>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SCHOOL MORNING PRAYER ACTIVITES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOOL MORNING PRAYER ACTIVITES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 பிப்ரவரி, 2020

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் 29-02-2020...






காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
29-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 503

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 

 இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

இரண்டு பக்கம் கூர்மையாக உள்ள கத்தியை கவனமாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
 - கண்ணதாசன்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC-ராசி

1. Sagittarius - தனுசு
2. Capricorn - மகரம்
3. Aquarius - கும்பம்
4. Pisces - மீனம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் இடம் பெறும் மிகச் சிறிய வார்த்தை எது?

 Education

2. மீனின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?

 மூன்று

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. The police found the body in a river.
2. Many strange plants and fish live on the sea bed.
3. The beggar usually sits on the pavement.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பட்டுப்புழு





🐛 முதன்முதலில் சீனாவில் தான் பட்டு இழைகளைக் கொண்டு ஆடை தயாரித்தார்கள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டது. 

🐛 ரோமானியர்கள் எவ்வளவு முயன்றும் இதன் இரகசியத்தை அறிய முடியவில்லை. அதன் பின் ஜப்பானியர்கள் இதனை தெரிந்து கொண்டு, ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப் பன்மடங்கு உற்பத்தி செய்தார்கள்.

பின்னர் ஜப்பான் பட்டு நெசவு வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும், சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

இரண்டு தண்டவாளங்கள்

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்? உண்மையாக நாம் என்ன செய்வோம்…? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார். உண்மை தான் என்றோம். இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பாற்றபடுகிறது. 


ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது. இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது. இன்றைய நிலை நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான். தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10 அம்ச ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

🔮அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

🔮மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

🔮தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ததோடு அரைஇறுதிக்கும் முன்னேறியது.


🔮மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🔮கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

HEADLINES

🔮GDP growth slips to 4.7% in third quarter compared to 5.6% in previous year.

🔮Madras High Court in the process of getting child-friendly chambers, says Chief Justice Sahi.

🔮Centre committed to individual, judicial and media freedom: Ravi Shankar Prasad on HC judge transfer.


🔮Seventeen new planets, including one Earth-sized habitable world discovered.                                 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

......................................

வியாழன், 27 பிப்ரவரி, 2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 27.02.20




திருக்குறள்

அதிகாரம்:கல்வி
திருக்குறள்:391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நடக்கவேண்டும்.
பழமொழி
What the heart thinketh the tongue speaketh
 உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில்


இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி
சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்….
பொது அறிவு
1.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு
2.மனித கண்களின் எடை எவ்வளவு?
1.5 அவுன்சு.
English words & meanings
Camara – chamber, a separate room. தனி அறை.
Camera – an instrument used to take photos. புகைப்படக் கருவி
ஆரோக்ய வாழ்வு
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரகக் கற்கள் உருவாவது ,இதயநோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை 


தடுக்கும்.
Some important  abbreviations for students
 rpm – revolutions per minute
qt – quart
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
ஜூடோ பயிற்சியும் ஒற்றைக் கை சிறுவனும்
குறள் :
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
விளக்கம் :
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
கதை :
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான்.


சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.
எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.
குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும்


என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
நீதி :
நம்மிடம் உள்ள குறையை நிறையாக்குவது மிகப் பெரிய திறமைசாலிக்கான அடையாளம் ஆகும்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவியல் அதிசயங்கள்:
  1. எறும்பு குழுவாக மிக கட்டுப்பாடுடன் வாழும் ஒரு உயிரி.
2. இது புவியின் தென் முனையில் மட்டும் காணப்படுவதில்லை.
3. இவைகள் தங்கள் உடல் எடையை காட்டிலும் 50 மடங்கு எடையை தூக்க வல்லது.
இன்றைய செய்திகள்
27.02.20
★அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலந்து மாசுபடுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
★இந்தி மொழி தெரியாத மாணவர், ஆள்மாறாட்டம் செய்து, இந்தியில் நீட் தேர்வு 


எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
★டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
★தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
★தில்லியில் கடந்த 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்  போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கோ-ரோமன் பிரிவில்  இந்திய வீரா் சுனில் குமாா் தங்கம் வென்றுள்ளார்.
★சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று


வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்து இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
Today’s Headlines
🌸The Southern Zone of National Green Tribunal ordered to put case on those who flow in the sewage water into Adyar and also asked for the compensation from the same party
 🌸Investigation revealed that a student who is not fluent in Hindi impersonated and passed the NEET exam in Hindi and studied at the Madras Medical College. 


Subsequently, the student and his father, who assisted him, have been arrested by the CBCID police.
 🌸 “In Delhi the police did not do their duty and also why the Central Government did not allow the police to perform their duties?” the Supreme Court asked in annoyance.
 🌸The United Nation organisation said that they are closely watching the situation in Delhi. 
 🌸 Sunil Kumar wins gold in the Greco-Roman division after 27 years in the the wrestling championship tournament which was held in Delhi from 18 to 23
 🌸India’s  Virat Kohli has lost the first place by  five points in the ICC Test rankings which is released today by the International Cricket Council (ICC).




Prepared by
Covai women ICT_போதிமரம்

.................................