>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 13 மே, 2018

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு





பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும், பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை- DIR PROC

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு



சனி, 12 மே, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும், பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை- DIR PROC

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


பள்ளிகள் வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்வதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. .......

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

* http://www.dge.tn.nic.in , http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.


வியாழன், 10 மே, 2018

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.




















10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு 
முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில்
 நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான
 பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக
 அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் 
இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என
 உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான
 தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.

அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை
 செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம்
 செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை 
அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின்
 தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை
 வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர்.
 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி 
படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு,
 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை
 நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி)
 ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் 
தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள்
 தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண்
 சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் 
பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில்
 கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் 
கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர்
 அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள்
 வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் 
நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின்
 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக
 அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது
. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் 
அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ
 அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை
 அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு 
பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம்
 ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு
 சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் 
தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின்
 தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை
 நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப்
 பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை
 இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால்
 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் 
மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு
 வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு 
முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான
 இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு

 வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் 
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 
நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு
 அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில 
பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி 
தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் 
பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு

 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்
.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில்
 முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், 
மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின்
 விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும்
 மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை
 ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு
 பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த
 செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின்
 இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட 
மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும்
 மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான
 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை
 நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள்
 மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன்
 தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி 
துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி 
வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் 
அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள்
 முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும்
 வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம்
 அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய 
பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை 
அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே 
வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு 

பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்

படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து
 பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு
 அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என
 தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை
 அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி
 காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்
 பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் 
தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின்
 விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை 
அதிகாரிகள் தெரிவித்தனர்

CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை'

சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக 
பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில்
 தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
.

தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார்
 பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் 
கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உத்தரவு :

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், 
ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும்,
 ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு
 உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் 
வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.


பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை
 மாணவர்கள், தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை படித்தால்,
 அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு வரை :

பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு,
 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே,
 தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு
 முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக
 பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது 
என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, உயர் நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு 
உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு
 விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. 
தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில்
 இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 
10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என,
 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
..........................................................................................................................................

மாணவர்களின் கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச்
 செலவு செய்கின்றன. நமது கல்வியில் பெரிய மாற்றங்களை
 கொண்டுவர வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இன்று ஆங்கில வழிக்கல்வி மீது மக்களுக்கு அளவு கடந்த
 பிரியம் ஏற்பட்டுள்ளது. தமிழைப் புறக்கணிக்கக்கூடாது.
 தமிழைப் பொறுத்தவரை சில செய்யுள் பகுதிகள் மட்டும்
 மனப்பாடம் செய்ய வேண்டியது இருக்கும். மற்றபடி 
எல்லாப்பாடங்களையும், பொதுவாகப் புரிந்து படிக்க
 வேண்டிய மனப்பக்குவத்தை மாணவர்களிடம் உருவாக்க
 வேண்டும். எல்லா பாடங்களையும் மானப்பாடம்
 செய்யவைப்பது மிகப்பெரிய தவறு.

மாணவர்கள் தனியாகச் சிந்திக்கின்ற தன்மையை 
உருவாக்குவதோடு, சொந்தமாக எழுதுகின்ற வழக்கத்தையும்
 கொண்டு வர வேண்டும். அதற்கு மனப்பாடம் செய்தலும்,
 ஒப்பித்தலும் பரம எதிரிகளாக அமையும் என்பது திண்ணம்.
 மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’
 என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான்
 மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக 
விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் கல்வியைப் புகட்ட
 வேண்டும். பள்ளிக்கூடங்களிலேயே திறனாய்வுத் தேர்வுகளை
 அடிக்கடி நடத்த வேண்டும். இனி வரும் மாணவச் சமுதாயம், 
கடுமையான போட்டிகள் நிறைந்த ஒரு உலகத்தை சந்திக்க
 இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்வதில் 
பள்ளிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி படிப்பு வரை தான் கல்வி நிலையங்கள் ஒரு 
மாணவனுக்கு ஆடுகளமாக அமையும். எனவே அந்தக் 

காலக்கட்டத்தில் அவனுக்கு எல்லா பயிற்சிகளையும் அளிக்க
 வேண்டும். கல்லூரிப்படிப்பின் போது மாணவனின் எண்ணங்கள் 
சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே ஒரு மாணவனை
 பக்குவப்படுத்துவதற்கு வேண்டிய இடமே ஆரம்பப்பள்ளி முதல் 
மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகள் என்பதில் சந்தேகம்
 இல்லை.

எனவே மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகளில் கல்வியின்
 தரத்தை உயர்த்துவதற்கு மாணவர்களுக்கு பொது அறிவுச்
சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். வினாடி-வினா போன்ற
 நிகழ்வுகளை அடிக்கடி பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும்.
 திறன் அறியும் தேர்வு முறைகளை கல்வியில் புகுத்த வேண்டும்.
 பக்கம் பக்கமாக எழுதுகின்ற முறையினை மாற்றி
 எதிர்காலத்திற்குத் தேவையான நுண்ணிய, நுணுக்கமான
 முறைகளை கல்வியில் புகுத்தினால் நாடு நலம் பெறும்

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக் கிடைக்குமா?


















சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட
 நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 மொழி பெயர்ப்புப்
 பிழைகள் இருந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம்
 குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
 அளித்து வரும் டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு
 நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள்
 கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள்
 தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தன்னார்வ 
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த
 பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 75வது வினாவில்
 Cheetah (தமிழில் சிறுத்தை) என்ற வார்த்தைக்கு பதிலாக சீதா
 என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல 77வது வினாவில்
 வரும் ஒரு ஆங்கில வார்த்தையும் தவறான அர்த்தத்தில்
 மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதே போல 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் கொடுக்கப்
பட்டிருப்பதால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு
 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
 வைக்கப்பட்டுள்ளது. 49 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண்
 வழங்கப்பட்டால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, 
மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக்
 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர்களே விளக்கியும்
 உள்ளனர். அதாவது, என்சிஇஆர்டி புத்தகங்கள் தமிழில் இல்லாததும்
, ஆங்கிலத்தின் மிக நுணுக்கமான வார்த்தைகளை தமிழில் மொழி
 பெயர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் தவறியதுமே காரணம் என
 தெரிவித்துள்ளனர்.

இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது
 என்று இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்ற 
24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதியது
 குறிப்பிடத்தக்கது......

O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!

ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி
,அதை சரி பார்த்த பின்பே, ரேஷன் வழங்கும் புதிய நடைமுறை,
 கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில்
 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், 2 கோடியே, 13 லட்சத்து, 183 ஸ்மார்ட் ரேஷன் 
கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மொத்தம், 6 கோடியே, 75 லட்சத்து, 
44 ஆயிரத்து, 229 ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர்.

இதுவரை, 6 கோடியே, 40 லட்சத்து, 18 ஆயிரத்து, 310 ஆதார் 
அட்டைகளும், ஒரு கோடியே, 94 லட்சத்து, 7 ஆயிரத்து 132 மொபைல் 
எண்களும், ஸ்மார்ட் கார்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம்
 முழுக்க, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகள் வாயிலாக,
 உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
 தற்போது புழக்கத்திலுள்ள ஸ்மார்ட் கார்டில், ‘க்யூ.ஆர்.,’ கோடு 
என்ற மென்பொருள் பதிக்கப்பட்டுள்ளது.அதை ரேஷன் 
கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்து, அதன்பின்பே
 பொருட்கள் வழங்கப்படுகிறது. வழங்கிய பொருள்
 பற்றிய விபரம், ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட
 மொபைலுக்கு குறுஞ்செய்தியாகச் செல்கிறது.

இதற்குப் பதிலாக, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த 
உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
 இம்முறையில், பொருட்கள் தரும்முன்பே, ஸ்மார்ட் கார்டை,
 ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன்,
 மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.அதில் ஓ.டி.பி.,
 (ஒரு முறை கடவு எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை
 ரேஷன் கடைக்காரரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்பே,
பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையினால்,
 உண்மையான
 ரேஷன் கார்டுதாரருக்கே பொருட்கள் போய்ச்சேரும்;
 உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 
தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவு 
வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

சோதனை முறையில், கோவை மாவட்டம் முழுவதும்,
 இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, மொபைல்
 எண்ணை, ஸ்மார்ட் கார்டில் இணைக்காத கார்டு தாரர்கள்
 இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வசதி,
 மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது என்று 
உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையில் இத்திட்டத்தை 
சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக
 எங்களிடம் தகவல்களை சென்னையிலிருந்து கேட்டுள்ளனர். 
‘நாங்களும் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளோம்.
 அரசு உத்தரவுக்குப்பின், இத்திட்டம் கோவையில் 
நடைமுறைப்படுத்தப்படும்’ என்றனர். ரேஷன் பொருட்கள்
 கடத்தலின் முக்கிய கேந்திரமாகவுள்ள கோவையில், 
கடவு எண் முறையால், கடத்தல் தடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.....

புதன், 9 மே, 2018

நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை


நீலகிரி : கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இலவச வங்கிச் சேவைக்கான வரி விதிப்பை அரசு திரும்பப் பெறுகிறது...




டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி அளித்த சேவைகளுக்கான சேவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு ஒன்றை வங்கிகளுக்கு அனுபி இருந்தது. வங்கிகள் அளிக்கும் பல சேவைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காததால் இலவச சேவைகள் வரி விதிப்பிற்கு அப்பாற்பட்டவை என வங்கிகள் கருதி வந்தன. இதனால் வங்கிகள் அதிர்ச்சி அடைந்தன.

அதை ஒட்டி வங்கிகள் தங்களுக்கு இதனால் இழப்பு நேரிடும் என அரசுக்கு தெரிவித்தன. மேலும் இலவச சேவைகளுக்கு வரி வசூலிப்பதை வங்கி வாடிக்கையாளர்களும் எதிர்த்தனர். இந்த வரி விதிப்பு குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கும் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. ஆலோசனை முடிவில் வங்கிகள் அளிக்கும் இலவச சேவைகளுக்கான வரி விதிப்பை திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் ஆங்கில இலக்கணம் மற்றும் பேசுதல் திறனை வளர்க்க உதவும் video


English Alphabet A to Z




Vowels and Consonants


Consonant Sounds

'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு


'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது.

இதில், வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.தவறான விடைக்கு, 'மைனஸ் மார்க்' உண்டு என்பதால், தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளை மட்டும், மாணவர்கள் எழுதியுள்ளனர். இயற்பியலில் பெரும்பாலான கேள்விகள் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருந்ததால், அவற்றுக்கு தவறான விடை எழுதி, மதிப்பெண் குறைந்து விடக்கூடாது என, மாணவர்கள் பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.இந்நிலையில், நீட் வினாத்தாள் குறித்து, பல்வேறு பயிற்சி மையங்கள், ஆய்வு நடத்தியுள்ளன. அதன்படி, வினாத்தாளில், பிளஸ் 2வுக்கு நிகராக, பிளஸ் 1 கேள்விகள் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, 'டாப்பர் டாட் காம்' இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், 'இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 'மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.பிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இயற்பியலில், 34; வேதியியலில், 24 மற்றும் உயிரியலில், 48 கேள்விகள் எளிதாக இருந்துள்ளன. மூன்று பாடங்களிலும் சேர்த்து, 12 கேள்விகள், மிக கடினமாகவும்; 62 கேள்விகள் சமாளிக்கும் வகையிலும் இருந்ததாக, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு : பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் மனுவில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட தடை விதிக்க கோரியுள்ளார். பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. ஆனால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரையும் இழந்து விடுகிறார்கள்.

எனவே பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு பதில் பெற்றோர் முன்னிலையில் உரிய பள்ளிகளிலோ அல்லது தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமோ நேரடியாக அளிக்கலாம். பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை கூட்டி, மாணவர்களின் தேர்வு முடிவுகளை வழங்கினால், தற்கொலை முயற்சி தடுக்கப்படும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த முறைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்க முடியும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். தனத கோரிக்கை பற்றி அரசுக்கு மனு அளித்ததாகவும் ஆனால் அரசோ உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என்றும் மனுவில் செந்தில்குமார் கூறியுள்ளார். செந்தில்குமாரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை  4 வாரங்களில் பதிலளிக்க கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்கு யார் காரணம்? - விரிவான தலையங்கம்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்.

செவ்வாய், 8 மே, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 6ல் முடிந்தது. இதில், 8.66 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 11ல் துவங்கி, அந்த மாத இறுதியில் முடிந்தது. மாநிலம் முழுவதும், 80 மையங்களில் விடை திருத்த பணிகள் நடந்தன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இதில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மதிப்பெண்களை பதிவு செய்து, பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே, 12க்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி, 16ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிரு

சனி, 5 மே, 2018

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை சொன்னதை செய்த மாணவி


திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே, தேவனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நீலகண்டன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.இதில், நித்யா, 34. கடந்த, 2013ல், ஐ.ஆர்.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்று, வருமானவரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
'தினமலர்'
இவர், திருப்பூர், பாளையக்காடு முருகப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 468 மதிப்பெண்பெற்றார்.அப்போது, 'தினமலர்' திருப்பூர் பகுதியில் வெளியான, 'சாதனை மொட்டுகள்' பகுதிக்கு, அவர் அளித்த பேட்டியில், 'கல்வியில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவது என்லட்சியம்' என்றார்.நம்பிக்கையை சிறிதும் தளரவிடாத அவர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,085 மதிப்பெண்பெற்றார். 
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன்பின், ஐதராபாதில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருப்பினும், அவரது ஐ.ஏ.எஸ்., கனவு, அவரது துாக்கத்தை கலைத்து கொண்டே இருக்க, ஐதராபாதில், சிறப்புப் பயிற்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினார். நான்காவது முயற்சியில், அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
223வது, 'ரேங்க்'
நித்யா கூறிய தாவது:இன்ஜி., படிப்பு முடித்து, வேலை செய்து கொண்டே, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். நான்காவது முயற்சியில், இந்திய அளவில், 223வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றேன்.ஒன்றரை வயது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். கிராமப்புற மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், எனது பணி அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
...............................................................................................................................................................