HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு...



7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வோர் விலை குறியீட்டு அளவைச் சரிசெய்வதற்குச் சட்டம் தேவைப்படும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகின்றது.
குறைந்தபட்ச சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் குறைந்தபட்ச சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். செலவு செய்வது உயரும் போது பொருளாதாரம் உயரும் என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன. செலவு செய்வது உயரும் போது அது இந்தப் பொருளாதாரத்திற்கு நல்லது.
எப்போது முதல் இந்த உயர்வு
குறைந்தபட்ச சம்பளம் உயர்வு என்பது 2016-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மத்திய அரசு வழங்கும் என்று கூறப்படுகின்றது.
ஊழியர்கள் சங்க கோரிக்கை
ஊழியர்கள் சங்கங்கள் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளன.
மத்திய அரசு எண்ணம்
குறைந்த அளவு சம்பளம் வாங்குபவர்கள் நன்றாக வேலை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்குச் சம்பளத்தினை உயர்த்துவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசு என்னுகின்றது. இதனால் ஊழியர்களின் பொருளாதாரச் சிக்கல் தீரும், வறுமை விலகி பொருளாதாரம் செழிக்கும்.
ஃபிட்மெண்ட் சூத்திரம்
அடிப்படை சம்பளம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 7000 ரூபாய்ச் சம்பளமாக வாங்கிய ஊழியர்களுக்கு 18,000 ரூபாயாகவும், 80,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கிவந்த அதிகாரிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச சம்பளத்தினை 26,000 ஆக உயர்த்த கோரிக்கை வைக்கும் போது 2.57 மடங்கு என்பது 3.68 மடங்காக அதிகரிக்கும்.
7வது சம்பள கமிஷன் உடனான மத்திய அரசின் ஒப்படைப்பு
7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த கொடுப்பனுவுகள் குறித்த ஆலோசனையினை ஏற்ற மத்திய அரசு ஜூலை 29-ம் தேதி அனுமதி அளித்ததன் பேரில் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதார்கள் பயன் அடைந்துள்ளனர்.
நிதி அமைச்சர்
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச்ச சம்பளத்தினை 18 ரூபாயில் இருந்து உயர்த்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
எப்படி உயர்வு முடிவு செய்யப்படும்?
முறையான விசாரணை மற்றும் அதன் அனைத்துப் பங்குதாரர்களின் பெரும்பான்மை வாக்கெடுப்புக்குப் பின்னர் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.