>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 23 ஜூன், 2018

5th Std - Term - I - Spreading Of Seeds - Video Lessons.... EM ( 4 videos)

5th Std - Term - I - Spreading Of Seeds - Video Lessons.... EM ( 4 videos)


Part - I 

Dispersal Of Seeds In Plants - Part -I



Part - II 
Exploding Of Seeds Pods...


Part - III

Dispersal Of Seeds Thorugh animals and birds


Part -IV
Seeds Dispersal - Explination 

செவ்வாய், 19 ஜூன், 2018

Inspire Award பதிவு செய்வது எப்படி?




AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!


AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!


குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்! எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தற்போது நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் aiims exams.org என்ற இணையதளத்தில்...

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப தேதி அறிவிப்பு

சென்னை: 'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின், www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

TENTATIVE SCHEDULE FOR ONLINE COUNSELING (ALLOTMENT PROCESS) FORNEET 15% AIQ/DEEMED CENTRAL UNIVERSITIES & ESIC (MBBS /BDS) SEATS 2018

P.ET SYLLABUS | CLASS 1 TO 12

Flash News : CTET - :ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு!

சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை: 


வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. 


விண்ணப்ப பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 43,935 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 43,935 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் மாலை 5 மணி வரை 43,935 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

19.06.2018 ன் படி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுதூர்,சிவகாசி கல்வி மாவட்டத்திலுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!!!


DSE- NEW SYLLABUS MATHEMATICS TRAINING AND DISTRICT RESOURCE PERSON NAME LIST | DIR PROCEE | DT.19.06.2018

DSE- NEW SYLLABUS ENGLISH TRAINING AND DISTRICT RESOURCE PERSON NAME LIST | DIR PROCEE | DT.19.06.2018

DSE- NEW SYLLABUS SCIENCE TRAINING AND DISTRICT RESOURCE PERSON NAME LIST | DIR PROCEE | DT.19.06.2018

ஞாயிறு, 17 ஜூன், 2018

EMIS  பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக....(வீடியோ லிங் இணைப்பு)

EMIS  பணிகள்  தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்  தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.

*அப்பணிகள் செய்ய உதவியாக*

1. *Emis 2018 new entry demo video*
*(முதல் வகுப்பில் புதியதாக சேரும்  மாணவர்களை EMIS ல் பதிவு செய்வது எப்படி?)*

me>

2. *Admit Request demo video*
*(வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி?)*


*🌟என 2  _you tube link_ இத்துடன்  அனுப்பப்படுகின்றது.*
*(கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து விவரம் அறியவும்)*
    
*Emis 2018 new entry demo video link

Click Here - Emis 2018 new entry demo video

*Admit Request demo video Link👇👇👇*

Click Here - Admit Request demo video


*பிற பள்ளி மாணவர்:*
*பிற பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாணவர் _TC யுடன் வந்தால் அவரின் Emis எண் கொண்டு பள்ளியில் emis ல் Admit செய்யவும்_* .

*Emis எண் இல்லாமல் TC யுடன் வரும் மாணவரின் பள்ளி பெயரை கேட்டு அறிந்து மாணவர் படித்த பள்ளி Dise எண் கண்டுபிடித்து பின்னர்  student search option வழியே மாணவன் எண் கண்டறிந்து _Raise request தந்து_ emis பதிவில் சேர்க்கவும்.*

*அதன்படி பணிகள் செய்து 100% துல்லியமாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.*

*(EMIS தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு Emis Co-Ordinators ஐ தொடர்புகொள்ளவும்)*

மேல் மலையனூர் ஒன்றியம்.

1.N.சந்தனகிருஷ்ணன்  இ.நி.ஆ.   PUMS   தாயனூர்.CELL NO:9442470946

மதன் ப.ஆ.கணிதம்.PUMS சிறுதலைப்பூண்டி CELL NO:9865563289.

*🌟உங்கள் Block, District Co-Ordinators Contact Number தேவை எனில் EMIS வலைதளத்தில் Username, Password Enter செய்து Login செய்யும் இடத்திற்கு கீழே Co-Ordinators list என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் District, Block Co-Ordinators Name and contact number list இருக்கும்*

புதன், 13 ஜூன், 2018

நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார்.


 நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


 இரண்டு மாதத்தில் சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹14 ஆயிரமாக உயர்வு!

"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


 மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் ₹650லிருந்து ₹900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க₹25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.........

கல்லூரி,பல்கலைக்கழக பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதிய நடைமுறை அறிமுகம். தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.

Tiruvannamalai District Surplus Teacher Name & School List​ - All Subjects

திருவண்ணாமலை மாவட்டத்தில் உபரியாக உள்ள ஆசிரியர் பெயர் பட்டியல் மற்றுப் பணியிடங்களின் பள்ளிகளின் விவரம்​

புதன், 6 ஜூன், 2018


1,2,3,4,5 PRIMARY TIME TABLE - PEDAGOGY METHOD

FLASH NEWS :- MIDDLE SCHOOL HM TO BEO PANEL | RELEASED

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410 முடிய)



சத்துணவில் முட்டை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க திட்டம்

சென்னை; சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ண விரும்பாத சிறுவர்களுக்கு ரூ.3.50 மதிப்பிலான வாழைப்பழம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஒரு வாழைப்பழத்தின் செலவினத்தை ரூ.1.25-லிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். 

வியாழன், 31 மே, 2018

புதன், 30 மே, 2018

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 

உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

New DEO Office Lists & Contact Numbers 2018





இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடர் கல்வித்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள்....

மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்!

அரசு பள்ளிகளை LKG, UKG வகுப்புகளில் துவக்க நடவடிக்கை

*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.


*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.

*அரசு பள்ளி ஆசிரியருக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு

*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.

*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்
சட்ட பேரவையில்
மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான, LKG மற்றும் UKG வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும் செம்மலை கூறினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரோடு ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு இணைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்.....

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :


இந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார்.  தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம். மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT -Official Link direct link updated

Image result for 11 TH RESULT

HSE ( +1 ) First Year -Examination Results Expected on 30th May 2018 at 09:00 Hrs.


கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

  • நேர்முக உதவியாளர் பத விக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE 
  • கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து )CLICK HERE 
  • இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

FLASH NEWS- 2018-19 TEACHERS COUNSELING GO -403 DATE-29.05.2018 PUBLISHED

செவ்வாய், 29 மே, 2018

'கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

 கட் ஆப் மதிப்பெண் எப்படி தயார் செய்வது என்பது குறித்தும், எவ்வாறு கல்லூரிகளை, பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பது என்பது குறித்தும் வீடியோவுடன் கூடிய ஆடியோ விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.

வாட்ஸ் அப் மற்றும் கல்வி இணைய தளங்களில் உலா வலம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி என்ற தகவல் உண்மையா?


வாட்ஸ்அப் மற்றும் கல்வி இணையதளங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறும் என்று செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.



ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
காரணம் என்னவெனில் இது கடந்த ஆண்டு வெளிவந்த செய்தியாகும்

கடந்த ஆண்டு இதே தேதிகளில் பயிற்சிகள் நடைபெற்றது

மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். இது கடந்த ஆண்டு வெளியானது. இது சம்மந்தமாக எந்த ஒரு ஆணையும் இதுவரை இந்த ஆண்டு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'

'பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.


பிளஸ் 1 வகுப்பில், முதல், இரண்டாவது, மூன்றாவது குரூப்களில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சில பள்ளிகளில், மாணவர் விரும்பிய குரூப் வழங்க, நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டையும் நடத்துகின்றனர். 

இத்தவறு நடக்கக்கூடாது என்பதற்காக, கல்வித்துறை இயக்குனர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றிக்கையில், 'மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

'ஸ்டார்ட் அப் இந்தியா' மாணவருக்கு அங்கீகாரம்....

கோவை : மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணரும் வகையில், 'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது. 


இதில் பங்கேற்கும் மாணவர்கள், செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்தால், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுத்தொகையுடன், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வரும் கல்வியாண்டு முதல், சிறந்த படைப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், மாணவர்களின் படைப்புகள் சந்தைப்படுத்தப்படவுள்ளன. 

இதற்கு பள்ளி வாரியாக, சிறந்த மூன்று மாணவர்களின் படைப்புகள் மட்டும், ஜூன், 30ம் தேதிக்குள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து, படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம் குறித்து, அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ''அரசு பள்ளி மாணவர்கள், இத்திட்டத்தில் சேர ஊக்குவிப்பது அவசியம். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு 2018 - 11,268 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண் "ஜீரோ" - விளக்கம் கோரி உத்தரவு - செயல்முறைகள்








அரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.-அமைச்சர் செங்கோட்டையன்

தற்போது அரசு பள்ளிகளை மூடும் முடிவு இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.


 புதிய பாடத்திட்டத்தில் பிழைகள் இருந்தது. தற்போது, வெளியிடப்படும் புத்தகத்தில் எந்த பிழைகளும் இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை பார்த்து சிபிஎஸ்இ பள்ளிகளே வியந்து போய் உள்ளன. அதைப்போல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும் முறை-QR code உபயோகம்


உங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும்.  அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.

HSC - Supplementary Exam - June 2018 - Director Order & Time Table Published

SSLC - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published



SSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு

Flash News : G.O Ms 108 (28.05.2018) - பள்ளிக்கல்வி - புதிய மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - அரசாணை வெளியீடு.