சனி, 2 டிசம்பர், 2017
உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில தரவரிசை பட்டியல் : முதன்மை செயலர் சுனில் பாலிவால் தகவல்!!!
'தேசிய தரவரிசை பட்டியலை போல, உயர் கல்வி நிறுவனங்களுக்கு
அங்கீகாரம் வழங்க, மாநில அளவிலும், தரவரிசை பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
கருத்தரங்கு : கோவையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய உயர் கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, நேற்று துவங்கியது; இன்றுடன் நிறைவடைகிறது.
கருத்தரங்கு : கோவையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய உயர் கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, நேற்று துவங்கியது; இன்றுடன் நிறைவடைகிறது.
மாநாட்டை துவக்கி வைத்து, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் பேசியதாவது:தமிழகத்தில், உயர் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை, 44.3 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச விகிதத்துக்கு இணையானது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்ட, தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த, 100 பல்கலைக் கழகங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 10 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், அண்ணா பல்கலை, ஆறாவது இடத்தை பிடித்திருப்பது, பெருமைக்குரிய விஷயம். முதல், 10 இடங்களில் உள்ள பல்கலைக் கழங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதோடு, 100 சிறந்த கல்லுாரிகளின் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 37 கலை, அறிவியல் கல்லுாரி கள் இடம் பெற்றுள்ளன. கோவை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலைக் கழகம், வரும் கல்வியாண்டுகளில், தரவரிசை பட்டியலில், முதல், 10 இடங்களுக்கு முன்னேறி செல்ல, திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், பல்கலை நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடக்கும் வகையில், தகுதியான துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான பணிகள், துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கப்படும். குறிப்பாக, அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், ஜூன் மாதத்துடனும், அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், மே மாதத்துடனும் முடிவதால், புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வெளியிட திட்டம் : தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கென, பிரத்யேகமாக மாநில தரவரிசை பட்டியல், அடுத்த எட்டு மாதங்களில், வெளியிட திட்டமிட்டு உள்ளோம். கற்பித்தல், ஆய்வு, வேலை வாய்ப்பு என, ஐந்து பிரிவுகளில், இப்பட்டியல் வெளியாகும். ஒவ்வொரு பிரிவிலும், 20 உட்பிரிவுகள் வகுக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். 'நாக்' எனப்படும், தேசிய தர நிர்ணயக் குழு, அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும்
சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, 25300336, 25300337, 25300338, 25300339 மற்றும் 25300340
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைப்புகள் தவிர, 25332833, 25338855 மற்றும்
கட்டணமில்லா தொலைபேசி இணைப்பான
1800 425 1002
ஆகிய எண்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருங்கிணைந்தசார்நிலைப்பணியாளர் தேர்வு 4 (தொகுதி 4 மற்றும் கிராம நிர்வாகஅலுவலர்)
தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஐயப்பாடுகளுக்கு
விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி
எண்களை
பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு
அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.
மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கனமழை - 8 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)
* சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வெள்ளி, 1 டிசம்பர், 2017
TET - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.
அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.
23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் பல ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழகத்தில் சற்றே தாமதமாக வெளிவந்தது.
RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.
ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பாக தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் செயல்முறைகள் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாகவும், அரசு உத்தரவு வாயிலாகவும் பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.
அவர்களில்
1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்
2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்
3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்
4) 15/11/2011 க்கு முன்பு CV முடித்து பிறகு பணி நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்
-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன.
தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு வேலைவாய்ப்பக பரிந்துரை, நாளிதழ் விளம்பரம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்கள், பள்ளி நிர்வாக தகுதித் தேர்வுகள், இன சுழற்சி, அரசின் அனுமதி போன்ற பலதரப்பட்ட நிலைகளைக் கடந்து வென்று பள்ளி நிர்வாகம் வாயிலாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆவர்.
இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.
பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.
இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.
இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளும் இந்த TET நிபந்தனைகளைக் காரணம் காட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தம் செய்துள்ளார்கள்.
தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஊதியக் குழுவில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த இந்த வகை ஆசிரியர்களின் பணிபுரிந்த காலத்தை கருத்தில் எடுக்காமல் இந்த மாதம் பணியில் புதிதாக சேருபவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே கொடுக்க தன்னிச்சையாக கல்வி அதிகாரிகள் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி உள்ளனர். இது இவர்களை மேலும் காயப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுத்தது போல் பாரபட்சமற்று அரசு உதவிபெறும் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு TET லிருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் (சுமார் 300 ஆசிரியர்கள் ) இவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பது உண்மை.
கனமழை - 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)
* சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
DECEMBER 2017 | DIARY....
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.
3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
5.12.17- உலக மண் தினம்,
9.12.17- குறை தீர்க்கும் நாள்,
11.12.17- உலக மலைகள் தினம்,
18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு .
24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை.
2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.
வியாழன், 30 நவம்பர், 2017
இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி- ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்பு
நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology gallery, VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இது குறித்த இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்த (Space Science and technology) Bangalore exposure education (BEE ) என்ற program Activity Educator நிறுவனம் மூலம் முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கோடு, வணிக நோக்கம் இல்லாமல் செயல்படுத்த முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அடையும் பயன்:
1. வான் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச அளவிலான அறிவை பெற இயலும்
2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics, போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்
3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்
4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்
5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.
2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics, போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்
3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்
4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்
5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.
கல்வி நிறுவனங்கள் பெறும் பயன்:
1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்
2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்
3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.
1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்
2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்
3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.
பதிவு செய்ய விரும்பும் கல்வி நிறுவனங்கள் கீழ்கண்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த விபரங்களை காணலாம்.
www facebook.com/groups/ISCOPE
Email முகவரி indiaiscope@gmail.com
கைபேசி எண்: 7892898919
www facebook.com/groups/ISCOPE
Email முகவரி indiaiscope@gmail.com
கைபேசி எண்: 7892898919
ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'
'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
இதன்படி, இந்தியா முழுவதும், அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 920 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழக மாணவர்கள், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துமாணவர்கள், டிச., 12க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மற்றொரு, செயல் திட்டம் தரப்படும். அதை சிறப்பாக செயல்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை, tamilnadupost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)
* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
* தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
* நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில்,பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவியல், புவியியல்,டிச., 21- வேதியியல், கணக்கு பதிவியல், டிச., 23- இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடக்கின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 இரு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
புதன், 29 நவம்பர், 2017
மாணவனுக்கு தண்டனை:
ஆசிரியை கைது....
திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த, 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
நவ., 25ல் வழக்கம் போல், மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். பணியில் இருந்த ஆசிரியை விஜயா, 47, அந்த மாணவனை கூப்பிட்டு, ஏன் தலைமுடி நீளமாக வைத்துள்ளாய்? என, கேட்டுள்ளார். பின், சக மாணவரைவிட்டு முடியை வெட்ட சொல்லியுள்ளார். அன்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன், பள்ளியில் நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளான்.
அவர், கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், இச்சம்பவம் உண்மை என, தெரியவந்ததையடுத்து, விஜயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புகாரையடுத்து, கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, விஜயாவை நேற்று கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!

18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரவேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியானஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்.....
தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.
இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, தர்மபுரி டவுன் மகளிர் போலீசார் சார்பாக, 15ம் தேதி, புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இதில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வெளியில் சொல்ல முடியாத புகார்களை, மாணவியர் பெயர் குறிப்பிடாமல், மனுவாக எழுதி போடலாம் என, அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, இந்த பெட்டியை திறந்தார். இதில், 24 புகார்கள் இருந்தன. அதில், பள்ளிக்கு வரும் மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள், பஸ்சில் பயணம் செய்யும் போது தொந்தரவு கொடுப்பவர்கள்... மேலும், தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ள, 'பஸ் பாஸ்' கொண்டு வரும் மாணவியரை, தரக்குறைவாக பேசும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் என்பது உட்பட, 24 புகார்கள் இருந்தன.''இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்து, அதன் அடிப்படையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கூறினார்.
TNPSC Group 2 Exam, 'ரிசல்ட்' வெளியீடு
குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில், 49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
அவரை மக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியின் கட்டடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது. கட்டடங்கள் கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாததால் கட்டடம் கட்ட முடியாமல் உள்ளது.
இதனையடுத்து இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.பெங்களூருவில் இன்ஜினியராக பணி
புரியும் கிருஷ்ணன் கூறியதாவது: எனது சொந்த ஊர் சாத்தனுார். ஆண்டு தோறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளோம். எங்கள் கிராமத்து இளைஞர்கள் பள்ளி கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லாத நிலை குறித்து தெரியவந்தது. பள்ளிக்கு பின்புறம் எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கி பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளேன். இதே போன்று அந்தந்த பகுதியில், வசிக்கும் வசதி படைத்தவர்கள் தங்களது கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும், என்றார்.
4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'
வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர்.
இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.
பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.
பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-
🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
🏛 விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
🏛 விதி 110 - பணமசோதா
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
🏛 விதி 112 - பட்ஜெட்
🏛 விதி 117 - நிதி மசோதா
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்
🍄குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-
🏛 விதி 52 - குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்
🏛 விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை
🏛 விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்
🏛 விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்
🏛 விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி
🏛 விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்
🏛 விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி
🏛 விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்
🏛 விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்
🏛 விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்
🍄அரசு நெறிமுறை கொள்கைகள்:-
🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b), 39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்
🍄 மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-
🏛 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
🏛 விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
🏛 விதி 153 - மாநில ஆளுநர் பதவி
🏛 விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
🏛 விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
🏛 விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
🏛 விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)