>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PHONE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PHONE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ரூ.5 முதல் ரூ.399 வரை... அதிரடி ஆஃபர்களை அறிவித்த AIRTEL!

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் முதல் 399 ரூபாய் வரை புதிதாக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்திற்கு பின், ஏர்டெல், வோடஃபோன், உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டணச் சலுகை மற்றும் சிறப்பு டேட்டா சலுகைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் 5 ரூபாய் முதல் சலுகைகளை வழங்கி உள்ளது. அதன்படி, ரூ.5, ரூ.8, ரூ.15, ரூ.40, ரூ.349 மற்றும் ரூ.399 வரை பல்வேறு வகையிலான ஆஃபர்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில், 5 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு 4ஜிபி 3ஜி, 4ஜி டேட்டா, இது ஒரு முறை ரீசார்ஜ் மற்றும் போஸ்ட் 4ஜி சிம் அப்கிரடேசனுக்கு மட்டும் பொருந்தும்.

8 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் லோக்கல், எஸ்.டி.டி. அழைப்புகள் 56 நாட்களுக்கு 30 பைசாவில் பேசலாம்.

40 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வேலிடிட்டியுடன் 35 ரூபாய் டாக்டைம் கிடைக்கும்.

60 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வேலிடிட்டியுடன் 58 ரூபாய் டாக்டைம் கிடைக்கும்.

மற்றும் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மொபைல் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும்.. மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இணையாக 
நிறுவனங்கள் மத்தியிலான போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. அதுவும் ஜியோ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இந்தப் போட்டி தொடர்ந்து நீட்டித்தால் 2018ஆம் ஆண்டில் மொபைவ் கட்டணங்களின் அளவு 25-30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் நீங்கள் அதிக இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் கொண்டாட்டம் தான்.
கட்டணங்களின் மாற்றம்...
ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குப் பின்பு சந்தையில் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்கள் சுமார் 25-32 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதுவும் இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவர்கள் மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 60-70 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இவை அனைத்தும் ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குன் பின்னானது. ஜியோவின் சேவை சில இடங்களில் மோசமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்புகள் சந்தையில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
திடீர் விலை குறைப்பு
இலவச சேவை, குறைந்த விலையில் 4ஜி டேட்டா என ஜியோவின் சேவைகள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை அதிகளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் கட்டணங்களை அதிகளவில் குறைந்தது.
இக்கட்டண குறைப்பில் அதிகளவில் ஈடுபட்டது ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தான். ஐடியா வோடபோன் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் உள்ளதால் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் திட்டத்தில் எவ்விதமான அதிகளவிலான கட்டண குறைப்பை அறிவிக்கவில்லை.

விலை போர்
ஜியோவின் அடுத்தடுத்த சேவை அறிமுகத்திற்கு ஏற்ப பிற டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைத்து விலை போரை துவக்கிவைத்தது.
இதனால் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் அதிகளவிலான வருவாய் மற்றும் லாப இழப்புகளைச் சந்தித்தது
தொடரும் ஜியோ ஆதிக்கம்..
இதனைத் தொடர்ந்து ஜியோ தொடர்ந்து புதுப்புது திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் சேர்த்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோ போனுக்கான ப்ரீபுக்கிங் இன்று துவங்கியுள்ளது.
இதன் மூலம் டெலிகாம் சந்தையில் விலை போர் குறையப்போவதில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது
கட்டணம் குறையும்
இந்திய டெலிகாம் சந்தையில் விலை போர் தொடரும் நிலையில், 2018ஆம் ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் சராசரியாக மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 25-32 சதவீதம் வரை குறையும் எனப் பல முன்னணி சந்தை ஆய்வு நிறுவனங்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
மக்கள்
இதுநாள் வரை ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த நிலையில், ஜியோவின் அறிமுகத்தின் மூலம் கட்டணங்கள் குறைந்தது மக்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் ஜியோ தனது சேவையின் தரத்தை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்நிறுவனத்தைத் தோல்வியில் தள்ளப்படும்

புதன், 23 ஆகஸ்ட், 2017

JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.


ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை  உருவாக்க  தொடங்கிவிட்டது.
 ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ.  ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது ,  INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை  அறிமுகம் செய்துள்ளது.  அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான  முன்பதிவு  நாளை  முதல்  தொடங்குகிறது
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை  இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட  வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை  பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம்  தேதி  முதல் (நாளை ) முதல் முன்பதிவு  செய்யலாம் என  இஷா  அம்பானி  அவர்கள்  தன்  ட்விட்டர் பக்கத்தில்   தெரிவித்து  இருந்தார்.
எப்படி  முன்பதிவு செய்வது ?
ஜியோவின்  அதிகாரபூர்வ  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து ,  ஜியோவின் இலவச  போனை  பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ   ரூம்  சென்று ,  உங்கள் முன் பதிவை  உறுதி  செய்யலாம்  அல்லது  my jio app  மூலமாகவும்   முன்பதிவை செய்யலாம்  என்பது  குறிப்பிடத்தக்கது .

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஜீயோவிற்கு போட்டியாக ஏர்டெல்: தீபாவளிக்கு அசத்தல் சர்ப்ரைஸ்!


ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில்
வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. 
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
லாவா மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஜியோ போனுக்கு போட்டியாக உள்ளது. ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கலாம் என தெரிகிறது...

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இன்று வெளியாகிறது Android ‘O’ இயங்குதளம்!!!


ஸ்மார்ட்ஃபோன் இயங்குதளமான ஆன்ட்ராய்ட் தமது அடுத்த பதிப்பை ஆன்ட்ராய்ட் ஓ என்ற பெயரில் வெளியிடுகிறது.
ஆன்ட்ராய்ட் தனது இயங்குதளப் பதிப்புக்களுக்கு ஜிஞ்சர் பிரெட், கப்கேக், டோனட், எக்லெய்ர்ஸ், ஐஸ் கிரீம் சேண்ட்விச், ஜெல்லி பீன், லாலி பாப், கிட்கேட், மார்ஸ்மல்லோ, நோகட் என்று உணவுப் பொருட்களின் பெயரையே வைத்துள்ளது.
புதிய பதிப்புக்கு ஓரியோ, ஆக்டோபஸ், ஆர்பிட் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய இயங்குதளத்தில் வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே பிற ஆப்களை இயக்கும் வசதியும், பின்னணியில் இயங்கிக் கொண்டு பேட்டரியைக் குறைக்கும் ஆப்களை நீக்கும் வசதியும் உள்ளது. கூகுள் பிக்ஸல், நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களில் முதலாவதாக அறிமுகமாவதாகவும், பிற ஸ்மார்ட்போன்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆன்ட்ராய்ட் அறிவித்துள்ளது

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

இலவச JIO PHONE: தொடங்குகிறது முன்பதிவு

ஜியோ ஃபோனை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.



ஜியோ ஃபோன் ஆகஸ்ட் 15 முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தைக்கு வரவுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள ஜியோ ஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பின்னர் செப்டம்பர் முதல் இது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ ஃபோன் பதிவு செயல்முறை மற்றும் அதைப் பற்றிய விவரங்கள்:

ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் மூலமும், jio.com இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். ஜியோ சிம் கார்டுகள் போலவே இதற்கும், ஆதார் எண் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

அதுவே, நீங்கள் ஒரு வணிக உரிமையாளர் எனில், உங்கள் நிறுவனத்தின் PAN அல்லது GSTN எண்ணை வழங்க வேண்டும். நீங்கள் எத்தனை தொலைபேசிகள் வாங்க விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும். உங்கள் விவரங்களைப் பதிவு செய்தவுடன், உங்கள் மொபைல் ஃபோனில் உங்கள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் கிடைக்கும்.

ஆஃப்லைன் மூலம் முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ விற்பனையகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ மொபைல் ஃபோன் இலவசமாக, குறைந்த கட்டண பிளான்களுடன் வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்த மொபைல் ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜூலை, 2017

வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்' அறிமுகம்...

உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் இல்லாத வசதி : 
கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.
கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.
அரசுகளின் வரவேற்பு : 
சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலின் போது கைசாலா ஆப்சை பயன்படுத்தியே தேர்தல் கமிஷன் கருத்துகணிப்புக்களை நடத்தி உள்ளன. ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறார். 
பல வர்த்தக நிறுவனங்கள், மீடியாக்களும் கைசாலா ஆப்சை பயன்படுத்த துவங்கி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றனர். புரோ கைசாலா என்ற மற்றோரு ஆப்ஸ் மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வியாழன், 20 ஜூலை, 2017

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார் எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.மக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.
இந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும்.
அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனுப்பவும் முடியும்.இந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால்,இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.

சனி, 17 ஜூன், 2017

தினசரி 4 ஜி.பி. டேட்டா இலவசம் : பி.எஸ்.என்.எல் !!

3ஜி சேவையில் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ.444க்கு ரீச்சார்ஜ் செய்பவர்களுக்குத் தினசரி 4 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான கால வரம்பு 90 நாட்களாகும். இப்புதிய சலுகைத் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல்.
சவுக்கா - 444 என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 444 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 4 ஜி.பி. டேட்டாவைப் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இலவசச் சலுகைகளால் இழந்த தனது வாடிக்கையாளர்களை மீட்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இதுபோன்ற சிறப்புச் சலுகைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் 309 ரூபாய்க்குத் தினசரி 1 ஜி.எபி. அளவிலான 4ஜி டேட்டாவை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும் இதன் கால வரம்பு ஒரு மாதம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள புதிய சலுகையில் மூன்று மாதங்களுக்கு இலவச 3ஜி டேட்டாவைப் பெற முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.

ஞாயிறு, 28 மே, 2017

ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்.. பிராட்பேண்ட் திட்டங்களில் 1,000 ஜிபி இலவசம்..!

ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
      'எக்ஸ்குளுசீவ் வெப் ஆஃபர்' (Exclusive Web Offer) எனும் சலுகையின் கீழ் வழங்கப்படும் இலவச டேட்டா, முதற்கட்டமாக டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. எனினும் மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
    வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து, பயன்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஏற்ப 750 ஜிபி முதல் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இதற்கான வேலிடிட்டி ஒரு ஆண்டு என்றும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
          ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ஐந்து திட்டங்கள், ரூ.899 முதல் துவங்குகிறது. இவை அனைத்திலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் வழங்கப்படுகின்றன. பிராட்பேண்ட் பேஸ் திட்டத்தில் 60 ஜிபி டேட்டா, 16 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் டேட்டா 750 ஜிபி ஆகும்.
      மற்ற திட்டங்களில் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.1,099 திட்டத்தில் 40 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் 100 Mbps வேகத்தில் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ,1,499 மற்றும் ரூ.1,799 திட்டங்களில் 100 Mbps வேகத்தில் முறையே 160 ஜிபி மற்றும் 220 ஜிபி வழங்கப்படுகிறது.
     ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 65 ஜிபி / 100 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படும், இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்திற்கான டேட்டா தீர்ந்ததும், இலவச டேட்டா வழங்கப்படும், இதன் டவுன்லோடு வேகம் 512 Kbps வழங்கப்படுகிறது. போனஸ் டேட்டா பயன்படுத்தாத பட்சத்தில் அவை அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்பட மாட்டாது. 
  ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சலுகைக்கான சோதனைகள் துவங்கியுள்ள நிலையில், ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான போனஸ் டேட்டா சலுகை அரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வி-ஃபைபர் (V-Fiber) பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவித்தது. ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தில் பிராட்பேண்ட் வேகம் 100 Mbps வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 12 மே, 2017

விரைவில் 5G ??

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?
4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.
4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!
4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!
1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தடையற்ற தொலைத்தொடர்பு :
தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
இணைய வேகம் :
ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.
பேட்டரி திறன் :
4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
எப்போது அறிமுகமாகும்?
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.
5G
பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.
வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.
பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

புதன், 3 மே, 2017

அதிவேக பிராட்பேண்ட் சேவை BSNL அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன் செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே உள்ளது.இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல் விவரங்களை 1800-345-1500என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017


வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!!

வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்...ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.
உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன் சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப். தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.
இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன் சென்ட் மற்றும் எடிட்செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெசேஜ்அனுப்பும் பொது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகபடுத்தபடவுள்ளது.
தற்போது சோதனையில் உள்ள இந்தபதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017


ஏர்டெல் அதிரடி: ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா அறிவிப்பு !!

ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகையை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் புதிய அறிவிப்புகளின் படி மூன்று சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 விலையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ஏர்டெல் சலுகைகளின் கீழ் ரூ.244 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் வைத்திருப்போருக்கு மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
வாரம் முழுக்க 1200 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும் நிலையில், இதற்கு பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.10 என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ரூ.399 திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் விலை அதிகம் என்பதால் முந்தைய திட்டத்தில் வழங்கப்படுவதை விட வாய்ஸ் கால் நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.244 திட்டத்தை போன்று ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைுப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
இறுதியில் ரூ.345 திட்டத்தில் முந்தைய திட்டங்களை விட கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவும் மற்ற சலுகைகள் ரூ.399-இல் வழங்கப்படுவதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் கொண்டு லாக்-இன் செய்து ஏர்டெல் தளத்தில் ரூ.244 மற்றும் ரூ.399 திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வியாழன், 30 மார்ச், 2017


மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஞாயிறு, 26 மார்ச், 2017


மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி !!

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.
*பூனே:*
நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பாக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்த வரை நிலைமை இன்னும் கட்டுக்குள் இருக்கும் போதும், வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் பிரபல செய்தி நிறுவனமான பிடிஐக்கு அறிவியல் ஆய்வாளர் பல்லவி பாக்லா வெளியிட்ட கட்டுரை தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 15 பிப்ரவரி, 2017

Vodafone 4G - 2GB அளவு இலவச டேட்டா

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் அதிவேக திறன் கொண்ட 4G சேவைகளை பல்வேறு நகரங்களில் வழங்கி வருகிறது.  
    கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட‘வோடஃபோன் சூப்பர்நெட் 4G’ சேவை கோவை, திருப்பூரை தொடர்ந்து சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்மூலம் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் திறன் கொண்டு வோடஃபோன் சூப்பர்நெட் 4G சேவையை பயன்படுத்த முடியும். இதன்மூலம் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் அதிவேகமான இணைய சேவையை பெற முடியும்.வாடிக்கையாளர்கள் புதிய 4G சிம் கார்டுகளுக்கு அப்கிரேடு செய்து அதிவேக 4G இண்டர்நெட் பெறுவதோடு அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2GB அளவு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ் மற்றும் வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். இதனால் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவாவிலும் 4G சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. கோவா மாநில நெட்வொர்க் சந்தையில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ள வோடஃபோன், மொத்தம் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 11 பிப்ரவரி, 2017

ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும்

ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.
பீஜிங்:
ஆப்பிள் நிறுவனம் 2017-ல் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான பல்வேறு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி-கியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ல் வெளியாக இருக்கும் மூன்று ஐபோன்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.    
ஏற்கனவே வெளியான தகவல்களில் 2017 ஐபோனில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வழங்குமா அல்லது ஆப்பிள் நிறுவனம் தனக்கென புதிய தரத்தை உருவாக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
வழக்கமான ஆப்பிள் வழிமுறையை வைத்து பார்க்கும் போது ஆப்பிள் புதிய தரத்திலான வயர்லெஸ் சார்ஜிங் வழிமுறைகளை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இதில் ஒன்று ஐபோன் X என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஐபோன் X-ல் மட்டுமே வழங்கப்படும் என்றும் இது சமீபத்திய கேலக்ஸி போன்களில் வழங்கப்பட்டதை போன்றே 'fixed flex' திரையை பயன்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் டச் ஐடி சென்சாரில் சினாப்டிக்-ன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஐபோன் X-ல் வழங்கப்படும் செல்லுலார் மோடம்களை இன்டெல் மற்றும் குவால்காம் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தின்மூலம் லேசர் சென்சார், இன்ஃப்ரா ரெட் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 11 ஜனவரி, 2017

Apple Iphone 6 விலை ரூ.7,990 மட்டுமே - Flipkart அதிரடி தள்ளுபடி !

Apple Iphone 6 விலை ரூ.7,990 மட்டுமே - Flipkart அதிரடி தள்ளுபடி !


இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.
இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:
ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s  பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:
      ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:
            ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.
ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:
 ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.   
அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:
         ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.