SSA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SSA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு
நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.
இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.
இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.
திங்கள், 17 ஜூலை, 2017
புதன், 12 ஜூலை, 2017
செவ்வாய், 11 ஜூலை, 2017
SSA - 5 DAYS PRIMARY TEACHERS TRAINING - MODULES - ALL SUBJECTS..
TAMIL
- CLICK HERE - TAMIL - BASIC SKILLS
- CLICK HERE - TAMIL - SLAS TOUGH PORTION DISSCUSION
- CLICK HERE - TAMIL - BASIC GRAMMAR
MATHS
SCIENCE
- CLICK HERE - SCIENCE - பூச்சிகளின் வாழ்க்கை
- CLICK HERE - SCIENCE - BUTTERFLY LIFECYCLE
- CLICK HERE - SCIENCE - OBESITY
- CLICK HERE - SCIENCE - GAMES
- CLICK HERE - SCIENCE - CHEMISTRY
- CLICK HERE - SCIENCE - PARTS OF HUMAN BODY
- CLICK HERE - SCIENCE - IMPORTANCE OF NATURAL FOOD
- CLICK HERE - SCIENCE - DROP WATER AGRICULTURE
- CLICK HERE - SCIENCE - GENERAL SCIENCE
- CLICK HERE - SCIENCE - BIRDS ADAPTATION TOWARDS ENVIRONMENT
SOCIAL
SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.....
எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஆசிரியர்
தகுதி: எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இளநிலை பட்டம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 43க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 200. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான முழுமையான விவரங்கள் அறிய http://www.ssaassam.gov.in/AdvertisementAsstteacherJuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
வெள்ளி, 7 ஜூலை, 2017
வெள்ளி, 30 ஜூன், 2017
தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு....
கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.
மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்கள் தங்களின் ஊதிய தொகையை, திட்டப் பணிகளுக்கான 100 சதவீத மானியத்தில் இருந்து பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு பங்களிப்பு தொகை மானியம் குறைத்து வழங்கப்படுவதால், இவர்களுக்கான ஊதியமும் சொற்பமாகவே கிடைக்கிறது. இதனால், அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர் கூட்டமைப்பு சார்பில் அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சங்கத்தின் மதுரை மண்டல நிர்வாகி ராஜா கூறியதாவது:மாநிலத்தில் 1,500 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இழந்து நிரந்தரமின்றி பணிபுரிந்து வருகிறோம். ஏற்கனவே நடக்கும் திட்டப்
பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே அரசு அனைவருக்கும் கல்வித்திட்ட பணியாளர்களை நிரந்தரமாக்க முன் வர வேண்டும்,' என்றார்.
வியாழன், 11 மே, 2017
SSA : CEO க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், 25 சி.இ.ஓ.,க்கள், 14 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர், நான்கு பேருக்கும் சி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களையும் கூடுதலாக கவனிப்பதால், ரெகுலர் சி.இ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் தொடக்க கல்வி தரம் கண்காணிப்பு, இடைநிற்றலை தடுப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், வகுப்பறை கட்டட பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிமூப்பு பட்டியலில், இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறுகின்றனர்.
தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க கல்வித்துறை தயாராகி வருகிறது. எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், 32 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், டி.இ.ஓ.,க்களாகவும், 32 டி.இ.ஓ.,க்கள் சி.இ.ஓ.,க்களாகவும் பதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க கல்வித்துறை தயாராகி வருகிறது. எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், 32 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், டி.இ.ஓ.,க்களாகவும், 32 டி.இ.ஓ.,க்கள் சி.இ.ஓ.,க்களாகவும் பதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக நிர்வாகி சாமிசத்தியமூர்த்தி, "இப்பணியிடங்களை நிரப்பி ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகளையும் அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்விற்கு முன், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)