>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044  23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி    tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்
நேரடி 044 2363 5050
044 23635010 விரிவு  2005
முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
நேரடி 044-2363 5014
044-2363 5010 விரிவு  3000
முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)
நேரடி 044-2363 5015
044-2363 5010 விரிவு  3004
மாநில தேர்தல் அலுவலர்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் 044 24323794 24343205
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையர் 044 28513259 28518079
பேரு்ராட்சிகளின் இயக்குநர் 044 25340352 25358742
சட்ட ஆலோசகர் (மேல் முறையீட்டு அலுவலர்)
நேரடி 044-2363 5013
044-2363 5010 டூ விhpவு 2008
நிதி ஆலோசகர் (ம) தலைமை கணக்கு அலுவலர்
நேரடி 044-2363 5012
044-2363 5010 விரிவு  3001
தலைமை நிர்வாக அலுவலர் (பொது தகவல் அலுவலர்)
நேரடி 044-2363 5016
044-2363 5010 விரிவு  3006
மக்கள் தொடர்பு அலுவலர்
நேரடி 044-2363 5017
044-2363 5010    விரிவு  3002
கணினி நிரலர் 044-263 5010 விரிவு  2009
கண்காணிப்பாளர் (நிர்வாகம்) 044-2363 5010 விரிவு  4001
கண்காணிப்பாளர் (ஊராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  4003
கண்காணிப்பாளர் (நகராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  3008
கண்காணிப்பாளர் (சட்டம்) 044-2363 5010 விரிவு  3003
கணினி அறை 044- 2363 5010 - விரிவு  2009
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி - தொலையச்சு எண்கள்
மாவட்ட ஆட்சியர்  மாவட்டம் மாவட்டத் தேர்தல்  அலுவலாpன் பதவியிடம் அலுவலக தொலைபேசி எண் தொலையச்சு  எண்
சென்னை மாநகராட்சி ஆணையர் 044 25381330 2538396
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் 0422 2301114 2216630
கடலு}ர் மாவட்ட ஆட்சியர் 04142 230999 230555
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342 230500 230886
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 0451 246119 2432132
ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424 2266700 2262444
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 044 27237433 27238477
கன்னியாகுமாp மாவட்ட ஆட்சியர் 04652 279555 260999
கரு்ர் மாவட்ட ஆட்சியர் 04324 257555 257800
கிருக்ஷ;ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343 239500 239300
மதுரை மாவட்ட ஆட்சியர் 0452 2531110 2533272
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் 04365 252700 254058
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 04286 281101 281106
பெரம்பலு}ர் மாவட்ட ஆட்சியர் 04328 276300 277875
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 04322 221663 221690
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 04567 231220 231220
சேலம் மாவட்ட ஆட்சியர் 0427 2452233 2400700
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 04575 241466 241581
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 04362 230102 230857
நீலகிரி மாவட்ட ஆட்சியர் 0423 2442344 2443971
தேனி மாவட்ட ஆட்சியர் 04546 253676 251466
திருவள்ளு்ர் மாவட்ட ஆட்சியர் 044 27661600 27661200
திருவாரு்ர் மாவட்ட ஆட்சியர் 04366 223344 221033
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 0461 2340600 2340606
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் 0431 2415358 2411929
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 0462 2501222 2500224
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 04175 233333 222148
வேலு}ர் மாவட்ட ஆட்சியர் 0416 2252345 2253034
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 04146 222450 222470
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 04562 252525 252500
தொடர்புடைய இணைய இணைப்புகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இனையதளம்  http://www.tnsec.tn.nic.in/
மாநில தேர்தல் அலுவலர்கள்
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை  www.tnrd.gov.in
மாநில தேர்தல் அலுவலர் , ஆணையர்இ நகராட்சி நிர்வாகத்துறை
www.tn.gov.in/cma
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ பேரூராட்சிகள் துறை
www.tn.gov.in/dtp

EMIS ONLINE ENTRY IN JPG FORMAT............EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை

EMIS ONLINE ENTRY IN JPG FORMAT............EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை

emis online website address   :click here www.emis.tnschools.gov.in
undefined

1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக் 

இன் செய்யவும்.


2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.
3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.

                   





4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.


4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.





4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (--------- இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.

4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.

4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)

4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.

4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் --------- அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).

4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.

4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.

4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)

4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)

4e, அகடமிக் இயர் 2014 - 2015 என பதிவிடவும்.

4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)

நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

சில டிப்ஸ்

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
              முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)

பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR  MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும் 



Internal Server Error

  வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!

இப்பதிவு நீண்ட கட்டுரையாக தெரிந்தாலும் நேரடியாக 10 மாணவர்கள் விபரம் பதிவு செய்து விட்டால் நமக்கே எளிதாகிவிடும்.

                        இதில் மாற்றங்கள் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அவ்வப்போது திருத்தி வெளியிடப்படும்.மேலே குறிப்பிடப்பட்ட   படங்களைப்பார்த்து புரிந்து கொள்ளவும்..

பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி

கரூர்: பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், பெண் கல்வி திட்டக்கூறு சார்பில், கரூர் மாவட்டத்தில், 31 பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 மாணவியருக்கு, தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து, கராத்தே பயிற்சியாளர் ராமதாஸ் கூறியதாவது: பள்ளி மாணவியரில், 10 முதல், 15 வயதுக்கு உட்பட்டோர், பாலியல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், எதிர் தாக்குதல் நடத்த முடியாமல், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். 

இதற்கு, ஒரு சில யுக்திகளை கையாண்டாலே, எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும். 'திகாத்' என்ற எதிர் தாக்குதல் கராத்தே பயிற்சி மூலம், அந்த யுக்திகளை கற்று கொடுக்கிறோம். ஒருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் வந்தால், எப்படி எதிர் தாக்குதல் நடத்துவது என்ற பயிற்சி அளிக்கப்படும்.

எதிரிகளிடம் போராடும் போது, அவர்கள் உடலின் மென்மையான உறுப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்போது, எதிரிகள் எளிதில் பயந்து ஓடி விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் உட்பட 6 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. இதற்கிடையில், தமிழக உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய தலைவர் பதவிக்கு கடந்த ேதர்தலில் நேரடியாக மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தனர். ஆனால், இந்தமுறை நேரடி தலைவர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களே, தலைவர்களே தேர்வு செய்வார்கள். இதற்கான அரசாணை சமீபத்தில் தமிழக அரசு பிறப்பித்தது. அதே சமயம் பொது, பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எது என்பது குறித்த முழு விவரம் தெரியாமல் இருந்தது.

அதேநேரத்தில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனுக்களை மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தன. ஆனால் எந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டுகள் இடஒதுக்கீட்டில் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திணறி வந்தனர். இதனால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமா என்பது தெரியாமல் ஆண்களும் விண்ணப்பித்த அவலம் நடந்தது. தனி வார்டில் பொதுப்பிரிவினர் போட்டியிட தங்கள் கட்சியில் விருப்ப மனு அளித்த சம்பவமும் நடந்தது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அரசாணை விவரம் வருமாறு:

மாநகராட்சிகள்:

பெண்கள்: சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பொது: திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவி (பொது) ஆண்கள் அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
எஸ்.சி.எஸ்.டி.(ஆண்): தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி/எஸ்டி(ஆண்)க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
நகராட்சிகள்:
எஸ்.சி(பொது): நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர்.
எஸ்.சி(பெண்கள்): ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், பேர்ணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர். எஸ்.சி.டி(பெண்கள்): கூடலூர். 
பெண்கள்(பொது): ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை காரைக்குடி, கீழக்கரை. தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், 
பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர், வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை. மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம். 
பொது: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனாகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம். பெண்கள்: செங்கல்பட்டு, மதுராந்தகம்.
எஸ்,சி(பொது): மறைமலைநகர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள்:
பொது: திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, 
எஸ்.டி பெண்கள்: நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி(பொது): நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள்(பொது): காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி. ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வார்டு வாரியாக ஒதுக்கீடு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

* தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. 
* 2011ல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2016 அக்டோபர் 24ல் பதவிக்காலம் முடிவடைகிறது.
* இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 26க்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
* இன்று உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தேனி:உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர். சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட்
அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

சிவகங்கை: உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பெறுவதில் இருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, 72 வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் படிவங்கள், உறைகள் போன்றவை மாநில தேர்தல் ஆணையமே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் ஜெம் கிளிப், குண்டூசி, பிளேடு, சணல் கயிறு, துணி, மை குப்பி வைக்கும் கோப்பை, தள்ளுகோல், தாள், சுவரொட்டி, முத்திரை மை என, 40க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் கடந்த காலங்களில் விலை நிர்ணயத்தில் மாறுபாடுகள் காணப்பட்டன. இதனால் அவற்றை கொள்முதல் செய்வதில் சில நடைமுறைகளை கடைபிடிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் செய்யும் பொருட்களின் அதிகபட்ச விலையை கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுக்களே நிர்ணயிக்க வேண்டும். இந்த தொகைக்கு மிகாமல் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்; இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என, ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியும் வாழ்த்து சொல்லியிருக்காரா? - ஜெ.ஆச்சரியம்!

தற்போது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையில் டி.வி. இருந்தாலும் அதை யாரும் ஆன் செய்யவில்லை. நேற்று மாலைதான் முதல்வரே டி.வி.யை ஆன் செய்யச் சொல்லியிருக்கிறார். நியூஸ் சேனல்கள் சிலவற்றை மாற்றச்சொல்லி பார்த்திருக்கிறார். அந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில்

குணமடைந்து வீடு திரும்ப தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொன்ன செய்தி போயிருக்கிறது. அதில் திமுக தலைவர் கருணாநிதியும் வாழ்த்திய செய்தி வந்திருக்கிறது. ‘இவரும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா?’ என்று, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி கேட்டிருக்கிறார். அதன் பிறகுதான் யாரெல்லாம் வாழ்த்தினார்கள் என்ற லிஸ்ட்டை கேட்டிருக்கிறார் முதல்வர். உளவுத்துறை போலீஸார் மூலமாக அடுத்த அரை மணி நேரத்தில், முதல்வர் குணமடைய யாரெல்லாம் என்ன சொல்லி வாழ்த்தினார்களோ அந்த டீட்டெய்ல் தகவல்கள் மருத்துவமனைக்குப் போயிருக்கிறது. அதை வாங்கி நிதானமாக படித்துப் பார்த்தாராம் முதல்வர்!.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 : ஒரு இடத்துக்கு 291 பேர் போட்டி!!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 5,451 காலியிடங்களுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 291 பேர் போட்டியிடுகின்றனர்.


இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட இடங்களை எழுத்துத் தேர்வு மூலம்
நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி அறிவித்தனர். இதையடுத்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்தன. விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 8ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முதல்நாள் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தை செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்தனர். இதற்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பணிக்கு இளங்கலை, முதுகலை படித்த பட்டதாரிகளும் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு 15 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் காலிப் பணியிடங்கள் 5,451 மட்டுமே. ஒரு பணிக்கு 291 பேர் போட்டியிடுகின்றனர். வழக்கமாக, டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வருவதுண்டு. இந்த தேர்வுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் மற்றும் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகிய இரண்டு காரணங்களால்தான் விண்ணப்பங்கள் அதிகமாக வருகின்றன. ஒவ்வொரு குரூப் 4 தேர்வுக்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் 15 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தது வரலாற்றிலே இது முதல்முறையாகும்.

குரூப் 4-க்கான காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கவுள்ளது. இத்தேர்வில் நேர்முகத் தேர்வு கிடையாது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன.

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் !



 ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க
வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க
கூடாது.


 தகுதி
 (அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட
விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்
பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு
நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த
ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய
வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி
ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால்,
உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது
இடம் பெற்றிருக்க வேண்டும்.
வேட்பாளர் கையேடு 3
 (ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக
இருக்க வேண்டும்.
 (இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர்
பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர்
அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ
அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ
இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த
பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச்
சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர்
வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த
பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது
(பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்)
மட்டுமே போட்டியிடலாம்.

2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை

 கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு
ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்)
ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது
அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில
அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது.
 இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது
அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து
ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ,
1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.
 மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர்
4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016
நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு
ஆனது –
(அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட
காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும்
மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு
ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.
 மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு
ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு
குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட
நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு
ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.
 மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட
பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு
38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட
நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
மேலும்,
(அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய
நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
 (இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட
விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு
வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது.

ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும்.
வேட்பாளர் கையேடு 5
(ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு
எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக்
கூடாது.
(உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும்
வைத்திருக்கக் கூடாது.
(ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும்
விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது.
(எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது.

 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய
காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில்
போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க
ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர்
ஆவார்.
மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி
வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்,
பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து

டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, ‘வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய கணக்கை நீக்கிவிட்டாலோ அல்லது வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிவிட்டாலோ அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் சர்வரில் இருக்காது. பதிவு செய்த தகவல் அதன் உரிமையாளருக்குச் சென்று சேராவிட்டாலும் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். புதிய என்கிரிப்ஷன் முறையால் 3ஆம் நபர் யாரும் இந்த தகவல்களைப் பார்க்க முடியாது’’ எனக் கூறினார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைப்பதாகக் கூறினர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், “புதிய கொள்கை நடைமுறைக்கு, வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு முன்பு வரை சர்வரில் பதிவான பயன்பாட்டாளர் தகவல்கள் எதுவும் ஃபேஸ்புக் உட்பட எந்த நிறுவனத்துடனும் பகிரக்கூடாது. மேலும் வாட்ஸ் அப் சேவையில் இருந்து வெளியேறுபவர்களின் தகவல்களை சர்வரில் இருந்து அழித்துவிட வேண்டும். வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் சேவை தொடங்கியபோது இருந்த விதிமுறைகளைத் தொடர வேண்டும் என்று பயன்படுத்துவோரும் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். 
மேலும், ஊராட்சி தலைவர், 34 ஆயிரம்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் வரை செலவு செய்யலாம். இதை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

BHARATHIDASAN UNIVERSITY B.Ed Admission !!!

*BHARATHIDASAN UNIVERSITY*
Centre for Distance Education
B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
*Application form will be  issued from 26.09.2016
*Eligibility - 10+2+3 or 11+1+3
*Cost of Application - Rs.500/-
*Fees - Rs.25,000 Per Annum
*Last date for receipt and filled-in application forms - 25.10.2016
www.bdu.ac.in

தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசுப்பள்ளி !!!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர்.நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள மேலப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நான்கு வகுப்பறைகள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 50 மாணவிகள் உள்ளிட்ட 95 பேர் பயின்று வருகின்றனர்.மேலப்பட்டி கிராமத்தின் குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 30 மட்டுமே. இப்பள்ளியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட லத்துவாடி மற்றும் புதுப்பட்டி கிராமத்தினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
இதற்கான காரணம் குறித்து தலைமை ஆசிரியர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, பாடத்திட்டத்திற்கு அப்பால் பொது அறிவை வளர்க்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித் தாள்கள் வாங்கி மாணவ, மாணவிகளை வாசிக்கச் செய்கிறோம். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். பொது அறிவை வளர்த்துக் கொள்ள தாழ்வார நூலகம் அமைத்துள்ளோம். சுய சேவை நியாய விலைக்கடை ஒன்றும் வகுப்பறையில் செயல்படுகிறது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அதற்குண்டான பணத்தைப் போட்டு வைக்கின்றனர்.
தபால் நிலையம் இங்கு செயல்படுகிறது. சக மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் அனுப்பி வருகின்றனர். மாணவர்களின் படைப்பாற்றலை வெளியில் கொண்டு வரும் வகையில் குதூகலம் என்ற மாதாந்திர கையெழுத்துப்பிரதி நடத்தப்படுகிறது. 16 பக்கங்கள் கொண்ட இவ்விதழில் சிறுகதை, பழமொழி, விடுகதை, தலைவர்கள் வரலாறு, முக்கிய தினங்கள் இடம் பெறும். இதன் ஆசிரியரும். படைப்பாளிகளும் மாணவ, மாணவிகளே. இதனை ரூ.10 சந்தா செலுத்தி அருகிலுள்ள பள்ளியினரும் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக உதவியுடன் ஓவியம், நடனம், யோகா பயிற்சிக்கு இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஒரு டிரஸ்டின் உதவியுடன் தினமும் மாலையில் பால் மற்றும் பிஸ்கட், பயறு வகைகள் வழங்குகிறோம்.வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பள்ளி சட்ட மன்றம் கூடும், சபாநாயகர், முதல்வர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளே. அரசுப் பள்ளியின் இதுபோன்ற செயல்பாடுகளால் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்து பயில்வதோடு, அருகிலுள்ள சற்று வசதியான பெற்றோர்களும் தனியார் பள்ளியிலிருந்து இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர் என்றால் மிகையல்ல.

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
உத்தரவு :
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது, பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8 வரை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில்பங்கேற்க முடியும். பதிவுக்கான விண்ணப்பங்களை,http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.