>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
பொது அறிவுச் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது அறிவுச் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 நவம்பர், 2022

ஒரு வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

ஒரு வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

02 Nov 2022.04:30 AM

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

நம்மில் பலருக்கும் உடல் பருமானாக உள்ளோம் என்ற கவலை இருக்கும்.

பல முறைகளை பின்பற்றியும் பயணிருக்காது.அவ்வாறு இருப்பவர்கள் இந்த டீ யை ஒரு வாரம் ட்ரை செய்தால் போதும்.புஷ்டியாக இருக்கும் உடலும் சிக்கென்று குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

துளசி

பட்டை

வீட்டில் உபயோகிக்கும் டீ தூள்

சீரகம்

செய்முறை:

1 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின் அந்த தண்ணீரில் சிறிதளவு வீட்டில் உபயோகிக்கும் டீ தூள் போட வேண்டும்.அதன் பிறகு எடுத்து வைத்த துளசி சேர்க்க வேண்டும். பின்பு பட்டை மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு இந்த டீயை வடிகட்டி சூடு ஆறிய பிறகு குடிக்கலாம். இதில் பால் கலக்காததால் கொழுப்பு அமிலங்கள் ஏதும் இருக்காது. விரைவிலேயே எடையை குறைக்க மிகவும் உதவும். இந்த ஒரு டீ போதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் உங்களின் எடையை குறைக்கும் தன்மையுடையது.


*********************************************

திங்கள், 31 அக்டோபர், 2022

நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) - உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளரின் வாழ்க்கை பயணம் (Life Travel of World famous Self Confidence Speaker)...

 

நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) - உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளரின் வாழ்க்கை பயணம் (Life Travel of World famous Self Confidence Speaker)...



நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) வாழ்க்கை பயணம் (Life Travel)...


உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.


உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களுக்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.


இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உரையாற்றியுள்ளார். 


இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் கடந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.


1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.


சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத்தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.

பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.


அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.


Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.


ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nickஇனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nickஇன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.


தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.


இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணினியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.


Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களுக்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nickஇனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.


பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 



2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.



இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.


.


வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...


1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.


2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.


3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.


4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.


5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.


6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.


7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.


8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.


நூலின் பெயர் : நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)


நூலாசிரியர் : சேவியர்


பதிப்பகம் : தோழமை வெளியீடு


மொழி : தமிழ்


வருடம் : 2012


நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்

*********-*--***************************

சனி, 22 அக்டோபர், 2022

அஞ்சல் துறையில் அறிமுகம் ரூ 399 பிரீமியத்தில் ரூ 10 லட்சம் விபத்து காப்பீடு ..

*ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு அஞ்சல் துறையில் அறிமுகம் ....முழு விவரம்

தபால் துறையின் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கியானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 399 ரூபாயில் பத்து லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 


 சிறப்பம்சங்கள்:-

18 முதல் 65 வயது உடையவர்கள் சேரலாம். 

தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் 5 நிமிடங்களில் முற்றிலும் மின்னணு (டிஜிட்டல்) முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

 விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் 

மேலும் விபத்தால் நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், ஆகியவற்றுக்கும் இழப்பீடு பெறலாம்.

அதேபோல் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், 

புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் உயிரிழப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரது குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக ரூ.1,000 வீதம் அதிகபட்சம் 9 நாட்களுக்கு காப்பீட்டு தொகை  பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.ippbonline.com/web/ippb/tata-aig-group-accident-guard


**************************************-*********------**************************

திங்கள், 23 மே, 2022

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்...

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முக்கியமான தகவல் .....


பள்ளி திறக்க இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு 


இ_சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள்


மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்


*முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை 

மாற்றுச்சான்றிதழ்(TC)

மதிப்பெண் பட்டியல்(10,12)

ஜாதி,வருமானம் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்

தொலைப்பேசி(otp வரும் அதனால்)

அனைத்தும் அசல் மற்றும் நகல்


*ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை 

ஆதார் அட்டை

மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்

புகைப்படம்

தொலைப்பேசி otp வரும் அதனால்

அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்.


*வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வருமான சான்று(payslip) + பான்கார்டு

தொலைப்பேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை



*இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

தொலைபேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல்


இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள் உங்களுடைய

அலைச்சல் குறைக்கலாம்.....



***********************************************************

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

 
 0

காவல்நிலையத்தில் புகார் அளிக்க புகார்  எப்படி எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்


விடுநர்:-


புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும்.


பெறுநர்:-

பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிடவேண்டும்.  காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். எனவே அவர்களை பெறுநராக குறிப்பிட வேண்டும்


புகாரில் குறிப்பிட வேண்டியவை:-

காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது.

குற்ற நிகழ்வு நடந்த நாள், இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். 

எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை கட்டாயம் குறிப்பிடவேண்டும்

அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிக்கவேண்டும்

மேலும் எதிரி உங்களை தாக்கி இருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட காயங்கள் என்ன என்றும் புகாரில் கூற வேண்டும். 

திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு எழுத வேண்டும்.

பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக எழுதவேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று எழுதவேண்டும்

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் என்ன நடந்தது என்பது பற்றிய துல்லியமான விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டும். புகாரில் முழுமையான, உண்மையான தகவல்களை தரவேண்டும்.


புகார் ஏற்க்க மறுத்தால்

சம்பந்தப்பட்ட அதிகாரி புகாரினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நீங்கள் உங்கள் புகாரை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் 

அல்லது மேல் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்கலாம்

அல்லது ஆன்லைன் புகார்கள் கூட தாக்கல் செய்யலாம்.


புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 1

 

அனுப்புனர்:

எம் . சந்தியா  வயது18

த/பெ  மாரிமுத்து

குமரன் தெரு

சென்னை 600456

 

பெறுநர்:

துணை ஆய்வாளர்

காவல் நிலையம்

சென்னை 600456

 

அய்யா

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் நான் கல்லூரி முடித்து வீட்டுக்கு போகும் போது அந்த பகுதியில் சிலர் என்னை கேலி செய்கிறார்கள். மேலும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள்.நீங்கள் தயவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு இனி இவ்வாறு நடக்காதவாறு தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

                                                                                                    இப்படிக்கு

                                                                                                        காவிரி 

சென்னை

மே 20. 2018

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 2

 

விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.


பொருள்: வீட்டில் திருடு போனது சம்மந்தமான புகார் மனு


மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,

பெரு மதிப்பிற்குரிய காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம்!

மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். மேலும் நான் குடும்பத்துடன் அனைவரும் கடந்த  xxxx தேதி அன்று உறவினர் திருமணத்திற்க்கு சென்றிருந்தோம். இன்று வீட்டிற்க்கு வந்தபோது வீடு பூட்டு உடைத்து திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கபட்டு வீட்டில் இருந்த நகை பணம் என  சுமார் 1,50000 மதிப்பு திருடு போயுள்ளது எனவே ஜயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து திருடு போன நகை பணம் மீட்டு தரும்படியும் திருடர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

                                                                                                           இப்படிக்கு,

                                                                                                               குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 3


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

வணக்கம் 

நான் இன்று (தேதி) மாலை 6 மணி அளவில் எங்கள் வீட்டு அருகில் உள்ள ஜீவா பூங்காவின் முன்னால் என் ஹீரோ ஹோண்டா பதிவு எண் TN 21  xxxx  கருப்புகலர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.திரும்பி வந்து பார்த்தபோது என் இருசக்கர வாகனத்தை காணவில்லை.அக்கம் பக்கம் தேடி விசாரித்து பார்த்ததில் எனது வண்டி கிடைக்கவில்லை என் வண்டி திருடு போயுள்ளது எனவே .தயவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டுபிடித்து எனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 4


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

ஜயா 

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் இன்று எனது பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவர் மற்றும் அவரது மகன் கண்ணன் இருவரும் எனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள் நான் ஏன் இங்கு நிற்கின்றீர்கள் என கேட்டதற்க்கு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோரா உன் வேலையை பாத்து போடா என மரியாதை குறைவாகவும் ஆபாசமாக்வும் பேசி என்னை திட்டினார்கள் நான் ஏன் இது போல் பேசிகின்றீர்கள் என கேட்டதற்க்கு  டேய் இவன் அடங்கமாட்டன் இவனை போட்டு தள்ளிடலாம் என கொலை மிரட்டல் விடுகின்றார்கள் எனவே எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

******************-**************************

வியாழன், 17 மார்ச், 2022

தன்னலம் இல்லா தொண்டு கருணையுள்ளம்.

 அன்பே கடவுள் ...



*படத்தில் நீங்கள் பார்க்கும், மஞ்சள் புடவையில் இருக்கும் இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்*


மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும்பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.


பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார்.  தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை மட்டும் சேமித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள். *ரூ.51,02,050* 

ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள்.


அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல்,  அதில் இருந்து நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக வேண்டி ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.


இந்த அளவுக்கு ஒரு பெரிய வேலையை செய்துவிட்டு அதைப்பற்றி அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் சேவையை தொடர்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி.


பணமே வாழ்க்கையில் எல்லாம் என்று இருப்பவர்களுக்கு இந்த பெண்மணி செய்திருக்கும் அருஞ்செயல் மிகப் பெரிய பாடமாக இருக்கும்.


ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “அஹம் பக்தப் பராதீனஹ” என்று கூறுவதாக வருகிறது. என் பக்தர்கள்தான் எனக்கு எல்லாமே. நான் என் பக்தர்களை நம்பி இருக்கிறேன் என்பதாக அதற்கு பொருள் கொள்ளலாம்.


எனவே கிருஷணர் தன்மீது அளவற்ற சுயலமற்ற பக்தியை செலுத்துபவர்கள் மீது அளவற்ற அன்பையும், அருளையும் பொழிந்துதான் ஆகவேண்டும்.


கிருஷ்ண பக்தையாக விளங்கும் விருந்தாவனத்தை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர் யசோதா. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். பகவான் கிருஷ்ணரின் தாய் பெயரும் யசோதா தான். தனது மகனான கிருஷ்ணனை ஒரு குழந்தையாக மட்டுமே பார்த்து கண்ணும் கருத்துமாக அன்பு பாராட்டுவாளாம் அந்த தாய் யசோதா. அவள் கண்ணுக்கு தெரிந்தது பகவான் கிருஷ்ணர் அல்ல. குழந்தை கிருஷ்ணர் மட்டுமே.


மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், காலம் தோறும் யசோதைகள் விருந்தாவனத்தில் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்.              *ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*


**********************************************************--******************

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, FMB ,புல வரைபடம் என அனைத்தும் மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ??

 உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்





  • அடுத்து அதில்  உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் அதில் அடுத்து கிராமப்புறம்/ அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்

  • அடுத்து அதில் உங்கள்  வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள் அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிடுங்கள் அல்லது சர்வே எண்ணை பதிவிடுங்கள்

  • சர்வே எண்ணை பதிவிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள்  

  • அடுத்து பட்டா சிட்டா, புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதைதேர்ந்தெடுங்கள் அடுத்து அதில்  உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள் பின் சப்மிட் பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் 

.................................................................................

செவ்வாய், 25 ஜனவரி, 2022

இல்லம் தேடி கல்வி ஆப் வழியாக கற்றல் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி.....

இல்லம் தேடி கல்வி

🌷 இல்லம் தேடி கல்வி ஆப் வழியாக கற்றல் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி


🌷 இல்லம் தேடி கல்வி ஆப் வழியாக மாணவர்களைச் சேர்ப்பது மற்றும் வருகை பதிவினை மேற்கொள்வது எப்படி


🌷 இல்லம் தேடி கல்வி ஆப் வழியாக தன்னார்வலர்கள் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களை நீக்குவது எப்படி


🌷 இல்லம் தேடி கல்வி ஆப் வழியாக தன்னார்வலர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு எண்களை பதிவேற்றம் செய்வது எப்படி





...........................................

ஞாயிறு, 7 நவம்பர், 2021

தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!

தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!

 




தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் எண்ணத்தை போக்கும் விதமாக பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தகைய திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான நிபந்தனைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.



பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்:

தமிழகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு திருமணம் செய்து வைக்க பணம் அதிகம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை பாரமாக கருதி கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து வந்தனர். பின்னர் அதனை கட்டுப்படுத்த அரசால் கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்பின் அந்த செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அவ்வாறு ஒன்று இல்லை. எனினும் பெண் பிள்ளை பிறந்தால் அதனை படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப, பின்னர் திருமணம் செய்து வைக்க என்று இன்னும் பல்வேறு செலவுகள் வரும் என்பதால் பெண் குழந்தைகளை பாரமாக எண்ணி வருகின்றனர்.


இத்தகைய எண்ணத்தை போக்கும் விதமாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது தான் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம். மேலும் பெண் சிசு கொலை, பெண்களின் மதிப்பை உயர்த்துதல், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் கல்வி அளித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏனெனில் ஒரு பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் பதிவு மேற்கொள்ள வேண்டும். பின்னர் அந்த குழந்தையின் பேரில் அரசு ஒரு தொகையை டெபாசிட் செய்துவிடும். பின்னர் அந்த குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதிலும் அந்த குழந்தை குறைந்த பட்சம் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்திற்கான தகுதிகள் பின்வருமாறு:


திட்டத்திற்கான தகுதிகள்:

திட்டம்-1: 

ஒரு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் வயது 3க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.50000 வைப்பீடு செய்யப்படும்.


திட்டம்-2: 

இரண்டு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும்.


திட்டம்-3: 

பெற்றோர்கள் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்க கூடாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும்.


இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்.


· 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

· குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

· ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.

· விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

· திட்டம்- 1ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

· திட்டம்- 2ன் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

· ஆண்டு வருமானம் ரூ.72,000க் மிகாமல் இருத்தல் வேண்டும்.


இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு இணைக்க வேண்டிய சான்றுகள்:

  • பிறப்புச் சான்று (வட்டாட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகம்)
  • பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று அல்லது பள்ளிச்சான்று அல்லது அரசு மருத்துவரின் சான்று)
  • குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)
  • வருமான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்)
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்)
  • இருப்பிடச் சான்று வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களது பெற்றோர் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்)


மேற்காணும் விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்தும், அசல் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.


குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புநிதி பத்திரம் பெற்றுள்ளவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அந்த தொகையை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் போது பின் குறிப்பிடும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • வைப்பு நிதி அசல் /நகல்
  • பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்.
  • பயனாளி பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

************************--***********************************