>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 19 அக்டோபர், 2017

6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர்.
சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.
கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும்.
சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். “ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை.
இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும்.
நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார். பணி நியமனம் குறித்து விளக்கத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அளித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல்துறை இயக்குனர் திரிபாதி நன்றி

NEET - 2018 | ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. 

BRTE:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும்தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது.
மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன.மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர் அழைப்பு

'சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், அவர் கூறியதாவது:பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அதில், சில கட்டடங்கள் சேதமடைந்தும், சில பயன்பாட்டுக்கு இல்லாமலும், உள்ளன. அதுபோன்ற கட்டடங்கள், சீரமைக்கப்படுகின்றன. தேவையானால், இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்படும். அதுபோன்ற கட்டடங்கள் இருந்தால், தகவல் தெரிவிக்கலாம்.
பள்ளி மாணவர்கள், செடி நட்டு வளர்த்தால், அவர்களுக்கு, 5 மதிப்பெண் வழங்கப்படும் என்ற உத்தரவு, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. 'நீட்' தேர்வுக்காக ஆந்திராவில் பயிற்சி முடித்துள்ளவர்கள், தமிழத்தில் விரைவில் பயிற்சியை துவக்க உள்ளனர்.

சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு....

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. தற்போது கேள்விகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு  வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபம் அல்லது தவறான விடைகள் இருந்தால், தேர்வு எழுதியவர்கள்  20ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள் அடங்கிய மனுக்கள் தபால் மூலமோ அல்லது  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் போது, தகுந்த புத்தகங்கள் அல்லது  வழிகாட்டிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 18769  பட்டதாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடந்தது. 
இந்த சான்று சரிபார்ப்பின்போது கலந்து  கொள்ள இயலாத 701 பேருக்கும், 2017ம் ஆண்டில் பி.எட் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட் சான்று அளிக்காத 535 பேருக்கு மீண்டும் சான்று  சரிபார்ப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நபர்கள் 25ம் தேதி முதல் 27ம் தேதி  மதுரையில் உள்ள நிர்மலா மகளிர் மேனிலைப் பள்ளியிலும், விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப்  பள்ளியிலும் நடக்கும் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி  இயக்குநர் நிலை -1 காலிப் பணியிடங்கள் 3375 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி  நியமனத்துக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிற துறைகளில் உள்ள 149 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு சென்னை  அசோக் நகர் மகளிர் மேனிலைப் பள்ளியில் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. 
மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர். 
எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.
தமிழ் கட்டாயம் : இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

ஏழாவது ஊதியக்குழு - ஊதிய நிர்ணயம் செய்தலுக்கான படிவம் ( தமிழில் )

Prepared by,
Mr N.VELMURUGAN M.Sc., B.Ed.,M.Phil.,
BT ASST IN SCIENCE
GHS,
NO.1 KOTHUR,
VELLORE DT

2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!

தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர்.


இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. 
இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு
பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. 
இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. 
இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். 
அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 
நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 
வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும். 
அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார்.

அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு அறிவிப்பு!!!

ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு...

"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் "

ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.
ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர்.
அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி 2017 நவம்பர் 2 மற்றும் 3 அன்று இரண்டு கட்டமாக சார்ந்த குறுவள மையத்தில் நடைபெறுகிறது.....




கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர்.
அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு வழங்க வேண்டியதுஅரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது இல்லை.இதற்கு காரணம் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது.
தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. எதிர்காலத்தில் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால்தான் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.79.5உலகின் மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 10.9 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது.40 உலகளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015ன் படி, 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2000ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். உலகில் இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 - 34 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பாதி பேர் பெண்கள்.

NEW HRA SLAB IN SINGLE PAGE | TN 7 Th PAY COMMISSION

CONVEYANCE ALLOWANCE TO VISUALLY CHALLENGED, LOCOMOTOR DISABLED AND HEARING IMPAIRED INCREASED FROM RS 1000 TO RS 2500 AS PER G.O 307 DATED ON 13.10.2017

G.O MS ;306 :7TH PAY COMMISSION NEW REVISED PAY ALLOWANCE - OFFICIAL ORDER PUBLISHED

பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்கள் வெளியாகும்: செங்கோட்டையன்....

பிளஸ் 2 போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் இணைந்து பயில http://www.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்கள் வெளியாகும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

TN 7th Pay - HRA GO Released - G.O.Ms.No.305 Dt: October 13, 2017

HRA G.O RELEASED-G.O.Ms.No.305 Dt: October 13, 2017 OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Issued
# HRA SLAB GO 305 - Click Here
# GO 306 - Click Here
# GO 307 - Click Here

SPD PROCEEDINGS-TECHNO CLUB COMPETITION -FOR STUDENTS AT BLOCK DISTRICT LEVEL ON INTEGRATION USAGE OF TECHNOLOGY REG....



வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக அரசுப்பள்ளியில் குறைந்த செலவில் "ஸ்மார்ட் கிளாஸ்" தொடங்கிய பள்ளி

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம்,
சிந்தகாமணிபெண்டா அரசு நடுநிலைப்பள்ளியில்ஆங்கில பட்டதாரிஆசிரியர் A.அருண்குமார்  அவர்களின் முயற்சியினால் குறைந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டது. இம்முறையில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலம் எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆசிரியரை தொடர்பு கொள்ள 9786884566

Click Here Video

தொடக்கக்கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2017-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்...



TN 7th PAY COMMISSION - ALL PAY MATRIX FOR ALL PAY BANDS IN SINGLE PAGE

DEE & SSA புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் தகுதியுள்ள பள்ளிகள் Proposal அனுப்ப வேண்டி SPD அவர்களின் ஆணை!!


தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு அலுவலக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு அலுவலக வளாகத்தில்  முறையாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படாததே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும்  பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு  அலுவலகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை முதன்ைம தலைமை பொறியாளர் ஜெயசிங்  சுற்றறிக்கை ஒன்ைற அனுப்பியுள்ளார்.
அதன்படி, டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசு அலுவலக வளாக கட்டிடத்தில் உள்ள  குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மரம், செடிகளில் இருந்து விழுகிற காய்ந்த சருகுகள், குச்சிகள் மற்றும் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர்  ஆகியவற்றை அகற்ற வேண்டும். 
இதற்காக கூடுதல் தினக்கூலி பணியாளர்களை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் பொக்லைன் இயந்திரத்தை  பயன்படுத்தி குப்பைகளை அகற்றலாம். இதற்காக, ஆகும் செலவை பராமரிப்பு நிதியில் இருந்து செலவு செய்து கொள்ளலாம். இந்த பணியை உதவி  பொறியாளர், உதவி செயற்பொறியாளர் கண்காணிக்க வேண்டும். இதை செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். 
இந்த பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதை ெபாறியாளர்கள் செய்ய தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இைத தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய  மண்டலங்கள் கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
ஒவ்வொரு நாளும்  பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்கங்களில் இதற்காக தனியாக ஊழியர்களை நியமித்து சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபடுகின்றனர். வரும் நவம்பர் 8ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளியில் காப்பீடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது. 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள் தயார்...!

தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.
இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கி, 'ஆசிரியராக பணிபுரிவோர், 
2019 மார்ச், 31 க்குள், 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது, 1 - 5ம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், 'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். 
எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பதுடன், பட்டப்படிப்பு, பி.எட்., முடித்து, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
இந்த கட்டுப்பாடுகளின்படி, பல ஆசிரியர்கள் தகுதி பெறாததால், பெரும்பாலான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசிடம், பல்வேறு அமைப்புகள் மனு அளித்தன.அவற்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிசீலித்து, சலுகை திட்டம் ஒன்றை, கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி, 'பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண்ணும் எடுக்காமல், 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெறாத வர்கள், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசியதிறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு, டிப்ளமா கல்வியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டது.ஆனால், 'சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து
நீக்கப்படுவர்' என்றும், மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, கடந்த மாதம், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக, பீஹாரில், 2.85 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். 
ம.பி., 1.90 லட்சம்; உ.பி., 1.95 லட்சம்; மேற்கு வங்கம், 1.69 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளனர். ஆந்திரா, 8000; தெலுங்கானா, 17 ஆயிரத்து, 8௦௦ மற்றும் கேரளாவில், 831 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

JACTTO GEO போராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு....

''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும், மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.
அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர். அடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.
வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உலகில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை. 

7 th pay: தொடர்ந்து வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்!!

2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும்  சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல் existing Basic Pay 
பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில்  does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது   Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அடுத்தாக Pay matrix*
    2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay matrix table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில் அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal to or next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.
*Increment கணக்கிடுதல்*
   அடுத்ததாக Increment கணக்கிடுதலில் புதிய அடிப்படை ஊதியத்தை 3% ஆல் பெருக்கி increment கணக்கிடக் கூடாது. *Increment கணக்கிடும் போது Pay matrix table - ஐ தான் பார்க்க வேண்டும்.* பக்கம் 14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் *The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix.*
(Illustration - III - See schedule - V) என உள்ளது.
*அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது.* (Vertically down along the applicable level by one cell).
எனவே increment - க்கும்  Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.
*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.*
*தேர்வுநிலை/சிறப்புநிலை கணக்கிடல்*
    தேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை. *பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.* எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
   *Personal Pay*
தனி ஊதியமான 750 - ஐ 2.57 ஆல் பெருக்கி தற்போது தனி ஊதியம் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பக்கம் 10 - ல் 3(VIII) - ல் basic pay in the revised pay structure means எனக் குறிப்பிட்டு basic pay என்பது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை எனக் குறிப்பிட்டு அதில் special pay/ Personal pay etc சேராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. *எனவே 1.1.16 - ல் 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் தனி ஊதியம் 2000 - த்தை கூட்டி  Pay matrix - ல் பார்க்க கூடாது.
*இடைநிலை ஆசிரியர்களுக்கான தொடர்  பாதிப்புகள்*
Increment கணக்கிடுவதும் Pay Matrix - லேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் தனி ஊதியத்தையும் சேர்த்து ஆண்டு ஊதிய உயர்வு கணக்கிட இயலாத நிலை உருவாக்கப்பட்டு, இதுவரை ஆறாவது ஊதிய குழுவில் increment கணக்கிட தனி ஊதியம் சேர்த்து increment கணக்கிடப்பட்ட நிலை மாற்றப்பட்டு, தனி ஊதியத்தினால் பெற்றுவந்த குறைந்த அளவிலான பயன்களையும் பெற இயலாதநிலை இந்த ஊதிய குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது  இ.நி.ஆசிரியர்களுக்கான பாதிப்பாகும்.
   ஆறாவது ஊதிய குழுவில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்ட போது போராடியதன் விளைவாக அனுமதிக்கப்பட்ட தனி ஊதியத்தினால்,  தற்போது அதனை 2.57 ஆல் பெருக்கி 2000 ஆக தனியாக கணக்கிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவும் இ.நி.ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல  பாதிப்புகளில் ஒன்றாகும்.
தொடரும்
தகவல் ஆக்கம்
 பெ.சீனிவாசகன்
வட்டாரச்செயலர்
TNPTF-திருப்பரங்குன்றம்...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா?- ராமதாஸ் கண்டனம்...

தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றுகடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும்,மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.
அடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில்இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உலகில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை.
தீபாளிக்கு தலைமைச் செயலகமே மூடப்பட்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் எவ்வாறு பணியாற்ற முடியும். அவ்வாறு இருக்கும் போது தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.வேலை நிறுத்தக் காலத்தை ஈடு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் ஆணையிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது திட்டமிட்ட பழிவாங்கும்நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது 18-ஆம் தேதி என்ன விடுமுறை நாள் என்பதே தெரியாமல் இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இரண்டுமே தவறு தான்.அமைச்சர் நிலையில் விவாதிக்காமல் இப்படி ஒரு முடிவை இணைச் செயலாளராக இருப்பவர் எடுக்க முடியாது. மிகவும் அபத்தமான இந்த உத்தரவு உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். இதுகுறித்து விசாரித்து இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு அறிவிப்பில் குளறுபடி? கோர்ட்டிற்கு செல்கிறது 'ஜாக்டோ-ஜியோ'!!!

அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்....

அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.
 அதன் விபரம்:
கடன் விபரம் வட்டி  சதவீதம்  வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை 5   50 ஆயிரம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை 6.50  1.50 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை 8.50  ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் 9.50  கார் வாங்க பெறும் கடன் 11டூவீலர் கடன் 8.50  சைக்கிள் கடன் 5  கம்ப்யூட்டர் கடன் 9.50  இதர கடன் 9.50அபராத வட்டி 2.50  அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில், வளர்ச்சி பணிகளுக்கு வழங்கும் கடன் 11  முதலீட்டு கடன் 13  கூட்டுறவு வங்கி மற்றும் நில வள வங்கி 9.50

சம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு.....

ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.இந்நிலையில் ஏழாவது சம்பளக்குழுவின் தலைவர் சண்முகம், அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல்செய்தார். இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து, சென்னையில் கூட்டமைப்பினர் கூடி விவாதித்தனர். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசுஊழியர்கள் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன், நமது நிருபரிடம் கூறியதாவது:2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் , நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசித்த போது, ''2016-17 முதல் ஏழாவது சம்பள குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். முந்தைய சம்பளக்குழுக்கள் போல அன்றி, இக்குழு பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவை தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏழாது,'' என்றார். 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை, கருத்தியலாக மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு, மிகப்பெரிய சம்பள இழப்பை முதல்வர் பழனிசாமி அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆறாவது சம்பள குழு முரண்பாடுகளை களைவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உட்பட சிறப்புகாலமுறை சம்பளம் பெறும் மூன்று லட்சம் பேருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்குவது குறித்தும், எந்தஅறிவிப்பும் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும்இல்லை. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பள உயர்வு 14 சதவீதமும், அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 20 சதவீதஉயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சுட்டிகாட்டி, சம்பள மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அக்., 23 ம் தேதி விளக்கி, உரிய உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அக்., 20ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விளக்க கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
தவறான புரிதல் ஏற்படுத்தும் அரசு
ஏழாவது சம்பளக் குழு பரிந்துரைகளை தாக்கல் செய்த அன்றே தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்களின் விலைகளையும் உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள உயர்வு சரிகட்ட மது விலையை உயர்த்தியிருப்பது போன்ற தவறான எண்ணத்தையும், புரிதலையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

RS:10 ஆயிரம் செலவில் ஹைடெக் அரசுப்பள்ளி!!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு இல்லை!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு RS:10,000 உதவித்தொகை!!!

NHIS 2016 card உங்களுக்கு இன்னும் வரவில்லையா...?

நீங்களே உங்கள் Smartphone-ல் எளிமையாக NHIS 2016 Insurance card Download 

செய்யும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள Link-ஐ Click செய்யவும்.

PERSONAL PAY (PP) - தனி ஊதியம் பற்றி ஒரு பார்வை

*🔸 1971 இல் 2வது , 1988இல் 5வது,  1996இல்  6வது ஊதிய குழுக்களில் சில துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு  வழங்கப்பட்ட தன் ஊதியமானது,*
*🔸 முறையே 1978இல் 3வது, 1996இல் 6வது, 2006 இல் 7வது ஊதிய குழுவின் அடிப்படை ஊதியத்திலே சேர்க்கப்பட்டு, அதன் பின்னரே புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
*🔸 தனி ஊதியம் என்றாலே அகவிலைப் படி கணக்கிடுவதற்கு எடுத்து கொள்ள வேண்டும்.*
*🔸 இந்த ஊதிய குழுவில் PPயை அகவிலைப் படி கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளலாம் என்ற வரி இருப்பதாக   தெரியவில்லை.*
*🔸 ஆகையால் PPயை பற்றி பல சந்தேகம் எழுந்துள்ளது.அப்படி இருக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த சந்தேகம் தீராமல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது இதுவே உண்மை.*
*🔸 PP யை அகவிலைப்படி உயர்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது அடிப்படை விதிகளில் (FR) இருந்தாலும், இந்த ஊதிய குழுவை பொறுத்த வரை தன் ஊதியம் தனியாகவே வைக்கப்பட்டுள்ளது.*
*🔸 8வது ஊதிய குழுவில் தன் ஊதியத்தை தனியாக வைத்ததின் நோக்கம் 7வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு PP வழங்கப்பட்டுள்ளது.அதை BP சேர்த்தால் இ.நி.ஆசிரியர்கள் ஊதியம்  அதிகம் பெற்று விடுவார்கள் என்று எண்ணியே தனியாக வைத்துள்ளனர்.*
*🔸 ஏற்கனவே கிரேடு பேவை  குறைத்து, அதி பாதாளத்தில் தள்ளி விட்டனர்.இந்த ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்களைசவக் குழியில்  தள்ளி விட்டனர்.*
*🔸 ஆக மொத்தம் ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்கள் பயனடைந்து விட கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது போல.
*இவண்*
அ.சி.ஜெயப்பிரகாஷ்
 ஒன்றியப் பொருளாளர்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்
*அரூர் ஒன்றியம் தருமபுரி.*

TN 7th PAY - HRA SLABS - New House Rent Allowance Revised Rates for Tamilnadu Government Employees....