>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
STUDENTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
STUDENTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூன், 2022

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.


tneaonline.org 

என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.

***************************************

திங்கள், 23 மே, 2022

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்...

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முக்கியமான தகவல் .....


பள்ளி திறக்க இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு 


இ_சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள்


மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்


*முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை 

மாற்றுச்சான்றிதழ்(TC)

மதிப்பெண் பட்டியல்(10,12)

ஜாதி,வருமானம் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்

தொலைப்பேசி(otp வரும் அதனால்)

அனைத்தும் அசல் மற்றும் நகல்


*ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை 

ஆதார் அட்டை

மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்

புகைப்படம்

தொலைப்பேசி otp வரும் அதனால்

அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்.


*வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வருமான சான்று(payslip) + பான்கார்டு

தொலைப்பேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை



*இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

தொலைபேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல்


இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள் உங்களுடைய

அலைச்சல் குறைக்கலாம்.....



***********************************************************

ஞாயிறு, 22 மே, 2022

விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop..

விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop


💥👉 *கல்வி அமுது இணையதளமும் Medha fun kids YouTube channel -ம் இணைந்து நடத்தும்  Free Summer Training Workshop*

⚫👉  *விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop*

👍👉 உங்கள் மொபைல் வழியே உங்கள் விரல்நுனியில் 

⚡👉 Date : 21.05.2022

⚡👉  Day-4 *Activity -4*

⚡👉 craft work activity  

⚡👉 Spuder man mask 

⚡👉 பாடமும் படைப்பாற்றலும்

⚡👉 Spider உருவாக்ற Silk இரும்பை விட கடினமானதா?

⚡👉சிலந்திக்கு ஆறு கண்களா?

⚡👉 சிலந்தி தண்ணிக்குள்ள நீந்துமா? சுவாசிக்குமா?

⚡👉 சுவாரசிய தகவல்களுடன் சுடச்சுட படைப்பாற்றல் 

⚡👉 5 நிமிடத்தில் அசத்தலான Spider man mask

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.

கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 



💐 Like ,Subscribe & Share💐

⚡👉  Day-3 *Activity -3*

⚡👉 craft work activity 

⚡👉 Atractive wall hanging

⚡👉 Paper craft ideas

⚡👉 10 நிமிடத்தில் உங்க வீட்டை அழகாக மாற்றும் Wall hanging craft


கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 

⚡👉https://youtu.be/7dqrt2e_eJ4



⚡👉  Day-2 *Activity -2*

⚡👉 glass painting 

⚡👉 water colour painting

⚡👉 magic painting 

⚡👉 இறுதியில் வியக்கவைக்கும் கண்கொள்ளாக்காட்சி 

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்

கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 






⚡👉 Summer Workshop *Activity -1*

⚡👉 PAPER CRAFT 

⚡👉 Honeycomb ball

⚡👉 Summer Workshops in medha fun kids channel 

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்



.*******************************************

புதன், 10 மார்ச், 2021

மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!

*🌍🌎மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!*



*📗📗அரசுப்பள்ளி மாணவனை பாராட்டி வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐயா அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும்!*


*📗📕அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைத்ததற்காக தந்தையையும் பாராட்டினார்!*



*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அப்துரஷீத் என்பவரது மகன் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனான A.ரியாஸ் முகமது எனும் மாணவன் இந்த  ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகின்றார்.அந்த நிகழ்வு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களும் கண்டுவந்துள்ளார். பின்னர் ஆட்சியர் அவர்களே தொலைபேசி வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அம் மாணவன் A.ரியாஸ் முகமதுவை வரவழைத்து மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வைத்தும் தயாரித்த விதம் மற்றும் இப்பொருள்களால் சமுதாயத்திற்கு  ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை கேட்டு..... மாணவன் வழங்கிய பதிலைக் கண்டு வியந்து பின் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தார்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களும் கலந்து கொண்டது மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.*


(அப்போது தானும் மாணவனின் Channel ஐ Subscribe செய்துள்ளதை ஆட்சியர் கூறும்போது மாணவனுக்கு கண்கள் குளமானது)


https://youtube.com/channel/UCGAhowDFyrtgjQGrRWaVqnA


*தற்போதைய தேர்தல் பணிப்பளு நேரத்தில் மாணவனுக்காக நேரம் ஒதுக்கி மாணவனின் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் போற்றும் விதமாக வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தமைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி IAS ஐயா அவர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் மாணவன் சார்பாக நன்றிகள் பல கோடி!*


எனது மகன் ஆட்சியரிடம் பாராட்டுதலையும் வெகுமதியுடன் வாழ்த்துக்களையும்  பெற்றதைக்கண்டு எனக்கும் மகிழ்ச்சியே!


இப்படிக்கு.

*_அப்துல் ரஷீத்._*

*இடைநிலை ஆசிரியர்.*

மேல்மலையனூர் ஒன்றியம்.

*_விழுப்புரம் மாவட்டம்_*

மேலும் கல்விச்சிகரம் மாணவனை அன்புடன் வாழ்த்துகிறது....

.........................................


வெள்ளி, 20 நவம்பர், 2020

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி... திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்.. கவுரவித்த ஸ்வீடன்..!

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி... திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்.. கவுரவித்த ஸ்வீடன்..!



திருவண்ணாமலை: சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்திருக்கிறார் வினிஷா.

9-ம் வகுப்பு மாணவி

புதிய கண்டுபிடிப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த உமாசங்கரின் மகள் வினிஷா அதே பகுதியில் உள்ள எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்தோமா, மதிப்பெண் பெற்றோமா என்றில்லாமல் சமூகம் மீதான தனது அக்கறையால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதில் வினிஷா எப்போதும் ஆர்வம் உடையவர்.

கரித்துண்டு

சுற்றுச்சூழல்

கரித்துண்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியை கொண்டு செயல்படும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்த வினிஷாவின் திறமையை கவுரவிக்கும் பொருட்டு ஸ்வீடன் அரசு பட்டயம், பதக்கம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொலி நிகழ்வு மூலம் வழங்கியுள்ளார்.

வாழ்த்து

பாராட்டு

மாணவி வினிஷாவின் திறமையை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்தாண்டு அறிதிறன் மின் விசிறியை கண்டறிந்ததற்காக அப்துல்கலாம் இக்னைட் விருதும் இவர் பெற்றிருக்கிறார்.

புரஸ்கார் விருது

பெயர் பரிந்துரை

இந்நிலையில் தற்போது பிரதமரின் ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு வினிஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு கோழிப்பண்ணைகளை போல் செயல்படும் பள்ளிகளுக்கு மத்தியில் இது போன்று சமூகத்துக்கு பயனான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எஸ்.கே.பி. இண்டர்நேஷனல் பள்ளி.


......................

திங்கள், 20 ஜூலை, 2020

ஞாயிறு, 7 ஜூன், 2020

இன்டர்நெட்'டுக்காக கூரையில் ஏறினார்: மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

Sunday, June 7, 2020




கல்லுாரி நடத்தும், 'ஆன்லைன்' வகுப்பின் பாடங்கள் தெளிவாக தெரிவதற்காக, வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.அந்த மாணவிக்கு, மொபைல் போன் நிறுவனங்கள், போட்டி போட்டு உதவி செய்தன.கேரளா, மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல்லை சேர்ந்தவர் நமிதா. கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். கொரோனாவால் கல்லுாரிகள் மூடப்பட்டதால், ஜூன், 1 முதல், ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. நமிதாவின் வீடு தாழ்வான பகுதியில் இருப்பதால், இன்டர்நெட் இணைப்பு சரி வர கிடைக்காமல், ஆன்லைன் பாடங்களில் பங்கேற்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. குடும்பத்தினர் உதவியுடன், வீட்டின் கூரை மீது ஏறியபோது, இன்டர்நெட் இணைப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து, கூரை மேல் அமர்ந்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்தார். இதை, அவரின் சகோதரி நயனா, படம் பிடித்து, 'வாட்ஸ்ஆப்' சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது, பலருக்கும், 'வைரலாக' பரவியது. மாணவியில் படிப்பு ஆர்வத்தை, பல தரப்பினரும் பாராட்டினர். அவருக்கு, தெளிவான இணையதள இணைப்பு வழங்க, மொபைல் போன் மற்றும் இணையதள நிறுவனங்கள், போட்டி போட்டு முன்வந்தன

புதன், 11 மார்ச், 2020

சினிமா கதையை மிஞ்சிய பிளஸ் -2 மாணவியின் செயல்











சினிமா கதையை மிஞ்சிய பிளஸ் -2 மாணவியின் செயல்
byAsiriyarmalarமார்ச் 09, 2020

 
 
 


பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கடத்தல் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பெரம்பூர்: சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாணவி ஒருவர், காலில் செருப்பு இல்லாமல் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்தார். போலீசார் அவரை சிறிதுநேரம் அமர வைத்து, தண்ணீர் கொடுத்தனர். அவரது பதற்றம் தணிந்தபிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்தார் 

 
.அதில் அவர், பெங்களூரு சஞ்சய் நகர் 2-வது ஸ்டேஜ் 16-வது தெருவைச் சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர் கூறியதாவது:- எனது தந்தை பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். 7-ந்தேதி காலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் கொண்டு வந்த ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, காரில் என்னை சென்னை 

 
கடத்தி வந்தனர். இங்கு மற்றொரு காரில் என்னை மாற்றியபோது அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன். என் தந்தையிடம் பணம் பறிக்கவே மர்மநபர்கள் என்னை பெங்களூருவில் இருந்து சென்னை கடத்தி வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அந்த மாணவியை போலீஸ் காரில் ஏற்றுக்கொண்டு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து தப்பி எந்த வழியாக ஓடி வந்தாய்? என போலீசார் விசாரித்தனர். அதற்கு மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 

 
பூக்கடை மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் அந்த மாணவி, பெங்களூருவில் இருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்து, அதன் பிறகு காலில் இருந்த செருப்பை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து பதற்றமாக மூச்சுத்திணற போலீஸ் நிலையம் ஓடி வந்தது தெரிந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார். 

 
 இதையடுத்து பெங்களூருவில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னை வரவழைத்து விசாரித்தனர். அதில், மாணவி பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் சரிவர படிக்காததால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடி வந்து, காரில் கடத்தியதாக நாடகமாடி, போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு அறிவுரை கூறி எச்சரித்தனர் 

 
. பின்னர் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர். கடத்தல் நாடகம் ஆடிய அந்த மாணவி, கூறியவை உண்மை போலவே இருந்ததாகவும், சினிமா கதையைவிட மிஞ்சி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.







பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கடத்தல் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பெரம்பூர்: சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாணவி ஒருவர், காலில் செருப்பு இல்லாமல் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்தார். போலீசார் அவரை சிறிதுநேரம் அமர வைத்து, தண்ணீர் கொடுத்தனர். அவரது பதற்றம் தணிந்தபிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்தார்
.அதில் அவர், பெங்களூரு சஞ்சய் நகர் 2-வது ஸ்டேஜ் 16-வது தெருவைச் சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர் கூறியதாவது:- எனது தந்தை பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். 7-ந்தேதி காலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் கொண்டு வந்த ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, காரில் என்னை சென்னை
கடத்தி வந்தனர். இங்கு மற்றொரு காரில் என்னை மாற்றியபோது அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன். என் தந்தையிடம் பணம் பறிக்கவே மர்மநபர்கள் என்னை பெங்களூருவில் இருந்து சென்னை கடத்தி வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அந்த மாணவியை போலீஸ் காரில் ஏற்றுக்கொண்டு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து தப்பி எந்த வழியாக ஓடி வந்தாய்? என போலீசார் விசாரித்தனர். அதற்கு மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்,
பூக்கடை மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் அந்த மாணவி, பெங்களூருவில் இருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்து, அதன் பிறகு காலில் இருந்த செருப்பை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து பதற்றமாக மூச்சுத்திணற போலீஸ் நிலையம் ஓடி வந்தது தெரிந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.
 இதையடுத்து பெங்களூருவில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னை வரவழைத்து விசாரித்தனர். அதில், மாணவி பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் சரிவர படிக்காததால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடி வந்து, காரில் கடத்தியதாக நாடகமாடி, போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு அறிவுரை கூறி எச்சரித்தனர்
. பின்னர் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர். கடத்தல் நாடகம் ஆடிய அந்த மாணவி, கூறியவை உண்மை போலவே இருந்ததாகவும், சினிமா கதையைவிட மிஞ்சி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.