CRC பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CRC பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 29 ஜூன், 2017
வியாழன், 15 ஜூன், 2017
புதன், 14 ஜூன், 2017
CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.
CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.
####################################
*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்
*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.
*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை
* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்
* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்
செவ்வாய், 9 மே, 2017
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கோடை பயிற்சி ஒத்திவைப்பு.
தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு கோடை விடுமுறையில் நடத்தப்படவிருந்த அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.)பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) சார்பில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (மே 8) முதல் மே 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) சார்பில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (மே 8) முதல் மே 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொளுத்தும் வெயில், குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கொண்டாட இயலாத நிலை ஏற்படும் உள்ளிட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், ஆசிரியர் முன்னேற்றசங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும்ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்தப் பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திங்கள், 8 மே, 2017
பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆண்டுதோறும், வார விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி அளிக்கப்படும்.
இதன்படி, கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், ஐந்து நாள் பயிற்சி இன்று துவங்குகிறது. மாவட்ட வாரியாக, 55 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியில், தானாக முன்வந்து பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோடை வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, பெண்களால் அலைய முடியாது என, பல காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, பல ஆசிரியர்கள் அடம் பிடித்துள்ளனர். பயிற்சி திட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்கள் சங்கங்கள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள் இருந்தால், ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். தரமான கல்வியை வழங்கினால் தான், அரசு பள்ளிகளும் இருக்கும்.
அதற்கு, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கள் அவசியம். அந்த பயிற்சியை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுடன், அரசே தருகிறது. தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், விடுப்பு நாட்களிலும், பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த பணத்தில், வெளியே உள்ள மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்று, தரமான பாடம் நடத்துகின்றனர்.
ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையாக உள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், 'பயிற்சிக்கும் வரமாட்டேன்; பாடம் நடத்தவும் மாட்டேன்' என, அடம் பிடிக்கக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திங்கள், 1 மே, 2017
ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவது குறித்து உண்டு உறைவிட பயிற்சி வருகிற 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திண்டுக்கல், திருச்சியில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் தலா 50 ஆசிரியர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு, மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மே மாத தொடக்கத்திலோ, கடைசியிலோ பயிற்சி வைக்காமல், இடைப்பட்ட தேதியில் வைப்பதால், இதில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் : மே மாதத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு கிடையாது. தற்போது 'டெட்' தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், இந்த மாதம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மே மாதம் குடும்பத்துடன் வெளி ஊர்களுக்கு செல்லவோ, விசேஷங்கள் நடத்தவோ ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள்.
தற்போதைய உத்தரவால் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் பயிற்சி நடத்தியும் பிரயோஜனம் இல்லை. பெண் ஆசிரியர்கள் ஐந்து நாட்கள் தொடர் பயிற்சியில் பங்கேற்றால், அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோரை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரிடம் எங்கள் சங்கம் சார்பில் முறையிட்டுள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மாவட்ட அளவில் உத்தரவை வழங்கியுள்ளனர். எனவே, மறுபடியும் இயக்குனரை சந்திக்க உள்ளோம், என்றார்.
சனி, 29 ஏப்ரல், 2017
2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்
ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்
பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இப்பயிற்சியின் முற்னேற்பாடாக, மே மூன்றாம் வாரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் (மாவட்டத்திற்கு 10 ஆசிரியர் பயிற்றுனர்கள்) பயிற்சி சென்னையில் வைத்து நடைபெறும். மே இறுதி வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் வழங்கப்படும். 6 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அனைத்தும் RMSA வழியாக அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களின் உதவியுடன் நடைபெறும்.
பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வட்டார அளவிலான பயிற்சிகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை பாதிக்கும் என்பதனை உணர்ந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் வட்டார அளவிலான பயிற்சிகள் பருவ ஆரம்பத்திலேயே வழங்கப்படும். குறுவள மைய பயிற்சிகள் வழக்கம் போலவே நடைபெறும்.
புதன், 1 மார்ச், 2017
குறுவளமையப் பயிற்சி proceedings
குறுவளமையப் பயிற்சி proceedings - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்"
CRC NEWS :- UPPER PRI & PRI CRC ON 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
அகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை
ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
சனி, 18 பிப்ரவரி, 2017
செவ்வாய், 10 ஜனவரி, 2017
சனி, 12 நவம்பர், 2016
CRC level science exhibition topics
1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்
Primary level - 2 models or 2 projects
Upper primary level -2 models or 2 projects.
CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200
திங்கள், 7 நவம்பர், 2016
தமிழ்நாட்டில் 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு
ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டமானது மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நோக்கத்தினை மாணவர்கள் பெறும் வகையில், அறிவியல் கண்காட்சிகள் குறுவளமைய அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த கண்காட்சிக்கான தலைப்பு தேசிய வளர்ச்சியில் அறிவில், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு (Science, Technology and Mathematics for Nation Building) ஆகும்.
இத் தலைப்பில் உடல்நலம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிலையான சுற்றுச் சூழலுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களை கண்டுபிடித்தல், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள், அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகள் (Models) மற்றும் திட்டங்களை (Projects) மாணவர்கள் தயார் செய்ய வேண்டும்.
குறுவளமையம் அமைந்துள்ள பள்ளியிலே அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாநிலத்தில் 3975 குறுவளமையங்களில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 134 குறுவளமையங்களில் நவம்பர் 25-ம் தேதிக்குள் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்படும்.
தொடக்கப் பள்ளிகள் (1 முதல் 5 வகுப்பு) 2 மாதிரிகளும், நடுநிலைப் பள்ளிகளில் (1-5 வகுப்பு 2 மாதிரிகளும் 6-8 வகுப்பு 2 மாதிரிகளும்) 4 மாதிரிகள் தயார் செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு மாணவர்கள் இரு மாதிரிகளும் தயார் செய்ய வேண்டும்.
பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கைத் தவிர்த்து, மாணவர்கள் தாங்களாக முன் வந்து செய்யும் மாதிரிகள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விலையில்லா மற்றும் விலைகுறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மலரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும், குறுவளமையம் அளவில் சிறந்த மூன்று மாதிரிகள் நடுவர் குழு தேர்வு செய்து முறையே ரூ.400, ரூ.300, ரூ.200 வழங்கும்.
சிறப்பாக பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளியினை நடுவர் குழு தேர்வு செய்து அவர்களின் கூட்டு முயற்சிக்காக ரூ.500 மதிப்புள்ள கேடயம் பரிசாக வழங்கும்.
கண்காட்சியை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சனி, 5 நவம்பர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)