TRANSFER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TRANSFER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 நவம்பர், 2017
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மே மாதம் கோடை விடுமுறையின்போது, பொது கவுன்சிலிங் முறையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.
அதை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஏற்று, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, 'நிர்வாக மாறுதல்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.'கடுமையான புகார்கள்,ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக காரணங்களால், மாறுதல் வழங்கலாம்.
நிர்வாக மாறுதல்களை பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை காலங்களில் மட்டும், வழங்க வேண்டும். மற்ற நேரங்களில் மாற்றினால், மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கும். இதை, அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்' என,பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளுக்கான, 2,820 இடங்களுக்கு, ஜூன் 19 முதல், 24 வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,157 இடங்கள் நிரம்பின. 'நீட்' தேர்வு அடிப்படையிலான, மருத்துவ மாணவர் சேர்க்கையால், காலியிடங்களின் எண்ணிக்கை, 1,627 ஆக அதிகரித்தது. இதற்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இறுதிநாள் கலந்தாய்வில் பங்கேற்க, 2,264 பேருக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில், 1,899 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். கலந்தாய்வில் பங்கேற்ற, 365 பேரில், 331 பேர் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.
வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது:இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்றோர், உரிய கல்லுாரியில், கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். அசல் கல்விச்சான்றிதழ்களை, வரும் 4 ம் தேதி வரை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஞாயிறு, 30 ஜூலை, 2017
ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை...
தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3 லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் நேர்மையானவர். அவருக்கு தெரியாமல் ஒரே நாளில் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும்' என்றார்வியாழன், 27 ஜூலை, 2017
பள்ளிக்கல்வித்துறைமூலம் 28.07.2017 -வெள்ளிக்கிழமையே சிறப்பு விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் !!
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்(HIGH SCHOOL HM) வரும் 28.07.2017 -வெள்ளிக்கிழமையே சிறப்பு விருப்ப மாறுதல் கலந்தாய்வு.
திங்கள், 24 ஜூலை, 2017
வியாழன், 1 ஜூன், 2017
மகப்பேறு விடுப்பில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் கவனத்திற்கு!!
மகப்பேறுவிடுப்பில் ஆணை பெற்றவர்கள் பணியில் சேராமல் விடுப்புடனே பணியில் இருந்து விடுவிக்கச் செய்து மகப்பேறு விடுப்பில் இருப்பதாக புதிய பணியிடத்தில் பணியில் சேராமல் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு மகப்பேறு முடிந்தவுடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
பணியில் சேர்ந்து கையெழுத்து இட்டால் விடுப்பு இரத்து செய்யப்பட்டுவிடும்...புதிய பணியிடத்தில் பெயருக்கு நேராக மகப்பேறு விடுப்பு என குறிக்க வேண்டும்..22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்டவர்கள் விவரம்:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்டவர்கள் விவரம்:
திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டராககலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம்போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுஅனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)