>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BEST TEACHER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BEST TEACHER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மார்ச், 2018

பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்படுவது தேவைதானா? ஓர் அலசல்.....

பள்ளி
மாணவர்களை ஈர்க்க, தங்கள் பள்ளியில் பல்வேறு வசதிகள் இருக்கிறது என தனியார் பள்ளிகள், பல காலமாக விளம்பரம் செய்கின்றன. சமீபமாக, அரசுப் பள்ளிகள் பலவும், தங்கள் பள்ளியில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிப்பதாகச் சொல்லும் செய்தியைக் காணமுடிகிறது. ஒரு மாணவர், சிறப்பாகக் கல்வி கற்பதற்கு வகுப்பறைச் சூழலும் முக்கியம். அதனால் இவ்வாறு அமைக்கப்படுகிறது எனச் சொல்லப்பட்டாலும், இதற்கு மாற்றுக் கருத்துகளும் எழுகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டோம். 
வசந்த்







 வசந்த், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கடலூர்: 
''நான் பணிபுரிந்த பள்ளியில், வகுப்பறைக்கு ஏ.சி அமைத்தேன். அது ஸ்மார்ட் கிளாஸ் ரூம். அதில் முப்பதுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களும் இன்வெர்ட்டரும் இருக்கும். அதற்கான பாதுகாப்புக்காகவும் அது பயன்பட்டது. மற்றபடி, வகுப்பறைகளில் ஏ.சி தேவையில்லை என்பதே என் கருத்து. பெற்றோரைக் கவர்வதற்காக ஏ.சி வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன என்று சொன்னாலும், பல கிராமங்களில் ஏ.சி இயங்குவதற்கான மின்சார வசதியே இல்லை. இன்வெர்ட்டர் வைத்து இயக்கும் சூழலும் இல்லை. பொதுவாக, அரசுப் பள்ளியின் வகுப்பறைகள் பெரியதாக இருக்கும். அதற்கு ஏ.சி செய்ய, பல்வேறு ஏற்பாடுகளுக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகும். அந்தத் தொகையில் மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரலாமே.'' 
பிராங்களின்

பிராங்க்ளின், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்: 
''ஏ.சி வகுப்பறைகள் என்பது, அந்தச் சூழலை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் உதவும். நான் முன்பு வேலை பார்த்த ராமர்பாளையத்தில் ஏ.சி. வகுப்பறைகள் இருந்தன. ஆனாலும், இந்த வசதி ஏற்படுத்துவதாலே பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்பதில் உடன்பாடில்லை. ஆசிரியர்கள் திறமையாகப் பாடம் நடத்துவதும், அது பொதுமக்களிடம் பேசப்படுவதாலுமே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.'' 
சதீஷ்
சதீஷ்குமார், ஆசிரியர், புதுக்கோட்டை: 
''அரசுப் பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைப்பது நான்கு பலன்களைத் தருகிறது. 
1.தனியார் பள்ளிகள்போல அரசுப் பள்ளியிலும் ஏ.சி வகுப்பறை இருக்கும் விஷயம் பெற்றோர்களை ஈர்க்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். 




2. மற்ற பள்ளிகளிடமிருந்து ஏ.சி வகுப்பறைகள் அமைத்த பள்ளியைத் தரம் உயர்த்திக் காட்ட உதவுகிறது. 
3. ஒரு மாவட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளில் மட்டுமே ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அது, கல்வி அதிகாரிகள் கவனத்தை சட்டென்று ஈர்க்கவைக்கிறது. 
4. ஊடகத்தின் கவனத்தால் இதுபோன்ற பள்ளிகள் ஈர்க்கப்பட்டு, செய்திகள் வெளிவருகின்றன. அதுவும், மாணவர் சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது.'' 
சசிகலா

சசிகலா, சன்னதி உயர்நிலைப் பள்ளி, வந்தவாசி: 
''பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குத் தேவையானது சுத்தமான குடிநீர், தூய்மையான கழிவறை, பாதுகாப்பான சுற்றுச்சுவர் போன்றவையே. அதுவே மாணவர் கல்வி கற்பதற்கான மகிழ்ச்சியான சூழலாக அமையும். சரியான உடைகள் உடுத்தாமல் வரும் மாணவர்கள் இருக்கும் நிலையில், ஏ.சி. வகுப்பறைகள் அவசியமற்றவை என்பதே என் கருத்து. ஏனெனில், எட்டு மணி நேரம் ஏ.சி.யில் இருக்கும் மாணவர் வீட்டிலும் அதை எதிர்பார்க்கும் மனநிலையும் வரும். அவர்களில் யாரேனும் ஒரு பெற்றோர், தன் வீட்டில் ஏ.சி வாங்கிப் பொருத்திவிட்டால், மற்ற பிள்ளைகள் ஏங்கிப் போவார்கள். இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதைக் கற்றுக்கொடுப்பதும் கல்வியில் ஓர் அங்கம்தானே. ஏ.சி வகுப்பறைகள் தேவைதான். அது எப்போது என்றால், மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய பிறகே. அதை முதலில் செய்வோம்.''
..................................................................................................................................................

வியாழன், 15 மார்ச், 2018

அசத்தும் SSA மேற்பார்வையாளர்





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..

ஞாயிறு, 11 மார்ச், 2018

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்திய அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!



மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வகுப்பறையில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கு நடத்துகிறது. அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகளவில் 300 ஆசிரியர்களைத் தேர்வு செய்தது . இந்தியாவில் இருந்து 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஓரே ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராய் கருணைதாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியாழன், 1 பிப்ரவரி, 2018


கட்டளை கிராமத்தில்வானத்திலே திருவிழா நிகழ்ச்சி






மரக்காணம் வட்டாரம் கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், 152 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சிறப்பு சந்திர கிரகணத்தை பிரத்யேக பைனாகுலர் மூலம் கண்டு களிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அரிய நிகழ்வு என்பதாலும், அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது அனைவரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கிய நிகழ்வென்பதால்...மாணவர்களிடம் மறக்கவியலாத இனிமையான அனுபவம் மற்றும் அறிவியல் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நிகழ்வை மாணவர்களோடு சேர்ந்து கண்டுகளிப்பது சிறப்பான ஒன்றாக அமையும் என்ற எண்ணத்தில் கட்டளை கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இரா.துளசி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி. வி.பாரதி மற்றும் கிராம பொதுமக்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வானியல் நிகழ்வை கண்டு களித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் திரு.ச.சுகதேவ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்....

மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தகம் வழங்கி உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர் திரு.சரவணன்


ஆசிரியரை வாழ்த்த
9597063944

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் புதுமை முயற்சி


மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி
ஆசிரியரின் புதுமை முயற்சி
பெரும்பாலான மாணவர்களால் கடினம் எனக் கருதப்படும் கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காக கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், நாடகம் மூலம் கணிதம் கற்பிக்கும் முயற்சியை கையாண்டு வருகிறார்.
கணிதப்பாடம் இன்றும் பல மாணவர்களுக்கு புரியாத ஒன்றாகவே உள்ள நிலையில், கணிதக் கருத்துகளை (Mathametical concepts) காட்சி மற்றும் செயல் வடிவத்தைக் கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள் புரிதலுடன் கற்கிறார்கள் என்று கூறுகிறார் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் சு.சுரேஷ்.

மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி என பலவித முறைகளை தனது கற்பிக்கும் முறையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இவர், தற்போது நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை புதிதாக மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் இவர் தனது முயற்சியில், கணித நாடகப் போட்டியை மாணவர்கள் பங்கேற்புடன் நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியது: மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்துவந்தது.
அதை நடைமுறைப்படுத்தும்போது, மற்றவர்களால் கேலி செய்யப்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனாலும், அதற்கான தயாரிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். தற்போது அவ்வப்போது மாணவர்களுக்கு நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
நாடகத்தின் கதையையும், காட்சியமைப்பையும் நானே உருவாக்குகிறேன். மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராகி நடிக்கிறார்கள். கடையில் சென்று காய், கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது, வீடுகளில் தளத்தில் டைல்ஸ் போடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, தச்சு வேலைகள் மூலம் சில பொருட்களை உருவாக்குவது போன்ற கருத்தாக்கங்களுடன் காட்சிகள் அமைக்கப்படும்.
இதில் மாணவர்கள் பங்கேற்று நடிக்கும்போது நிறுத்தல் அளவு, பரப்பளவு, கொள்ளளவு, நீளம், அகலம், கூட்டல், பெருக்கல் உள்ளிட்டவற்றை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களாகவே அளவீடுகள் குறித்து நேரிடையாக உணர்ந்து பேசிக்கொள்கிறார்கள். இது எளிதில் மனதில் பதிவதாக உள்ளது.
மேலும், பொருட்களின் விலை உள்ளிட்ட அன்றாட பொருளாதார நடைமுறைகளையும் தெரிந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் பயன்பாடு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்கிறார்கள். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இவ்வாறு கணிதத்தை கற்பிக்கிறேன். வழக்கமான வகுப்பறை கட்டுப்பாடுகளின்றி சற்று ரிலாக்ஸ் ஆக, எளிதாக கற்றுக்கொள்ள முடிவதால் மாணவர்கள் இதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கின்றனர் என்றார்.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்!...




ஒரு பேனா, ஒரு காகிதம், ஒரு மாணவர், ஓர் ஆசிரியர் போதும், உலகத்தையே மாற்ற.

காலை 9.10 மணி. திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம்- திருநாவுக்கரசு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். பிரேயர் முடித்தவுடன் 09.15 முதல் 09.30 மணி வரை சிறப்புப் பயிற்சிகள். எளிமையான யோகா பயிற்சிகள் நடக்கின்றன. உடம்பை வில்லாக வளைக்கின்றனர் மாணவர்கள். சிரிப்புச்சத்தம் காதில் இனிமையாக ஒலிக்கிறது. சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த இடமும் அமைதியாகி தியானம் நடைபெறுகிறது. பின்னர் மாணவர்கள் புத்துணர்வுடன் வகுப்புக்குள் நுழைகிறார்கள்.

''நான் படிக்கும்போது என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில் செயல்படுகிறேன்'' என்று உற்சாகமாய் சொல்கிறார் இந்த வார அன்பாசிரியர் பழனிக்குமார்.

2016 ஜனவரியில் ஃபேஸ்புக்கில் பள்ளிக்கான கணக்கைத் தொடங்கிய ஆசிரியர் பழனிக்குமாருக்கு இப்போதுவரை சுமார் 1.5 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா? மாணவர்களின் கற்றல், பள்ளியின் நிலை, தேவைகள், தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை நாள்தோறும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்கிறார். கிடைக்கும் பணத்தில் செய்த செயல்பாடுகளைப் பதிவாக்கி, நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறி அதையும் மற்றொரு பதிவாக்குகிறார். இதைத்தவிர ஃபேஸ்புக் வழியாகக் கற்பித்தலையும் நிகழ்த்தி வருகிறார். அவரின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்....
''அரசுப்பள்ளிகளுக்கென்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை மாற்ற ஆசைப்பட்டேன். வகுப்புக்குள் நான்கு சுவருக்குள் நிகழும் கற்பித்தலை உலகமறிய வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவற்றை படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். இதன்மூலம் வாய்ப்புள்ள மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களின் பள்ளி செயல்பாடுகள் சென்று சேர்ந்தன.
பரிசாக தங்க நாணயம்
2008-ல் கிருஷ்ணாபுரத்தில் பணியில் சேர்ந்தேன். பள்ளியைச் சுற்றிலும் தனியார் பள்ளிகள் முளைத்ததால், 2010 வாக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆங்கிலம் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் அரசுப்பள்ளிகளை விட்டுச் செல்லக்கூடாது என்று தோன்றியது. ஆங்கிலத்தில் பயிற்சி கொடுத்து, தேர்வு நடத்தி அதில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், 2, 3-ம் பரிசாக குக்கர்களை அளிப்பதாக அறிவித்தோம். இதனால் எங்களின் பள்ளி மீது மக்கள் பார்வை திரும்பியது. இரண்டாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவின்போது முதல் பரிசை மட்டும் அளிக்கிறோம். இதற்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்.
இரு வருடங்களாக எடுக்காமல் வைத்திருந்த விடுமுறைகளைச் சமர்ப்பித்ததால் ஈட்டிய விடுப்புத்தொகையாக ரூ. 50 ஆயிரம் கிடைத்தது. அதைக்கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கினோம். அதன்மூலம் வெவ்வேறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை எங்கள் மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். அந்தப்பள்ளி மாணவர்களோடு எங்கள் மாணவர்கள் ஸ்கைப்பில் உரையாடுவார்கள்.
நேரடிக் கற்பித்தல்
மாணவர்களுக்கு என்ன பாடம் பிடிக்கும் என்று கேட்டு அதை நடத்துவேன். அதைத்தொடர்ந்து களத்துக்கே அழைத்துச் சென்று கற்பிக்கும் உத்தியைத் தொடங்கினோம். முதன்முதலில் நாம் உண்ணும் உணவுகளைப் பற்றித் தெரிய வேண்டும் என்பதால் வயல்வெளிக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே பாட்டிகளே மாணவர்கள் உழுவது, நாற்று நடுவது, பயிர்கள் முதிர்வது குறித்துச் சொல்வார்கள். அடுத்து ரயில் நிலையம். அங்கிருக்கும் அதிகாரியே சிக்னல் என்றால் என்ன, பயணச்சீட்டு வாங்குவது, கொடி அசைப்பது குறித்து விளக்குவார்.
அஞ்சல் அலுவலகம், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதேபோல இயற்கை உரம் தயாரித்தல், காய்கறிகள் வளர்த்தல், நேரடி கொள்முதல் ஆகியவற்றையும் கற்கும் மாணவர்கள் பள்ளித்தோட்டத்தில் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கின்றனர். கரும்பலகையில் நாம் கற்பிப்பதைவிட, களத்துக்கு அழைத்துச் சென்று நிபுணர்கள் விளக்குவது கற்றலை மேம்படுத்தும் என்று நினைக்கிறேன்.
எங்கள் பள்ளித்தோட்டத்தில் இயற்கை உரமிட்டு கீரை, தக்காளி, பூசணி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் வளர்க்கிறோம். விளைந்தபின்னர் அவை பள்ளியின் மதிய உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சப்போட்டா, மாதுளை போன்ற பழவகைகளும், மூலிகைத் தாவரங்களும் உண்டு. எங்களின் கீரைத்தோட்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதைப் பார்த்த தென்காசி நண்பர் ஒருவர் பள்ளிக்கே வந்து எங்கள் மாணவர்களுக்கு சணல் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தைக் கற்றுக்கொடுத்தார்.
தன்னம்பிக்கை ஓவியங்கள்
ஒருமுறை ஆசிரியர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பள்ளிக்குச் சென்றபோது அவரின் வகுப்பறை ஓவியங்கள் என்னை ஈர்த்தன. இதேபோல் நம் பள்ளியிலும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில், 'வகுப்பில் தன்னம்பிக்கை ஓவியங்கள் வரைய பணம் தேவை' என்று பதிவிட்டேன். 15 நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நவீனா கிருபாகரன் என்பவர் ஃபேஸ்புக்கில் பார்த்து 5 ஆயிரம் கொடுத்தார். அதைக்கொண்டு வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் ஓவியங்கள் வரைந்தோம்.

அதில் மாவட்ட ஆட்சியர் இருக்கை வரையப்பட்டு, அதில் பெயர் இருக்கும் இடத்தில் இடம்விட்டு ஐஏஎஸ் என்று எழுதப்பட்டிருக்கும். அதேபோல மருத்துவர், நோயாளியின் படங்கள் வரையப்பட்டு, இந்த நோயாளிக்கு உதவப்போவது உங்களில் யார் ஒருவர் என்று எழுதப்பட்டிருக்கும். இதேபோல ஆசிரியர், செஸ் சாம்பியன், விஞ்ஞானி உள்ளிட்ட தன்னம்பிக்கை ஓவியங்களும் வரைந்திருக்கிறோம்.
ஃபேஸ்புக்கில் குவியும் உதவி
மாணவர்கள் விளையாட உபகரணங்கள் தேவை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். உடனே துரைப்பாண்டியன் என்பவர் 4 கேரம்போர்டுகளைப் பள்ளிக்கு அளித்தார். மாணவர்கள் தினமும் யோகா கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு யோகா ஆடை இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. இதுகுறித்தும் பதிவிட்டேன். முதலில் ஒன்றாம் வகுப்பில் உள்ள 26 குழந்தைகளுக்கும் கேட்க எண்ணி, ஒருவருக்கு ரூ. 230/- வீதம் 26 குழந்தைகளுக்கு 5980 வேண்டும் என்று பதிவிட்டேன். உடனே கிடைத்தது. அடுத்ததாக 2,3,4-ம் வகுப்புக்கும் யோகா ஆடைகள் வாங்க ஃபேஸ்புக் நண்பர்களே உதவினர். 5-ம் வகுப்பில் பாதிப் பேருக்குக் கிடைக்க மீதிப்பேருக்கு நாங்கள் உடைகள் தைத்தவரே வாங்கிக் கொடுத்தார்.
மாணவர்களுக்குக் கணினி கற்றுக்கொடுக்க ஒருவரை நியமித்தோம். இரு மாதப் பயிற்சிக்கு ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம். தந்தையை இழந்த மாணவர்கள் 30 பேர் இருந்தனர். அதையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவர் 13 ஆயிரம் ரூபாயை உடனடியாக அனுப்பினார். மீதிப் பணத்துக்கு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்கச் சொன்னார். உடனே வாங்கிவிட்டு, மாணவர்களின் அம்மாக்களை அழைத்து அதை எங்கள் ஸ்மார்ட் வகுப்பறையில் போட்டுக் காண்பித்தேன். எதுவும் சொல்லமுடியாமல் நன்றியால் உடைந்து அழுதார்கள்.
ஓவியப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டதில், ஆனைகுளம் ஓவிய ஆசிரியர் எங்கள் பள்ளிக்கு வந்து ஓவியம் கற்றுத்தருகிறார். எங்கள் மாணவர்கள் நீண்ட நாட்களாகவே தரையிலேயே உட்கார்ந்திருந்தனர். மேசை, நாற்காலிகள் தேவை என்று பதிவிட்டிருந்தேன். மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி உடனடியாக 25 ஆயிரம் ரூபாயை அளித்தார். தொடர்ந்து துபாய் நண்பர்கள், மற்றவர்களின் உதவியோடு மற்ற வகுப்புகளுக்கும் மேசை, நாற்காலிகள் கிடைத்துவிட்டன.
தஞ்சை நாணயவியல் கழகத்தில் பணிபுரியும் ஃபேஸ்புக் நண்பர் இன்னாசி குழந்தைசாமி, எங்கள் பள்ளிக்கே வந்து வினாடி வினா போட்டி நடத்தி, 2000 ரூபாய்க்கு பொருட்களை அளித்தார். ரத்னவேல் என்பவர் 1,500 ரூ. மதிப்புள்ள புத்தகங்களை அனுப்பினார். ராகவன் சிவராமன் என்னும் சமூக சேவகர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 துணிப்பைகளை பள்ளிக்கு அனுப்பினார். மரக்கன்றுகள் நட 1,500 ரூ. அனுப்பினர். எங்கள் மாணவர்கள் ஊக்கப்பரிசு மூலம் தாங்கள் சம்பாதித்த பணம் ரூ.800ஐ திருவள்ளூர் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு அளித்ததை என்றும் மறக்கமுடியாது.
தேவைகளைப் பதிவிடுவதோடு விட்டுவிடாமல், கிடைத்தபின் அவற்றோடு எங்கள் மாணவர்களையும் சேர்த்து நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்லிப் பதிவிடுகிறேன். மறக்காமல் அதுதொடர்பான ரசீதுகளையும், விவரங்களையும் கூறிவிடுகிறேன். இதனால் எங்கள் பள்ளி மீது எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
ஃபேஸ்புக் வழி கற்றல்
இதைத்தவிர ஃபேஸ்புக் வழியாக கற்றலையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் >திருநாவுக்கரசு பிஎஸ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் ஆங்கில வார்த்தை ஒன்றையும், ஒரு ஓவியத்தையும் பதிவிடுவேன். அதற்குரிய அர்த்தத்தை அவர்கள் கண்டுபிடித்து, படத்தையும் வரைந்துவர வேண்டும். மாணவர்கள் தங்களின் அக்கா, அண்ணன் என உறவினர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் வழியாக இதைப் பின்பற்றுகின்றனர். ஃபேஸ்புக் பார்க்க முடியாதவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்புகிறேன்.
இதைச் சரியாகச் செய்பவர்களுக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் ஊக்கப்பரிசு வழங்குகின்றனர். சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இளங்கோ எங்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கப்பரிசு அனுப்புவார். தவிர மற்ற பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் அவர்களுக்குப் பரிசுகள் அனுப்புகிறோம். எங்கள் மாணவர்களையே அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 ஊக்கப்பரிசை அனுப்புகிறோம். கனிந்த இதயம் எனும் அமைப்பு எங்களோடு இணைந்து இதைச் செய்துவருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் தாங்களே கையெழுத்துப் போட்டு மணியார்டர் வாங்குவது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்னும் எங்கள் மாணவர்களுக்கு பெல்ட், டை, ஷூ, சாக்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கென டிஜிட்டல் ஆய்வகம் அமைக்க வேண்டும். இவற்றைப் பதிவிட்டால் ஃபேஸ்புக் நண்பர்கள் அதற்கும் உதவுவார்கள். ஜனவரியில் கணக்குத் தொடங்கி, ஜுனில் உதவி கேட்க ஆரம்பித்தேன். ஆறு மாத காலத்தில் 1.5 லட்ச ரூபாய் நன்கொடை அளித்த ஃபேஸ்புக் நண்பர்கள் இதற்கும் உதவமாட்டார்களா என்ன?'' என்று பெருமிதமாய்ச் சிரிக்கிறார் சமூக ஊடகத்தின் வழியே சமூகப்பணியாற்றும் அன்பாசிரியர் பழனிக்குமார்.
ஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்: 9976804887

செவ்வாய், 19 டிசம்பர், 2017

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை விடைத்தாள் நகலுடன் வெளியிட வேண்டும்!!!

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆசிரியருக்காகப் போராடிய மாணவர்கள்!

தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி
தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த தமிழ்ச்செல்வி, பணியிலிருந்து ஓய்வுபெறும் தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவரைக் குறித்து கல்வி அலுவலரிடம் அப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்த கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்திய விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி விருப்ப ஓய்வு கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.
இதையறிந்த மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். தலைமையாசிரியை மீது முகுந்த அன்பும் மதிப்பு வைத்திருந்த அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியர் பள்ளிக்கு வராததால் மனமுடைந்த மாணவர்கள் நேற்று (டிசம்பர் 14) தங்கள் பெற்றோருடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். “எங்களுக்கு இதுபோன்ற ஒரு ஆசிரியர் உலகத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களும்      அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில், “ ஜாதியைச் சொல்லித் திட்டுவதாக என் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி விசாரணை என்ற பெயரில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். எனவே, பணி ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தேன். ஆனால், மாணவர்கள் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நேரடியாகக் கண்டேன். என் மாணவர்களுக்காக விருப்ப ஓய்வைத் திரும்பப்பெறுவதாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும் என் முடிவை வரவேற்றனர். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்புகிறேன்” எனக் கூறினார்.
விலகியது ஏன்?
விருப்ப ஓய்வுக் கடிதம் கொடுத்த டிசம்பர் 13ஆம் தேதி அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “தோழர்களே, தொடர்ந்து 28 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது பணிக்காலத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். இதில் மூன்றரை ஆண்டுக் காலம் தலைமையாசிரியர் பணி. தலைமையாசிரியராகப் பணியாற்றிய இரண்டு பள்ளிகளையும் எனது சொந்த செலவிலும் நண்பர்கள் உதவியோடும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளப்படுத்தியுள்ளேன்.
கல்வித் தரத்தில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் விதத்தில் வளர்த்தெடுத்துள்ளேன்.
கடந்த ஆண்டு எமது பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றது.
ஒரு ஆசிரியராக மட்டுமின்றி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு படைப்பாளியாக முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறேன். முக்கியமான விருதுகளை, வாசக அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்.
இந்நிலையில் இரண்டுமுறை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டேன். இவற்றின் விளைவாக எனக்கான நீதி மறுக்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.
அரசு, அதிகாரம் என்பது ஒரு இறுகிய பாறை. நான் ஒரு சிட்டுக்குருவி. பாறையோடு மோதி என் தலையை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதிகாரத்தின் நிழலில் அமர்ந்து நீதியை, அறத்தைப் பேச முடியாது என்பதை உணர்ந்த தருணமிது. நேற்று ஒரு விசாரணைக்காக வந்திருந்த மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் முன்னிலையில் எனது விருப்ப ஓய்வுக் கடிதத்தினைக் கொடுத்துவிட்டேன். விட்டு விடுதலையான சிறு பறவையாக இப்போது என்னை உணர்கிறேன்.
இனி... ஒரு படைப்பாளியாக படைப்புகள் வாயிலாகவும் இலக்கிய அரங்குகள் வாயிலாகவும் உங்களோடு உரையாடுவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இன்று (டிசம்பர் 15) அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 27 நவம்பர், 2017

வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜீவ் குமார்





காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் நடுநிலைப்ப பள்ளியின் ஆசிரியர் ராஜீவ் குமார் அவர்கள், அவரின் பள்ளி நண்பர் திரு.ம.சீனிவாசன் M.E (U.S.A)அவர்களின் நிதி உதவியாலும், பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் ஆலோசனைகள் மூலமாக *தொடுதிரை வசதி கொண்ட INTERACTIVE SMART BOARD* ஒன்றை அமைத்துள்ளார்.

சாதாரண 6 x 4 என்ற அளவு கொண்ட வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கின்றனர்.
இதன் மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து educational app மூலம் விளையாட்டு முறையில் கற்பிப்பதால் மாணவர்கள் ஆர்வமாக, கவனச் சிதறல் அடையாமல் கற்கின்றனர்.
இதில் உள்ள மென்பொருள் மூலம் கணித வடிவியல் கற்பித்தல், அறிவியலில் பட விளக்கங்கள் சார்ந்தவை மிக எளிதாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் ஸ்மார்டு போர்டை பயன்படுத்தி கற்கின்றனர்.
ஸ்மார்டு போர்டில் மாணவர்கள் பல வண்ணங்களில் எழுதி ஆர்வமாக கற்கின்றனர்.

ஆசிரியரை தொடர்புகொள்ள 9751521976

Videos





ஞாயிறு, 12 நவம்பர், 2017

ஆசிரியர்கள் கூடி அலங்கரித்த பள்ளி

"எதிர்காலத்தைச் சரியாகக்  கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்."
-ஓஷோ

தமிழ்நாட்டில்
அரசுப்பள்ளிகள்,  ஆசிரியர்கள் குறித்த மக்களின் நிலைப்பாடு முற்றிலும் நேர்மறையானதல்ல.

இந்த சிக்கலுக்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிகொண்டிருக்கும்  வேளையில் சத்தமில்லாமல் ஒரு  அரசு துவக்கப்பள்ளி பொலிவுபெற்று வண்ணங்களால் மின்னுகிறது.

தேனிமாவட்டம் கூடலூரில் (புதூர்)ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆசிரியர்கள் கூடி மீட்டெடுத்திருக்கிறார்கள்.

பல தன்னார்வ அமைப்புகள் அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றன. அதில் இது புதுமாதிரியான முயற்சி.  அரசை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்காமல் விடுமுறை தினங்களில் செய்து முடித்த சாதனை.

*செயல் அது ஒன்றே சிறந்த சொல்.*

திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர் இராஜசேகரன். விடுமுறைக்கு சொந்தவூர் வந்த வேளையில்
தற்செயலாய் நண்பர் ஒருவர் சொல்லி இப்பள்ளிக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

 அந்த பகுதியின் தேவையுணர்ந்து தன் அணியுடன் பேசி பள்ளியில் தலைமையாசிரியர்,  ஆசிரியர்களுடன் சந்தித்துப்  பள்ளியின் பராமரிப்பு குறித்து விவாதித்துள்ளனர்.
மிக முக்கியமாக தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல தேவைகள் பட்டியலிடப்பட்டது. ஆகும் செலவுகள் கணிக்கப்பட்டன.

தோராயமாக 150000₹•

அடிப்படைகளைப் பூர்த்தி செய்வதோடு கற்கும் சூழலை இனிதாக உருவாக்குவதில் முனைப்பாக இருந்தனர்.

வகுப்பறைச் சுவர்களுக்கு வண்ணமேற்றுவது,  ஏற்ற ஓவியங்களை வரைவது,  பாதுகாப்பான  விளையாட்டு மையம், பசுமைப்பூங்கா உள்ளிட்ட  குழந்தைகளின் உளவியலை உணர்ந்து பள்ளியைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது.


ஏற்கனவே  இப்பணியைப் பக்கத்து ஊரான Kk பட்டியில் நிகழ்த்தியது யாவரும் அறிந்ததே. அந்த நம்பிக்கையில் உடனே ஒப்புக்கொண்ட ஆசிரியர்கள் ஆளுக்கு பத்தாயிரமென தலைமையாசிரியரோடு இணைந்து நாற்பதாயிரம் தர முன்வந்தனர். அதே அளவு பணத்தை அணிசார்பாக செலுத்துவதாக முடிவெடுத்து வேலைகள் காலாண்டு விடுமுறையில் ஜரூராக தொடங்கியது.

இப்பள்ளியில் படித்து
இன்று நல்ல நிலையிலிருக்கும்  பலரை தேடிக்கண்டறிந்து திட்டமிடல் தெரிவிக்கப்பட்டது.

வேலைகளை நேரில் பார்க்க புரவலர்கள் அழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் நிதியாக இல்லாமல் பொருளாகப் பெறப்பட்டது.

வேலையாட்கள் முழுதும் அத்தொழில் செய்து வரும் நபர்கள் இல்லை. முழுக்க உள்ளூர் இளைஞர்கள்.  சில நிபுண பணிகளுக்கு மட்டும் உரிய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.


மற்றபடி ஒரு நாளைக்கு 30 பேர் என இளைஞர்களை அனுப்பி வைத்து உதவியிருக்கிறார் திரு.அழகேசன். அப்பகுதியில் ராணுவத்தேர்வுக்கு பயிற்சி மையமும் உடற்பயிற்சி கூடமும் நடத்துபவர் .
உடலை ஆரோக்கியமாக்க ஜிம் நடத்தும் இவர் ஊரையும் ஆரோக்கியமாக்கி வருகிறார்.

காலாண்டு விடுமுறைதான் பள்ளி பராமரிப்புக்குச் சரியான காலம். மாணவர்கள் இருக்கப்போவதில்லை என்பது மட்டுமில்லை ஒருங்கிணைக்கும் அணி முழுக்க அரசு பள்ளி ஆசிரியர்களே. . இவர்களும் வந்துகூட வசதியாக இருந்தது.

ஆசிரியர்கள் சீனிவாசன், ராஜிவ், அழகேசன், சுரேஷ் கண்ணன் , முன்னாள் மாணவர் ஜெயக்குமார் ஆகியோர் ஏழுநாளும்   சொந்த வீடு கட்டவதுபோல் பரபரத்து பள்ளியிலேயே கிடந்தனர்.

சக ஆசிரியர்களின் பணி பாரத்தை பகிர இராஜேஷ் கண்ணன் , மதன் குமார்,வசந்த்  உள்ளிட்ட உள்ளூர் நண்பர்கள்  வந்திணைந்து கொண்டனர்.


இதில் கொண்டாடத்தக்க 4 விசயங்கள்:

1.
மிகநுட்பமான, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு.

2 .
நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தன் செலவில் வேலையைத் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பது. வேலையை பார்த்துவிட்டு நிதி வழங்குவார்கள் என்கிற ஆணித்தர நம்பிக்கை.

3. அந்த 7நாள்களும் இரவு பகல் பாராத இளைஞர்களின் உழைப்பு.

4.
வண்ணச்சுவர்களும்,  வரைந்த ஓவியங்களும்.

பள்ளிக்கூடத்தை கலைக்கூடமாக்கிய ஓவியஆசிரியர்கள் சின்னமனூர் முருகன், கம்பம் பாண்டியன் மற்றும் சித்தேந்திரன்.

தெருவில் போகும் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்.

பள்ளி திறந்த பின்னும் மீதமிருந்த சில வரையும்பணிகள் அடுத்தடுத்த சனி ஞாயிறுகளில் முடிக்கப்பட்டன.

ஆசிரியர்களின் விடுமுறைநாட்கள் குறித்து கிண்டலாய் எழும்  இணையதள மீம்ஸ்களுக்கு இச் செயல்பாடு - நெத்தியடி.

 இவ்வளவு அளப்பரிய பணிக்கு பின் பள்ளி திறந்ததும் நுழைந்த மாணவர்களுக்கு பேரதிர்ச்சி.! வண்ண ஓவியங்களோடு தனது புது வீட்டில் குதிக்கிறார்கள். இனி அவர்களின் கற்றலும் இனிதாகும்.

ஊரிலிருப்போரும் இந்த கனவுப் பள்ளியை வந்துபார்த்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை அதிகரிக்கும் எனும் நம்பிக்கை அப்பள்ளியைச்சுற்றி வசிக்கும் கால்நடைகளுக்குக் கூடத் தெரியும்.

இல்லாததால் தானே தனியாரை நாடுகிறார்கள். இனியெல்லாமிருக்கு...வாங்க. . . அழைக்கிறது அரசுப்பள்ளி.!


தற்போது இது அரசுப்பள்ளி மட்டுமல்ல மக்கள் பள்ளி.

பத்து நாளில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொணர முடிந்த இந்த அசாத்தியமான அணி தொடங்கியிருப்பது. . .
 "அரசுப்பள்ளியைக்  காப்போம் இயக்கம் "

முக நூலில் இவ்வியக்கத்தின் பணிகளை கவனித்து தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து தொடர்புகொண்டு பேசிவருகின்றனர். அருகாமையிலுள்ள சில பள்ளிகளில் இச்செம்பணி தொடங்கி விட்டதாய் கேள்வி.  . .
அதற்குள் நம்ம இயக்கம் அடுத்த அரையாண்டு விடுமுறையில் அலங்கரிக்க ஒரு அரசு  பள்ளியைத் தேர்ந்தெடுத்து விட்டது.

இயக்கம் என்பதற்கான அர்த்தம் தொடர்ந்து இயங்குவது தானே . . .


எனக்கு ரெட்டை மகிழ்ச்சி. ஒன்று நானும் இவ்வியக்கத்திலிருப்பது.
இரண்டாவது நீங்களும் இவ்வியக்கத்தை
உங்கள் பகுதியில்  தொடங்க இருப்பது. . .