HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 16 மார்ச், 2018

நாட்டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​குறை.....

நாட்​டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. அதற்​குத் தீர்வு காணும் வித​மாக கூடு​தல் எண்​ணிக்​கை​யி​லான அதி​கா​ரி​களை தகு​தித் தேர்​வு​கள் மூலம் நிய​மிக்​கும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​வ​தா​க​வும் அரசு கூறி​யுள்​ளது.
கடந்த சில ஆண்​டு​க​ளாக மத்​திய, மாநில அர​சு​க​ளின் பல்​வேறு துறை​க​ளில் காலி​யாக இருக்​கும் முக்​கி​யப் பொறுப்​பு​க​ளுக்கு ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​ப​டா​மல் உள்​ள​னர். இதன் கார​ண​மாக உரிய முடி​வு​கள் எடுக்​கப்​ப​டா​மல் சில திட்டங்​கள் கால​தா​ம​தம் ஏற்​ப​டு​வ​தாக அவ்​வப்​போது செய்​தி​கள் வெளி​யா​கின்​றன. போதிய அதி​கா​ரி​கள் இல்​லா​ததே காலிப் பணி​யி​டங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் இருப்​ப​தற்​குக் கார​ணம் எனக் கூறப்​ப​டு​கி​றது.
இந்​நி​லை​யில், இந்த விவ​கா​ரம் தொடர்​பாக மாநி​லங்​க​ள​வை​யில் வியா​ழக்​கி​ழமை கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய பணி​யா​ளர் நலத் துறை இணை​ய​மைச்​சர் ஜிதேந்​திர சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
நாடு முழு​வ​தும் 6,500 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் ஆட்சிப் பணி​யில் இருக்​க​லாம் என்ற வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போ​தைய நில​வ​ரப்​படி 5,004 அதி​கா​ரி​கள் மட்டுமே இருக்​கின்​ற​னர். 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக உள்​ள​னர். காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​பு​வ​தற்​குத் தேவை​யான நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
ஆண்​டொன்​றுக்கு 180 ஐஏ​எஸ் அதி​கா​ரி​களை மத்​திய குடி​மைப் பணி​கள் தேர்​வு​கள் மூலம் தேர்ந்​தெ​டுக்​கும் நடை​முறை 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்​பட்​டது. அதன் அடிப்​ப​டை​யில் தற்​போது வரை அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​பட்டு வரு​கின்​ற​னர் என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.
2,490 சொத்​து​க​ளுக்கு முடக்​கம்: ​இ​த​னி​டையே, மாநி​லங்​க​ள​வை​யில் எழுப்​பப்​பட்ட மற்​றொரு கேள்​விக்​குப் பதி​ல​ளித்த மத்​திய வீட்டு​வ​ச​தித் துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் பூரி, ''தில்​லி​யில் விதி​க​ளுக்​குப் புறம்​பா​கக் கட்டப்​பட்ட 2,490 சொத்​து​கள் கடந்த 4 மாதங்​க​ளில் முடக்​கப்​பட்​டுள்​ளன'' என்​றார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்​றும் புது தில்லி பெரு நகர மாந​க​ராட்​சி​கள் சார்​பில் அந்த நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​தா​க​வும் அவர் விளக்​க​ம​ளித்​துள்​ளார்.
​கங்கை திட்டத்​துக்கு ரூ.3,633 கோ​டி:​ மக்​க​ள​வை​யி​லும் கேள்வி நேரத்​தின்​போது பல்​வேறு விவ​கா​ரங்​கள் தொடர்​பாக தக​வல்​கள் கோரப்​பட்​டன. அவற்​றில் கங்கை நதி​யின் வழித்​த​டத்​தில் உள்ள படித்​து​றை​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​து​வது குறித்து ஒரு கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய நீர்​வ​ளத் துறை இணை​ய​மைச்​சர் சத்​ய​பால் சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
கங்கை நதியை ஒட்டி​யுள்ள 361 படித்​து​றை​களை அழ​கு​ப​டுத்​த​வும், தூய்​மைப்​ப​டுத்​த​வும் கடந்த 3 ஆண்​டு​க​ளில் ரூ.3,633 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அவற்​றில் 228 படித்​து​றை​க​ளில் பணி​கள் முழு​மை​யாக நிறை​வ​டைந்​துள்​ளன என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது