>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மார்ச், 2018

நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!...




                                                   LETS ACT
சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.
ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.
அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்

வியாழன், 8 மார்ச், 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சனி, 3 மார்ச், 2018

எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு!!!

எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது. நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மற்றும், ‘ஜிப்மர்’ கல்லுாரிகளில்சேருவதற்கு, தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 26, 27ல் நடக்கிறது. இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, பிப்.,5ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் மாலை, 5:00 மணியுடன் முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை, www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள்மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள்உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சனி, 24 பிப்ரவரி, 2018

நீட் தேர்வில் வெற்றிக்கான சில ஆலோசனைகள்




சனி, 27 ஜனவரி, 2018

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.....

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டுநீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது.
தமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல்,இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரிஇறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.
கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வியாழன், 25 ஜனவரி, 2018

பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்...

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து பாடத் திட்டங்களையும் பின்பற்றி, வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சியில், தமிழக மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கும் என, பல மாணவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., விதிகளில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் பொது பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர், 45 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என, 'நீட்' தேர்வு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'......

''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:மேல்நிலை கல்வி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள மாநில அளவில் 412 மையங்கள் செயல் படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, 100 மையங்கள் செயல்படுகின்றன. மீதி 312 மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்.இதற்காக, பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு தேசிய அளவிலும், 17 நாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!


நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​
​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.​

சனி, 2 டிசம்பர், 2017

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும். 
இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

திங்கள், 27 நவம்பர், 2017

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 20 நவம்பர், 2017

வெள்ளி, 17 நவம்பர், 2017

நீட் தேர்வு பயிற்சி மையங்கள்: ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

தமிழக மாணவர்களின் நலனுக்காக அரசு தொடங்கியுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஏஎஸ் தேர்வுக்கு சிறந்த பயிற்சி: 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவை) தேர்வுக்கு ஏழை மாணவர்களைத் தயார் செய்வதற்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையம் மிகச் சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது. சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள இம்மையத்தில் ஆண்டுக்கு 225 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 2,250 வீதம் தமிழக அரசு வழங்குகிறது. இங்கு பயில்பவர்களில் ஆண்டுக்கு 40 முதல் 50 பேர் வரை குடிமைப் பணிகள் தேர்வில் தகுதி பெற்று பணி வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த மையம் அரசு சார்பில் நடத்தப்படுவதே இதற்குக் காரணம். 
இப்போது தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் நீட் தேர்வுகான பயிற்சி மையமும் முழுக்க முழுக்க அரசு சார்பில் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இது குறித்து தமிழக அரசு குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்) பயிற்சி மைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறியது: மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் நோக்கத்தில், பயிற்சி மையங்களைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி மையத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.kaninikkalvi.blogspot.in 
நீண்ட காலத்துக்கு...
தனியார் பயிற்சி மையம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது நீண்ட காலத்துக்குப் பலன் தராது. மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் முதன்மைத் தேர்வு வரை ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் நிலையான நேர்முகத் தேர்வுக்கு மட்டுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.kaninikkalvi.blogspot.in 
தனியாரைக் காட்டிலும்...
 நீட் போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்களைத் தயார் செய்வது என்பது, குடிமைப் பணிகளுக்கு அளிக்கப்படுவது போன்று கடினமானது அல்ல. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பாடத் திட்டங்களில்தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்பதால், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு எளிதாகப் பயிற்சி அளித்துவிட முடியும். வேகமாக விடையளிக்கும் பயிற்சி மட்டுமே கூடுதலாகக் கற்றுத்தர வேண்டியிருக்கும்.
எனவே, அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலத்து பயனுள்ளதாக அமையும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற ஆலோசகர் சிவராமன், தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பயிற்சி அளிப்பது, அந்த நிறுவனம் பிரபலமடையவே பயன்படும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பயிற்சி மையங்கள் ஈர்ப்பதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, இப்பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தலைசிறந்த கல்வியாளர்களையும் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும் அரசு பயன்படுத்த வேண்டும் என்றார்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்....

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
'ஹெல்ப் லைன்'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், 'ஹெல்ப் லைன்' வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்

முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவம் படிக்கும் மாணவர்கள், முதுநிலை படிப்பில் சேர, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தனியாகவும், எம்.டி.எஸ்., படிப்புக்குதனியாகவும், தேர்வு நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான தேர்வு, ஜன., ௭ல், கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான, 'ஆன் - லைன்' பதிவு, அக்., ௩௧ல் துவங்கியது; நவ., ௨௭ வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சனி, 28 அக்டோபர், 2017

'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு

அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
பிளஸ் ௨ முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர, மத்திய அரசு, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறது.
இவற்றில், மருத்துவத்துக்கான, நீட்; இன்ஜினியரிங்குக்கான, ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போன்ற, மாநில பாடத்திட்ட மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், நீட், ஜே.இ.இ., தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதன்படி, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், அக்., 26 வரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 'ஆன் - லைன்' பதிவு அவகாசத்தை, அக்., 31 வரை நீட்டித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

புதன், 25 அக்டோபர், 2017

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி??


3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ’நீட்’ நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,000 ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். வழிகாட்டுதல்கள் பின், தமிழக மாணவர்களுக்கு, ’நீட்’ மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்.
வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

சனி, 21 அக்டோபர், 2017

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.
3,௦௦௦ ஆசிரியர்கள்
'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. 
இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

வழிகாட்டுதல்கள்
பின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.
பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு அரையாண்டு தேர்வு
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

வியாழன், 19 அக்டோபர், 2017

31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு..

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார்.
இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்...

பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று துவங்கி வைத்தார்.
இதில் 'நீட்'உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும்துவங்கியது.இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.