>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 17 ஜூலை, 2017

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு...

பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டும் என, தமிழ் கற்கும் சட்டம், 2006ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2006 - 07ல், அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டாக அமல்படுத்தி, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மை பள்ளிகள், நீதிமன்றத்தை நாடின. இதுபோன்று எதிர்ப்பு எழாதபடி, நடப்பு கல்வியாண்டு தொடக்கம் முதலே, அனைத்து பள்ளிகளிலும், தமிழ் பாடம் நடத்துவதை உறுதி செய்து கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுபான்மை மொழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி, தமிழ் பாடம் நடத்த, அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

SC, ST & MBC SCHOLARSHIP FORM-2017 - UPPER PRIMARY

SC, ST & MBC SCHOLARSHIP FORM-2017 -  PRIMARY

தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?

தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?
இந்திய பார் கவுன்சில் சட்டப் படிப்புக்கான விதிகளை இயற்றியுள்ளது. அந்த விதிகளின் விதி 5 ல் 3 ஆண்டுகள் சட்டப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகள் சட்டப் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான தகுதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளது.
அந்த விதியின் படி 5 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதியாக 10,12 வகுப்புகள் முடித்திருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. ஒரு மாணவர் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையும், அதன்பின்னர் 12 ம் வகுப்பையும் முடித்திருந்த அந்த மாணவரின் வயது நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு உட்பட்டிருந்தால், 5 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவார். 3 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு ஒருவர் 10 மற்றும் 12 மற்றும் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்திய பார் கவுன்சிலால் உருவாக்கப்பட்டுள்ள விதி 5 ல் 12 ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது முதல் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை தொலைதூர கல்வியில் பெற்றிருந்தால் அவர்களை 5 ஆண்டுகள் சட்டப் படிப்பு அல்லது 3 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு தகுதியுடையவர்களாக கருதலாமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர கல்வி முறையில் 10, 12 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையும் சட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ள தடை ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
W. P. NOs - 34630,34220,32799,33108/2016
Dt - 21.10.2016
W. P. NO - 34630/2016
S. தீர்த்தகிரி Vs பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பலர்
(2016-8-MLJ-456)
(2017-1-CTC-160)

ஞாயிறு, 16 ஜூலை, 2017

TET CV - ID / PERSONAL DETAIL FORM - SPECIMEN MODEL





'தேர்வு முறை, கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் தேவை!'...

சென்னை:நினைவாற்றலை மட்டுமே ஆய்வு செய்யும், தற்போதைய தேர்வு மற்றும் கற்பித்தல் முறையை, மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறினார்.


சென்னை பல்கலை யில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், அவர் பேசியதாவது:
நாட்டில் உயர் கல்வி என்பது, குறுக்கு சாலையாக உள்ளது. எதை நாம் அடைந்திருக்கிறோமோ, அந்த இலக்கில் முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மாணவர்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை சராசரியாகவே உள்ளது.

தரமான கல்வி

தற்போது, சர்வதேச அளவில், அறிவு போட்டி நடக்கிறது. வேளாண், தொழில், அறிவியல் என, ஒவ்வொரு துறையிலும், திறமையான பயிற்சி பெற்றவர்கள் தேவை. அதற்கு, மிகவும் தரமான உயர் கல்வி வேண்டும். அதில், நாம் குறைவாக இல்லை. ஆனால், உயர் தரமான மற்றும் முழு ஈடுபாட்டுடன் கூடிய உயர் கல்வியாக, அது வலு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயன்பாடு, சமவிகிதம் மற்றும் தரம் என, மூன்றையும் பின்பற்ற வேண்டும். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், தரமான கல்வியை பெறுவோர் எண்ணிக்கை, நம் நாட்டில் குறைவு. உரிமை மறுக்கப்படுவோருக்கு, உயர் கல்வி முழுமையாக கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புடன் கூடிய தரமான கல்வியும் தேவைப்படுகிறது.

இதற்கு, இந்திய கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை. பாடத்திட்டத்தை, உலகத் தரத்தில் நவீனப்படுத்த வேண்டும். பொருளியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் போன்றவற்றில், இன்னும் முன்னேற்றம் வேண்டும். பாடத்திட்டம் புதுப்பிப்பதை, வெறும் முகப்பூச்சாக செய்யக் கூடாது.

தேர்வு முறையிலும், பெரிய மாற்றம் தேவை. கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில், மாணவர்களை உருவாக்கும் கல்வி முறை, நம் நாட்டில் உள்ளது. இதற்கு, நம் தேர்வு முறையை மாற்றாததும் காரணம்.

தனித்திறன்

வெறும் நினைவாற்றலை மட்டும் சோதிக்கும் தேர்வாக இல்லாமல், தனித்திறன்களை ஆய்வு செய்வதாக, தேர்வு முறை மாற வேண்டும். நமக்கு ஒருங்கிணைந்த தேர்வு முறை வேண்டும். மாணவர்களின் திறனை வேறுபடுத்தி, ஆய்வு செய்யும் தேர்வு வேண்டும்.

அதேபோல், முழு ஈடுபாட்டுடன் கூடிய கற்பித்தல் முறையும் தேவை. எனவே, ஆசிரியர்கள், தற்கால தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். மாணவர்களிடமும் மாற்றம் வேண்டும். தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, தேர்வு முறை மற்றும் கற்பித்தலை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு, அவர்கள் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆப்ஸ் மூலம் அசத்துகிறார் ‘அர்ப்பணிப்பு ஆசிரியர்’ அரசு பள்ளியில் நடக்குது ஆன்ட்ராய்ட் 4டி பாடம்..

‘அரசு பள்ளியா... அடிப்படை வசதிகள் இருக்காது. மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் இருக்க மாட்டாங்க.. ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் இருக்க மாட்டாங்கப்பா..’ - என்பது பொதுவான புலம்பல்தான். ஆனால், இருக்கும் வசதிகளோடு, புதுமையை புகுத்தி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர் சில ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர்தான்.. ஆசிரியர் செந்தில்நாதன் (36). 



ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது 4டி தொழில்நுட்ப பாடம் வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியர் செந்தில்நாதனை நேரில் சந்தித்து, கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தோம். அவரது 4டி தொழில்நுட்ப பாடம் குறித்து பேசினோம். இனி அவரே பேசுவார்... ‘‘அரசு பள்ளிகளிலும் புதுமையை புகுத்தி, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவது குறித்து யோசித்தபிறகுதான் இந்த ஐடியா தோன்றியது.

இதற்கு செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் ஏர்டிராய்ட் (Airdroid) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளவும். அதேநேரம் இன்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஏர்டிராய்ட் வெப்சைட்டை ஓபன் செய்யவும்.

 இப்போது மொபைலில் உள்ள ஏர்டிராய்டிற்கு சென்று, இமெயில் முகவரியை பதிவு செய்யவும். ஆப் இயங்க தொடங்கியதும், மொபைலின் வலது பக்கம் உள்ள பட்டனை அழுத்தினால் கேமரா இயங்கும். இதனை லேப்டாப்பில் உள்ள ஏர்டிராய்ட் வெப்சைட் QR code அருகே கொண்டு செல்லவும். அவ்வளவுதான்... உங்கள் மொபைல் ஸ்கிரீன், லேப்டாப் ஸ்கிரீனில் தெரியும். இனி மொபைலை லேப்டாப் மூலமாக இயக்கலாம். இப்போது ஸ்பேஸ் 4டி (space 4d), அனிமல் 4டி (animal 4d), அனாடமி 4டி (anatomy 4d) போன்ற ஆப்ஸை மொபைலில் டவுன்லோடு செய்யவும். 

பின்னர் மொபைல் கேமராவில் பிஎஸ்எல்வி ராக்கெட், யானை, குரங்கு ஆகியவற்றின் படங்களை எடுக்கவும். இவற்றை லேப்டாப்பில் ஓபன் செய்து, பிற 4டி ஆப்ஸ் மூலமாக இயக்கி, ஆட வைக்கலாம். பாட வைக்கலாம். ராக்கெட்டை அந்தரத்தில் செல்ல வைக்கலாம்.

லேப்டாப்பை, புராஜெக்டரில் இணைப்பு கொடுத்து பெரிய சைஸிலும் யானை, குரங்கு அட்டகாசத்தை காணலாம். இதன்மூலம் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் மனதில் உற்சாகம் பிறக்கும். நாம் சொல்வதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். தலைமையாசிரியர் தமிழரசியின் ஒத்துழைப்பும், ஆதரவும் இதற்கு முக்கிய காரணம்’’ என்று முடித்தார். அரசு பள்ளிகளில் இருக்கும் வசதிகளோடு, மாறுபட்டு யோசித்து அதை செயல்படுத்திய ஆசிரியர் செந்தில்நாதனை தாராளமாக பாராட்டலாமே...!


கருவேலம் வெட்டுங்க... பரிசை வெல்லுங்க...
கருவேல ஒழிப்பு தீவிரமாக இருந்தபோது செந்தில்நாதன், ஒவ்வொரு மாணவரும் 10 கருவேல மரங்களை வெட்டினால் பரிசு தருவதாக கூறியிருக்கிறார். 62 மாணவர்கள், இதனை நிறைவேற்றி பரிசு பெற்றார்களாம். பரிசாக இவர் வழங்குவது பெரும்பாலும் புத்தகங்களைத்தான். 

அதுபோக இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு கடினமான 2 கேள்விகள் கேட்பாராம். சரியாக சொல்பவர்களுக்கும் புத்தகம்தான் பரிசு. மேலும், வாசிப்புத்திறனை வளர்க்க 72 மாணவர்களை அரசு நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்த்திருக்கிறார்.

தனி(யார்) சீருடை
அரசு பள்ளி சீருடை தனியாக இருந்தாலும், வாரத்தில் 2 நாட்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சீருடையை மாணவ, மாணவிகள் அணிந்து வருகின்றனர். இதற்காக தலைமையாசிரியை தமிழரசி, பெற்றோர்களுடன் கலந்துபேசி இதற்கான நடவடிக்கையை செய்துள்ளார். மேலும், இப்பள்ளி மாணவர்கள் பலர் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் அதிகளவு வெற்றி பெற்றும் வருகின்றனர்.

அகில இந்திய கவுன்சிலிங்: 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்'...

சென்னை: அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங் ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. தமிழகத்தில் இருந்து, 456 எம்.பி.பி.எஸ்., மற்றும், 30 பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும், 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் இடம் பெற்றுள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், 13, 14ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், 4,018 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். அவர்கள், வரும், 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

சேராதவர்களின் இடங்கள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு, ஆக., 5 முதல், 7 வரை நடைபெறும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சேர்க்கப்படும். இதில், இடம் பெற்றவர்கள், ஆக., 9 - 16க்குள் மருத்துவ கல்லுாரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு..

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

அதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும் தாமதமானது. ஆனால், 'நீட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளதால், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, நாளை முதல் இன்ஜி., கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 988 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.2,083 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையும், நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடக்கிறது. இதில், மொத்தம், 6,224 இடங்களுக்கு,2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தொழிற்கல்வியில், அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்ணாக,179 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2:00 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது.

இந்த கவுன்சிலிங் முடியும் போது, 4,500௦ இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, தெரிகிறது. இந்த காலியிடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். மாற்று திறனாளி களுக்கு, ஜூலை, 19; விளையாட்டு பிரிவுக்கு, ஜூலை, 21; பொது பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23௩ல் கவுன்சிலிங் நடக்கிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் மற்றும் எந்த மாணவர்கள், எந்த நாளில் வர வேண்டும் என்ற பட்டியல், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜி., கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில், மாணவர்களின் மொபைல் போன் மற்றும், 'இ - மெயில்' முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டன. மேலும், கவுன்சிலிங்கின் ஒவ்வொரு நிலையும், மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு, அதுபோன்ற தகவல்களை அனுப்புவதில் தாமதம் காணப்படுகிறது.


ஏற்பாடுகள் என்ன... மாணவர்கள் குழப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், நாளை துவங்கும் நிலையில், அதற்கான வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் குறித்து, முறையான அறிவிப்புகள் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலையில் இட வசதி செய்யப்படும்.

மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி, அரசு பஸ்களில், இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கவுன்சிலிங் முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி, திரும்ப செல்லலாம். இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி மூலம், போக்குவரத்து துறைக்கு தெரிவித்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, மாணவர்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் பாஸ் பெறுவது எப்படி என்ற விபரங்களை, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, இதுவரை வெளியிடவில்லை. மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை.

TET 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு...

ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017
பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

 பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017

1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
குறிப்பாணை தேர்வரால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி இரு நகல்களில் கொண்டுவரவேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (attested) செய்யப்பட்டிருக்கவேண்டும்.
2.கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் சுய மேலொப்பம் (Self attested) செய்யப்பட்ட இரண்டு ஒளிநகல்கள் (Photocopy).
i.பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book / Mark Sheet).
ii.PUC / மேல்நிலைக்கல்வி (+2) மதிப்பெண் பட்டியல் / 3 ஆண்டு பட்டயப்படிப்பு (3 years Diploma Course).
iii.இளங்கலைப்பட்டம் (B.A., B.Sc.,/B.Lit.,).
iv.இளங்கலைப்பட்டம் மதிப்பெண் சான்றிதழ்கள் (UG Degree Mark Statement for all semesters) மற்றும் இளங்கலைப்பட்டம் தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Statement).
v.இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் (D.T.Ed.,/D.E.Ed.) (தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்).
vi.கிரேடு / கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஆதாரமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப்பட்டியல்கள் இணைக்கப்படவேண்டும்.
vii.தொழிற்கல்விப் (கல்வியியல்) பட்டம் பி.எட்., / தமிழ்ப்புலவர் பயிற்சி (TPT) / சிறப்புக் கல்வியியல் பட்டம் (Special B.Ed.).
viii.கல்வியியல் பட்டம் / சிறப்புக் கல்வியியல் பட்டம் / தமிழ்ப்புலவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்.
ix.தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் U.G.degree, B.Ed., / Spl B.Ed / D.T.Ed., படிப்பினை தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் (பயின்ற கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து சான்று) பெறப்பட வேண்டும்.
x.இனச்சான்றிதழ் (Community Certificate) (1. நிரந்தர சான்றிதழாக இருத்தல் வேண்டும். 2. திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயரில் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்).
xi.நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate).
xii.மாற்றுத் திறனாளிகள் எனில் உரிய சான்றிதழ் (அரசு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்).
3.அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், இரு ஒளிநகல்கள் படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக்கொண்டுவரவேண்டும்.
4.சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
5.ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது.
6.பணிநாடுநர் குறிப்பிட்ட நேரம் / தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால் அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
7.பணிநாடுநரின் தகுதி (Eligibility) பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.
8.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டன. அதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 3.66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதத்தை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் அழைப்புக் கடிதத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ISO அங்கீகாரம் பெற்ற ஒரே அரசுப்பள்ளி கீச்சாம் குப்பம்....

தமிழகத்தில் ஐஎஸ்ஓ அங்கீகாரம் பெற்ற ஒரே அரசு பள்ளி நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் அரசு பள்ளியாகும். சுனாமியால் 80 குழந்தைகளை இழந்த பிறகு சோகம் மற்றும் சோதனையில்  இருந்து மீண்டெழுந்துள்ளது. 
கடந்த 2004 டிசம்பர் 24ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் நாகை வட்டம் கீச்சாம்குப்பம் மீனவ கிராமத்தில் 600 பேர் பலியாயினர். அப்போது கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 80 குழந்தைகள் இறந்தனர். நாகை மாவட்ட சரித்திரத்தில் பெரும் கரும்புள்ளியாக குழந்தைகளின் மரணம் பதிவானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சுனாமியால் சிதலமடைந்த பள்ளி தற்போது பிரம்மாண்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.
சுனாமி பேரழிவில் சிக்கிய பின் இப்பள்ளி சால்டு ரோட்டில் உள்ள சேவா பாரதி சுனாமி குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது. 2008ல் பி.டி.ஏ. என்ற தொண்டு நிறுவனம் கீச்சாம்குப்பத்திலேயே ₹65 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தது. ஆனால் ஆறாத வடுவாக மனதில் படிந்துபோன சுனாமி நினைவலைகளால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சினா். 
190 மாணவர்களின் பெற்றோர் மட்டுமே அச்சத்தை தொலைத்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். ஆனாலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ந்து 2013ம் ஆண்டு 92 ஆக சுருங்கியது. இதனால் 11 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு 4 ஆசிரியர் பணியிடங்களை அரசு ரத்து செய்தது. 
மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் தலைமை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியருமான பாலு தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி திட்டமிட்டு ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்தினர். அதன்படி ஒரு வகுப்பறையில் எல்.சி.டி. ப்ரொஜக்டர், தொடு திரை, லேப்டாப், ஸ்பீக்கர், இணையதள இணைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்காக வந்த  பெற்றோர்களிடம்  ஸ்மார்ட் கிளாஸ் வசதி பற்றி  கூறி அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தனர்.  
இதனால் மாணவர் சேர்க்கை பல்கி பெருகிறது. தற்போது முன்பருவ மழலையர் முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 448 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து தற்போது ஆசிரியர்கள் எண்ணிக்கையும்  15 ஆனது.  இன்றைக்கு பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பார்த்த  ஐ.எஸ்.ஓ. (9001:2015) நிறுவனம், கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. சான்று வழங்கி கவுரவித்தது. 
இதன் மூலம் தமிழகத்தில் ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்றுள்ள ஒரே அரசு பள்ளி என்ற கவுரவத்தை பெற்றது.உடனடியாக பெற்றோர்கள் ஒன்று திரண்டு  2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசை அளிப்பதைப்போன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து  ஒப்படைத்தனர். பள்ளி மாடியில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 
30 லட்சம் மதிப்பில் இப்பள்ளியில், அறிவியல் ஆய்வகம், கணிணி ஆய்வகம், டிஜிட்டல் நூலகம், அனைத்து வகுப்புகளிலும் இணையத்தள வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 220 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் நேரில் வந்து பள்ளியை பார்வையிட்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்க கல்வி அலுவலகம் மூலம் காமராஜர் விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இப்பள்ளி தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விருது வழங்கப்பட உள்ளது. 
சுனாமி எச்சரிக்கை அலாரம்
கீச்சாம்குப்பம் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் என்பதால், இப்பள்ளியில் சுனாமி எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மணி ஒலித்தால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியின் மேல் தரைத் தளத்திற்கு சென்று சேர்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது....

சனி, 15 ஜூலை, 2017

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.


ஆசிரியர் தேர்வு வாரியம்

குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017


பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

 பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017

1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
குறிப்பாணை தேர்வரால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி இரு நகல்களில் கொண்டுவரவேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (attested) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

2.கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் சுய மேலொப்பம் (Self attested) செய்யப்பட்ட இரண்டு ஒளிநகல்கள் (Photocopy).

i.பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book / Mark Sheet).

ii.PUC / மேல்நிலைக்கல்வி (+2) மதிப்பெண் பட்டியல் / 3 ஆண்டு பட்டயப்படிப்பு (3 years Diploma Course).

iii.இளங்கலைப்பட்டம் (B.A., B.Sc.,/B.Lit.,).

iv.இளங்கலைப்பட்டம் மதிப்பெண் சான்றிதழ்கள் (UG Degree Mark Statement for all semesters) மற்றும் இளங்கலைப்பட்டம் தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Statement).

v.இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் (D.T.Ed.,/D.E.Ed.) (தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்).

vi.கிரேடு / கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஆதாரமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப்பட்டியல்கள் இணைக்கப்படவேண்டும்.

vii.தொழிற்கல்விப் (கல்வியியல்) பட்டம் பி.எட்., / தமிழ்ப்புலவர் பயிற்சி (TPT) / சிறப்புக் கல்வியியல் பட்டம் (Special B.Ed.).

viii.கல்வியியல் பட்டம் / சிறப்புக் கல்வியியல் பட்டம் / தமிழ்ப்புலவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்.

ix.தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் U.G.degree, B.Ed., / Spl B.Ed / D.T.Ed., படிப்பினை தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் (பயின்ற கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து சான்று) பெறப்பட வேண்டும்.

x.இனச்சான்றிதழ் (Community Certificate) (1. நிரந்தர சான்றிதழாக இருத்தல் வேண்டும். 2. திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயரில் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்).

xi.நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate).

xii.மாற்றுத் திறனாளிகள் எனில் உரிய சான்றிதழ் (அரசு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்).

3.அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், இரு ஒளிநகல்கள் படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக்கொண்டுவரவேண்டும்.

4.சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

5.ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது.

6.பணிநாடுநர் குறிப்பிட்ட நேரம் / தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால் அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

7.பணிநாடுநரின் தகுதி (Eligibility) பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.

8.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

KAMARAJAR VIDEOS FOR STUDENTS

Sight Words For | Primary Students...

TNEA - Engineering Admission 2017 Academic Counselling Schedule Published.

750 PP - வழக்கின் தீர்ப்பிற்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கல்வித்துறை செயலருக்கு அனுப்பிய கருத்துரை - ALL CASE DETAILS...

தமிழ் எழுத்துக்கள் - விளங்கு,கீற்று,மடக்கேறு,கொம்பு,சுழி,பின்கால் இது குறித்த விளக்கம்...

TPF - Missing Credit Form

யானை கரும்பலகை, திறன் வளர்க்கும் மேடை... வசீகரிக்கும் வகுப்பறை தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்!


வகுப்பறை என்பது கற்பிக்கும் இடம், கற்றுக்கொடுக்கும் இடம், உரையாடல் இடம்... என அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், இவற்றையெல்லாம் விட மாணவர்களுக்கு அச்சம் தராத இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். மகிழ்ச்சியுடன் உள்ளே நுழையும் இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். தன் திறமைகளைக் கூச்சமில்லாமல் வெளிப்படுத்தும் இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். இவை எல்லாம் தன் பள்ளியில் நடக்க வேண்டும் என ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் நினைத்தார். செயல்முறையும் படுத்தியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் கோனோரி குப்பம் எனும் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் முதல் வகுப்புக்குரிய அறை வெளியிலிருந்து பார்க்கும்போதே பளிச்சென்ற வண்ணத்தில் மாணவர்களைக் கவரும். வாசலில் மேல், Dream Class எனும் நம்பிக்கை தரும் வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்தால், அழகான யானை நம்மை வரவேற்கும். அந்த யானை மீதுதான் மாணவர்கள் எழுதிப் பழகுகிறார்கள்.

ஆம்! வகுப்பறையில் கரும்பலகை யானை வடிவில் உள்ளது. அதில் எழுதுவதற்காக மாணவர்கள் நான், நீ என ஆர்வத்துடன் முன் வருகின்றனர். வழவழப்பான டைல்ஸ் தரை, சுற்றிலும் அழகான ஓவியங்கள் இவற்றை விடவும் சுவாரஸ்யமான இன்னொரு விஷயமும் இருக்கிறது. சின்ன மேடை. அங்கே மாணவர்கள் ஆடலாம்; பாடலாம்; நடிக்கலாம் எனத் தங்களின் திறமைகளை வெளிக்காட்டலாம். வித்தியாசமான வகுப்பறையைப் பற்றி, அந்தப் பள்ளியின் ஆசிரியர் எல். ஸ்டாலின் ஆரோக்கிய ராஜிடம் கேட்டோம்.
 "மாணவர்கள் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்குள் வர வேண்டும் என நினைத்தோம். அதற்கு என்ன செய்யவேண்டும் எனச் சக 
ஆசிரியர்களோடு திட்டமிட்டு, செயல்வடிவம் கொடுத்தோம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே பிடித்தது யானை. அதனால், வழக்கம்போல செவ்வகமான கரும்பலகையாக இல்லாமல் யானை வடிவில் உருவாக்கினோம். அதேபோல, வகுப்பறையில் ஆசிரியர் கற்பிப்பது என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் பங்குபெறும் நேரமும் இருக்க வேண்டும் அல்லவா... அதுவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் இல்லையா... அதற்கான ஒரு மேடையைத் தயார் செய்துகொடுத்தோம். நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் மாணவர்கள் நடித்தோ, பாடியோ, நடனமாடியோ தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களும் கற்பதற்கும், புதிய விஷயங்களை அறிவதுக்கும் கவனம் எடுத்து வருகிறோம். தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் எங்கள் பள்ளிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு திட்டமிட்டோம். அதாவது செலவுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை நாம் கொடுத்தால் மீதித்தொகையை அரசாங்கம் கொடுக்கும். எனவே அதற்கான தொகையைச் சிரமப்பட்டு சேகரித்தோம். ஆசிரியர்களான நாங்களும் எங்கள் பங்களிப்பாக தலா ஐந்தாயிரம் ரூபாய் அளித்தோம். இந்த முயற்சியால் எங்கள் பள்ளிக்கு 24 கணினிகள் கிடைத்தன. எங்கள் பள்ளியைப் பற்றிய சிறிய வீடியோ தயாரித்தோம். அதைப் பார்த்த பல நண்பர்களும் பள்ளிக்கு உதவ முன்வந்தார்கள்.
மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 'மரம், செடி, கொடி' எனும் பாடத்துக்குப் பள்ளிக்கு அருகிலிருக்கும் பூங்காவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, அங்கு மாணவர்கள் பார்ப்பதை வீடியோ எடுத்துவருவோம். அதை அடுத்த நாள் லேப் டாப்பில் திரையிட்டுக் காட்டி விளக்குவோம். இதன்மூலம் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொள்கிறார்கள்.
அதேபோல, சினிமா பாடல்களைத் தவிர்த்து, கிராமியக் கலைகளைப் பயிற்றுவித்து வருகிறோம். அதற்காக பறை உள்ளிட்ட கருவிகளை வாங்கி வைத்திருக்கிறோம். எங்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்த பலரும் தங்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அழைக்கிறார்கள். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளப்படுத்தும் விதத்தில் மைதானத்தைச் சீர்செய்திருக்கிறோம்.
எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதுதான் எங்களுக்குப் பெரிய பலமே. அதைக் கொண்டு இன்னும் சிறப்பாக இயங்குவோம்" என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஸ்டாலின் ஆரோக்கியராஜ்....