>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SCIENCE NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCIENCE NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மே, 2020

USEFUL ANDROID MOBILE APPLICATIONS





Compiled by M.Vijayakumar.ELT - Kallakurichi.

https://play.google.com/store/apps/details?id=com.rollingpanda.science.tricks.physics.experiment.lab.school

*Science Experiments in Physics Lab*

_______________________________

https://play.google.com/store/apps/details?id=com.rendernet.mozaik3dviewer

*Mozaik 3D*

_______________________________

https://play.google.com/store/apps/details?id=org.kiwix.kiwixcustomphet

*PhET simulation*
_______________________________

https://play.google.com/store/apps/details?id=com.talkenglish.conversation

*English Coversation Practice*
_______________________________

https://play.google.com/store/apps/details?id=com.mu_sonic.tophonetics2.freemium

*To Phonetics*
_______________________________

https://play.google.com/store/apps/details?id=com.mojoegames.sentencemaster

*Learn English Sentence Master*

_______________________________
https://play.google.com/store/apps/details?id=com.planetfactory.makeitAndroid

*Make it*

Wonderful App to create Games and Quizzes. But it must be played with that app only.

_______________________________
https://play.google.com/store/apps/details?id=com.timleg.historytimeline

*History Timeline*

ஞாயிறு, 8 மார்ச், 2020

அறிவியல் ஆசிரியர்களுக்கான இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4SCIENCE..



Thursday, March 5, 2020





அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி அறிவியலை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4SCIENCE" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியலை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.

Click here download the App


புதன், 19 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம்-கவிதை


                                    






.....................................................

தேசிய அறிவியல் தினம் பற்றிய சிறப்பு கட்டுரை ..



தேசிய அறிவியல் தினம்:-

சிறப்பு கட்டுரை:-

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது அறிவியல் வளர்சி ஆகும். அத்தகைய அறிவியல் ஆர்வத்தை பொதுமக்கள்,
மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக  ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப்ரவரி-28 ஆம் நாளை இந்தியா முழுவதும் கொண்டாடி சிறப்பிக்கிறோம். 


அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையதும், தனது உயர்சிந்தனையால்
மேம்படுத்த உதவும் வலியாகு. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். 
எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். 

அறிவியல் வளர்ச்சியானது,
கற்களை உரசி நெருப்பு, கற்களை கூர்மையாக்கி ஆயுதங்கள்,
இருளை விரட்ட மின்விளக்கு, தொலைவில் உள்ளவரிடம் பேச தொலைபேசி, எல்லா வேலைகளையும் செய்ய கம்ப்யூட்டர்கள், மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்கள், உடனுக்குடன் பறக்க விமானம், வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள், மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, 
குழந்தையிண்மை போக்க
டெஸ்ட் டியூப் குழந்தை,
இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை, பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்து, வளர்ச்சி பாதையில் செல்கிறது.



இன்றைய 
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, இந்திய கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

இந்தியாவில் அறிவியல் தினம்:

தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.  இவர் 1888 நவம்பர்-07ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்' நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்ரவரி-28 ஆம் நாள், "ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
 "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 

அந்நிகழ்வின் நினைவாகவும் 
அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


இன்று இந்தியா அறிவியல் அரங்கில் "டாப்-20' இடத்துக்குள் இருப்பதற்கு, பல அறிவியலாளர்கள் உழைத்துள்ளார்கள்,
ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்,
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்,
ராமானுஜம் கணிதம்,
எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை,
எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். 
சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு,
சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்,
அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

எனவே வருங்கால 
விஞ்ஞானிகளே,
அறிவியலில்
ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள். கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். 

மேலும் சிந்தியுங்கள்..மீண்டும் நோபல் பரிசு பட்டியலில் பல இந்திய விஞ்ஞானிகளின் பெயர்களை இடம் பெற செய்யுங்கள்...

அந்த விஞ்ஞானி நாமாக இருப்போம் என்று கனவு காணுங்கள்....

இவன்:-


க. ஜெயசீலன்,
அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி-பெத்லேகம், ஆம்பூர்,
வேலூர்-மாவட்டம்.
...............




..................................................................

பிப்ரவரி-28.சர் சி.வி.ராமன் அவர்களிடம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...



                              

சர் சி.வி.ராமன் அவர்களிடம்
கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...


வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.  மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.



பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில்  வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.
உலகை உற்றுக் கவனி!
மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.



நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!

''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை  வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.


துணிவு கொள்!

ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே  தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.
உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!
''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது


........................................................

பிப்ரவரி-28. தேசிய அறிவியல் தினம் பற்றிய சிறப்புக் கட்டுரை:




       
தேசிய அறிவியல் தினம்: 


‘உயிர் வாழ்வதற்கு நீர் ஆதாரமாக உள்ளது’ என்று பொதுப்படையாகச் சொல்வோம். ஆனால், அறிவியல் இப்படி மேலோட்டமாக எதையும்அணுகுவது இல்லை. 

இந்த நீருக்கு ஆதாரமாக இருப்பது எது? இந்தக் கேள்விக்குப் பதிலை, பல நூறு ஆண்டுகள் தீவிரத் தேடலுக்குப் பின்பு 18-ம்நூற்றாண்டில், நீர் ஒரு சேர்மம் என்றும் அதில் இரண்டு பங்கு ஹைட்ரஜனும்,ஒரு பங்கு ஆக்ஸிஜனும் உள்ளது என்றும் கண்டறிந்தனர். ஆனால் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் எந்த வரிசையில் என்ன வடிவத்தில் அமைந்துள்ளன என்பது 20-ம் நூற்றாண்டு வரை ஒரு புதிராகவே இருந்தது.


உதாரணமாக, H2O என்ற நீர் மூலக்கூறு H-H-O, H-O-H என்ற நேர்க்கோட்டு வரிசையில் அமைந்துள்ளதா? அல்லது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைந்தபடி இருக்கிறதா என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? ஒரு சிறிய எறும்பை விட 1 லட்சம் மடங்கு சிறியதாக இருக்கும் நீர்மூலக்கூறின் வடிவத்தைக் கண்களால் பார்த்தோ, கைகளால் தொட்டோ அறிந்துகொள்ள முடியாது. சரி, நுண்ணோக்கியாலாவது பார்க்கலாம் என்றால் அதன் மூலம், எறும்பைவிட 1,000 மடங்கு சிறிய பொருளை மட்டுதான் பார்க்க முடியும்.


சிறிய பொருட்களின் வடிவத்தை ஆராய, ஒரு சிறிய பொருள் தேவை. எலக்ட்ரானைப் போன்றது ஒளித்துகளும் (ஃபோட்டான்). அதனைக் கொண்டு நீரின் வடிவத்தைக் கண்டறிய முடியும்.
சூரியனிலிருந்தும் விளக்கிலிருந்தும் வரும் ஒளி அடிப்படையில் சிறிய துகள்களாகத்தான் தொடர்ந்துவருகிறது (இது அலையாகவும் வருகிறது. ஒளியின் இந்த இரட்டைப் பண்பை மாக்ஸ் பிளாங்க் கண்டுபிடித்தார்). அது ஒளித்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த ஒளித்துகள்கள் ஏறக்குறைய அதே அளவு பரிமாணம் கொண்ட மற்றொரு துகளின் மீது மோதி அதனை நகர்த்த முயற்சிக்கிறது. சில நேரங்களில் நகர்த்தியும் விடுகிறது. ஒளியின் இந்தப் பண்பை 1905 ல் ஐன்ஸ்டைன் கண்டறிந்தார்.
இப்போது நமது பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டியிருக்கிறது. ஒளித்துகள்கள் எனும் ஃபோட்டான்களைக் கொண்டு நாம் நீர் மூலக்கூறுகளின் வடிவத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம் இல்லையா! ஆனால், அதை எப்படிச் செய்வது?

பச்சை நிற ஒளியை நீர்வழியாகச் செலுத்தும்போது பச்சை ஒளித்துகள்கள் நீர் மூலக்கூறுடன் மோதுகின்றன. பொதுவாக, மோதல் நடைபெறும்போது, மோதும் பொருளின் ஆற்றல் குறைந்துவிடும். ஆகையால் நீரை விட்டு வெளியே வரும் ஒளி சிவப்பு நிறமாக இருக்கும். நீர் மூலக்கூறுகளின் இடையே நிறைய இடைவெளி இருப்பதால் சில ஒளித்துகள்கள் எந்த வித மாறுதலுக்கும் உட்படாமல் பச்சை நிற ஒளியாகவே வெளியேறும். அதுதான் ஒளிச்சிதறல்.


ஆனால், சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் சர். சி.வி. ராமனும் அவரது இணைஆய்வாளர் கே.எஸ். கிருஷ்ணனும் செய்த ஆய்வுகளின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தன. ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த இந்திய அறிவியல் வளர்ச்சி நிறுவனத்தில் வெறும் 250 ரூபாய்க்கு நிறமாலை மானியையும் சூரிய ஒளியையும், எளிதில் கிடைக்கும் நீர்மங்களான ஆல்கஹால், பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு ஆகியவற்றைக் கொண்டு இவர்கள் இதற்குத் தீர்வு கண்டார்கள். திரவங்களின் வழியாகச் சிதறலடைந்துவரும் ஒளி பச்சை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் இருக்கும் என்பதை நாம் முன்னரே பார்த்தோம். ஆனால், ராமனின் ஆய்வில் ஒரு சில ஒளித்துகள்கள் நீல நிறமாக இருந்தன.
திரவங்களில் உள்ள மாசுக்களால் இந்த நீல நிறம் வந்திருக்கலாம் என்று நினைத்து, மிகவும் தூய்மையான திரவங்களில் இந்த ஆய்வைத் திரும்பவும் செய்தனர். அப்போதும் நீல நிற ஒளி தெளிவாகத் தொடர்ந்தது. சுமார் 1 லட்சம் ஒளித்துகளில் ஒன்றிரண்டில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல, கிட்டதட்ட 3 முதல் 4 வரை நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்யும்போதுதான் இதைக் கண்டறிய முடியும். இந்தப் புது வகையான ஒளிச்சிதறல் இராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. 1928-ல் செய்யப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமனுக்கு இயற்பியல் நோபல் பரிசு 1930-ல் வழங்கப்பட்டது.
இராமன் விளைவைக் கொண்டு மூலக்கூறுகளின் வடிவத்தை எளிதாகக் கண்டறியலாம். இது எப்படி என்பதை ராமன் எளிமையாக விளக்குகிறார்.
ஒருவர் டென்னிஸ் மட்டையை முன்னும் பின்னுமாக அசைத்துகொண்டே இருப்பதாகக் கருதுவோம், அதன் மீது ஒரு பந்தைக் குறிப்பிட்ட வேகத்தில் எறிவோம். என்ன நடக்கும்?
1. மட்டை பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது, பந்து அதன் மீது பட்டுத் திரும்புமென்றால், அது எறியப்பட்டதை விடக் குறைவான வேகத்திலேயே திரும்பும்.
2. ஒருவேளை அது முன்னோக்கியோ பின்னோக்கியோ நகராமல் நடுவில் இருந்தால் அது எறியப்பட்ட வேகத்திலேயே திரும்ப வரும்.
3. ஒருவேளை மட்டை முன்னோக்கி நகரும்போது பந்து பட்டுத் திரும்புமென்றால் பந்தின் வேகம் அது எறியப்பட்டபோது இருந்ததைவிட அதிகமாவே இருக்கும்.


இதிலிருந்து நாம் பந்தின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்திலிருந்து டென்னிஸ் மட்டையின் நிலையையும் அதன் ஆற்றலையும் அறிந்துகொள்ள முடியும். இப்போது டென்னிஸ் பந்துக்குப் பதிலாக ஒளித்துகளையும், மட்டைக்குப் பதிலாக நீர் மூலக்கூறையும் எடுத்துக்கொள்வோம். ஒளியின் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு நீர் மூலக்கூறு எந்த ஆற்றல் நிலையில், என்ன வடிவில் அமைந்துள்ளது என்பதையும் எளிமையாக விளங்கிக்கொள்ள முடியும். இதுதான் ராமன் விளைவு, இதை உலகத்துக்கு ராமன் அறிவித்த நாளை (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடிவருகிறோம்.
அதுசரி, மூலக்கூறின் வடிவம் உண்மையாக எப்படி இருக்கும் என்று சொல்லவே இல்லையே? நீர் மூலக்கூறின் மையத்தில் ஆக்ஸிஜன் அணு இருக்க அதன் பக்கவாட்டில் இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் 104.50 கோணத்தில் A வடிவில் அமைந்திருக்கும்

........................................