை, 2017

ஆகஸ்ட் 5 CRC இரத்து செய்ய JACTTO-GEO கோரிக்கை..

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்
1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது, எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.
2. ஆகஸ்ட் 6 ம்தேதி நடைபெறும் TNPSC தேர்வு, ஆகஸ்ட் 5 நடைபெறும் பேரணிக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC EXAM தேர்வு பணியினை புறக்கணிப்பது.
3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் (பேனர்) தவிர எந்த  ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளை (பேனர்,கொடி) பயன்படுத்த கூடாது.
4. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாநில ஜேக்டோ ஜியோ சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும்.
5. ஆகஸ்ட் 5 பேரணியில் சென்னையில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு refresh பண்ணுவதற்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
6. ஜேக்டோ ஜியோ ஆயத்த கூட்டங்கள் நடைபெறும்போது ஒருங்கிணைப்பாளர் தவிர ஜேக்டோ சார்பில் இருவர்,  மற்றும் ஜியோ சார்பில் இருவர் தலைமையில் நடைபெற வேண்டும்.
7. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அக்குழுவில் ஜேக்டோ 22 சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை எப்படியாகினும் வாரத்தில் ஒரு நாள் அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்றும், வந்தே மாதம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில்நீதிபதி குறிப்பிட்டார்.
ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதிய கே.வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' வகை வினாத்தாளில் கேள்வி எண் 107 இல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? எனக் கேட்கப்பட்டு இருந்தது.அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. ஆனால், அனைத்து பிஎட் பாடப் புத்தகங்களிலும் 'வந்தேமாதரம்' வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்த குழப்பத்தை தீர்க்க 'வந்தே மாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'வந்தே மாதரம்' சமஸ்கிருத வாய் மொழி பாடல் என்றும், ஆனால் முதலில் எழுதப்பட்டது வங்க மொழியில்தான் என்றும் விளக்கம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கின் தீர்ப்பை நேற்று அளித்துள்ளார்.

தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

DSE - MIDDLE TO HIGH SCHOOL தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்புதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு...

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் –
அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு
இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் இணையவழியில் இவ்வருடம் முதல் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் தேர்வுகளை எழுதலாம்.
இத்தேர்வில் பங்கேற்க..
1)   6 முதல் 11 வகுப்பு  வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
2)   தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
3)   தேர்வானது 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9முதல் 11 வரை இரண்டாவது பிரிவாகவும் நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை:
Ø  பள்ளி வழியாக  இணையதளம் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.vvm.org.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Ø  தேர்வுக்கட்டணம் ரூ.100 
Ø  தமிழ் , ஆங்கிலம் என எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
Ø  பள்ளி வழியாக தேர்வு எழுத முடியாதவர்கள் தனித்தேர்வர்களாக எழுத விருப்பம் உள்ளவர்கள் 9942467764 என்ற வாட்சப் எண்ணிலும் மற்றும் vvmtamilnadu@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நடைபெறும் முறை:
Ø  தேர்வு இணையவழியில் நடைபெறும் ஸ்மார்ட் போன், டேப்லட், மடிக்கணினி ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.
Ø  மாணாக்கர்களிடம் அவர்களது பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது. VVM செயலி மூலம் தேர்வு எழுதலாம்.
Ø  மாணாக்கர்கள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
Ø  தேர்வுக்கு முன்னர் 5 க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாட்களில் அவற்றை எழுதி பார்க்கலாம்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்:
பள்ளி அளவில்:
பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில்:
மாவட்ட அளவில் (6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Ø  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Ø  , மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  அழைத்துச் செல்லப்படுவர்.
மாநில அளவில்:
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.
Ø  இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.
Ø  120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு
ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.
.
Ø  தேசிய அளவிலான ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணாக்கர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
தேசிய அளவில்:
Ø  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.
Ø  தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.
Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கபபடும்.
Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
Ø  இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி:  20-09-2017.(செப்டம்பர் 20,2017)
தேர்வு நடைபெறும் நாள்   :   26-11-2017 ( நவம்பர் 26, 2017)
குறிப்புகள்:
மேலும் தகவல்களுக்கு  www.vvm.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
கு.கண்ணபிரான்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்
செல்: 8778201926,9942467764
Email : vvmtamilnadu@gmail.com

தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது?


(பள்ளிக்கு ஓர் கணினி ஆசியர் அவசியம் அல்லவா)
கோவை : தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார் பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பழைய கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக, புதிய கம்ப்யூட்டர்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபையில் தெரிவித்தார். இது, தலைமையாசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், தொடக்கப் பள்ளிகளுக்கு அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. தனியார் பிரவுசிங் சென்டர்களில், கல்வித்துறை கோரும் விபரங்கள் அனுப்புவதால், தகவல்களின் ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளது.ஈராசிரியர் பள்ளிகளில், கணினிசார் அலுவலக பணிகள் மேற்கொள்ள ஒருவர் செல்வதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளின் நிலையை, வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு, மோசமாக உள்ளது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில், புதிய மாணவர்களின் விபரங்களை பதிவு செய்தல், நலத்திட்ட பொருட்களின் விபரங்கள், உதவித்தொகை திட்டங்கள் என, கல்வித்துறை சார்பில், புள்ளிவிபரங்கள் அளிக்குமாறு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இ-மெயில் அனுப்பப்படுகிறது. இதற்கு, பதிலளிக்க கம்ப்யூட்டரோ, இணையதள வசதியோ இல்லாததால், தலைமையாசிரியர்கள் பெரிதும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:கல்வித்துறை திட்டங்களால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. இதை தக்க வைத்து கொள்ள, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.தமிழகத்தில், 70 சதவீத தொடக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கிடையாது. இரு வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், அனைத்து வகுப்பு மாணவர்களையும் அருகருகே அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. இதை அறிந்தும், கல்வித்துறை அனைத்து விபரங்களை இ-மெயில் அனுப்புமாறு உத்தரவிடுவது கேலிக்கூத்தாக உள்ளது.தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு செலவழிக்கப்படும் பணத்திற்கு, ரசீது சமர்ப்பித்தாலும், திருப்பியளிப்பதில்லை. டிஜிட்டல்மயத்தை நோக்கி, அனைத்து துறைகளும் வேகமாக நகர்கின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், இணையதள வசதி ஏற்படுத்தி தர, கல்வித்துறை முன்வர வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 25 ஜூலை, 2017

G.O.No.220 Dt: July 20, 2017 -Pension – The Tamil Nadu Pension Rules, 1978 – ¬ Proviso to Rule 9 (1) (b) – Omitted - Orders – Issued...



'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'




புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,
'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

போய் வா 'பெயின்ட்'டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்!


பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது.

கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகக் கூடுதல் வசதிகளுடன் சில அப்டேட்களையும் அறிமுகப்படுத்தியது. இந்த விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்டில் கடந்த 32 வருடங்களாக உபயோகத்தில் இருந்த பெயின்ட் அப்ளிகேஷன் ப்ரோகிராமை நீக்கையுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. 'பெயின்ட்', 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் மாநிலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்ட வினாத்தாள்கள்.. ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்!

சென்னை: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜவடேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீர் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதுபவர்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே கேள்வித்தாள் மாநில மொழிகளில் வழங்கப்படும்.
இந்த ஆண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதியவர்களுக்கு வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்களை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. வங்க மொழியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தாள்களை விட கடினமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு முதல் மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த பிரச்னை எழாது. எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.

அதே போல் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது அது பேச்சு வார்த்தைமட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கேட்கப்பட்ட நீட் கேள்வித்தாளும் கஷ்டமானதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். நீட் தேர்வில் விலக்கு பெற்றுத்தருவதில் மாநில அரசு தோல்வியடைந்த நிலையில், கேள்வித்தாளும் கஷ்டமாக கேட்கப்பட்டதால் தமிழக மாணவர்களுக்கு இந்த வருடம் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள் 

விருதுநகர் | 27.07.2017 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

திங்கள், 24 ஜூலை, 2017

6,7,8th Std | Term Wise English - Simple Notes


8th Std | Term Wise English Simple Notes - Bharathidhasanar Matric. Hr.sec.School - Arakkonam - Click Here

7th Std | Term Wise English Simple Notes - Bharathidhasanar Matric. Hr.sec.School - Arakkonam-Click Here

6th Std | Term Wise English Simple Notes - Bharathidhasanar Matric. Hr.sec.School - Arakkonam - Click Here

HOW TO UPLOAD YOUR SCHOOL DETAILS IN SCHOOL EDUCATION WEBSITE - INSTRUCTIONS

பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள் 



புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.




குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை. எனவே, வல்லுநர் குழுவின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டி TN CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம் ..

கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் பெறுவது எப்படி ?






பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு