HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மாநில அளவிலான மனித வள கருத்தரங்கு!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் ( madras school of social work, MSSW)
மனிதவள படிப்புக்கான மிக பிரபலமான கல்லூரி. இக்கல்லூரி இந்தியாவிலேயே மனித வள படிப்புக்கான பிரபலமான கல்லூரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சிறந்து விளங்குகிறது மற்றும் தமிழ்நாட்டின் முதல்நிலை கல்லூரியாகவும் திகழ்கிறது. இது 1952ஆம் ஆண்டு மேரிக்லுப் வாலாஜதாவ்
என்பவரால் தொடங்கப்பட்டது. சென்னை காசாமேஜர் சாலை, எழும்பூரில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யு (MSW), பி.எஸ்.டபிள்யு (BSW), எம்.ஏ.எச்ஆர்எம் (M.A HRM), இளங்கலைஉளவியல் ( B.sc., psychology), முதுகலை உளவியல் (M.sc., psychology), எம்எச்ஆர்எம் (MHRM) & ஓடி (OD), டிஎம் (DM) போன்ற பாடத்துறைகள் உள்ளன. ராஜா சாமுவேல் இக்கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மனிதவள கருத்தரங்கு நடைபெறும். இதில் மனிதவளத் துறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்த மனிதவள ஆர்வலர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு துறைசார்ந்த பல நுட்பங்களை கற்றுத் தருகிறார்கள். இந்தக் கருத்தரங்கில், மனிதவளத் துறை தலைவி டாக்டர்.ஜெயந்தி பீட்டர் தலைமையில் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள நிபுணர்களான வினோத் செல்லம் பத்தோடி (founder& chairman – bactrak Pvt ltd), குருபரன் சுவாமிநாதன் (chennai HR head-TCS BPS) சந்திரசேகர் (AVP CUMS), சுரேஷ்பாபு (Head India HR, Bonfiglioli), வீராசுவாமி (IR Head, ITC ltd) விஜய்குமார் (Plant Head HR, Pfizer), சார்லஸ் காட்வின் (Global BP HR, MNC) ஏஞ்சலின் ஜெயசீலன் (Asso. Director HR, CSC) ஜோசப் ஆப்ரகாம் (CEO and founder, Skillingly) சுஜித்குமார் (President, NHRD & HR Business leader, INFOSYS) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள ரெயின்ட்டிரீ ஹோட்டலில், காலை 9.30 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் பயன்பெற்றவர்கள், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்களாக உருப்பெறுகின்றனர் என்றால் அது மிகையாகாது