>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 19 ஜூலை, 2017

அரசுக்கு கோரிக்கை விடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

தமிழகம் முழுவதும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசுத்துறை ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கார்களிலும், வாடகை வேன்களிலும் புறப்பட்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அலுவக நேரம் முடிந்து மாலை 5 மணிக்குப் பிறகே இப்போராட்டம் துவங்கியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தொடர் முழக்கங்களை இட்டவாறு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
அதில், தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் அமுல்படுத்தியாக வேண்டும். ஆசிரியர்ர, அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு முன்னதாகவே 20 சதவிகித இடைக்கால நிவாரணத்தை அரசு கட்டாயமாக வழங்கிட வேண்டும். அதிகப்படியான ஆசிரியர் அரசு ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் விதமாக, எங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டாய்வு மற்றும் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்..

RECORDS LIST TO BE SUBMITTED BY HM DURING INSPECTION (2017 -18)



சி.ஏ., இறுதி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை.....

ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில், வேலுார் மாணவர் இரண்டாம் இடமும், சென்னை மாணவி ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த தேர்வில், மொத்தம், 23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, ஆடிட்டர் பணியில் சேர, பட்டதாரிகள், சி.ஏ., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதலில், பொதுத்திறன் தேர்வான, சி.பி.டி., நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஐ.பி.சி.சி., என்ற ஒருங்கிணைந்த போட்டி தேர்வு; அதன் பின், ஆடிட்டிங் நிறுவனத்தில், மூன்று ஆண்டு தொழில் பயிற்சி; இதைத்தொடர்ந்து, இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, மே மாதம் நடந்த இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், இரண்டு பாடப்பிரிவுகளில், 10 ஆயிரத்து, 276 பேர், சி.ஏ.,வாக தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில், 22.98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

அகில இந்திய அளவில், மஹாராஷ்டிரா மாநிலம், டொம்பிவாலியை சேர்ந்த, ராஜ் பரேஷ் ஷேத் என்பவர், மொத்தம், 800க்கு, 630 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தின் வேலுார் மாணவர் அகத்தீஸ்வரன், 602 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும், மும்பையை சேர்ந்த கிருஷ்ண பவன் குப்தா, 601 பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.வேலுார் மாணவர் அகத்தீஸ்வரன், சென்னையிலுள்ள, எம்.டி.எஜூகேர் நிறுவனத்தில், இறுதி தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். அதேபோல, சென்னை பல்கலையின் முன்னாள் மாணவி, கொரட்டூரை சேர்ந்த ஐஸ்வர்யா, 584 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். 
தனிப்பயிற்சி இன்றி சாதித்த மாணவி ஐந்தாம் இடம் பெற்ற, சென்னை மாணவி ஐஸ்வர்யா, கொரட்டூர் பக்தவத்சலம் வித்யாஷ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின், முகப்பேர் டி.ஏ.வி., பள்ளியில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், வணிகவியல் மற்றும் கணிதம் இணைந்த பாடப்பிரிவில், 485 மதிப்பெண் பெற்றுள்ளார். தொடர்ந்து, சென்னை பல்கலையில், பி.காம்., படிப்பை தொலை நிலையில் முடித்துள்ளார். ஐ.பி.சி.சி., போட்டி தேர்வுக்காக, சென்னையிலுள்ள, எம்.டி.எஜூகேர் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பின், மூன்றாண்டு தொழிற்பயிற்சிக்காக, பி.பி.விஜயராகவன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

இறுதி தேர்வு குறித்து, ஐஸ்வர்யா கூறுகையில், ''நான் பணியாற்றிய நிறுவனத்தில், இறுதி தேர்வுக்கு, செய்முறையாக பயிற்சி கிடைத்தது. மற்ற நேரங்களில், ஆன்லைன் வகுப்பு மற்றும் வீடியோ பாடங்களை பார்த்து பயிற்சி பெற்றேன்; தனியாக பயிற்சி மையத்துக்கு செல்லவில்லை,'' என்றார். இவரது தந்தை, ராஜன், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராகவும், தாய் சித்ரா, இல்லத்தரசியாகவும் உள்ளனர்.

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

சென்னை: ''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்துள்ள ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு, 10 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால், அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்களை பெறும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது. இதற்கு, ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அந்த ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களை சுலபமாக பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு கோரிக்கை விடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

தமிழகம் முழுவதும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசுத்துறை ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கார்களிலும், வாடகை வேன்களிலும் புறப்பட்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அலுவக நேரம் முடிந்து மாலை 5 மணிக்குப் பிறகே இப்போராட்டம் துவங்கியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தொடர் முழக்கங்களை இட்டவாறு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
அதில், தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் அமுல்படுத்தியாக வேண்டும். ஆசிரியர்ர, அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு முன்னதாகவே 20 சதவிகித இடைக்கால நிவாரணத்தை அரசு கட்டாயமாக வழங்கிட வேண்டும். அதிகப்படியான ஆசிரியர் அரசு ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் விதமாக, எங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!


ராமநாதபுரம் அரண்மனை முன்பு, ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதிய மாற்றம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவதற்கு முன்னதாக, 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சேகர், முருகேசன், ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி, மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தங்களின் அடுத்தகட்ட போராட்டமாக, ஆகஸ்ட் 5-ல் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
அதேபோல, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி

அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி
சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில்ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளைமாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்துவருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘ கூறியதாவது:-‘
ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன்.
இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.எனது கணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடக்க கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள்!!

தொடக்க கல்வி - ஆண்டுதோறும் விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு - பாராட்டு சான்றிதழ் வழங்குதல்- சார்பு இயக்குனர் செயல்முறைகள்!!...

அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு..

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 
மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. 
மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம் போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. 
இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

New curriculum frame work Invitation - Participants list state level - Proceedings

புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு -பங்கேற்பாளர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பிதழ்

ஈரோடு புத்தக திருவிழாவில் நமது மதிப்புமிகு கல்வித்துறை செயலர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்

1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )

2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா


3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா

6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)

7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா

8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா

9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)

10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா....

MONTHLY REPORT (MR) FORMAT DOWNLOAD - PDF



+ 1 New question format design.




+ 1 புதிய வினாத்தாள் வடிவமைப்பு விவரம்.



ICT National Awards for Teacher - Innovative Practices and Education for Schools and Teacher Education Institutions | Information Bulletin.

12th MATHS MINIMUM STUDY MATERIALS (NEW)

11 th PUBLIC EXAM - MONTHWISE SYLLABUS - ALL SUJECTS

+1 பொதுத் தேர்வு - மாதவாரியாக பாடத்திட்டம்  வெளியீடு



RMSA - NEW TYPE OF LESSON PLAN - MODEL

புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு - செய்தி வெளியீடு...