>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 28 அக்டோபர், 2017

பணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

NMMS BLUE PRINT

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு - ஆணை வெளியீடு


மாணவர்களின ஆங்கில கையெழுத்தை அழகாக்கும் அருமையாக்கும் Android Application|Cursive Writing Wizard

மாணவர்களின் ஆங்கில கையெழுத்தை மிக அழகாக மாற்ற உதவும் Android Application தான் Cursive writing wizard....




 
இந்த application மாணவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும், அழகாகவும் கவரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த application மூலம் மாணவர்கள் Capital மற்றும் Small letters களை மிக எளிமையாக Cursive Handriting முறையில் கற்றுக் கொள்வார்கள்...
மாணவர்கள் விரல்களால் எழுதுவதற்கு ஏற்ற வகையில் Animation மற்றும் 40 வகையான colors இருக்கிறது...
இதன் மூலம் மாணவர்கள் ஆங்கில எழுத்துக்களையும் (letters and Words)
மிக எளிமையாக மிக அழகாக எழுத  கற்றுக்கொள்வார்கள்.
இது ஒரு Paid அண்ட்ராய்டு அப்பிளிக்கேஷன்..இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை Click செய்யவும்.....

G.O No. 320 Dt: October 27, 2017-Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest from 01.10.2017 to 31.12.2017 is 7.8%-Orders – Issued.


பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு

புதுடில்லி: பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், பள்ளிக்கல்வி சிறப்பு செயலர், ரீனா ராய் கூறியதாவது: ஜார்க்கண்ட் சிறுமி, பட்டினியால் இறந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. அந்த மாணவி இறப்பதற்கு, சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களிலும், மதிய உணவு அளிக்கப்பட்டிருந்தால், அவருடைய மரணத்தை தடுத்திருக்கலாம். அதனால், பள்ளி விடுமுறை காலத்தின் போதும், மதிய உணவு வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளார்.

Basic Mathematics Work Book

கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'

'கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என, கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டி துவக்க விழா, ஈரோடு மாவட்டம், கோபி அருகே, தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: கல்வி ஒன்றால் மட்டுமே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். 'நீட்' தேர்வில் தமிழகத்துக்குவிதிவிலக்கு வேண்டும் என்பது தான், எங்கள் கொள்கை. அதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, என்ன வரப்போகிறது என, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், மாணாக்கர்களை தயார்படுத்த, இந்த அரசு தயாராகி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்,
''தமிழ் வழி கல்வி கற்றோருக்கு, தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.
 முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சத்துணவு அறையில் குப்பைகள் இருந்தால் சமையலர் சஸ்பெண்ட்!!!

அரசுப் பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம்-கல்விஅமைச்சர்!!

Swachh Vidyalaya Puraskar, 2017-18 - Extension of last date for applying for the awards to 15.11.2017.....

பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்


பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான ஊதியமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500 Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200 தொடங்கி 65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவே Level 4500லும் உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும் இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போன்று, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தால் அவர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 2.57 பெருக்கல் காரணியைக் கொண்டு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அளிக்கப்படும்.

SSA-SPD PROCEEDINGS-திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பள்ளிகளை பார்வையிட 31-10-2017 இல் சிறப்புக்குழு வருகை. 01-11-2017இல் மீளாய்வுக் கூட்டம்.





பள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)




BHARATHIDASAN UNIVERSITY - 2017 CONVOCATION NOTIFICATION