>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜூன், 2017

31 டிசம்பர் 2017 க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்....

     தற்போது வங்கி கணக்கு வைத்து உள்ளவர்கள் 31 டிசம்பர் 2017 க்குள் தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். - மத்திய அரசு எச்சரிக்கை.

🔹 புதிய வங்கி கணக்கு துவக்கவும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

🔸 தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளவர்களும் வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் திருட்டு...கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள்..!

சென்னை எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளார்களின் கணக்கில் இருந்து மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னையில் பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.

அதில் 2016-ம் ஆண்டிலும், கடந்த 6 மாத காலத்திலும் சென்னையில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓடிபி எண்ணை திருடியும் ஆன்லைன் மோசடிக்கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது காவல்துறை. வங்கிகளின் பணபரிவர்த்தனையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றும் சுட்டிக்காட்டினர். கடந்த 6 மாதங்களில் சென்னையில் வங்கி வாடிக்கையாளர்கள் பறிகொடுத்த தொகை குறித்த விபரங்களைகாவல்துறையினர் பட்டியலாக தயாரித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் வழங்கினர்.

அதில் 547 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடியே 37 லட்சம் ரூபாயை பறிகொடுத்து பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்றழைக்கப்படும் எஸ்.பி.ஐ வங்கி. அதனை தொடர்ந்து இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 284 பேர் 35 லட்சம் ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 83 பேர் 82 லட்சம் ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் 107 பேர் 54 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 78 பேர் 30 லட்சம் ரூபாயும் பறிகொடுத்து தாங்களும் பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகள் தான் என்ற அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் மொத்தம் 34 வங்கிகளின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.

அதே போல கடந்த 6 மாதங்களில் கிரெடிக் கார்டு மோசடியால் 209 பேரும், டெபிட்கார்டு மோசடியால் 1106 பேரும், அன்லைன் மோசடியால் 175 பேரும், பகிரப்பட்ட ஓ.டி.பியை திருடிய மோசடியால் 1315 பேரும், ஓ.டி.பியை வாடிக்கையாளருக்கே தெரியாமல் திருடிய மோசடியால் 175 பேரும் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 7 கோடியே 15,98,058 ரூபாயை பறி கொடுத்துள்ளனர். இவர்களில் 9% வாடிக்கையாளர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

கடந்த 2016-ம் ஆண்டில் பறிபோன 16 கோடியே 12 லட்சத்து 4ஆயிரத்து 200 ரூபாயில்..7 கோடியே 15 லட்சத்து 98 ஆயிரத்து 058 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பறிபோன 4 கோடியே 2 ஆயிரம் ரூபாயில்..1 கோடியே 43 லட்சத்து 19 ஆயிரத்து 611 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 12 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாயும், கடந்த 6 மாதங்களில் ரூ.5 கோடியே 72 லட்சத்து 78 ஆயிரத்து 447 ரூபாயும் இன்னும் திரும்ப பெற முடியாமல் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான வங்கிகள் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பணபரிவர்த்தனையில் பாதுகாப்பான நடைமுறையை பின்பற்றுவதில்லை என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது. அதே வேளையில் அனைத்து வங்கிகளும் இணைந்து வாடிக்கையாளரின் நலன் காக்கும் பொருட்டு, ரிசர்வங்கியின் ஒப்புதலுடன் இரண்டடுக்கு பாதுகாப்புடன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய முறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாற்றமாவது பணத்தை காப்பாற்றுமா..என்பதே அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வியாழன், 15 ஜூன், 2017

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!....

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்த இயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.
இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது

சனி, 3 ஜூன், 2017

அரசு ஊழியர் 2 மாத சம்பளம் முன் பணமாக பெறும் வசதி SBI வங்கி அறிமுகம்...


SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.
Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee
Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts
Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

வெள்ளி, 2 ஜூன், 2017

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வந்தது

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதுவரை இலவமாக அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும். 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய், 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் என கட்டணம் இருக்கும்.அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம்.
இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் பணம் எடுக்க முடியும், அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும், 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும், 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும்கட்டணமாக செலுத்த வேண்டும்.இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கி யின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 29 மே, 2017

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!.....

கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை.
பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.
🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.
🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
1. Axis bank------------------ 09225892258
2. Andra bank------------------ 09223011300
3. Allahabad bank-------------09224150150
4. Bank of baroda-------------09223011311
5. Bhartiya Mahila bank----- 09212438888
6. Dhanlaxmi bank----------- 08067747700
7. IDBI bank-------------------- 09212993399
8. Kotak Mahindra bank--- 18002740110
9. Syndicate bank------------ 09664552255
10. Punjab national bank---18001802222
11. ICICI bank----------------- 02230256767
12. HDFC bank-------------- 18002703333
13. Bank of india------------- 02233598548
14. Canara bank------------- 09289292892
15. Central bank of india-- 09222250000
16. Karnataka bank-------- 18004251445
17. Indian bank-------------- 09289592895
18. union bank of india---- 09223009292
19. UCO bank---------------- 09278792787
20. Vijaya bank--------------- 18002665555
21. Yes bank------------------ 09840909000.
22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
23. Corporation bank------- 092-688-92688.
24. South Indian Bank--- 092 23 008488 

ஞாயிறு, 28 மே, 2017

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்....

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 
இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம். தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். 
இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 
அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. 

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  ......

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம்.தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். 

இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 

அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. 

வெள்ளி, 12 மே, 2017

ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று (மே-11)அறிவிப்புகள் வெளியானது.
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் வாலட்டுக்கு கட்டணம்
இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 11 மே, 2017

இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: SBI

கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கேரளப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஜுன் மாதம் முதல் எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ.25 கட்டணமாக விதிக்கப்படும். அதே போல ரூ.5000கு மேல் மதிப்பில் கிழிந்த / பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் அதற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி மார்க்சிஸ்ட்  கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், 'இது மிகவும் மூர்க்கத்தனமானது;மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகையில் இருந்தே இந்த அரசு மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.  இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்நடவடிக்கை குறித்து திரைபிரபலங்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் சிலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017


வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
RTGS : Real Time Gross Settlement.
வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).
குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.
தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____
NEFT : National Electronic Fund Transfer
வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.
இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.
NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______
மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
IMPS : Immediate Payment Service
24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.
UPI : Unified Payments Interface
இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.
அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017


ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.

ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

புதன், 5 ஏப்ரல், 2017


தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த தள்ளுபடி ஆணையானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் அல்லாது ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பின் தலைவரான அய்யாக்கண்ணு மதுரை  உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லியில் போராட்டத்த்தில் ஈடுபட்டிருக்கும் அய்யாக்கண்ணு இந்த தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்த பொழுது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017


வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய மகிச்சியான தகவல்.

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக் காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.
உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.
இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.
இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இது குறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு
பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.
இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

திங்கள், 3 ஏப்ரல், 2017


கல்விக் கடன் பெற எளிய வழி வங்கி அதிகாரி சொல்வதை கேளுங்க

''சரியான திட்டமிடல் மற்றும் உரிய ஆவணங்களுடன் வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் பெறலாம்,'' என கனரா வங்கி மேலாளர் வணங்காமுடி தெரிவித்தார்.தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் 'கல்விக் கடன்' குறித்து அவர் பேசியதாவது: பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோருக்கு ஆசை இருக்கும்; ஆனால், பண வசதி இருக்காது.

 பணம் இல்லை என்பதற்காக ஒரு மாணவருக்கு கல்வி தடைபடக் கூடாது என்பதால், வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. படிப்பு, கல்லுாரிகளை முடிவு செய்த பின் கல்விக் கடன் குறித்து யோசித்தால் போதும். அனைத்து வகை படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லுாரி, உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் 10 லட்ச ரூபாய். வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. 4 லட்ச ரூபாய் வரை கடனுக்கு உத்தரவாதம் வழங்க தேவையில்லை. மாணவர் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட வங்கிக் கிளையில் கடன் பெறுவது நல்லது. அந்த வங்கியில் பெற்றோர்-, மாணவர் இணைந்து வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். முகவரி சான்று, ஆதார் அட்டை அவசியம்.படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கடன் பெறலாம்.இந்த ஆண்டு முதல் ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேலான கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினார்.

SBI வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.
குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
1.மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
2.நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.
3.டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.
4.ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
5.அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
6.எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.
7.எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்

சனி, 1 ஏப்ரல், 2017


ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.

முக்கிய செய்தி:
ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.
மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம் 👇👇👇👇

வெள்ளி, 31 மார்ச், 2017


SBI SGSP (State government salary package) A/C Benefit's



~ Minimum balance தேவையில்லை.*

 ~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &


மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]

*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே படம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*
(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெறுதல் நமக்கு பொருந்தாது.

👆👆👆 Source: https://www.sbi.co.in/portal/web/personal-banking/state-government-salary-package

*[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]*

இதே போல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries

** Employees receive instant credit of salaries
Benefit to the Employee


Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques

RTGS/NEFT

Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*

SMS Alerts

Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits...