>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.


சனி, 18 ஆகஸ்ட், 2018

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)
  1. .......................................................................................................................................................................
  2. .....................................................................................................................................................................

தாவரங்கள் அனிச்சைச் செயல்கள்(6TH STD QR CODE VIDEO)



..................................................................................................................................................................................................................................................................................................................

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை பள்ளி, கல்லூரிகள் இயங்காது

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். மாமனிதரான வாஜ்பாயின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் 16-ந்தேதி (நேற்று) முதல் 22-ந்தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. இந்த நாட்களில் திட்டமிட்டிருந்த அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதையொட்டி, இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் மாநில பொது நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இன்று இயங்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைமைச்செயலாளரின் இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி செயல்படுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் !!!

1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் http://www.govtorders.in/tamilnadu/page/1

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்-15.08.18

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
திருக்குறள்
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கும்.
பழமொழி
A good face needs no paint
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை.
இரண்டொழுக்க பண்பாடு
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
 பொன்மொழி
உண்மையும், நேர்மையும் கொண்டவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்…!
        -சுபாஷ் சந்திர போஸ்
பொதுஅறிவு
1.கேரளா மாநில மரம் எது?                       தென்னை மரம்
                            
 2.கேரளா மாநில விலங்கு எது?        இந்திய யானை
English words and. Meanings
Journey பயணம்
Jealous பொறாமை
Journal  பத்திரிகை
Judge     தீர்ப்பு
Junction முனை சந்திப்பு
நீதிக்கதை
பெண் குழந்தை தேவதைகள்  தெய்வங்கள் வாழும் வீடு-குட்டி கதை
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது. அவளது அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்….
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.
அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
இன்றைய செய்திகள்
15.08.2018
* நாடு முழுதும் 72-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
* மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டுமெனில் சட்ட நடைமுறையை வகுப்பது அவசியமானது என்று தலைமை தோ்தல் ஆணையா் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளாா்.
* பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட சேரவில்லை என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.
* தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளார் தமிழக வீரர் அருண் கார்த்திக்.
* ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடால், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
Today’s Headlines
🌸NewDelhi:The MoRTH told a Bench led by Justice Madan B. Lokur that hologram-based sticker of light blue colour will be used for petrol and CNG-run vehicles while similar sticker of orange colour would be placed on diesel vehicles
Chennai:Notwithstanding advisories from the Union and State governments against the use of national flags made of plastic, the sale of such items is brisk in the wholesale markets across the city.💐Coimbatore:As part of the initiative to help the flood-hit Kerala, C4TN, an organisation with the support of media institutions under the banner #CBE4KERALA has appealed to the public to provide relief materials in 12 collection centres established across the city

Kerala:The district administration opened four relief camps in Kuttanad taluk following a rise in the water level in different parts of the region on Monday. As many as 287 people of 54 families have been shifted to camps

BangaloreIndia-A clinched the two-match series against South Africa-A 1-0 after the final day of the second ‘Test’ was affected by rain and the game ended in a draw. Like on Sunday, the final session was washed out.🌹THANKS;
Prepared by
Covai women ICT_போதிமரம்

மாற்றுதிறனாளிகள் 1to1 NON STOP பேருந்துகளிலும் 1/4 சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்பதற்கான அரசாணை!!



பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு

 தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில்  (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல் 30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே  பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி  கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த  வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.


மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு  அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மாற்றுதிறனாளிகள் 1to1 NON STOP பேருந்துகளிலும் 1/4 சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்பதற்கான அரசாணை!!



TNPSC : GROUP II - 2018 கவனத்தில் கொள்ள வேண்டியவை!

GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை
• இருப்பது  92 நாட்களே... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்... கண்டிப்பாக முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும்படி இந்த நாட்களில் தயார் ஆவது மிக எளிது.



• மொத்த காலிப்பணியிடங்கள் 1199 என்பதால் சுமார் 12000 பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்

• தோரயமாக 
பொதுப்பிரிவினர்—372
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -318
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 240 
தாழத்தபட்டோர் -180 
முஸ்லிம் -42
அருந்ததியினர் -35
பழங்குடியினர் -12 
பேருக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.... இறுதி மதிப்பெண் பட்டியலில் உங்கள் தரவரிசை  உங்கள் இட ஒதுக்கீடு படி இதற்குள் இருந்தால் உங்கள் பணி உறுதி..

சமீப காலமாக போட்டி அதிகம் என்பதால் முதல்நிலைத் தேர்வில் முதல் 12000 பேர் தர வரிசையில் குறைந்தது  158+ கேள்விகள் சரியாக பதில் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. கேள்வி எளிது என்றால் இன்னும் அதிகமாக பதில் அளிக்க வேண்டும்.. கடினம் என்றால குறைய வாய்ப்பு இருக்கிறது..
• புதிய புத்தகத்தில் தேவையானதை மட்டும் படித்து மற்றவற்றை புறந்தள்ளி விடலாம்

• முக்கியமாக மொழிப்பாடம்+கணிதம்+நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்..ஏனெனில் முதல்நிலை மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள போவதில்லை

• அதிகமாக பழைய மற்றும் மாதிரி வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்
• நகராட்சி ஆணையாளர்,சார் பதிவாளர்  போன்ற பசையுள்ள பதவிகள் வந்து இருப்பதால் ஏற்கனவே குருப் 2ல் பணி புரிபவர்கள் போட்டியிட்டு போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.. எனவே போட்டியோ போட்டி..போட்டிக்கு எல்லாம் போட்டி தான் இந்த தேர்வு.. மனதில் வைத்துக் கொள்ளவும்
விண்ணப்பதை பிழை இல்லாமல் விண்ணப்பிக்கவும் இந்த அறிவிக்கை க்கு பிறகு குருப் நான்கு,குருப் 2A போன்ற அறிவிக்கை வர குறைந்தது பத்து மாதங்கள் ஆகலாம்..அல்லது ஒரு வருடம் மேலே ஆகலாம்... எனவே இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வெறுக்க வேண்டிய சூழ்நிலை வரும்...• மெயின் தேர்வு கண்டிப்பாக இருப்பதால்  நீங்கள் படிக் வேண்டியதும் எழுதி பழக வேண்டியதும் கடல் அளவு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...


By 
V Siva Anantha Krishnan
Duty Officer
All India Radio 
Tirunelveli

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


இந்தியாவிலேயே முதன்முறையாக
பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயருகிறது!


EMIS website ல் teacher details பதிவேற்றம் செய்வது எப்படி?

Step - 1:
EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.
Step-2 select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும்.
விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3 ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின்  கணக்கில்  இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
..............................................................................................................................................................................

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

C & D RECORD ( தமிழ், ஆங்கிலம், கணக்கு) ( PRIMARY & UPPER PRIMARY)

CCE – READ, WRITE AND MATHS BASIC SKILLS FORMAT


Thanks
S.PRABUDOSS*
BT ASSISTANT (MATHS)
PUMS KUNNAPPATTU
THIRUPPORUR UNION
CHENGAI EDUCATIONAL  DISTRICT.

EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை

EMIS login page ல் நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல்  student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக  4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு இல்லை எனில் emis -  student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும்.
அதன் பிறகு HM DECLARATION  ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும்.

அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும்.
இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
................................................................................................................................................................

95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு...

சென்னை:தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். 

இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும். 

காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.

திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர். அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்.

அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்.ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
.................................................................................................................................................................

Flash News: SSA - BRTEs Transfer to Schools - New GO Published

அரசாணை (1D) எண். 556 Dt: August 09,
2018  பள்ளிக் கல்வி   அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ்மாநிலமற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள்வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில்தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்துமாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டுபொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்துஅனைத்து 
மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்தஅனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.


click here to download ............அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018   
பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ்மாநில மற்றும்மாவட்ட திட்ட   அலுவலகங்கள்வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில்பணிபுரியும்  3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநிலகாலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும்வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாகஒதுக்கிவிட்டுபொது   கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்துமாவட்டங்களுக்கும்  மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி –ஆணை வெளியிடப்படுகிறது.
..........................................................................................................