COMPUTER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COMPUTER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 29 செப்டம்பர், 2018
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App
ஒரே நேரத்தில் ultra Sound மூலம் இயங்கும் இந்த App ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுக்கும் videos , file , document,Audio Share செய்ய முடியும். அனைவரும் இந்த App download செய்து open செய்து அனைவருக்கும் ஒரு வரிடம் உள்ள வீடியோ , file,Audio Share செய்ய முடியும்.
இது முற்றிலும் ultra Sound மூலம் இயங்கக் கூடிய ஒரு பிரமாண்ட App.
பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.
வியாழன், 30 ஆகஸ்ட், 2018
TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?
சான்றிதழ் பதிவேற்ற முறை பற்றி பார்ப்போம்.
முதலில் கீழே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து அசல்சான்றிதழ்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்..தற்போதுபடித்துக் கொண்டிருப்பவர் எனில் கல்லூரியில் உங்கள் Originals'ஐஇப்பொழுதே கேட்டு கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..(TC ஐதவிர அனைத்தும் தருவார்கள்.TC பற்றி கவலைப் பட வேண்டாம்)
கடைசியில் அலைய வேண்டாம்...
E- Seva மையத்திற்கு சென்று உங்கள் நிரந்தர பதிவின் ((One Time Registeration)) User ID மற்றும் Password'ஐ அவரிடம் கூறினால் அவர் Login செய்வார்..(கட்டாயமாக USER ID AND PASSWORD ஐ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்)) .உங்களுடைய புகைப்படத்துடன் உங்கள் Dashboard open ஆகும்.. Dash Board நிரந்தர பதிவு உங்களுடையது தானா என அவர்உங்களிடம் Confirm செய்த பிறகே சான்றிதழ் பதிவேற்ற வேலையைமேற்கொள்வார் எனவே ஐயம் வேண்டாம்..சான்றிதழ் பதிவேற்றதேர்வர் தான் நேரில் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.. அப்பா, அம்மா, அண்ணன் அல்லது யார் வேண்டுமானாலும்தேர்வரின் நிரந்தர பதிவு user ID ,password மற்றும் அசல் சான்றிதழ்கள்கொண்டு சென்று கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்கலாம்.. கூடுமானவரை நீங்களே நேரில் சென்று முடிப்பது நலம்....
அனைத்து சான்றிதழ்களும் நீங்கள் நிரந்தர பதிவின் போது எந்தஎண்ணைக் கொண்ட சான்றிதழ்களை கொடுத்தீர்களோ அதேசான்றிதழைத் தான் பதிவேற்ற வேண்டும்.. வேறு ஒன்றை மாற்றிபதிவேற்றினால் சந்தேகத்திற்கிடம் என TNPSC யால் மீண்டும்சென்னைக்கு அழைக்கப்படுவீர்கள்..
முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
(அனைத்தும் Originals)
1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)
2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .
3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate
5.Convocation Certificate
6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)
7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்டநன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)
8.GROUP A அல்லது GROUP B தரமுடைய அதிகாரியிடம் இருந்துபெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.))
இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...
9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று
10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்
11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்
13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் அதற்கானPROVISIONAL மற்றும் CONVOCTION சான்றிதழ்..
15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர் எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற தடையின்மைச்சான்றிதழ் (No Objection Certificate) NOC
கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும் ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..
இவைஅனைத்தையும் e-Seva மையத்தில் பதிவேற்றிய பின் சரியாகபதிவேற்றியுள்ளார்களா என உங்களிடம் காட்டி உறுதி செய்துகொண்ட பின்னரே அவர்கள் Upload செய்வார்கள்..
Upload செய்த பின் என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றினீர்கள்என ஒரு PRINT OUT ஐ அவர்கள் கையெழுத்திட்டு தருவார்கள்.. நீங்கள்சான்றிதழ் சரிபார்ப்பு CV முடித்ததற்கான சான்று அதுதான்.எனவேஅதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்..
முடிந்த வரை 10 மணிக்கே சென்று விடுங்கள்..கூட்ட நெரிசல் இன்றிபொறுமையாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வாருங்கள்..
கட்டணம் 100 ரூபாய்க்குள் தான் வரும்.. எதற்கும் அதிகமாக எடுத்துச்செல்லுங்கள்.. சான்றிதழ் பதிவேற்றம் மேற்கோள்ளும் அதிகாரிக்குநீங்கள் எவ்வித கட்டணமும் தனியாக தர தேவையில்லை..
e-seva மையம் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை.. 1-2 உணவு இடைவேளை..
நல்லபடியாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வர அனைத்து TNPSC நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
சனி, 7 ஜூலை, 2018
DIKSHA - New Syllabus QR code - Downloading Video - All Guide & Tutorial
QR GUIDE PPT DIRECT MOBILE VIEW LINKS
3. SCREEN CAST MOBILE - PROJECTOR - HOW?
QR CODE SCANNING YOUTUBE VIDEO PLAYLIST
SYSTEM DOWNLOAD - DRIVE LINKS
வெள்ளி, 6 ஜூலை, 2018
பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி
*🔴பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்*
*🔴தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*
*🔴ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்*
*🔴அதன்படி பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கம்ப்யூட்டர் பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*
*🔴கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது*
*🔴இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது*
*🔴தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்*தெரிவித்தனர*
திங்கள், 30 ஏப்ரல், 2018
National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018
NATIONAL ICT AWARDS FOR SCHOOL TEACHERS-2018
Letter to Secretaries/Commissioners of School Education in States/UTs and Autonomous bodies
set up under MHRD last date upto 31stJuly, 2018 Click Here
Entry Form and ICT Award Guidelines for 2018 Click Here
|
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018
பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து
சென்னை:பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை. அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்
திங்கள், 9 ஏப்ரல், 2018
கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்....
கற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
முழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.
கையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளித் தலைமையாசிரியை
பூ.ஜெயந்தி.
மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.
புத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
சனி, 3 மார்ச், 2018
பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு..
பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர் படிப்பு:
தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில் ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
சனி, 24 பிப்ரவரி, 2018
அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
வெள்ளி, 2 பிப்ரவரி, 2018
எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை...! வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா ?
எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து
புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி..
சென்ற ஆண்டில்
புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுவும் கூட பொய்த்து போகுமா ?
அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார் செய்து
நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகளால்
வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா? இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா?
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
புதிய வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்த கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வர நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது
வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு.
வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014.
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014.
சனி, 27 ஜனவரி, 2018
4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும்.
'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...
தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து "கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது .
. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing), இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது; இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.
”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”
தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை..?? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..??
பிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…
நவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.
தமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி!! எதிலும் கணினி!!” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.
இந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுகிறோம்..!!
செல்வி ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
வெள்ளி, 29 டிசம்பர், 2017
வியாழன், 28 டிசம்பர், 2017
ICT MATERIALS AND HANDBOOK
Click here
Hand book ICT CLICK HERE..
https://drive.google.com/file/d/1WBs-iLdkuedhylAfXg63guWMQg_0d_2E/view?usp=drivesdk
BASIC ICT ..CLICK HERE..
ROLE ICT PAPER CLICK HERE....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)