>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 10 நவம்பர், 2017

TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும்,
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது. இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சியாமளா ஆகியோர் கூறியதாவது:-சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து விலக்கிவிட்டார் கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங்களாக தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம்பளத்தையும் வாங்கிவிட்டனர்.பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட்டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
 இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்கமுடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என்பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், ‘தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனரை நேரில் சென்று பார்க்க முயற்சித்த போது அவர் சந்திக்கவில்லை.மேலும், செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் : சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

அறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து அறநிலையத் துறை செயல்அதிகாரிபதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு,ஜூன், 10ல் தேர்வு நடந்தது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், தகுதியானவர்களுக்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
மோட்டார் வாகன பராமரிப்பு துறையில், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவியில், மூன்று இடங்களுக்கு, வரும், 17ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான விபரம் மற்றும் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய தடையாணை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு.ராஜா அவர்கள் முன்னிலையில் 11 எண் வழக்காடுமன்றத்தில் வரிசை எண் 22 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 4 வாரத்தில் பதில் தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.   4 வாரத்தில்  பதில் தர அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் ஆணை

தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. லெட்டர் பேடு சட்டக்கலூரிகள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
மேலும் போலி வழக்கறிஞர்களை நீக்கிய பிறகே தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: தமிழக அரசு

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு வருடம் தோறும் ஜூன் மாதம் நடைபெறும்.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.
இந்த சூழலை தவிற்பதற்காக வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக முன்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதன்படி தற்போது இது அதிகார பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார். இதில் வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் சேர்க்கை செயலாளர் இந்துமதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக ரைமண்ட் உத்திரியராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Epay roll நவம்பர் ஊதியம் சற்றுமுன்

வியாழன், 9 நவம்பர், 2017

அரசாணை எண் 937 நாள்:07.11.2017-பொதுத்துறை - 2018 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணை வெளியிடப்படுகிறது

TNPSC தேர்வாணையம் காலிப்பணியிடங்கள் குறித்து விண்ணப்பதார்களுக்கு புதியதாக திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகள்!!!


DEE -TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெறும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!


பள்ளிகல்வித் துறையில் 5 இணை இயக்குநர்கள், ஒரு கூடுதல் உறுப்பினர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு!!!


2018ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்...

சென்னை: 2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:
01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்
02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்
04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்
08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.18- சனி
11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்
12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்
19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி
21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்

புதன், 8 நவம்பர், 2017

கனமழை - திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 08.11.2017 )விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 08.11.2017 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு... அதிகாரம்!

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை.
பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.
தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்.,30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது,பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.
முன் அரையாண்டு தேர்வு ரத்து
 சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள்ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில், காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, நமது  நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்தெரிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிப்பு எப்படி?
பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

அரசுப்பள்ளிகளில் ஆக்கிரமிப்புகள்-ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது பள்ளிக் கல்வித்துறை தடை

தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன் அரையாண்டு, பருவ தேர்வு வேண்டாம்: மாணவர்கள் கோரிக்கை!!!

ஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால்,
அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இடைத்தேர்வு : தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு, இரண்டாம் இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 13ம் தேதி, முன் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இரண்டாம் இடைத்தேர்வில் வினாத்தாள் இடம் பெறும். ஆனால், முன் அரையாண்டு தேர்வுக்கு, பள்ளி துவங்கியது முதல், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
விடுமுறை : பருவ மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், பள்ளிக்கல்வி காலண்டர்படி, இதுவரை நடத்த வேண்டிய பாடங்கள், இன்னும் பாக்கி உள்ளது; அதை, நடத்த கூடுதல் நாட்கள் தேவை. எனவே, பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாததால், 13ம் தேதி இடை தேர்வை மாணவர்கள் எழுத முடியாத சூழல் உள்ளது.
அதனால், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முன் அரையாண்டு மற்றும் இடைத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாட்களில், கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாஸ்கோ செல்லவும் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல வாய்ப்பு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள ஆர்கானிக் பேனா!

தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்ரியா, சங்கர், தமிழ்ச்செல்வன் ஆகிய பள்ளி மாணவர்கள் மக்காத வகையைச் சேர்ந்த பேனாக்கள் தங்களது பைகளில் நிரம்பியிருப்பதைக் கண்டு அதற்கான நிலையான மாற்றை கண்டறிவதில் முனைப்புடன் இருந்தனர். தமிழ்நாட்டின் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி மாணவர்களான இவர்கள் ஆர்கானிக் பேனாவை தயாரித்துள்ளனர். இந்த பேனாக்கள் அப்புறப்படுத்தும்போது ஆர்கானிக் உரமாக மாறிவிடும்.
வாழை இலை, வாழைத்தண்டு, தென்னை இலை, ஆமணக்கு தண்டு ஆகியவற்றைக் கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இதன் ட்யூப்பின் ஒரு முனை மைதா பசை கொண்டு மூடப்பட்டு இன்க் நிரப்பப்படுகிறது. இந்த பேனாவில் மக்காத ஒரே பகுதி அதன் கூர்முனை (nib). இவை சில மாதங்கள் வரை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேனாக்கள் பள்ளியில் சில நாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஏற்கனவே திறனாய்வு செய்யப்பட்ட இந்த கண்டுபிடிப்பு விரைவில் மதிப்புமிக்க 2017 தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று ஹோம்க்ரோன் அறிக்கை தெரிவிக்கிறது.
தி ஹிந்து தகவல்படி இந்த மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியரான எஸ் தினேஷ் குறிப்பிடுகையில்,
இந்த ப்ராஜெக்ட் 2017 தேசிய அறிவியல் மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. நடுத்தர பள்ளிகளில் செயல்படும் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டு இயங்கும் துளிர் இல்லம் யூனிட் கடந்த சில ஆண்டுகளாக தேசிய அறிவியல் மாநாட்டிற்காக வெவ்வேறு ப்ராஜெக்டுகளை சமர்ப்பித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும் பல கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதி கைகளால் உருவாக்கப்பட்ட சிகரெட் ஃபில்டர் டிப்ஸை உருவாக்கினர். இவை தூக்கியெறியப்படும்போது நிலத்தில் விதைகளை வெளியேற்றும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரெட்யூஸ், ரீயூஸ், க்ரோ என்கிற நிறுவனம் ஒரு காஃபி கப்பை வடிவமைத்தது. இது மக்கக்கூடியதாக மட்டுமல்லாமல் இதிலுள்ள விதைகளை நட்டு வைத்தால் சுவர்களில் படர்ந்து வளரும் செடிகளாகும் விதத்திலும் அமைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்!!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'
என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.
தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்

வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்!!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'
என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.
தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்

அரசுப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த காரணத்துக்காக, பகுதி நேர ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பு இழப்பு.- அதிர்ச்சியில் பகுதி நேர ஆசிரியர்.

இயன்முறை பயிற்சியாளர் பணி நியமனம்!!!

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்

EMIS தகவல்
👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்
👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்
👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன
👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.
தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய சான்றுகள் கோருதல் சார்பு


TRB - Polytechnic Exam 2017 - Final Key answers and Individual Candidate Qurey and C.V List Published


CLICK HERE...

பள்ளிக்கல்வி - பாரத சாரணர் சாரணியர் இயக்கம் | அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த மாவட்ட முதன்மை / மாவட்ட கல்வி / மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்/ மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!



செவ்வாய், 7 நவம்பர், 2017

நவம்பர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

👉 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு
👉CRC level science exbition (9-11-17)
👉கலைத்திருவிழா
👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்
👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.
👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)
👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)
👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய்வேலைநாள்
👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்
👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார்த்தல்,
👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,
தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்
👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன்படுத்துதல்
👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துத்துதல்
👉மேலும் அறிவிக்கப்பட உள்ளதை செயல்படுத்துதல்
-கல்விசிறகுகள்

திங்கள், 6 நவம்பர், 2017

நவம்பர் 3 அல்ல நவம்பர் 25 அன்று தேர்வுகள் நடைபெறும்!

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in

தமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்....

மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியளவில் முதலிலும் ஒன்றிய அளவில் அடுத்ததாகவும்
நடைபெறும்.
போட்டிகளில் முதல் இடம் பெறுபவர் அடுத்த நிலைப் போட்டியில் பங்கு பெறலாம்.
மதிப்பெண்-தரம்-மதிப்பு
70% - A - 5
60% - B - 3
50% - C - 1
போட்டி பிரிவுகள் :
பிரிவு 1 > I - V
உட்பிரிவு 1> I - II
உட்பிரிவு 2> III -V
பிரிவு 2 > VI - VIII.
I -V வரை அனைத்துப் போட்டிகளும் பொதுவானவை. ஆண் பெண் பேதமில்லை.
VI-VIII சில போட்டிகள் ஆண், பெண் தனித்தனியாய் அமையும்.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும்
வழங்கிட வேண்டும். 
*உட்பிரிவு I-II போட்டிகள் :*
* ஒப்புவித்தல் (தமிழ்) - மழலையர் பாடல்
*கதை கூறுல்
* பழமொழிகள் கூறுதல்
* ஆத்திச்சூடி ஒப்பித்தல்
*வண்ணம் தீட்டுதல்
* Rhymes Recitation
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting
*உட்பிரிவு III-V போட்டிகள் :*
*பேச்சுப்போட்டி
*கட்டுரைப் போட்டி
*நாட்டுப்புற நடனம்(குழு)
*பரதநாட்டியம் (குழு)
*வரைந்து வண்ணம் தீட்டுதல்
*மெல்லிசை - தனிப்பாடல்
*செவ்வியல் இசை - தனிப்பாடல்
*ஒருநபர் நாடகம்
*குழு நடனம் (7-9 நபர்)
தேசபக்திப் பாடல்கள்
*களிமண் பொம்மைகள்
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting.
*இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... இன்னும் பிற
*பிரிவு VI -VIII போட்டிகள் :*
*கதை எழுதுதல்
*Story Writing
*கவிதை புனைதல்
*கும்மி நடனம் (ஆண்)
*தனிநடனம்
*குழு நடனம் (7-9நபர்)
*தேசபக்தி பாடல் (7-9நபர்) - குழுப்பாட்டு
*நாடகம் (10நபர் வரை)
*பேச்சுப்போட்டி (தமிழ்)
*பேச்சுப்போட்டி (English)
*கும்மியாட்டம் (பெண்)
*திருக்குறள் ஒப்பித்தல்
*நகைச்சுவை வழங்கல்
*Poem Recitation
*மெல்லிசை - தனிப்பாட்டு
*செவ்வியல் இசை -தனிப்பாட்டு
*கிராமிய நடனம் (7-9நபர்)
*பரதநாட்டியம் (தனி)
*பரதநாட்டியம் (குழு)
*இயற்கை காட்சி வரைதல்
*ஒருநபர் நாடகம்
*வில்லுப்பாட்டு (1+4)
*கதை சொல்லுதல்
*களிமண் சுதை வேலைப்பாடு
*செதுக்குசிற்பம் (காய்கறி/ சோப்பு/ மெழுகு/ சுண்ணக்கட்டி போன்ற பிற பொருட்களில்)
* இசை - இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... தவில் கச்சேரி, பேண்டு வாத்தியம், ஆர்கெஸ்டிரா இன்னும் பிற
போட்டிகள் மாணவர் பங்கேற்கும் அளவிலானதாக அமைந்தால் போதுமானது. திரைப்பட பாடல்கள் தவிர்க்கவும். பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் போன்றவை நல்லது.
நாடகங்களில் தெருக்கூத்து, சமூக நாடகங்கள், ஓரங்க நாடகம், மிமிக்ரி மற்றும் பிற வகைகளில் இருக்கலாம்.
முதலிடம் பெறும் குழுவோ தனிநபரோ அடுத்த நிலைப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
கலைவிழா ஒரு பொதுநிகழ்ச்சி. பெற்றோர் & சமூக பங்கேற்போடு ஆசிரியர் மாணவர் குழுவாக செயல்பட்டு இதனை சிறப்பாக நடத்த வேண்டும். கூட்டுப் பொறுப்பும் கூட்டுச் செயல்பாடும் கலைத்திருவிழாவை செழுமைப்படுத்தும்.
கலைகளை
அறிமுகப்படுத்துவோம்!திறமைகளை
வெளிப்படுத்துவோம்!
மாணவர்களை
மேம்படுத்துவோம்!

கனமழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 06.11.2017 )விடுமுறை...

*சென்னை- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*திருவள்ளூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
* காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
* நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*திருவாரூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*விழுப்புரம்-பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*கடலூர்-பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி!!!

'பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் 
செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு!!!

சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில்,
ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.

தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி....

மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை 
வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர்.
'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 2௫ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழகம் முழுவதும், ௩௦ இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் போலி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தல்

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )


ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு....

ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.
தொடர் போராட்டத்தில்
ஈடுபட முடிவு
இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு...

தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என 900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.