>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 1 ஜூன், 2017

அரசுப்பள்ளி ஒன்றின் - மாணவர் சேர்க்கை - விளம்பர அறிவிப்பு.

பள்ளிக்கல்வி - 01.06.2017 நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பாடவாரியராக கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - இயக்குனர் செயல்முறைகள்.......


கல்வி அமைச்சர் வீட்டில் குவிந்த மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள்..

இலவச புத்தக பை நிறத்தில் அதிரடி மாற்றம் , பிங்க், நீலம், கருப்பு வண்ணத்தில் தயாராகிறது

22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்டவர்கள் விவரம்:
திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டராககலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம்போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுஅனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்.

தனி ஊதியம் 750 ஐ 1.1.2006 லிருந்து வழங்க கோரும் மனுவிற்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் பதிலை கோரும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம் ..!!

TRB- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு.

TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எவரேனும் இப்பணி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களது பணி விவரத்தை www.trb.tn.nic.in இணையத்தில் update செய்யவும்!!

நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச் செய்துள்ளது.
‘நீட்’ தேர்வால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவு வதால் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளவர்கள் பிலிப் பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ள னர்.இது தொடர்பாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:சீனா, ரஷ்யா பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு அந்த மொழிகளை கற்க வேண்டியிருப்பதாலும், கடுங்குளிர் காரணமாகவும் நம் நாட்டைப் போன்ற சீதோஷ்ண நிலை, ஆங்கில வழிக்கல்வி, அமெரிக்க மருத்துவப் படிப்பை தரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளை நம் மாணவர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.பிலிப்பைன்ஸில் இயங்கும் தவோ மருத்துவக் கல்லூரி, லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு லிம்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக விளங்கு கிறது. நம் மாணவர்கள் 600 பேரை லிம்ரா இங்கு சேர்த்து மருத்துவம் பயிலச் செய்துள்ளது.
தவோ மற்றும் லைசியம் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி, தேர்வு, விடுதி கட்டணம், பயணம், இதர செலவுகள் உட்பட முறையே ரூ.32 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் வரை செலவாகும். கல்விக் கட்டணத்தை தவணையிலும் செலுத்தலாம்.லிம்ரா மூலம் அங்கு கல்வி கற்க செல்பவர்களுக்கு உதவுவதற்காக தவோ நகரில் ஓர் அலுவலகம் லிம்ரா சார்பில் இயக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்பியவுடன் எழுத வேண்டிய எம்.சி.ஐ. தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மாணவர்கள் 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும்போதே பெறலாம்.
இந்த கல்வியாண்டில் லிம்ரா மூலமாக பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள எம்.சி.ஐ. பயிற்சி வகுப்புகளை லிம்ரா இலவசமாக வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், மைலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 9445483333/ 9445783333/9444615363.

தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது மாநில அரசு நிறுவனமாகும். இதன் தலைமையகம் தற்போது தலைநகர் சென்னையில் உள்ள பார்க் டவுனில் செயல்பட்டு வருகிறது.
1929 முதல் செயல்பட்டு வரும் இந்த தேர்வாணையம், தமிழகத்தின் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை எழுத்து தேர்வு, நேர்காணல், உடல் பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை பணியமர்த்தல் இதன் பணியாகும்.
தற்போது, 13 உதவி பேராசிரியர் (கதிரியக்க இயற்பியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Professor (Radiology Physics)
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தகுதி: எம்.எஸ் மருத்துவ இயற்பியல் அல்லது கதிரியக்க இயற்பியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2017
கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16.06.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpsc.gov.in/notifications/2017_12_not_eng_asst_prof_radiology.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..

தந்தி TV:-முடிந்தது கோடை விடுமுறை, இயக்குநர் அதிரடி உத்தரவுஆசிரியர்கள் ஜீன் 6 வரை விடுமுறை என கருதக் கூடாது. நாளை முதல் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களை வேறு பள்ளிக்கு விடுவித்தல் , இலவச பொருட்கள் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை துவங்க வேண்டும். அனைத்துஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்ததை பள்ளி தலைமையாசிரியர் மூலம் உயர் அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி  இயக்குநர்கள் உத்தரவு ..
பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.
SOURCE:- THANTHI TV..

பள்ளி திறக்கும் முன் செய்யவேண்டிய ஆயத்தப்பணிகள் ,பள்ளிக்கல்வி இயக்குநர்

 உத்தரவு !!