>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 25 பிப்ரவரி, 2017

கரூர் CEO மாற்றம்

கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் திருச்சி, முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
சென்னை, மாற்றுத்திறனாளிகள் பள்ளி துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த திருமதி.அருண்மொழி தேவி கரூர் முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் .

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது. நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த
அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது. மேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு, எந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அரசு ஊழியர்கள் மேற்கண்ட பட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும். அப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால் இந்த சங்கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில், அவருடைய உறவினர்கள் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. 
ஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது. 
ஏற்கனவே K. Srinivasan Vs State of Tamilnadu and Others (W. P. NO - 13594 & 29192/2013 என்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என Star Health And Alaid Insurance company Ltd Vs Sokkan And Others (2010-2-LW-90) என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. 
அதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான் என்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)

TN GOV EMPLOYED NHIS-2016 card !!

NHIS-2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS-2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்*
*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து 
நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Manonmaniam Sundaranar University Admission Notification for DD&CE - B.Ed 2017-2018 !!

Manonmaniam Sundaranar University*
Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)
*Cost of Application -Rs.650
*Medium and Mode of Instruction - English
*Exam will be in English or Tamil
*Last dare for receipt of completed application forms - 13.03.17

NEET Exam - விண்ணப்பிக்க இன்னும், 10 நாட்களே உள்ளன!

மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜன., 31ல் துவங்கியது; மார்ச், 1 இரவு, 12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த அவகாசம் முடிய, இன்னும், 10 நாட்களே உள்ளன.ஆனால்,தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு உண்டா, இல்லையா என, தெளிவாக மாநில அரசு அறிவிக்கவில்லை.
நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசின் மசோதா, ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மே14க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும்படியும்உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என, நீதிபதிகள்கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.
உத்தரவு:
இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

தானே: மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45, என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இங்கு வசிக்கும் படிப்பறிவில்லாத வயதான பெண்களுக்கு கல்வியறிவு வழங்குவதற்காக, பங்கட் ஒரு தொடக்கப் பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில், 30 பாட்டிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, இளஞ்சிவப்பு நிற சீருடை சேலை, ஸ்கூல் பேக், சிலேட்டு, பல்பம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான கரும்பலகையை, ஒரு தனியார் அறக்கட்டளை வழங்கியுள்ளது. தினமும், காலையில் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து, முதுகில் ஸ்கூல் பை சுமந்து, பள்ளிக்கு வரும் பாட்டிகள், இறை வணக்கம் முடித்து, வகுப்புக்கு செல்கின்றனர்.இவர்களுக்கு எண் கணிதம், மராத்தி மொழி எழுத்துக்கள் எழுதும் பயிற்சி, நர்சரி பாடல்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில், 60 முதல், 90 வயதுள்ள பாட்டிகள் சுறுசுறுப்பாக படித்து வருகின்றனர்.
பள்ளியில் படிக்கும், காந்தா பாட்டி கூறுகையில், ''துவக்கத்தில் பள்ளி செல்வதற்கு வெட்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களும் பள்ளிக்கு செல்வதை அறிந்ததும், நானும் செல்லத் துவங்கினேன். தற்போது, எனக்கு மராத்தி மொழியில் நன்கு எழுதப் படிக்க தெரியும். இதனால் தன்னிறைவை உணர்கிறேன்,'' என்றார்.

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி


ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.
இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார்.
அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார்.
அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சை, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யார்க்கராக போட்டு கலங்கடித்தார். இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீசுவரர் ஆக்கி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலில் முதலிடம் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.
மேலும் அவர், ‘எனது முன்மாதிரி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆவார். ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்’ என்றார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சி யால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.


தான் தயாரித்த பாராகிளைடருடன் ராஜாஞானப்பிரகாசம்.
பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.
வானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை. ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில் ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில் ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.
தனது 23-வது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:
சிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இது குறித்து ‘யூ டியூப்’, புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள் கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
மத்திய அரசின் ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின் வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில் பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
பாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் ஐம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை தயாரித்துள்ளேன்.
ஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடி வமைத்துள்ளேன். பயணிப்பவர் களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை. 30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.
மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும் பெற்றுள் ளேன். விமான நிலையத் தில் இருந்து 40 கி.மீ. சுற்றள வில் மட்டுமே பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்கு வரத்து துறையின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
 செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும்.
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாதத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைவதாகவும், அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

TNPSC - Exam Results

TNPSC - Group IV Exam (06.11.2016)
 Result - (21.02.2017)

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry 
பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.
அனைத்து மாணவர்களின் விவரங்களையும் update செய்து முடிக்கவும்

தமிழக அரசு ஊழியர்கள் " passport" பெறுவதற்கான வழிமுறைகள் -முழு விபரங்கள்..

அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெறவேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அனைத்துத் துறை
செயலாளர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோருக்குபணியாளர்- நிர்வாகச்சீர்திருத்தத் துறை செயலாளர்பி.டபிள்யூ.சி.டேவிதார்அனுப்பியுள்ள கடிதம்: அரசுத்துறைகளில் பணியாற்றும்அதிகாரிகள், பணியாளர்கள்,பொதுத் துறைகளைச்சேர்ந்தவர்கள்கடவுச்சீட்டுகளைப் பெற சிலகடினமான நடைமுறைகள்பின்பற்றப்படுகின்றன. இந்தநடைமுறைகளை எளிதாக்கவெளியுறவுத் துறை அமைச்சகம்முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்குவிண்ணப்பிக்கும்போது அரசுத்துறைகளின் அதிகாரிகள்,அலுவலர்கள், பணியாளர்கள்உள்ளிட்டோர் தங்களது பணி,தாங்கள் யார் என்பதைத்தெரிவிக்கும் அடையாளச்சான்று அல்லது அரசுத்துறைகளில் இருந்துஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்கவேண்டும் என்று ஏற்கெனவேதெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச்சான்றிதழ்களைப் பெறுவதுகடினமாக இருப்பதால் இந்தநடைமுறை இப்போதுஎளிதாக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடவுச்சீட்டைப்பெறுவதற்குவிண்ணப்பிப்பதற்கு முன்னதாக,அதுகுறித்த முன்னறிவிப்புக்கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயரதிகாரிக்குத்தெரிவித்தால் போதும்.ஆட்சேபணை ஏதும் இருந்தால்சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டுஅலுவலகத்துக்கு அதைத்தெரிவித்து கடவுச்சீட்டுவிண்ணப்பத்தை திரும்பப்பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார்தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்பெறுவது இனி ”ஈசி” -எளிதாக்கப்பட்ட புதியநடைமுறை அறிமுகம்
சென்னை: தமிழக அரசுஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும்முறையில் மாற்றங்கள்கொண்டு வரப்பட்டுள்ளதாகதமிழக பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் சுற்றறிக்கைஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின்அனைத்து துறை செயலாளர்கள்மற்றும் அதிகாரிகளுக்குபணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர்டேவிதார் அனுப்பியசுற்றறிக்கையில், "பாஸ்போர்ட்டுகளை அரசுஊழியர்கள், அதிகாரிகள் மற்றும்பொதுத்துறைகளைச் சேர்ந்தஊழியர்கள்பெற்றுக்கொள்வதில் கடினமானநடைமுறை இருந்தது. இதைமத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகம் தற்போதுஎளிதாக்கியுள்ளது.
முன்பு பாஸ்போர்ட்டை அவர்கள்பெறவேண்டுமானால், அரசுத்துறையின்ஆட்சேபனையின்மைச் சான்று,அடையாளச் சான்றுபோன்றவற்றை வாங்கிசமர்ப்பிக்க வேண்டும். இந்தநிலை தற்போதுமாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட் கேட்டுமண்டல அலுவலகத்திடம்விண்ணப்பிப்பதற்கு முன்பதாக,அவர் பணியாற்றும் துறையின்உயர் அதிகாரிக்குமுன்னறிவிப்பு கடிதத்தைகொடுத்தால் மட்டும்போதுமானது. அவருக்குபாஸ்போர்ட் வழங்கக்கூடாதுஎன்றால், மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு துறையின்உயர் அதிகாரி கடிதம் மூலம்ஆட்சேபனைகளைத் தெரிவித்து,விண்ணப்பத்தை திரும்பப்பெற்றுவிடலாம்" என்றுகூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அப்ளை செய்யதேவையான ஆவணங்கள்,கட்டணங்கள், விதிமுறைகள்என்ன? எப்படி செய்வது?
ஒரு நாட்டைக் கடந்து மற்றொருநாட்டிற்கு செல்கிற எவரும்கடவுச்சீட்டு (Passport) பெறவேண்டியது அவசியமாகஉள்ளது. அதனால் பாஸ்போர்ட்நமக்கு தேவை என்றால் முதலில்நாம் அணுகுவது இடைதரகர்களை தான், ஆனால்தற்போது எந்த இடைதரகர்களும் இல்லாமலே நாமேநேரடியாக பாஸ்போர்ட் எடுக்கஇந்திய அரசாங்கம் வழிவகைசெய்துள்ளது. பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும் செயல்முறைஇப்போது ஆன்லைனில்மாறிவிட்டது. புதியதாகநிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட்சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிறசெயல்பாட்டின் மூலம்,ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30நாட்களுக்குள்ளேயே உங்களதுபாஸ்போர்ட்டைப் பெற்றுவிடலாம். அந்த அதிகாரப்பூர்வஇணையதளம் இப்போது டாடாகன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம்பராமரிக்கப்படுகிறது. நம்மில்பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட்எடுக்க விருப்பம் இருந்தாலும்அதற்கான வழிமுறைகள்தெரியாததால் தரகர்களிடம்சென்று எடுக்கிறோம், இனிஅந்த அவசியம் தேவையில்லை.உங்கள் பாஸ்போர்ட்டைஆன்லைனிலேயே நீங்கள்அப்ளை செய்யும்செயல்முறையையும்,பாஸ்போர்ட் எடுக்க என்னவிதிமுறை மற்றும் வழிமுறைஅனைத்தையும் தெரிந்துகொள்ள போகிறோம்.
1) பாஸ்போர்ட் எத்தனைவகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமானபாஸ்போர்ட்கள்வழங்கப்படுகின்றன. Ordinaryபாஸ்போர்ட் சாதாரணகுடிமக்களுக்கும், Officialபாஸ்போர்ட் அரசாங்கஊழியர்களுக்கும்,Diplomaticபாஸ்போர்ட் முதல்வர், பிரதமர்போன்ற உயர்மட்டத்தலைவர்களுக்கும், Jumboபாஸ்போர்ட் வியாபாரநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுசெல்பவர்களுக்கும்வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன.ஒன்று ஆர்டினரி (Ordinary),மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும்பாஸ்போர்ட்டை எத்தனைவருடங்களுக்குப்பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்தபாஸ்போர்ட்டைப் பத்துவருடங்களுக்குப்பயன்படுத்தலாம். மீண்டும்அதை அதற்கான கட்டணத்தைக்கட்டிப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஒன்பதுவருடங்கள் முடிந்தவுடன்எப்போது வேண்டுமானாலும்புதுப்பித்துக் கொள்ளலாம்.மீண்டும் 10 வருடங்களுக்குவழங்கப்படும். இப்படிபுதுப்பிக்கும்போது, 15நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட்கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்கதேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டுஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவதுஇரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்தஒரு வருடமாக பணம் எடுக்கவும்போடவும் செய்து அதை பதிவுசெய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள்பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கானரசீது (உங்கள் பெயரில் இருக்கவேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவதுஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89அன்றைக்கு பிறந்த அல்லதுஅதற்குப் பிறகு பிறந்தவராகஇருந்தால் மட்டும் நகராட்சிஆணையாளரால் அல்லதுபிறப்பு & இறப்பு பதிவாளர்அலுவலகத்தில் கொடுக்கும்பிறப்பு/இறப்பு சான்றிதல்ஏற்கதக்கதாகும்.என்றால்அரசாங்கத்தால் தரும் பிறப்புசான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும்சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்)ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால்ECNR முத்திரை இருக்காது,அதற்காக கடைசியாக எதைபடித்து முடித்தீர்களோ அதனைகொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம்மாறும்போது/ எண்கணிதமுறையில்) மாற்றி இருந்தால்அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும்போது திருமணம் ஆகாமல்இருந்து, பழையது முடிந்துரினிவல் பாஸ்போர்ட் அப்ளைசெய்ய போனாலும் மேற்கன்டஅனைத்தையும் கொண்டுபோகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ்இணைக்க வேண்டும் அல்லதுமாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும்மனைவியும் சென்றுவாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டைகொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப்படித்திருந்தால் அல்லதுபடிக்கவே இல்லை என்றால்நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட்பெற்று விண் ணப்பிக்கலாம்.26.01.1989-ம்ஆண்டுக்குப் பிறகுபிறந்திருந்தால் பிறப்புசான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டுஎடுக்க விரும்பினால்,பெற்றோர்கள் கடவுச்சீட்டுஇருப்பவராக இருந்தால்,காவல்துறை அறிக்கைதேவைப்படாது. பெற்றோர்க்குகடவுச்சீட்டு இல்லாவிட்டால்அவர்தம் விண்ணப்பங்களும்காவல் துறைக்கு அனுப்பிஅறிக்கை பெற்ற பின்னரேகடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம்விண்ணப்பிபதால் என்னபயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டாரபாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ளஅதற்குரிய அலுவலரிடம்சமர்ப்பிக்கவேண்டியதற்கானதிட்டமிட்ட தேதி, நேரம்,தேவையான ஆவணங்கள்மற்றும் கட்டணம்ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கானகட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்துகொள்ள:http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ(சாதரணமான முறை)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 1500 ரூ(பாஸ்போர்டு முடிந்து இருந்தால்– Expired)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 3000 ரூ(பாஸ்போர்டு Expireஆகவில்லைஎனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில்500 ரூபாயைச் சேர்த்துக்கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம்புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெறவேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள்.அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட்பாஸ்போர்ட் வழங்கப்படும்.இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய்மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய்கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட்விண்ணப்பங்களை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தில்செலுத்தி 30 நாள்களில்பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடுகின்றன. அவசரமாகவெளிநாடு செல்பவர்க்குஉதவியாக விரைந்துபாஸ்போர்ட் பெறவும்வகையிருக்கிறது. இதற்கு“தட்கல் திட்டம்” என்ற புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தில்சிறப்புரிமை அடிப்படையில்விரைந்து பாஸ்போர்ட் பெறமுடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும்அனைத்து பாஸ்போர்ட்களைச்சார்ந்த காவல்துறையின்சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட்வழங்கிய பின் இருக்கும் கீழேசொல்லப்பட்ட பட்டியலிலிருந்துமூன்று ஆவணங்களைசமர்ப்பிப்பதன் மூலம் தட்கால்திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்பெறுவதற்கு விண்ணப்பதார்ர்பெறமுடியும். மூன்றுஆவணங்களில் ஒன்றுபுகைப்படைத்துடன் கூடியஅடையாள அட்டையாக இருக்கவேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட்பெற விழைவோர் ரூ.2500/-கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாகசமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின்பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாகசமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாளஅட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கானரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும்பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி)சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா,பதிவுசெய்யப்பட்டஒப்பந்தபத்திரங்கள் இன்னும்பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களால் வழங்கப்பட்டமாணவர்களுக்கான புகைப்படஅடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களானமுன்னாள் இராணுவ வீரரின்ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம்செலுத்துவதற்கான ஆணை,முன்னாள் இராணுவ வீரரின்விதவை/சார்ந்தவர்கள்சான்றிதழ்கள், முதியோர்ஓய்வூதிய ஆணை, விதவைஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால்வழங்கப்பட்ட பணிக்கானபுகைப்பட அடையாள அட்டை,பொது நிறுவனங்கள், உள்ளூர்அமைப்புகள் அல்லது பொதுவரையறை நிறுவனங்கள் வழங்கிய ஆணை.

Manonmaniam Sundaranar university - November 2016 - Exam Result (Updated) !!

*Manonmaniam Sundaranar university - November 2016 - Exam Result (Updated)
Exam Results
November - 2016 Examination Results
Select the Course University Register Number
View Result
* The results published ...http://www.msuniv.ac.in/results.aspx

கடலூர் மாவட்டத்தில் உள்ள தங்களிக்குப்பம் நடுநிலைப்பள்ளியின் Smart Class

"தாத்தா பாட்டி இல்லாத வீடு" ஆசிரியையின் கட்டுரை

செங்கம் தமிழ் சங்கத்தின் இலக்கிய விழா