HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்தவர்கள் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர் எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மை தேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் முதல் 6 இடங்களை பெருநகர சென் னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
 அவர்களின் பெயர் விவரங் கள் வருமாறு:- 1. காயத்ரி சுப்பிரமணியன், மாங்காடு. 2. பி. மணிராஜ், திருவொற்றியூர். 3. டி.தனப்பிரியா, நாமக் கல். 4. சுரேந்திரன், தேனி. 5. ஸ்ரீதேவி, நாமக்கல். 6. ஜெகதீசுவரன், டி.கல்லுப்பட்டி. இவர், செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன் தம்பி ஆவார். ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.