>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 6 நவம்பர், 2017

TNOU B.ED ADMISSION 2018

தமிழ்நாடு பல்கலையில், நவ., 3௦ வரை, பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலை பதிவாளர்,விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
'இதன்படி, நவ., ௩௦ வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு ரத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு....

'வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை' என்ற, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர், செல்வம் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும், 'கிராம கணக்குகளும், நடைமுறைகளும்' என்ற தலைப்பில், 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில், இந்த கேள்விகள் இடம்பெறாது.குரூப் - 4 தேர்வுக்கு, 18 வயது நிரம்பினால் போதும்.
ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு, 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு, இரண்டு தேர்வையும் இணைத்துநடத்துவது, வி.ஏ.ஓ.,க்களை மேன்மைப்படுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல்.மண்ணையும், மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக, வி.ஏ.ஓ., உள்ளார். 
பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு, 21 வயது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து, 18 வயது என, அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால், 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர்.ஒவ்வொரு நபரும், விண்ணப்ப கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். 
அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வால் அரசுக்கு, 15 கோடி ரூபாய் செலவாகிறது என்பது முற்றிலும் தவறானது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் - 4 ஆகியவற்றை இணைத்து, தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

TWO WHEELER LICENSE இனி கஷ்டம் விதிமுறைகளை கடுமையாக்க உத்தரவு....

இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கும்படி, போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். 
ஒவ்வொரு ஆண்டும், இருசக்கர வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கு, சாலை விதிகளை அறியாமல், இரு சக்கர வாகனங்களை இயக்குவதே காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், 'இருசக்கர வாகனங்களை விற்போரும், அதற்கான ஓட்டுனர் உரிமம் வழங்குவோரும், விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்' என, போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, சாலை விதிகள் குறித்து தெரிவதில்லை. அதனால், நாளுக்கு நாள் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதும், விபத்துக்கான காரணங்கள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கும், வாகன விற்பனையாளர்களுக்கும் புரிய வைப்பதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரு சக்கர வாகன விற்பனையாளர்களுக்கு, போக்கு வரத்து கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவு:வாகனத்தின் தன்மை, சாலை விதி, மீறுவோருக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, குறும்படமாக வெளியிடும் வகையில், 'டிவி'யுடன் கூடிய, 'சாலை பாதுகாப்பு மையம்' என்ற அமைப்பை, விற்பனையகத்திலேயே, வரும், 10ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும்.
அம்மையத்தில், பயிற்சி பெற்ற பின், வாகன உரிமம் வழங்கலாம் என்ற, பரிந்துரைக் கடிதத்தை இணைத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இம்மையத்தை, வரும், 15ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

BRTE TRANSFER COUNSELLING 2017/18 - TRANSFER APPLICATION

ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க

12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
 இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
 இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
 பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும்.
 அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.
 2017-ம் ஆண்டுக்கான 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது.
 தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக தமிழில் நடத்தப்படுகிறது.
 இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், இணையதளத்தில் (www.tpo-india.org) நவம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
 தமிழ், தெலுங்கில் தேர்வு எழுதி வெற்றிபெறும் ஆசிரியர்கள் 2 பேருக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்படும்.
 தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு டெல் நிறுவனம் சார்பில் கணினியும் பரிசாக வழங்கப்படும்.
 'எடில் கிவ்' நிறுவனம் சார்பில், போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
நன்றி : தி இந்து

தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பொறியியல் பட்டங்கள் ரத்து -உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

அரசாணை -652 -நாள் 31.10.2017-BRTE's TRANSFER PROCEEDINGS


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நவம்பர் 12 ந் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியத்தில் மாணவர்களுக்கான ஓவியபோட்டி..

அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்க வேண்டும்-அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!!


பரிதவிப்பில் ஆசிரியப் பயிற்றுநர்கள்!!!

70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!


நவம்பர் 3 அல்ல நவம்பர் 25 அன்று தேர்வுகள் நடைபெறும்!

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர் தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது -சார்பு!!!


வேலூர் - இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் குறைந்த விலையில் Smart Board கண்டுபிடிப்பு



NTSE EXam to be held on 4-11-2017 has been postpond to 18-11-2017 due to heavy rain.


pp 750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய விரைவில் ஆணை ??? IF PP is elligible for Revision add with basic pay

இனி CRC ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் பயிற்றுநர்களே செயல்படுவார்கள்..

இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தலைமை ஆசிரியர் கூட்டம் நடத்துதல் சார்ந்த உத்தரவு...

கணித உபகரன பெட்டியில் உள்ள பொருள்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்

NMMS EXAM - 2017- AIDDED SCHOOL USER NAME AND PASSWORD!!!

Click here

ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ??எப்போது வரும்???

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை 
உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
 இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார்.
( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
 நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன்

7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!!!

✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.*
ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*
✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.
✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.
✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*
✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில், 
6, 7 மற்றும் 8-ம் வகுப்பில்படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ‘நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரைபயன்படுத்தவும்’ என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெற வுள்ளது.இதில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அனைத்துப் பள்ளி களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

ஞாயிறு, 5 நவம்பர், 2017

PP 750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்யபடாது - விளக்கம்

ஊதிய குழு அரசாணை 303, பக்கம் 4 ல் S.No. 14 - இல் PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய படாது என குறிப்பிடப்பட்டுள்ளது .
வ.எ.14 ல் Junior Assistants/Accountants க்கு PP 60 shall be absorbed while fixing the pay in the revised pay structure என உள்ளது.
எனவே அவர்களுக்கு PP 60 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
அதற்காகவே IF PP IS eligible for Revision add with Basic pay என உள்ளது.
இந்த PP 60 ஐ குறிப்பிட்டு வ.எ.14 ல் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பொதுவாக PP ஐ பக்கம் 9 ல் 3(i) existing basic pay means என குறிப்பிடும்போது மற்றும் 3(viii) ல் basic pay in the revised pay structure means என குறிப்பிட்டு விளக்கியுள்ளதிலும் கணக்கில் கொள்ளப்படாததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைக்க குறிப்பிட்டு ஆணை வந்தால்தான் இணைத்திட முடியும்.
Epay roll ல் குறிப்பிடப்பட்ட்டுள்ளது இந்த PP 60 என்பதே ஆகும்.
 அதனையே if possible என குறிப்பிட்டுள்ளது
( பக்கம் 4 ல் PP 60 possible என்பதற்கான விளக்கம் உள்ளது )

பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை

வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி
நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

கனமழை விடுமுறை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா??? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!


பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள
நிலையில் இதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, நெல்லை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழகம், புதுச்சேரியில் 2 அல்லது 3 நாள்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "தொடர் மழை காரணமாக மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பதுகுறித்து அரசு பரிசீலிக்கும்" என்று கூறினார்.

Teachers list for Text book writing workshop

SCERT-புதிய பாடத்திட்டம்-பாடபுத்தகம் உருவாக்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்


வெள்ளி, 3 நவம்பர், 2017

ஆசிரியர் பயிற்சி தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு என்று குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், சில வரையறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கும், பிற படிப்புகளை தொடங்குவதற்கும் ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அனுமதியை பெறவேண்டும்.

ஆனால், கவுன்சிலின் அனுமதியை முறைப்படி பெறாமல் சில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாணவர்களை சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த பிரச்னையை தீர்க்கவும் 1993ல் கொண்டு வரப்பட்ட தேசிய ஆசிரியர் கவுன்சில் சட்டத்தை மாற்றி அமைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு எடுத்தது. இந்நிலையில், மாணவர்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி வரையில் அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற நிறுவனங்களில் படித்தவர்கள் அரசு வேலைவாய்ப்புகளில் சேர வழி ஏற்பட்டுள்ளது.

DGE-NMMS-2017 மாணவர்கள் தேர்வுக்கட்டண விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான இணைஇயக்குநர் செயல்முறைகள்!!!



6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

NMMS MATHS BOOK

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் நெடிமோழியனூர் அரசுப்பள்ளியில் குளிரூட்டப்பட்ட மின்னணு வகுப்பறை தொடக்கம்




தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது.
தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு...

வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர்.
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல்,வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

EMIS - அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடையாள அட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முரைக்கடிதம்.


கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்....

NMMS EXAM ONLINE APPLY TUTORIAL IN TAMIL

Click here...

Epayroll ready for fixation for New Pay Revision

DGE- தேசிய திறனாய்வு தேர்வு (NTSE EXAM 2017) - நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது-அறிவுரைகள் வழங்குதல் சார்பு

CPS MISSING CREDIT 2017 - 18 STEP by STEP PROCEDURE....

FLASH NEWS : NMMS - NEW PASSWORD 2017-18 - ALL DISTRICT & BLOCKS

CPS - RATE OF INTEREST FROM 01.10.2017 - ORDERS ISSUED

G.O No. 330 Dt: November 01, 2017  -PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October 2017 to 31st December 2017 - Orders - Issued.




இறுதி வரை தங்கள் கொள்கை முடிவுதான் என்ன?



Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை (03.11.2017)

கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு  (03.11.2017) விடுமுறை -
 ( சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவள்ளூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* புதுக்கோட்டை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்விசார் ஆவணங்களிலும், மாணவர்களின் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. உதவித்தொகை திட்டங்கள், இலவச திட்டங்களுக்கு கூட, மாணவர்களின் அடையாள எண்ணாக, ஆதார் எண் குறிப்பிடப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, தகவல்கள் முழுமையடைகின்றன. எனவே, ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண் பெறுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இயக்குனரின் சுற்றறிக்கை, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடுவோரின் விபரங்களில், ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களின் பெற்றோரிடம் கூறி, விரைவில் பெற்று, ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம்' என்றனர்.

17 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி'

கோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு, நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுக்க, கடந்த 2015-16 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்போது இலவச லேப்டாப் வினியோகிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 131 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மூலம், நேரடியாக லேப்டாப் வினியோகிக்கப்பட்டது. அசல் மதிப்பெண் சான்றிதழ் பின்புறம், லேப்டாப் பெற்றதற்கான குறிப்பை, பதிவு செய்து மாணவர்களுக்கு வினியோகிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'இலவச லேப்டாப் பெற, தகுதியுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளில் இருந்து தகவல் அளித்துள்ளோம்.இவர்கள், தற்போது கல்லுாரிகளில், இரண்டாமாண்டு படித்து வருவதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதில், காலதாமதம் ஏற்படும். எனவே, வரும் ஜனவரி மாதம் முடிய, இலவச லேப்டாப் விநியோகிக்கப்படும்.இதனால், மாணவர்கள் பதற்றம் கொள்ள தேவை யில்லை' என்றனர்.

நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்....

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
'ஹெல்ப் லைன்'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், 'ஹெல்ப் லைன்' வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.