HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 24 நவம்பர், 2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு

மாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதிர்பார்த்த நுாலகர்களுக்கு, அந்த வாய்ப்பு பறி போயுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 4200-க்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு, ஊர்புற நுாலகர், 3-ம் நிலை நுாலகர், 2-ம் நிலை நுாலகர், இருப்பு சரிபார்ப்பு அலுவலர், முதல் நிலை நுாலகர், நுாலக ஆய்வாளர் என்ற நிலையில் அளிக்கப்பட்டு, பின்பு மாவட்ட நுாலக அலுவலர் பதவி வழங்குவது 1984 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.சமீப காலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட நுாலகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில் திடீரென 6 மாவட்ட நுாலக அலுவலர் பதவிக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பதவி உயர்வை எதிர்பார்த்துள்ள நுாலகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.